Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

திங்கள், 25 பிப்ரவரி, 2013

இஸ்லாம் என்ன செய்யும்?


தருமிFebruary 24, 2013 at 8:02 PM
ஒன்று எனக்குப் புரியவில்லை. தீவிரவாதப் போராளிகள் பலரும் தங்கள் இறப்புக்கு அஞ்சாமல் செயல்படுபவர்கள். அப்படிப்பட்டவர்களை எப்படி மேல்நாடுகளில் கண்டுபிடித்து (ஒரு உதாரணம்: தனது ஷூவிற்குள் குண்டு வைத்தவனைப் பிடித்தது) தீவிரவாதத்தை முறியடிக்கிறார்கள்? நம்மால் ஏன் அது சுத்தமாக முடியவில்லை?

இந்த சைக்கிளை அந்தக் கடை முன் நிறுத்திட்டு வா என்று சொன்னால் அதை அப்படியே செய்ய -காசுக்காக மட்டும் கூட - எத்தனையோ பேர் தயாராக இருப்பார்கள். இந்த எலிகளை எப்படிக் கண்டுபிடிப்பது? நம்மால் முடியாததை எப்படி மேல்நாடுகள் தங்களைத் தொடர்ந்து காப்பாற்றி வருகிறார்கள் என்பது எனக்கு மிக ஆச்சரியத்தை அளிக்கிறது. பேசாமல் ட்யூஷன் எடுத்தால் நம்ம ஆளுக போய் படிச்சிட்டு வரலாம்!

Ibrahim SheikmohamedFebruary 24, 2013 at 10:05 PM
தருமி
,///நம்மால் முடியாததை எப்படி மேல்நாடுகள் தங்களைத் தொடர்ந்து காப்பாற்றி வருகிறார்கள் என்பது எனக்கு மிக ஆச்சரியத்தை அளிக்கிறது.////
நமது நாட்டில் குண்டு வெடித்த உடனே இ மெயில் வருகிறது இந்திய முஜாஹிதீன் குண்டு வைத்ததாக தகவல் சொல்லுகிறார்கள் .அப்புறம் ஒரு கம்புயுட்டர்போட்டோ அப்புறம் ,அவர்கள் பிடிபட்டார்கள் செய்தி வருட கணக்கில் விசாரணை .ஆதாரம் இல்லை .இதுதான் தொடர்ந்து நடந்து வருகிறது .உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவதில்லை .
பிஜெபியின் தலித் தலைவராக இருந்த பங்காருலட்சுமணன் லஞ்ச விவகாரத்தில் தெகல்காவை நம்பியவர்கள் குஜராத் ரயில் எரிப்பு சம்பவத்தில் தெகல்காவின் விசாரணைகளை ஏன் கண்டுகொள்வதில்லை ?
தெகல்கா வின் சாட்சிகளை வைத்து உண்மைகளை கண்டுபிடித்தால் குண்டுவெடிப்புகள் நின்றுவிடும் .குண்டு வெடித்த பின்னரே தீவிரவாதிகளை தேடுபவர்கள் ஒருதடையாவது குண்டு வைக்கும் வேளையில் ,குண்டுகளை இலக்கிற்கு எடுத்தும் செல்லும் வேளையில் ,தயாரிப்பு வேளையில் முஸ்லிம்களை கைது செய்துள்ளனரா? பழைய செய்திகளை பாருங்கள்.பல உண்மைகள் தெரியும் ...
அமெரிக்காவில் தீவிரவாதிகள் அடக்கப்பட்டார்கள் .ஆம் பாம்பின் கால் பாம்பறியும் ..தீவிரவாதிகளை உருவாக்குவதே அமெரிக்காதானே .
சென்னை குப்பத்திலுள்ள தாதா வீரமணியை உருவாக்கியது அதிமுகவே .அவன் எல்லை மீறியதும் சுட்டுத் தள்ளியதும் அதிமுகவே .சாத்தான்குள இடை தேர்தலில் ஒரு பண்ணையாரை வளர்த்ததும் அதிமுகவே.தன தேவைகள் முடிந்ததும் .என்கவுண்டரில் போட்டுதள்ளியதும் அதிமுகவே .
சீக்கிய பிரச்சனையை ஜனதா காலத்தில்ஊதி பெரிதாக்கி வளர்த்த இந்திரா காந்தி,அவருடைய ஆட்சியில் அது வரம்பு மீறியதும் பொற்கோவிலில் நுழைந்து தாக்கி அடக்கினார் .ஆனாலும் அந்த விவகாரமே அவரது உயிரை பறித்தது
ரசியவுக்காக வளர்த்த ஒசாமா அமெரிக்காவுக்கு எதிரியானால் அதற்கு இஸ்லாம் என்ன செய்யும்?
ரசியாவை எதிர்க்க ஆயுதம் வழங்கி வளர்த்த முஜாஹிதின் கள் அமெரிக்காவுக்கு எதிராகதாலிபான்கள் ஆக போரிட்டால் அதற்கு இஸ்லாம் என்ன செய்யும்?
பொருளாதார சரிவை சரிகட்ட இராக் எண்ணையை திருட சதாமை பேரழிவு ஆயுதம் என்று உலக வரலாற்று பொய்யை அவிழ்த்து விட்டு அப்பாவி மக்களை கொன்றால் அல்காய்தா உருவானால் இஸ்லாம் என்ன செய்யும்?
சுதந்திரம் பெற்றபிறகு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் வேளையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் கருத்து வாக்கெடுப்பு நடைபெறும் என்று உடன்படிக்கை செய்துவிட்டு அதன்படி நடக்காததால் அந்த மக்கள் போரிட்டால் தீவிரவாதத்தில் ஈடுபட்டால் இஸ்லாம் என்ன செய்யும்?
தேர்தலில் வெற்றிபெற்ற முஜிபுர் ரஹ்மானை பதவி ஏற்க விடாமல் மொழி,இன வெறிபிடித்த பாகிஸ்தான் தடுத்ததால் ,அதன் பின் பங்களாதேசுக்கு இந்தியா ஆதரவாக போர் செய்து தனிநாடாக பிரித்து கொடுத்தால் அதற்கு இஸ்லாம் என்ன செய்யும்?பாக்கிஸ்தானின் அயோக்கியத்தனத்தால் பங்களா தேசம் பிரிந்தது .அதற்கு இந்தியா என்ன செய்யும்? இஸ்லாம் என்ன செய்யும்?


