Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

புதன், 10 ஏப்ரல், 2013

FEMEN - அதிரடியாய் பதிலடி கொடுக்கும் முஸ்லிம் பெண்கள்...


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

பெfமென் (FEMEN), 2008-ஆம் ஆண்டு உக்ரைனில் தொடங்கப்பட்ட பெண்ணுரிமை(?) அமைப்பு. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தன்னுடைய கிளைகளை பரப்பியுள்ளது. இவர்கள் பரவலாக அறியப்பட காரணம் இவர்களின் போராட்ட வழிமுறை தான். மேலாடை இல்லாமல் அரைநிர்வாணமாக போராடுவதையே தங்களின் பணித்திட்டமாக கொண்டுள்ளனர்.

சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் தொடங்கி ஊடகங்கள் வரை பெfமன் குறித்த செய்திகளால் பரபரக்கின்றன. இதற்கு காரணம், இந்த அமைப்பின் சமீபத்திய நடவடிக்கைகளுக்கு எதிராக முஸ்லிம் பெண்கள் களமிறங்கியது தான்.

முஸ்லிம் பெண்களின் இந்த கவுன்ட்டர் அட்டாக்கின் பின்னணி என்ன?

சில நாட்களுக்கு முன்பாக துனிசியாவை சேந்த பெfமன் உறுப்பினர் ஒருவர், முகப்பக்கத்தில் தன்னுடைய அரைநிர்வாண படங்கள் இரண்டை பகிர்ந்திருந்தார். அவருடைய உடலில் ஆங்கிலத்திலும், அரபியிலும் எழுதப்பட்டிருந்த அந்த படங்கள், துனிசிய மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. விளைவோ, கொலை மிரட்டல் முதற்கொண்டு பல்வேறு எதிர்ப்புகளை எதிர்க்கொண்டார்.

இதனை பயன்படுத்திக்கொண்ட பெfமன் அமைப்பு, முஸ்லிம் பெண்களுக்கு சுதந்திரமில்லை (??), அவர்கள் நினைத்ததை செய்யும் உரிமை இல்லை (!!) என்று கூறி போராட்டத்தில் குதித்தது. கடந்த ஏப்ரல் நான்காம் தேதியை "அரை நிர்வாண ஜிஹாத் நாள் (Topless Jihad Day)" என்று குறிப்பிட்டு, இந்த தேதியில், முஸ்லிம் பெண்களை விடுவிக்கும் விதமாக (???!!!), உலகின் பல்வேறு பகுதிகளில் அரைநிர்வாண ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்றும் அறிவித்தது.

இவர்களின் போராட்டமே விரும்பத்தகாத வகையில் தான் இருக்கின்றது என்றாலும் இதனைத் தாண்டிய நடவடிக்கைகளிலும் பெfமன் அமைப்பினர் ஈடுபட்டனர். அதாவது, பிரெஞ்சு தலைநகர் பாரிசில் உள்ள ஒரு பள்ளிவாசலின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர், முஸ்லிம்களின் அடிப்படை கொள்கையை விளக்கும் "இறைவன் ஒருவனே, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் (லாஇலாஹா இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலல்லாஹ்)" என்ற வாசகத்தை தாங்கிய பேனரை தீயிட்டு கொளுத்தினர்.

பேனரை எரிக்கும் பெfமன் அமைப்பினர்.

நிச்சயம் இவர்களுடைய நடவடிக்கைகள் பெண்ணுரிமையை மீட்டெடுக்கும் செயல்களல்ல, மாறாக ஒரு மார்க்கத்தின் மீதான வெறுப்புணர்வு மட்டுமே. இதனை மேற்கத்திய ஊடகங்கள் வெளிப்படுத்தவும் செய்தன. இஸ்லாமொபோபியாவால் பெfமன் அமைப்பினர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேரடியாகவே குற்றஞ்சாட்டின.

இப்படியான சூழலில் தான் பெfமனுக்கு எதிரான தீவிர பதிலடியை கொடுக்க ஆயத்தமாயினர் முஸ்லிம் பெண்கள். பதிலடி என்றால் சும்மா இல்லை, அது ஒரு அதிரடியான திட்டம். பெfமனை வெலவெலுத்து போகச்செய்யும் திட்டம்.

அப்படி என்ன திட்டம் என்று பார்ப்பதற்கு முன், இந்த திட்டத்திற்கு பின்னால் இருந்த சகோதரியை பார்த்து விடுவோம். இவருடைய பெயர் சோபிfயா அஹ்மத். பிரிட்டனின் பெர்மிங்கம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி இவர். "அரைநிர்வாண ஜிஹாத் நாள்" என்று அவர்கள் ஒரு நாளை ஏற்படுத்தினால் கண்ணியமான முறையில் போராட நாம் ஒரு நாளை ஏற்படுத்துவோம். அதற்கு பெயர் "பெருமைமிகு முஸ்லிம் பெண்கள் (Muslimah Pride Day) தினம்".

இந்த திட்டத்தின்படி, தாங்கள் முஸ்லிம்கள் என்பதில் பெருமைக்கொள்ளும் முஸ்லிம் பெண்கள், அதற்கேற்றப்படி வாசகங்களை அமைத்து தங்கள் புகைப்படத்துடனோ அல்லது இல்லாமலோ, muslimahpride@gmail.com என்ற மெயில் முகவரிக்கு அனுப்பினால், இந்த நிகழ்வுக்கென ஏற்படுத்தப்பட்டிருக்கும் முகப்பக்க பக்கத்தில் அந்த செய்தியை பதிவேற்றி விடுவார்கள் (அந்த பக்கத்தை <<இங்கே>> காணலாம். போராட்டம் குறித்த தகவல்களை <<இங்கே>> பெறலாம்).

இதுபோல, ட்விட்டரிலும் #MuslimahPride மற்றும் #Femen என்ற ஹாஷ்டேக்குடன் தங்கள் செய்திகளை அனுப்புமாறு முஸ்லிம் பெண்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். இப்படியாக அறிவிக்கப்பட்டது தான் தாமதம், இந்த முயற்சிக்கு அளப்பரிய ஆதரவை அள்ளி வழங்கிவிட்டார்கள் முஸ்லிம் பெண்கள். "பெfமனுக்கு எதிரான முஸ்லிம் பெண்களின் போராட்டம்" என்று மேற்கத்திய ஊடகங்கள் தொடங்கி நம்மூர் ஜீ நியூஸ் வரை இந்த செய்தியை பெரிய அளவில் பேசின.

இந்த போராட்டத்திற்கு வந்த படங்களில் சில உங்கள் பார்வைக்கு..

எங்களின் குரலை பெfமென் திருடிக் கொண்டது. 

சுதந்திரத்தின் உண்மையான பொருளை இஸ்லாமை தழுவியதிலிருந்து உணர்ந்துக் கொண்டேன். 

நிர்வாணம் என்னை விடுவிக்காது. மேலும், நான் காப்பாற்றப்பட வேண்டிய நிலையிலும் இல்லை.


எனது அறிவாற்றலைக் கொண்டு என்னை எடைப்போடுங்கள் 

என் உரிமையை நிலைநாட்ட நீங்கள் தேவையில்லை

இவர் என்னுடைய சகோதரி. ஹிஜாப் அணிவது அவருக்கான சுதந்திரம்.

எனக்கு சுதந்திரமளித்தது இஸ்லாம். 


என் உடலை மறைக்க எனக்குள்ள சுதந்திரத்தை நீங்கள் நிராகரித்தால், நீங்கள் என்னை அடிமைப்படுத்துகின்றீர்கள் என்றே பொருள்.


நான் அடிமைப்படுத்தப்படுவதாக உங்களுக்கு தெரிந்தால் அதற்காக வருந்துகின்றேன். அதே நேரம், என்னை மன்னித்து விடுங்கள், ஏனென்றால், அப்படியாக அடிமைப்பட்டு இருப்பதையே நான் பெரிதும் விரும்புகின்றேன்.  


நிர்வாணம் சுந்தந்திரமில்லை. உங்களின் ஒழுக்கத் தத்துவம் எங்களுக்கு தேவையுமில்லை.


சுதந்திரம் என்பது உடல் சார்ந்ததல்ல, அது உள்ளம் சார்ந்தது. நாங்கள் முஸ்லிம்கள், இஸ்லாமை விரும்புபவர்கள்.


நீங்கள் என்னை விடுவிக்க தேவையில்லை. நான் சுதந்திரமாகவே இருக்கிறேன்.

சுதந்திரமானவர்களுக்கு நீங்கள் சுதந்திரம் கொடுக்க முடியாது. 

இதுமட்டுமல்லாமல், பெfமன் அமைப்புக்கு முஸ்லிம் பெண்கள் எழுதிய வெளிப்படையான கடிதம் அவர்கள் மீதான கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது. பெண்களின் விடுதலை என்ற போர்வையில் காலனி ஆதிக்க இனவெறியை மட்டுமே பெfமன் வெளிப்படுத்துவதாக சாடியுள்ள அந்த கடிதம், நாங்கள் முஸ்லிம்கள் என்பதில் பெருமைக் கொள்வதாகவும் கூறியது (அந்த கடிதத்தை முழுமையாக <<இங்கே>> படிக்கலாம்). 'இஸ்லாமில் பெண்களின் நிலை' குறித்த வெளிப்படையான உரையாடலுக்கும் பெfமன் அமைப்பினரை அழைத்துள்ளனர் முஸ்லிம் பெண்கள்.  

ஆனால் இந்த நிகழ்வுகளில் எனக்கு புரியாத விசயங்கள் இரண்டு. நிர்வாண போராட்டங்கள் எப்படி ஒருவருடைய இலக்கை அடைய வழிவகுக்கும்? முகம் சுளிக்க வைத்து இலக்கிலிருந்து தூரப்படுத்த மட்டுமே உதவும் என்பதே நிதர்சனமான உண்மை. மேலும், முஸ்லிம் பெண்களை விடுவிக்க செய்யும் போராட்டம் என்று கூறிவிட்டு, தங்களை எதிர்க்கும் பெண்களை குர்ஆனினால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் என்று தூற்றுவது எப்படி பெண்களை மதிப்பதாய் அல்லது அவர்களுக்கான உரிமையை வழங்குவதாய் மையும்?

முஸ்லிம் பெண்களின் அதிரடியான செயல்திட்டத்தால் பெfமன் அமைப்பின் கண்ணியமற்ற போராட்டங்கள் வீழ்த்தப்பட்டுவிட்டன. இஸ்லாமிய சகோதரிகளே, உங்களின் விவேகமான அணுகுமுறையால் நாங்கள் பெருமைக் கொள்கின்றோம். KEEP GOING....

இறைவனே எல்லாம் அறிந்தவன்...

Please Note:
இந்த நிகழ்வு இன்னும் முடிவடையவில்லை. தங்கள் செய்திகளை அனுப்ப விரும்பும் சகோதரிகள், மேலே சொன்ன வழிமுறைகளை பின்பற்றி தொடர்ந்து அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

My sincere thanks to:
1. Sister Asma (for french and Italy translations)

புதன், 3 ஏப்ரல், 2013


முஸ்லிம்களுக்கு ஏன் இவ்வளவு பெருமை என்று வியந்தேன்...



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்..

இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக புதிதாய் ஏற்றுக்கொள்ளும் சகோதர/சகோதரிகள் சந்திக்கக்  கூடிய சவால்கள் சொல்லிமாளாதது.

சமீபத்தில், ஹங்கேரியைச் சேர்ந்த ஆயிஷா என்ற சகோதரி Reading Islam இணையதளத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் அந்த தளத்தில் வெளியாகி இருந்தது. இஸ்லாத்தை இளவயதில் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் சந்திக்கக்கூடிய சவால்களை அழகாக வெளிப்படுத்தியது அந்த கடிதம். அந்த மின்னஞ்சல் உங்கள் பார்வைக்காக...
       
"என் பெயர் ஆயிஷா. ஹங்கேரியின் வடக்கு பகுதியைச் சேர்ந்தவள். நான் இஸ்லாத்தைப் பற்றி என் மேல்நிலை வகுப்பில் படித்திருக்கிறேன், ஏனென்றால் ஹங்கேரி சுமார் 150 ஆண்டுகள் துருக்கியின் ஆக்கிரமைப்பில் இருந்த நாடு.

பிறகு, பல்கலைகழகத்தில் மூலக்கூறு உயிரியல் (Molecular Biology) வகுப்பில் சேர்ந்த போது நிறைய வெளிநாட்டு முஸ்லிம் மாணவர்களை சந்தித்தேன்.

ஏன் முஸ்லிம்கள், தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்வதில் இவ்வளவு பெருமை கொள்கின்றனர் என்பதை அறிய எப்போதுமே மிகுந்த ஆவல்.

நான் கத்தோலிக்க பின்னணியை கொண்டவள், நல்ல மதம்தான், ஆனால் எப்போதுமே என் மதத்தை பற்றி மனதில் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தேன், அதுமட்டுமல்லாமல் ஒரு சில விசயங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உதாரணத்துக்கு, எப்படி கடவுளுக்கு மகன் இருக்க முடியும், அதுபோல திரித்துவ கொள்கையை (Trinity) என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஒருமுறை, என் நண்பர்களுடன் இரவு உணவு உட்கொண்டிருந்தபோது, பாங்கு ஆரம்பித்தது. ஒரு நண்பர் அதனை நிறுத்துமாறு கூறினார், நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். அது என்னை மிகவும் கவர்ந்தது, நிச்சயமாக அதில் ஏதோ ஒன்று என் இதயத்தை தொடுவதாக உணர்ந்தேன்.

பிறகு, கோடைக்காலத்தில், நான் ஏன் இணையத்தளத்திலிருந்து குரான் சம்பந்தபட்ட ஒரு பதிவை பதிவிறக்கம் (Download) செய்தேனோ தெரியவில்லை. அதனை நான் அரபியில் கேட்டுக்கொண்டே ஆங்கிலத்தில் படித்தேன். பிறகு, நான் இஸ்லாமை பற்றி நிறைய சிந்திக்க துவங்கிவிட்டேன், அதுமட்டுமல்லாமல் இஸ்லாம் தொடர்பான நிறைய நூல்களை படித்தேன்.

இரண்டு மாத தீவிர யோசனைக்கு பிறகு இறுதியாக இஸ்லாத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டேன். என் இரு நண்பர்கள் முன்பாக ஷஹாதா கூறினேன்...
"வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவன் தூதரென்றும் சாட்சியம் கூறுகிறேன்"  
நான் என் கலாச்சாரத்துக்கு எதிராகவும் என் குடும்பத்திற்கு எதிராகவும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன், குறிப்பாக என் தாயாருக்கு இதில் சுத்தமாக உடன்பாடு இல்லை.   

சகோதரி ஆயிஷா 

நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சில நாட்களில் ரமலான் மாதம் வந்தது. இஸ்லாத்தில் என்னுடைய புது வாழ்வை ரமலான் மாதத்தில் இருந்து தொடங்குவதென முடிவெடுத்தேன். அல்ஹம்துலில்லாஹ்...ரமலான் மாதத்தை வெற்றிகரமாக கடந்தேன். ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதியிலிருந்து தொழ ஆரம்பித்தேன். துவக்கத்தில் எனக்கு மிக கடினமாக இருந்தது, ஏனென்றால் என்னை சுற்றி இருந்த முஸ்லிம்கள் யாரும் இஸ்லாத்தை சரிவர பின்பற்றவில்லை, அதனால் நான் யாரிடமும் கேட்கவில்லை. 

எப்படி தானாக தொழுவது என்று இணையதளங்களில் இருந்து கற்றுக்கொண்டேன், ஏனென்றால், யாரும் எனக்கு எப்படி தொழ வேண்டும் என்றோ அல்லது உளு எப்படி செய்ய வேண்டும் என்றோ அல்லது இஸ்லாத்தின் சட்டத்திட்டங்களையோ சொல்லித்தரவில்லை.

ஒருமுறை என் நண்பர் ஒருவர் சொன்னது என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. அவர் கூறினார், உன்னால் நிச்சயமாக இஸ்லாத்தை புரிந்து கொள்ள முடியாது, ஏனென்றால் நீ முஸ்லிமாக பிறக்கவில்லை என்று".

(இப்படி சொன்ன அந்த சகோதரருக்கு, இஸ்லாமை பற்றிய தெளிவான அறிவை இறைவன் அளிப்பானாக...ஆமின்)   

"நான் ரமலானில் நோன்பு நோற்க விருப்பப்படுகிறேன் என்று நான் அவரிடம் கூறியபோது, அவர் கூறினார், ரமலான் என்பது பசியோடு இருப்பது மட்டும் அல்ல என்று. இது நடந்தபோது நான் இஸ்லாத்திற்கு மிக புதியவள், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு ஒரு மாதம் தான் ஆகியிருந்தது. 

அப்போது நான் மிகவும் பயந்துவிட்டேன்
  • என்னால் அரபியில் தொழ முடியாமலேயே  போய்விட்டால் என்ன செய்வது?
  • என்னால் சரியாக தொழ முடியாவிட்டால் என்ன செய்வது? 

அதுமட்டுமல்லாமல் என்னிடம் ஹிஜாபோ, தொழுகை விரிப்போ கூட இல்லை, உதவி செய்யவும் யாருவில்லை. மிகவும் பயந்துவிட்டேன்... 

ஆனால், நான் தொழ ஆரம்பித்தபோது, இறைவன் நிச்சயமாக இப்போது என்னைப் பார்த்து புன்னகைத்து கொண்டிருப்பான் என்றே நினைத்தேன். 

ஏனென்றால், சூராக்களையும் தொழும் முறைகளையும் ஒரு தாளில் எழுதிக்கொள்வேன், பின்னர் அந்த தாளை என் வலது கையில் வைத்துக்கொண்டு சத்தமாக படிப்பேன், பிறகு ருக்கூ செய்வேன், அப்படியே படிப்பேன்...இப்படியே தொடரும்... நிச்சயமாக நான் செய்வது வேடிக்கையாய் இருக்கிறதென்று எனக்கு தெரியும். 

பிறகு வெற்றிகரமாக சூராக்களை அரபியில் மனப்பாடம் செய்துக்கொண்டேன், அதன் பிறகு பிரச்சனை இல்லை.

பிறகு facebook வந்தேன், நிறைய நண்பர்களும், சகோதரிகளும் கிடைத்தார்கள். அந்த சகோதரிகளிடமிருந்து நிறைய அன்பையும் துணிவையும் பெற்றேன். பிறகு முஸ்லிம் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். அவர்தான் எனக்கு ஹிஜாபும், தொழுகை விரிப்பும், ஒரு இஸ்லாமிய நூலையும் பெற்றுத் தந்தார்.

அதுமட்டுமல்லாமல், ஜோர்டானிலிருந்து என் முதல் அரபி குரானை தபால் மூலம் பெற்றேன், ஏனென்றால் இங்கு அதை வாங்கமுடியாது. இப்போது சுமார் ஒரு வருடமாக நான் ஹிஜாப் அணிகிறேன்.

என் தாயுடன் மிக கஷ்ட காலங்களை கடந்து வந்தேன். அவர் என்னிடம் கூறுவார், நீ தீவிரவாதி ஆகிவிடுவாய் என்று. எப்படி என் பழைய மதத்தை விட்டு விலகி வந்தேனோ, அதுபோல என் தாயாரையும், என் நாட்டையும் விட்டு விலகிவிட எண்ணினேன். அவர் எல்லா பன்றி இறைச்சிகளையும் குளிர் சாதன பெட்டியில் வைத்துவிடுவார், நான் அவற்றை உண்ண மறுப்பேன், பிறகு அது அவருக்கும் எனக்குமிடையே பெரும் வாக்குவாதமாக மாறிவிடும்..

அவரால் நான் தொழுவதையோ, ஹிஜாப் அணிந்திருப்பதையோ பொறுத்துக்கொள்ள முடியாது. அதனால் நான் மாடியில் என் அறையில் தொழுதுக் கொள்வேன். நான் ஹிஜாப் அணிந்திருக்கும்போது என்னை திரும்பிக்கூட பார்க்கமாட்டார், அப்போது கூறுவார் "நான் ஒரு கிருத்துவ மகளைத் தான் பெற்றெடுத்தேன், ஹிஜாப் அணிந்த முஸ்லிமை அல்ல" என்று...

ஆக, எங்களுக்குள் கடுமையான பிரச்சனைகள். ஆனால் நான் எப்பொழுதும் என் தாயாரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதில்லை. அல்ஹம்துலில்லாஹ்.... இப்பொழுது என் தாயார் அமைதியாகிவிட்டார், நான் இஸ்லாத்தை தழுவியதையும் ஏற்றுக்கொண்டு விட்டார்.அதற்காக நான் அல்லாஹ்விற்கு நன்றி சொல்கிறேன். இப்போதெல்லாம் நான் ஹிஜாபுடனே வெளியே செல்கிறேன், என் தாயாரும் ஒன்றும் சொல்லுவது இல்லை.

என் தந்தையுடன் நான் என் வாழ்நாளில் பேசியதே இல்லை, அவரும் என்னைப் பார்க்க விரும்பியதில்லை. ஆனால் இப்போதோ, இஸ்லாமினால், நான் அவரிடம் நெருங்க ஆரம்பித்திருக்கிறேன், அதனால் இப்போதெல்லாம் அவர் எங்களை அடிக்கடி வந்து பார்க்கிறார்.

ஆம், என் வாழ்க்கை ஒரு மிகப்பெரிய சோதனை, ஆனால் அதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்லுகிறேன், அதுமட்டுமல்லாமல் எனக்கு பொறுமையும் நம்பிக்கையும் இருக்கிறது. கியாமத் நாளில் நான் அவர்களுக்கு நன்றி உடையவளாய் இருப்பேன்.

நான் மென்மேலும் என்னை தூய்மைப்படுத்திக்கொள்ளவும், என் மார்க்கத்தை பற்றி அறிந்து கொள்ளவும் முயற்சி செய்கிறேன்.

அல்லாஹ் என் மீது என்ன விதித்திருக்கிறானோ அதுதான் நடக்கும். அதனால் இறைவன் எனக்கு அளித்த இந்த வாழ்வை அழகான முறையில் வாழவே விரும்புகிறேன்.

நான் இப்போது டெப்ரசென்னில் (Debrecen, the second largest city in Hungary) மற்றவர்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் நான் ஒரு பணி திட்டத்தை துவங்கியுள்ளேன், அது, மக்களிடமிருந்து, ஏற்கனவே பயன்படுத்திய உடைகளை சேகரித்து இங்குள்ள அகதிகள் முகாமில் இருக்கும் மக்களுக்கு கொடுப்பதாகும். யுத்தங்களினால் வீடில்லாத நிறைய முஸ்லீம்களும் இங்கு இருக்கின்றனர். அதனால், உடைகளை சேகரித்து அங்கு சென்று அவர்களுக்கு கொடுத்தோம். அங்கு உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாகிஸ்தானி ரொட்டிகள் தயாரித்து கொடுத்தேன், என்னுடைய இந்த செயல் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, அதனை பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது.

முன்பெல்லாம் எனக்கு தொந்தரவு தரும் வகையில் யாராவது பேசினால் மிகவும் கோபப்படுவேன், ஆனால் இப்போதோ, நான் போகுமிடமெல்லாம் மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாய் இருக்க விரும்புகிறேன்.

அதுமட்டுமல்லாமல், இஸ்லாத்தை ஏற்க விரும்புகிறவர்களுக்கும்,புதிதாய் ஏற்றவர்களுக்கும் வழிகாட்ட முயற்சிக்கிறேன். ஒருநாள் இங்கு, புதிதாய் இஸ்லாத்தை தழுவிய இரண்டு ஹங்கேரிய சகோதரிகளை சந்தித்தேன். அவர்களுக்கு இஸ்லாமிய புத்தகங்களையும், என்னுடைய தொழுகை விரிப்புகளையும், குரானையும் கொடுத்தேன். அல்ஹம்துலில்லாஹ், நாங்கள் மூவரும் சேர்ந்தே தொழுதோம், அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.

முஸ்லிம்களாகிய நாங்கள் அருமையானவர்கள், நட்பானவர்கள், நல் இதயத்தை உடையவர்கள் என்ற பிம்பத்தை விட்டுச் செல்லவே முயற்சிக்கிறேன்.

நான் இஸ்லாத்தை தழுவி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. நான் இப்போது, குரானை ஓதுவதற்காக அரபி கற்றுக் கொண்டிருக்கிறேன். தற்போது குரானை ஹங்கேரி மொழியில் படிக்கிறேன், தொழுகைகளை தவறாமல் நிறைவேற்றுகிறேன், குரானையும் சுன்னாவையும் சரியாக பின்பற்ற முயற்சிக்கிறேன், இஸ்லாத்தை மெம்மேலும் புரிந்து கொள்ள நிறைய நூல்களை படிக்கிறேன்......

அஸ்ஸலாமு அலைக்கும்.....

ஆயிஷா"


சுப்ஹானல்லாஹ்...

நிச்சயமாக இறைவன் தான் நாடுவோரை நேர்வழியில் செலுத்துகிறான்...  

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

My Sincere thanks to:
1. Reading Islam website - readingislam.com

Reference:
1. I wondered why Muslims are so proud - by Sister.Aysha, readingislam.com

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

செவ்வாய், 2 ஏப்ரல், 2013



Rasmin Miscபர்மா (மியன்மார்) வில் தினமும் அழிக்கப்படும் முஸ்லீம்கள். – உலக நாடுகள் மவுனம் காப்பது ஏன்?

மியன்மார் என்று தற்போது அழைக்கப்படும் பர்மாவில் கடந்த சில நாட்களாக அங்கு வாழும் முஸ்லீம்களை அங்குள்ள அரசு துட்டுக் கொண்டு குவித்து வருகின்றது.
பா்மாவில் வாழும் மக்களில் சுமார் 15 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் முஸ்லீம்கள் அதில் 10 லட்சம் பேர் பர்மாவைப் பிறப்பிடமாகக் கொண்ட பர்மியர்கள் 5 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் வங்காலத்தைச் சேர்ந்த முஸ்லீம்கள்.
எகிப்தில் இருக்கும் ஒரு ஷரீஆ கல்லூரியில் கல்வி பயின்று வரும் பர்மாவைச் சேர்ந்த முஸ்லிம் இளம் பெண்மணி ஆயிஷா ஸூல்ஹி இது தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்துக்கள் பர்மாவில் வாழும் முஸ்லீம்களின் தற்போதைய நிலையை தெளிவாக விளக்குகின்றது.
“அல் வதனுல் மிஸ்ரிய்யா” என்ற பத்திரிக்கைக்கு ஆயிஷா ஸூல்ஹி அளித்துள்ள பேட்டியில் பின்வரும் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
பர்மாவில் உள்ள முஸ்லிம்களுக்கு மதுபானம், பன்றி இறைச்சி அல்லது மரணம் இந்த மூன்றில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ள முடியும் என்று துன்புறுத்தப் படுகின்றார்கள். ஆனால் அங்குள்ள முஸ்லீம்கள் மரணத்தைத் தான் தங்கள் தேர்வாக எடுத்துக் கொள்கின்றார்கள்.
பர்மாவில் முஸ்லிம்கள் அனுபவிக்கும் கொடுமைகளை கண்டும், கேட்டும் நான் நரக வேதனையை அனுபவிக்கிறேன். எனது நாட்டைச் சார்ந்தவர்கள் கூட்டாக கொலைச் செய்யப்படும் பொழுது எவ்வாறு நாம் மெளனமாக இருக்கமுடியும்?
பர்மா முஸ்லிம்கள் இரத்த சாட்சிகளை மற்றவர்களுக்கு கொடையாக வழங்குகின்றார்கள் என்பதுதான் மிக முக்கிய செய்தியாகும்.
பல தினங்களாக நான் எனது குடும்பத்தினரை தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால், தாக்குதலில் அவர்களுடைய வீடுகள் தகர்க்கப்பட்டு பங்களாதேசுக்கு அகதிகளாக அவர்கள் சென்றுள்ளனர். எனது சில உறவினர்களும், நண்பர்களும் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டுள்ளனர். ஏராளமான பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடுமை இழைக்கப்படுகின்றனர்.” இவ்வாறு ஆயிஷா ஸூல்ஹி கூறியுள்ளார்.
முஸ்லீம்கள் பற்றி வாய் திறக்காத ஆங் சாங் சூகி.
ஜனநாயக ரீதியில் போராடியமைக்காக பல ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்டவரும், பர்மாவின் முக்கிய எதிர்க் கட்சியான நேசனல் லீக்ஃபார் டெமோக்ரெஸியின் (என்.எல்.டி) தலைவரும் சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றவருமான “ஆங் சாங் சூகி” முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை தொடர்பில் இது வரைக்கும் மவுனம் சாதித்து வருவது அங்குள்ள முஸ்லீம்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆங் சாங் சூகியின் மவுனம் தொடர்பில் பங்காஷ் பிரஸ் டி.வி யில் கருத்து வெளியிட்ட “ஷஹீத் சுல்ஃபிகர் அலி பூட்டோ இன்ஸ்ட்யூட் ஆஃப் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜியின் பேராசிரியரும், பிரபல அரசியல் பகுப்பாய்வாளருமான குலாம் தாகி” அவர்கள் “ஆங் சாங் சூகி” யின் மவுனம் குற்றகரமானது என சாடுகின்றார்.
கடந்த மாதம் ஜெனீவாவில் வைத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த “சூகி” பர்மா முஸ்லீம்கள் அந்நாட்டு குடிமக்கள் தானா? என்ற கேள்விக்கு தெரியாது என்று லாவகமாக பதிலளித்து தப்பித்துக் கொண்டார்.
சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றவர் தனது நாட்டின் குடிமக்கள் தாக்கப்படுவது குறித்து அமைதியாக இருப்பதும், அவர்கள் தனது நாட்டினர் தானா என்பதே தெரியாது என்று சொல்வதும் ஆச்சரியமாக இருக்கிறது.
இந்த கொடூர நிகழ்வுகள் தொடர்பில் இது வரைக்கும் எந்த உலக நாடுகளும் வாய் திறக்காமல் மவுனம் காக்கின்றன. குறிப்பாக எந்த அரபு நாடும் இது தொடர்பில் கருத்துக்களோ கண்டனங்களோ தெரிவிக்கவில்லை. என்பது மிகவும் வருந்தத் தக்க விஷயமாகும்.
அன்பின் இஸ்லாமிய உறவுகளே!
பர்மாவில் நமது சகோதரன் கொல்லப்படுகின்றான், நம் சகோதரிகள் கற்பழிக்கப்படுகின்றார்கள், இவர்களுக்காக நமது இரு கரங்களையும் ஏந்தி ஏக இறைவனிடம் பிரார்த்திக்குமாறு அன்பாய் வேண்டுகின்றோம்.
 
 
 

செவ்வாய், 19 மார்ச், 2013

திங்கள், 18 மார்ச், 2013

சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகளே தொப்பி இல்லாமல் காட்சி

Photo

தாடி வைக்கிறார்களோ ,இல்லையோ தொப்பி இல்லாமல் தொழ வரக்கூடாது என்று ஆட்டம் போட்ட காலமெல்லாம் ஒழிந்து ,இப்போது சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகளே தொப்பி இல்லாமல் காட்சி தரும் அழகை பாருங்கள் .

அமைதியாக இருந்த ஆராம்பன்னையில் எங்கிருந்தோ  வந்த சிலர் சுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் ஊரில் நுழைந்து ,பள்ளிவாசலில் வரலாறு காணாத வகையில் தேர்தல் கொண்டு வந்து ,தொப்பி தாடி வைத்து ,தொழக் கூடியவராகவும் ,இமாம் இல்லைஎன்றால் இமாமத் செய்யக் கூடியவராகவும் குர்ஆன் அதிக மனப்பாடம் உள்ளவராகவும் திகழ்ந்ததோடு பள்ளிவாசல் வேலைகள் அனைத்தையும் தானே முன் வந்து கவனித்த அப்துல்பாரி அவர்களை நீக்கம் செய்துவிட்டு தொப்பி தாடி இல்லாத தொழுகை இல்லாத இந்த பன்னாடையை செயலாளராக்கி உள்ளார்களே ,
அன்றுதொப்பி வைக்கவில்லை என்பதற்காக வக்ப் சூபிரண்டன்ட் உதுமான் முகைதினை நஜாத் காரன் என்றார்கள் .இன்று இவர்களது நிர்வாகியே தொப்பி இல்லாமலும் தவ்ஹித் வாதிகளிடம் நானும் தவ்ஹித் வாதிதான் என்று சொல்லி இரட்டை வேடம் போடும் ஒருவரை ஜமாஅத் நிர்வாகி என்று சொல்லுவதற்கு வெட்கப்பட வேண்டாமா?

Photoதொப்பி தாடி இல்லாமல் தொழ வராத செயலாளர் நடுவில் இருக்கிறார் .

ஞாயிறு, 10 மார்ச், 2013

இஸ்லாமா? நாத்திகமா? - லண்டன் விவாதம் முடிந்தது - சில எண்ணங்கள்..


aashiq ahamed12:57  -  Public
இஸ்லாமா? நாத்திகமா? - லண்டன் விவாதம் முடிந்தது - சில எண்ணங்கள்..

இறைவனின் மாபெரும் கிருபையால், லண்டனில், "இஸ்லாமா? நாத்திகமா? - எது அறிவுக்கு ஒத்துவருகின்றது?" என்ற தலைப்பிலான விவாதம் அருமையாக நடந்து முடிந்தது. இஸ்லாமிய கல்வி மற்றும் ஆய்வு மையம் (IERA) சார்பில் ஹம்ஸாவும், நாத்திகத்துக்கு ஆதரவாக நன்கறியப்பட்ட ஆய்வாளர் லாரன்ஸ் க்ராஸ்சும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

மிக சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்த இந்த விவாதத்திற்கு நேரடி ஒளிபரப்பு இல்லையென்றாலும், IERA சார்பில் உடனுக்குடனான அப்டேட்கள் முகப்பக்கத்தில் பதியப்பட்டன. ஹம்ஸாவின் வாதத்திறன் மற்றொரு முறை என்னை வியப்பில் ஆழ்த்தியது. "அட ஆமாம்ல" என்று எண்ணும் அளவிற்கு மிக ஆழமான கருத்துக்கள், மாஷா அல்லாஹ்.

இன்னும் சில நாட்களில் விவாத வீடியோ வந்துவிடும். அறிவுக்கு நல்ல தீனியாக அமைந்த இந்த விவாதத்தில் பார்வையாளர் நேரத்தில் ஒரு கேள்விக்கு இப்படியாக பதில் சொல்கின்றார் க்ராஸ்.

"science doesn't require you to be an atheist, I know very good scientists who aren't atheists - அறிவியல் நீங்கள் நாத்திகராக இருக்கும்படி கூறவில்லை. நான் அறிந்த மிகச் சிறந்த விஞ்ஞானிகள் நாத்திகர்கள் இல்லை"

அட்ரா சக்க...:-) இதை தானே பல காலமா சொல்கின்றோம். அறிவியல் என்பது நாத்திகத்திற்கான வழியல்ல. அறிவியல் உலகில் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் கடவுள் நம்பிக்கையாளர்களே. பார்க்க http://www.ethirkkural.com/2010/09/blog-post_28.html

இந்த உண்மை க்ராஸ் மூலமாக மற்றொரு முறை வெளிவந்ததற்கு மகிழ்ச்சி.

திங்கள், 25 பிப்ரவரி, 2013

இஸ்லாம் என்ன செய்யும்?


தருமிFebruary 24, 2013 at 8:02 PM
ஒன்று எனக்குப் புரியவில்லை. தீவிரவாதப் போராளிகள் பலரும் தங்கள் இறப்புக்கு அஞ்சாமல் செயல்படுபவர்கள். அப்படிப்பட்டவர்களை எப்படி மேல்நாடுகளில் கண்டுபிடித்து (ஒரு உதாரணம்: தனது ஷூவிற்குள் குண்டு வைத்தவனைப் பிடித்தது) தீவிரவாதத்தை முறியடிக்கிறார்கள்? நம்மால் ஏன் அது சுத்தமாக முடியவில்லை?

இந்த சைக்கிளை அந்தக் கடை முன் நிறுத்திட்டு வா என்று சொன்னால் அதை அப்படியே செய்ய -காசுக்காக மட்டும் கூட - எத்தனையோ பேர் தயாராக இருப்பார்கள். இந்த எலிகளை எப்படிக் கண்டுபிடிப்பது? நம்மால் முடியாததை எப்படி மேல்நாடுகள் தங்களைத் தொடர்ந்து காப்பாற்றி வருகிறார்கள் என்பது எனக்கு மிக ஆச்சரியத்தை அளிக்கிறது. பேசாமல் ட்யூஷன் எடுத்தால் நம்ம ஆளுக போய் படிச்சிட்டு வரலாம்!

Ibrahim SheikmohamedFebruary 24, 2013 at 10:05 PM
தருமி
,///நம்மால் முடியாததை எப்படி மேல்நாடுகள் தங்களைத் தொடர்ந்து காப்பாற்றி வருகிறார்கள் என்பது எனக்கு மிக ஆச்சரியத்தை அளிக்கிறது.////
நமது நாட்டில் குண்டு வெடித்த உடனே இ மெயில் வருகிறது இந்திய முஜாஹிதீன் குண்டு வைத்ததாக தகவல் சொல்லுகிறார்கள் .அப்புறம் ஒரு கம்புயுட்டர்போட்டோ அப்புறம் ,அவர்கள் பிடிபட்டார்கள் செய்தி வருட கணக்கில் விசாரணை .ஆதாரம் இல்லை .இதுதான் தொடர்ந்து நடந்து வருகிறது .உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவதில்லை .
பிஜெபியின் தலித் தலைவராக இருந்த பங்காருலட்சுமணன் லஞ்ச விவகாரத்தில் தெகல்காவை நம்பியவர்கள் குஜராத் ரயில் எரிப்பு சம்பவத்தில் தெகல்காவின் விசாரணைகளை ஏன் கண்டுகொள்வதில்லை ?
தெகல்கா வின் சாட்சிகளை வைத்து உண்மைகளை கண்டுபிடித்தால் குண்டுவெடிப்புகள் நின்றுவிடும் .குண்டு வெடித்த பின்னரே தீவிரவாதிகளை தேடுபவர்கள் ஒருதடையாவது குண்டு வைக்கும் வேளையில் ,குண்டுகளை இலக்கிற்கு எடுத்தும் செல்லும் வேளையில் ,தயாரிப்பு வேளையில் முஸ்லிம்களை கைது செய்துள்ளனரா? பழைய செய்திகளை பாருங்கள்.பல உண்மைகள் தெரியும் ...
அமெரிக்காவில் தீவிரவாதிகள் அடக்கப்பட்டார்கள் .ஆம் பாம்பின் கால் பாம்பறியும் ..தீவிரவாதிகளை உருவாக்குவதே அமெரிக்காதானே .
சென்னை குப்பத்திலுள்ள தாதா வீரமணியை உருவாக்கியது அதிமுகவே .அவன் எல்லை மீறியதும் சுட்டுத் தள்ளியதும் அதிமுகவே .சாத்தான்குள இடை தேர்தலில் ஒரு பண்ணையாரை வளர்த்ததும் அதிமுகவே.தன தேவைகள் முடிந்ததும் .என்கவுண்டரில் போட்டுதள்ளியதும் அதிமுகவே .
சீக்கிய பிரச்சனையை ஜனதா காலத்தில்ஊதி பெரிதாக்கி வளர்த்த இந்திரா காந்தி,அவருடைய ஆட்சியில் அது வரம்பு மீறியதும் பொற்கோவிலில் நுழைந்து தாக்கி அடக்கினார் .ஆனாலும் அந்த விவகாரமே அவரது உயிரை பறித்தது
ரசியவுக்காக வளர்த்த ஒசாமா அமெரிக்காவுக்கு எதிரியானால் அதற்கு இஸ்லாம் என்ன செய்யும்?
ரசியாவை எதிர்க்க ஆயுதம் வழங்கி வளர்த்த முஜாஹிதின் கள் அமெரிக்காவுக்கு எதிராகதாலிபான்கள் ஆக போரிட்டால் அதற்கு இஸ்லாம் என்ன செய்யும்?
பொருளாதார சரிவை சரிகட்ட இராக் எண்ணையை திருட சதாமை பேரழிவு ஆயுதம் என்று உலக வரலாற்று பொய்யை அவிழ்த்து விட்டு அப்பாவி மக்களை கொன்றால் அல்காய்தா உருவானால் இஸ்லாம் என்ன செய்யும்?
சுதந்திரம் பெற்றபிறகு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் வேளையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் கருத்து வாக்கெடுப்பு நடைபெறும் என்று உடன்படிக்கை செய்துவிட்டு அதன்படி நடக்காததால் அந்த மக்கள் போரிட்டால் தீவிரவாதத்தில் ஈடுபட்டால் இஸ்லாம் என்ன செய்யும்?
தேர்தலில் வெற்றிபெற்ற முஜிபுர் ரஹ்மானை பதவி ஏற்க விடாமல் மொழி,இன வெறிபிடித்த பாகிஸ்தான் தடுத்ததால் ,அதன் பின் பங்களாதேசுக்கு இந்தியா ஆதரவாக போர் செய்து தனிநாடாக பிரித்து கொடுத்தால் அதற்கு இஸ்லாம் என்ன செய்யும்?பாக்கிஸ்தானின் அயோக்கியத்தனத்தால் பங்களா தேசம் பிரிந்தது .அதற்கு இந்தியா என்ன செய்யும்? இஸ்லாம் என்ன செய்யும்?


R.PuratchimaniFebruary 24, 2013 at 11:33 PM
சகோ Ibrahim Sheikmohamed,
தங்கள்(முஸ்லிம்களின்) மனவலியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
//ரசியவுக்காக வளர்த்த ஒசாமா அமெரிக்காவுக்கு எதிரியானால் அதற்கு இஸ்லாம் என்ன செய்யும்?//

இப்படி நீங்கள் கூறிய பல இஸ்லாம் என்ன செய்யும்? என்ற கருத்துக்கள் என்னை சிந்திக்க வைத்தன. அந்த சிந்தனையின் விளைவில் எனக்கு பின்வரும் கேள்வி எழுகிறது. என்னுடைய கேள்விக்கு நீங்கள் தக்க பதில் அளிப்பீர்கள் என நம்புகிறேன்.

அமெரிக்கா -இந்தியா ஒழிக என்று கூறினால் அமெரிக்க,இந்திய எதிர்ப்பு என்று புரிந்து கொள்ளலாம்.
ஆனால் அமெரிக்கர்களை,இந்தியர்களை கொன்றுவிட்டு அல்லாகு அக்பர் என்றால்,சுவனம் கிடைக்கும்,சுவனத்தில் பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்(குரானின் அடிப்படையில்) கொலை செய்தால் இதற்க்கு இசுலாம் காரணம் என்று சொல்லாமல் எப்படி இருக்க முடியும்?

தீவிரவாதிகள் சுவனத்தின் மீது உள்ள நம்பிக்கையில்தான் மக்களை கொல்கின்றனர் என்பதை இரட்டை கோபுர தாக்குதலிலும்,மும்பை தாக்குதலிலும் அவர்கள் பேசிக்கொண்டதை வைத்து அறிய முடிகிறது.

சகோ, நீங்கள் என் கேள்விக்கு பதில் தருமுன் இதை தீர்க்கும் வழியையும் நான் தருகிறேன்....இப்படிப்பட்ட வசனங்களை இடைச்சொருகல் என்பதே அந்த வழி. இதை செயல்படுத்தினால் இசுலாமை காப்பாற்றலாம் இல்லையென்றால் மனிதகுலத்தை நம்மால் காப்பாற்ற முடியாது.
என்றும் மனிதத்துடன்
புரட்சி


Ibrahim SheikmohamedFebruary 25, 2013 at 11:32 PM
R.Puratchimani/////ஆனால் அமெரிக்கர்களை,இந்தியர்களை கொன்றுவிட்டு அல்லாகு அக்பர் என்றால்,சுவனம் கிடைக்கும்,சுவனத்தில் பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்(குரானின் அடிப்படையில்) கொலை செய்தால் இதற்க்கு இசுலாம் காரணம் என்று சொல்லாமல் எப்படி இருக்க முடியும்?////

ஹவாலா வாலா ஜெயினின் டைரியில் அத்வானி பெயர் இருக்கத்தான் செய்தது இருந்தாலும் நமது அத்வானி சாப் பாரத் மாதாகி ஜெய் என்கிறார் ..அதற்காக இந்திய தேசம் அத்வானியை ஹவாலாவில் வரவு செலவு செய்ய சொன்னது என்று சொல்வீர்களா?
கனவு பிரதமர் மோடியும் பாரத் மாதாகி ஜெய் என்கிறார் .அதற்க்காக குஜராத்தில் இன படுகொலையை பாரத் மாதா பண்ண சொல்லியது என்று யாராவது கூறுவார்களா?
மும்பையில் மற்றும் இந்திய மற்ற மாநிலங்களில் மத கலவரத்தில் அப்பாவி முஸ்லிம்களைக் கொன்றுவிட்டு ஜெய் காளி என்கிறார்கள் .அப்படி என்றால் காளி தெய்வம் சொல்லியதா?
இதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள் .அப்புறம் நான் தொடர்கிறேன்.



சனி, 23 பிப்ரவரி, 2013

குண்டுவெடிப்புகள்

சார்வாகன் ///எதற்கும் சதிக் கோட்பாட்டுக் கதை கூறும் கோமாளிகளை அடையாளம் காண்பதும் முக்கியம்.//////
////ஒரு குறிப்பிட்ட குழு மட்டுமே தேவையில்லாமல் பழி வாங்கப் படுவதாக செய்யப் படும் பிரச்சாரமே,அப்பாவி இளைஞ‌ர்களை அப்பாதையில் செல்ல வைக்கிறது என்பதை உணர வேண்டும். நாட்டின் எந்த பிரச்சினைக்கும் சட்டம், நீதிமன்றம் மூலம் மட்டுமே தீர்வு என்பதனை அனைவரும் ஏற்க வேண்டும்.///
//
மதசாற்பற்றவனாக பேசுவது போல நடிக்கும் சார்வாகன் ஒரு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் போலவே பேசுகிறார்
இங்கு இஸ்ரெல பற்றிய கோமாளி படம் காட்டவேண்டிய அவசியம் என்ன வந்துவிட்டது?
என்னவோ இஸ்ரேல் தனது வியுகத்தால் தீவிரவாதத்தை வென்றது போல அடிக்கடி சார்வாகன் தனது உள்ளகிடக்கையை காட்டி வருகிறார் இஸ்ரேல் ஒரு தீவிரவாத நாடு அதன் தீவிரவாதத்தை மறைத்து அதற்கு பக்கபலமாக அமெரிக்காவின் மீடியாக்கள் .அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக திகழும் இஸ்ரேலின் அயோக்கியத்தனம் ,இங்கே ஹிந்துத்துவாக்களால் கெட்டிக்காரத்தனமாக வர்ணிக்கப் படுகிறது .அமெரிக்காவின் தயவு,உதவி ஒருநாள் வாபஸ் வாங்கப்படுமானால் இஸ்ரேல் உலகவரைபடத்தில் இல்லாமற்   போகிவிடும் .இந்த உண்மைகள் அனைவருக்கும் தெரியும் .இருப்பினும் முஸ்லிம்களை நசுக்கவேண்டும் இந்தியாவில் அவர்களை அடிமைகளாக்க வேண்டும் என்ற சார்வாகன் .சோ ,குருமூர்த்தி போன்ற ஆர்வலர்கள் இஸ்ரேலை போற்றி போற்றி பஜனை பாடிவருகிரார்கள் .

இந்தியாவில் வெடிகுண்டு வெடிப்புகள் நடப்பதால் யாருக்கெல்லாம் ஆதாயமோ அவர்களே அதை செய்து வருகிறார்கள் .தனது நாட்டில் குண்டு வெடிப்பதைப் போல இந்தியாவிலும் அமைதியின்மையை உருவாக்க பாக்கிஸ்தான் முயற்சிக்கும் .அதனால் காசு கொடுத்து காஷ்மீரிகளை கூலிப் படையாக  அனுப்ப .செய்யும்
அடுத்து குண்டு வெடிப்பு மூலம் ஹிந்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் முஸ்லிம்கள் மீது வரும் வெறுப்பை நாம் வாக்கு வங்கிகளாக மாற்றிக் கொள்ளலாம் என்ற நோக்கத்திற்காக பிஜேபியின் துணை அமைப்புகளை பயன்படுத்தி குண்டுவெடிப்புகள் நடத்தும் .இதுவரை இந்த குற்றச்சாட்டை நையாண்டி செய்தவர்கள் ஹேமந்த் கர்கறேயின் நடவடிக்கையால் உன்மைஉனர்ந்தார்கள் .காவி பயங்கரவாதம் என்று சிதம்பரம் கூறியதை வன்மையாக எதிர்த்தவர்கள் கர்கறேயின் நடவடிக்கையால் ஆடிப்போனார்கள் .சும்மாவிடுவார்களா கர்கரேயை ?
கனடாவில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் .அதனால் அங்கு அடுத்து தடுத்து நிறுத்த முடிகிறது.ஆனால் இந்தியாவில் அது அரசியல் ஆதாயத்திற்காக குண்டுவெடிப்புகள். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் பற்றிய தெஹல்காவின் விசாரணையை ஆய்வு செய்து அதில் உண்மை இருந்தால் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் இந்தியாவில் தீவிரவாதம் அழிந்துவிடும் .குண்டுவெடிப்புகள் இனி நடக்கவே வாய்ப்பு இல்லாத சூழ்நிலையை கொண்டுவந்துவிடலாம் .இருட்டில் தொலைத்த காசை வெளிச்சம் இருக்கும் இடத்தில் வந்து தேடும் முல்லா ஜோக்ஸ் போல இந்திய புலனாய்வு துறை செயல்பட்டால் எங்கிருந்து அப்பாவி ஹிந்துக்கள் கொல்லப்படுவதை தடுக்க முடியும்?

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

உயிருக்கு உயிர்,

 உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப் பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள். அல் குர்ஆன் 5:45

இந்த குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் தன மீது ஆசிட் வீசியவன் மீது அதேப போன்று ஆசிட் வீசவேண்டும் .நான் படும் வேதனையை அவனும் அடைய வேண்டும் என்று பொறியியல் பட்டாதாரியான வினோதினி கூறுவதை கீழே உள்ள லின்க்கில் பாருங்கள் .{அந்த சகோதரி நேற்று மூச்சு திணறலில் மரணித்துவிட்டார்}
https://plus.google.com/u/0/106341662855918746617/posts

புதன், 6 பிப்ரவரி, 2013

நியூயார்க் டைம்ஸ் - இஸ்லாம் - பிரான்ஸ்




நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

ஒன்றை தீவிரமாக எதிர்ப்பதால் அது விளம்பரமாக அமைந்து எதிர்க்கப்பட்டதின் வளர்ச்சிக்கு உதவி விடும் என்பது உண்மையானால் அது இஸ்லாமிற்கு மிக சரியாகவே பொருந்தும். எதிர்ப்புகளின் வளர்ச்சியில் வளர்ந்த மார்க்கம் இஸ்லாம்.

விளம்பரமாகிவிடும் என்பதற்காக இஸ்லாமை எதிர்ப்பவர்கள் எதிர்க்காமல் இருக்க போவதில்லை. அல்லது தாங்கள் சரியென்று நினைக்கும் கருத்தை உரக்க சொல்லாமல் இருக்க போவதில்லை. ஆனால் தாங்கள் சரியென்று கருதும் அதே செயலை அடுத்தவர் செய்தால் மட்டும் 'போராடதே, விளம்பரப்படுத்தாதே' என்று கூப்பாடு போடுவது ஒருவித அறியாமையே.

உண்மை என்னவென்றால், ஒன்றிற்காக போராடப்பட வேண்டியது அவசியம் என்றால், விளம்பரமாகிவிடும் என்று அமைதியாக இருந்திட முடியாது. அப்படி இருந்தால், அது, பல நேரங்களில் நம் நோக்கத்திற்கு எதிர்மறையான விளைவையே எதிர்காலத்தில் ஏற்படுத்தும். நம் மவுனமும் வீணாகிப்போகும். போராட வேண்டியதற்கு போராடாமல் மவுனமாக இருந்ததற்கான வலியை மிக அதிகமாகவே வரலாறு பதிவு செய்திருக்கின்றது.

சரி விடுங்க நாம் பதிவிற்குள் செல்வோம். இரு தினங்களுக்கு முன்பாக (3rd Feb 2013), நியூயார்க் டைம்ஸ் தினசரியில் பிரெஞ்சு முஸ்லிம்கள் குறித்து வெளியான கட்டுரை, நான் முதல் பத்தியில் சொன்ன கருத்தை மிகச் சரியாக பிரதிபலிக்கின்றது. எம்மாதிரியான எதிர்மறை எண்ணங்களும் இஸ்லாமிற்கு எவ்வித பாதிப்பையும் தரவில்லை. அவை தந்ததெல்லாம் இரட்டிப்பு வளர்ச்சி மட்டுமே.  

பிரான்சில் இஸ்லாம் ஏற்படுத்தும் தாக்கத்தை, அதன் காரணிகளை அலசும் இந்த கட்டுரையோடு சில இடங்களில் ஒத்துப்போக முடியாவிட்டாலும், நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய கட்டுரை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. உங்கள் எதிர்பார்ப்புகளை எகிற வைக்காமல் அந்த கட்டுரையின் தமிழாக்கத்திற்கு செல்கின்றேன்.

"பாரிஸ்சின் புறநகர் பகுதியில் (CRÉTEIL) அமைந்துள்ள இந்த விசாலமான, நேர்த்தியான நவீன கட்டிடம் 'இஸ்லாமை தழுவியவர்களின் மசூதி' என்று அறியப்படுகின்றது.

சஹாபா பள்ளிவாசல் என்றழைக்கப்படும் இந்த மசூதியில், ஒவ்வொரு வருடமும், சுமார் 150 பேர் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக தேர்ந்தெடுக்கின்றனர்.  அதிசயவைக்கும் 81 அடி மினாரட்டுடன், 2008-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பள்ளிவாசல், பிரான்சில் வளர்ந்துவரும் இஸ்லாமின் அடையாளமாக திகழ்கின்றது. வெள்ளிக்கிழமை தொழுகையில் பங்கேற்பவர்களில் எண்ணற்றவர்கள் ரோமன் கத்தோலிக்கவர்களாக முன்பிருந்த இளைஞர்கள்.



CRÉTEIL பகுதியில் உள்ள சஹாபா மசூதி

இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே இருந்தபோதும், கடந்த 25 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அரசு மற்றும் பொதுமக்கள் மத்தியில் எதிர்மறையான உணர்வுடன் இஸ்லாம் அணுகப்படும் இந்த சூழலில், பிரஞ்சு மக்களிடையே இஸ்லாம் வளர்ந்து வருவது அரசிற்கு கடும் சவாலாக திகழ்கின்றது.

தங்கள் குடிமக்கள் இஸ்லாமை ஏற்பதால் விளையும் சிக்கல்களை நெடுங்காலமாகவே பிரெஞ்சு அதிகாரிகள் வலியுறுத்தி வந்திருக்கின்றனர். சென்ற அக்டோபர் மாதம், தீவிரவாத போக்குடைய பனிரெண்டு நபர்களை பிரஞ்சு அரசாங்கம் கைது செய்தது. இதில் மூன்று பேர், சமீபமாக இஸ்லாமை ஏற்றுக்கொண்ட பிரெஞ்சு குடிமக்களாவர்.

பிரெஞ்சு செய்தியறிக்கைகளை பொருத்தமட்டில், இஸ்லாமிய அடிப்படைவாத(?) போக்கிற்கு சிறைச்சாலைகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. சிறைச்சாலைகளில் உள்ள முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பங்கினர் இஸ்லாமை கடைபிடிக்கும் மக்களாவர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் முஸ்லிம்கள், தாங்கள் தொடர்ந்து பாரபட்சமாக அணுகப்படுவதாக கூறுகின்றனர். பிரெஞ்சு குடிமக்கள் இஸ்லாமை ஏற்பதால் அதிகரித்துவரும் பிரச்சனைகள், சகிப்புதன்மையற்றதாக பிரெஞ்சு சமூகம் மாறிவருவதை பிரதிபலிப்பதாக அவர்கள் எண்ணுகின்றனர்.

எது எப்படியாகினும், இஸ்லாமிய தழுவல்கள் அதிகரித்திருப்பது சந்தேகத்திற்கிடமில்லாத நிகழ்வாக மாறிவிட்டது. 'ஆச்சர்யமூட்டும் வகையில் இஸ்லாமிய தழுவல்கள் அதிகரித்துள்ளன, குறிப்பாக 2000-ஆம் ஆண்டிற்கு பிறகு" என்கின்றார் பிரெஞ்சு உள்துறை அதிகாரியான பெர்னார்ட்.

ஆறு மில்லியன் மக்கட்தொகையை கொண்ட பிரெஞ்சு முஸ்லிம் சமூகத்தில், சுமார் ஒரு லட்சம் மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிரெஞ்சு குடிமக்களாவர். இது 1986-ஆம் ஆண்டு ஐம்பதாயிரமாக இருந்ததாக பெர்னார்ட் தெரிவிக்கின்றார். முஸ்லிம் இயக்கங்களோ இந்த எண்ணிக்கை இரண்டு லட்சம் வரை இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றன.

திருமணத்திற்காக மதம் மாறுவது நீண்ட காலமாகவே பிரெஞ்சு சமூகத்தில் நடைபெற்றுவரும் ஒரு நிகழ்வென்றாலும், தற்போது இந்த நிலை மாறியுள்ளது. இஸ்லாமை ஏற்கும் பல இளைஞர்கள் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்ள விரும்பி இஸ்லாமை ஏற்கின்றனர்.

21 வயதான சார்லி, இளம் வயதிலேயே நிறைய வேதனைகளை சந்தித்தவர். ரோமன் கத்தோலிக்கராக வளர்ந்த இவருக்கு பள்ளியில் நிறைய முஸ்லிம் நண்பர்கள் கிடைத்தனர். தன்னுடைய 19-ஆம் வயதில் இஸ்லாத்தை தழுவிய சார்லி, 'இஸ்லாமை ஏற்பதென்பது ஒரு சமூக நிகழ்வாகவே மாறிவிட்டது' என்கின்றார். சிலர் ஆர்வத்தில் இஸ்லாமை ஏற்பதாகவும் அவர் கூறுகின்றார்.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் சில பகுதிகளில், அங்கு வசிக்கும் முஸ்லிமல்லாதவர்களும் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கின்றனர். ஒரு குழுவாக இப்படி செயல்படுவதை அவர்கள் பெரிதும் விரும்புவதாக சமூகவியல் வல்லுனரான ஆம்கார் தெரிவிக்கின்றார்.

புறநகர் பகுதிகளை பொருத்தமட்டில், இஸ்லாம் என்னும் மார்க்கம் சமூகரீதியான மாற்றத்தை மட்டும் கொண்டுவரவில்லை, ஒரு அடைக்கலத்தையும் அது கொண்டுவந்துள்ளது. நவீனயுகத்தின் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும் புகலிடமாக இஸ்லாம் திகழ்வதாக ஆய்வாளர்களும், இஸ்லாமை தழுவியவர்களும் கூறுகின்றனர்.

கட்டமைப்பையும், ஒழுக்கத்தையும் வேறெந்த மார்க்கத்தை விடவும் இஸ்லாம் அதிகமாக கொடுப்பதாக கூறும் ஆம்கார், குடும்ப அமைப்பின் முக்கியத்துவதிற்கும், ஆண் பெண்ணுக்கான தெளிவான பொறுப்பிற்கும் திரும்ப இஸ்லாம் உதவுவதாக கூறுகின்றார். 'இஸ்லாமை ஏற்றவர்கள் தங்களுக்குள் அமைதியை உணர்கின்றனர். இஸ்லாமை தழுவியவுடன், உலகம் தெளிவான ஒன்றாக அவர்களுக்கு மாறிவிடுகின்றது' என்று மேலும் தெரிவிக்கின்றார் ஆம்கார்.

தென் கடற்கரை பகுதியான மர்சேவை பொருத்தமட்டில் 'கடந்த மூன்றாண்டுகளில், வியக்கத்தக்க வகையில் இஸ்லாமிய தழுவல்கள் அதிகரித்துள்ளன" என்கின்றார் இந்த பகுதியின் முக்கிய மசூதியின் இமாமான அப்துர் ரஹ்மான் கவுல். மர்சேவின் பிரெஞ்சு கவுன்சில் தலைவரான இவர், 2012-ஆம் ஆண்டு மட்டும், சுமார் 130 இஸ்லாமிய தழுவல்களுக்கான சான்றிதழ்களில் கையொப்பமிட்டுள்ளார்.

பிரான்சின் மதசார்பின்மை கொள்கை ஆன்மீகரீதினான வெற்றிடத்தை அதன் குடிமக்களிடம் உருவாக்கிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் மதசார்பின்மை என்பது மதங்களுக்கு எதிரானதாக மாறிவிட்டது. இது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தி இஸ்லாமை மக்கள் கண்டெடுக்க வழிவகை செய்துவிட்டது.

பிரபலங்கள், குறிப்பாக கால்பந்து நட்சத்திரங்கள் இஸ்லாமை ஏற்பது குடிமக்களிடம் பாதிப்பை ஏற்படுத்தி அதன் மூலமாக இஸ்லாம் மேலும் வளருவதற்கு வழிவகை செய்வதாக வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆனால், வளர்ந்து வரும் இஸ்லாமின் செல்வாக்கு ஒருவிதமான பதற்றத்தை உருவாக்கியுள்ளது, குறிப்பாக வலதுசாரிகளிடம். பிரான்சின் எதிர்காலம் குறித்து பேசும் போதெல்லாம் அங்கே இஸ்லாமின் பங்கு விவாதிக்கப்பட்டுள்ளது.

2009-ஆம் ஆண்டு, பாரிஸ் மேட்ச் இதழில், ராப் இசை பாடகியாக இருந்து இஸ்லாமை தழுவிய டையமின் ஹிஜாப் அணிந்த புகைப்படம் வெளிவாகி மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பதிலளித்த டையம் தன்னை விமர்சித்தவர்களின் கருத்தை நிராகரித்தார். ஹிஜாப் அணிந்திருப்பதால் தான் அடிப்படைவாத(?) முஸ்லிமாகி விட மாட்டேன் என்றும், இஸ்லாமை ஏற்றது தன் தனிப்பட்ட விருப்பம் என்றும், மனச்சோர்வில் சிக்கியிருந்த தனக்கு அதிலிருந்து விடுபட இஸ்லாம் உதவியதாகவும் குறிப்பிட்டார்.

ரபெல்லோ, CRÉTEIL பகுதியில் புத்தகக்கடை வைத்திருக்கும் இவர், தன்னை போன்றவர்களே பிரெஞ்சு முஸ்லிம்களை பிரதிபலிப்பதாக கூறுகின்றார். திசைக்காட்டியுடன் கூடிய விரிப்புகளையும் விற்கும் ரபெல்லோ, இஸ்லாம் குறித்த தவறான புரிதல்களை சுட்டிக்காட்டும்போது, 'இஸ்லாம் என்றால் இதுதான் என்ற கற்பனையான மனநிலையில் இருந்து வெளிவரவேண்டும். பிரெஞ்சு குடிமகனாகவும், முஸ்லிமாகவும் ஒருவர் அமைதியுடன் வாழ முடியும்' என்கின்றார்"

இதற்கு மேல் நான் சொல்ல ஒன்றுமில்லை...

இறைவன் நம்மை நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

Please Note:
முழுமையான, வார்த்தைக்கு வார்த்தையான மொழிபெயர்ப்பு அல்ல. நீளம் கருதி சில வரிகள் விடப்பட்டும், சுருக்கப்பட்டும் உள்ளன. முழுமையாக படிக்க கீழ்காணும் லிங்க்கை சுட்டவும்.

Reference:
1. More in France Are Turning to Islam, Challenging a Nation’s Idea of Itself - New york times, 3rd Feb 2013. link

வஸ்ஸலாம்...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

திங்கள், 4 பிப்ரவரி, 2013

கற்பழித்து தூக்கில் போட்டு கொன்ற கொடுமையின் உச்சகட்டம்


ஜனவரி 13-இல் டெல்லியில் கூலி தொழில் செய்யும் கணவனை பார்ப்பதற்காக பயணச் செலவுக்கு பணம் இல்லாத காரணத்தினால் தனது 10 வயது மகன் மற்றும் இரு உறவினர்களுடன் நடந்தே டெல்லிக்கு செல்ல முடிவெடுத்த ஏழைப் பெண்ணின் பயணத்தின் போது சிலரின் வன்புணர்ச்சியில் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு நிர்வாணமாக மரத்தில் தூக்கில் போடப்பட்டிருக்கிறார்.

இச்செய்தி எந்த ஊடகத்திலும் வெளியிடப்படவில்லை.

பெண்களுக்கு பாலியல் பிரச்சனைக்கான எதிர்ப்புகள் என்பது வர்க்கம் சார்ந்த சூழ்நிலையில் தீர்மானிக்கப்படும் சமூகத்தில் நாம் இருக்கிறோமென்றால் பெண் உரிமையாவது; புண்டை உரிமையாவது. இந்த வக்கற்ற அரசாங்க அதிகார போகத்தில் இனியும் ஏழைப் புண்டைகள் சிதறடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அவலத்தை இந்திய மூவண்ண தேசிய துணியில் அடக்கம் செய்து தேசியத்தை அவமானப்படுத்து..
2

+5
Hide comments

Dheepan Raj20:01

சகோதரி கொச்சை சொற்களை பயன் படுத்த வேண்டாமே  . . .

babu r20:11

enge poe kondirikirom enna nadakkiradhu inge manidhathin maranam idhu mannithuvidu saghodhari

rajasekaran seetharaman21:22
+
1
2
1

குருதி துடிக்கும் நியாயமான கோபமே...கொச்சைச் சொல்லை பயன்படுத்த வேண்டாமே...இதிலும் வசதி படைத்தவர்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே எதிர்ப்புக் குரல் எழும்புகிறது. இவர்களுக்காய்க் குரல் எழுப்ப மக்களுக்கு மனமில்லையா? துணிவில்லையா?

Ibrahim Sheikmohamed21:57Edit

தமிழச்சி ,உங்களது கோபத்தின் உக்கிரத்தை வெளிப்படுத்த கொச்சையான சொற்களை  பயன்படுத்தியுள்ளீர்கள்.இந்த கொச்சையான  சொற்கள் குற்றத்தின் கொடுமையை குறைத்துவிடும்  .லூட்டி அடிக்கும் கல்லூரி மாணவி இரவில தனது நண்பருடன் பாசத்துடன் ஆபாசத்தையும் கலந்ததால் வன்புணர்ச்சிக்கு ஆளாகி கொல்லப்பட்டது மட்டும் தான் இந்தியாவில்   நடந்த ஒரே நிகழ்வு போல கொதித்தவர்கள் இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
இலங்கை பெண்ணை சவூதி அரசு கொலைகுற்றம் சுமத்தி கொன்றதற்காக கண்ணீரை வெள்ளமென பொழிந்தவர்களை காணோமே !