R.PuratchimaniFebruary 24, 2013 at 11:33 PM
சகோ Ibrahim Sheikmohamed,
தங்கள்(முஸ்லிம்களின்) மனவலியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
//ரசியவுக்காக வளர்த்த ஒசாமா அமெரிக்காவுக்கு எதிரியானால் அதற்கு இஸ்லாம் என்ன செய்யும்?//

இப்படி நீங்கள் கூறிய பல இஸ்லாம் என்ன செய்யும்? என்ற கருத்துக்கள் என்னை சிந்திக்க வைத்தன. அந்த சிந்தனையின் விளைவில் எனக்கு பின்வரும் கேள்வி எழுகிறது. என்னுடைய கேள்விக்கு நீங்கள் தக்க பதில் அளிப்பீர்கள் என நம்புகிறேன்.

அமெரிக்கா -இந்தியா ஒழிக என்று கூறினால் அமெரிக்க,இந்திய எதிர்ப்பு என்று புரிந்து கொள்ளலாம்.
ஆனால் அமெரிக்கர்களை,இந்தியர்களை கொன்றுவிட்டு அல்லாகு அக்பர் என்றால்,சுவனம் கிடைக்கும்,சுவனத்தில் பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்(குரானின் அடிப்படையில்) கொலை செய்தால் இதற்க்கு இசுலாம் காரணம் என்று சொல்லாமல் எப்படி இருக்க முடியும்?

தீவிரவாதிகள் சுவனத்தின் மீது உள்ள நம்பிக்கையில்தான் மக்களை கொல்கின்றனர் என்பதை இரட்டை கோபுர தாக்குதலிலும்,மும்பை தாக்குதலிலும் அவர்கள் பேசிக்கொண்டதை வைத்து அறிய முடிகிறது.

சகோ, நீங்கள் என் கேள்விக்கு பதில் தருமுன் இதை தீர்க்கும் வழியையும் நான் தருகிறேன்....இப்படிப்பட்ட வசனங்களை இடைச்சொருகல் என்பதே அந்த வழி. இதை செயல்படுத்தினால் இசுலாமை காப்பாற்றலாம் இல்லையென்றால் மனிதகுலத்தை நம்மால் காப்பாற்ற முடியாது.
என்றும் மனிதத்துடன்
புரட்சி


Ibrahim SheikmohamedFebruary 25, 2013 at 11:32 PM
R.Puratchimani/////ஆனால் அமெரிக்கர்களை,இந்தியர்களை கொன்றுவிட்டு அல்லாகு அக்பர் என்றால்,சுவனம் கிடைக்கும்,சுவனத்தில் பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்(குரானின் அடிப்படையில்) கொலை செய்தால் இதற்க்கு இசுலாம் காரணம் என்று சொல்லாமல் எப்படி இருக்க முடியும்?////

ஹவாலா வாலா ஜெயினின் டைரியில் அத்வானி பெயர் இருக்கத்தான் செய்தது இருந்தாலும் நமது அத்வானி சாப் பாரத் மாதாகி ஜெய் என்கிறார் ..அதற்காக இந்திய தேசம் அத்வானியை ஹவாலாவில் வரவு செலவு செய்ய சொன்னது என்று சொல்வீர்களா?
கனவு பிரதமர் மோடியும் பாரத் மாதாகி ஜெய் என்கிறார் .அதற்க்காக குஜராத்தில் இன படுகொலையை பாரத் மாதா பண்ண சொல்லியது என்று யாராவது கூறுவார்களா?
மும்பையில் மற்றும் இந்திய மற்ற மாநிலங்களில் மத கலவரத்தில் அப்பாவி முஸ்லிம்களைக் கொன்றுவிட்டு ஜெய் காளி என்கிறார்கள் .அப்படி என்றால் காளி தெய்வம் சொல்லியதா?
இதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள் .அப்புறம் நான் தொடர்கிறேன்.



கருத்துகள் இல்லை: