Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

வியாழன், 31 ஜனவரி, 2013

மவ்லவி முஸ்தபாவுடன் விவாதம்

முஹம்மது முஸ்தபா அவரது இணையதளத்தில் தூத்துக்குடியில் நடந்த விவாதத்தைப் பற்றி எழுதியிருந்தார் ,அதில் நான் விளக்கம் கேட்டிருந்தேன் .அதற்கு அவரது பதில்களும் அதை தொடர்ந்து  எனது விவாதங்களும் தொடர்ந்து கடைசியாக எனது வாதத்திற்கு அவர் பதில் அளிக்காமல் ஓடிவிட்டார் என்று சொல்லவேண்டும் .அவரது இணையதளத்தை மூடிவிட்டார் .
முஸ்தபா,அஸ்ஸலாமுஅலைக்கும் . 
////குர்ஆனையும் அதை எழுதிய எழுத்தர்களான ஸஹாபாக்களையும் அவமதிப்பதோடு அது யூத நஸாராக்களின் நச்சுக்கருத்தாகும் என்பது தூ.டி மாநகர ஜ.உ. சபையின் நிலைப்பாடாகும்.////மேற்கண்டவாறு உங்களது இணையதளத்தில் எழுதியுள்ளீர்கள் .அதுபற்றி எனது கேள்விகளுக்கு பதில் தருமாறு வேண்டுகிறேன் .

1இந்த உங்களது நிலைப்பாடு தவறு என்று தவ்ஹித் ஜமாஅத் தூத்துக்குடியில் நிருபித்ததா ?இல்லையா?


2இரண்டு நூன்கள் ஒரு சேர வந்து அதில் இரண்டாவது நூன் சுக்கூன் பெற்று இருந்தால் அதில் இரண்டாவது நூனை விட்டுவிடலாம் என்பதற்கு “அல் இத்கான்” என்ற நூலில் ஆரம்ப கால விதி யை காட்டுங்கள்

///எழுத்து விதியை பேணும் இடங்களில் அவ்விதியையும், கிராஅத்தை பேணும் இடங்களில் கிராஅத்தையும் பேணி மிகக்கவனமாக சரியாகத்தான் எழுதியுள்ளனர்////என்பதும் உங்கள் கூற்று .


அப்படியெனில் ,இரண்டு நூன்கள்  ஒரு சேர வந்தால் அதில் இரண்டாவது நூனுக்கு சுக்கூன் இருந்தால் இரண்டாவது நூனை கண்டிப்பாக விடவேண்டும் என்று அந்தஆரம்பகால விதி கூறுகிறதா?எடுத்துக் காட்டுங்கள் .

இதற்கு முஸ்தபாவின் பதிலை பாருங்கள் .

மவ்லவி முஹம்மது முஸ்தபா அவர்களின் பதில்
அன்புள்ள ஆறாம்பண்ணை இப்றாஹீமுக்கு அன்பான வேண்டுகோள்.


இப்றாஹீம் அவர்களே! நீங்கள் எனக்கு அனுப்பிய மெயிலுக்கு 2 மாத காலமாகியும் நான் உங்களுக்கு பதிலளிக்கவில்லை என என் மீது ஆதங்கப்பட்டுள்ளீர்கள். அதற்குரிய உண்மையான விளக்கத்தைத் தருகிறேன்.
1 – எனது லேப்டாப் பழுதடைந்திருந்ததால் உடனடியாக பதில் எழுத முடியாமல் போனது.
2 – எனினும் நான் உங்களுக்கு பதிலளிப்பதற்காக கிட்டத்தட்ட நான்கு பக்க A 4 Size பேப்பர் அளவுக்கு எனது செல் போனில் தமிழில் மிகச் சிரமத்துடன் பதில் எழுதிய பொழுது இடையில் அது அழிந்து போனது.
3 – எனது பக்ரீத் விடுமுறையில் எனது வீட்டிலுள்ள கனினியில் உங்களுக்கு நான் பதில் எழுத ஆயத்தமான பொழுது உங்கள் ஆருயிர் அண்ணன் பி.ஜே. தூத்துக்குடி விவாதத்தைப் பற்றி பொய்யான தகவல்களை அவரது உணர்வு வார இதழில் புழுகியிருந்தார். எனவே அதற்கு மறுப்பு எழுதி மக்கள் அனைவருக்கும் உண்மையை உணர்த்தும் நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டதால் உங்கள் அண்ணனின் பொய் மூட்டைகளை அம்பலப்படுத்துவதற்காக மறுப்பு எழுத ஆரம்பித்தேன். ஆரம்ப கட்டமாக எனது மறுப்பின் சிலத் தொகுப்பை “அஹ்லுஸ் சுன்னாஹ்” என்ற மாத இதழுக்கு அனுப்பி வைத்தேன். அந்த மறுப்புப் பணி இன்னும் எனக்கு முடிவடையவில்லை. தொடர்ந்து அப்பணியில் தான் இருக்கிறேன். அந்தப் பதில் உங்கள் ஒருவருக்காக மட்டும் இல்லாமல் மக்கள் அனைவருக்காகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே மேற்படி மாத இதழில் பிரசுரிக்க ஏற்பாடு செய்தேன். மேலும் www.musthafa maslahi.blogspot.com  என்ற எனது இணைய தளத்திலும் எனது மறுப்பை தொடராக பதிவு செய்ய ஆரம்பித்துள்ளேன்.
      இப்றாஹீம் அவர்களே! எனது இணைய தளத்தில் எனது மறுப்புக் கட்டுரையைப் படித்த நீங்கள் இரு முக்கியமான கேள்விகளைக் கேட்டுள்ளீர்கள்.
1 – குர்ஆனில் எழுத்துப் பிழை இருக்கிறது என்று கூறுவது குர்ஆனையும், அதை எழுதிய எழுத்தர்களான ஸஹாபாக்களையும் அவமதிப்பதோடு, அது யூத, நஸாராக்களின் நச்சுக்கருத்தாகும் என்ற தூ.டி. மாந்கர ஜ.உ. சபையின் நிலைப்பாட்டை தவறு என்று த.த.ஜ. தூத்துக்குடியில் நிரூபித்தது என்று கூறியுள்ளீர்கள்.
ஆனால் த.த.ஜ. வின் படுதோல்வியையும், அவர்களின் கொள்கை புதை குழிக்கு அனுப்பப்பட்டதையும் விவாதத்தைப் பார்த்த அனைத்து நடுநிலையான ( பி.ஜே. யிடம் அறிவை அடகு வைக்காத ) மக்களும், குறிப்பாக அரபு மொழியை முறையாக அறிந்த அனைத்து அறிஞர்களும் நன்கு விளங்கியுள்ளார்கள்.
2 – இரண்டு நூன்கள் ஒரு சேர வந்தால், அதில் இரண்டாவது நூனுக்கு சுக்கூன் இருந்தால் இரண்டாவது நூனை கண்டிப்பாக விட வேண்டும் என்பதற்கு தனியாக, நேரடியான ஆதாரம் தரவேண்டும் என்று என்னிடம் நீங்கள் கேட்டுள்ளீர்கள்.
      உங்களின் இக்கேள்விக்கு நான் நேரடியான ஆதாரத்தை உங்களுக்கு தந்துவிட்டால் “நுஞ்சி” சரியாகத்தான் எழுதப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
      ஆம்! ஏற்றுக் கொள்வேன்! என்று நீங்கள் பதிலளித்தால் இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக உங்களுக்கு அதற்குரிய நேரடி ஆதாரத்தை நான் கூறுவேன்.
      இல்லை! நேரடி ஆதாரம் தந்தாலும் அதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்! என்று விதண்டாவாதமாக நீங்கள் பதிலளித்தால் உங்களின் கேள்விக்கு நான் பதிலளிப்பது வீண் வேலையாகும். எனவே உங்களுக்காக நான் பதில் எழுதி எனது பொன்னான நேரத்தை வீணடிக்கமாட்டேன்.
 (البقرة 2-18)   صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَرْجِعُونَ
(அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். (அவர்கள் நேரான வழியின் பக்கம்) திரும்பமாட்டார்கள். (அல்குர்ஆன். 2/18)
وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَعْقِلُونَ  (البقرة 2-171)
 அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால்; ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையும் கேட்டு, அறிய இயலாதவை (கால் நடை) போன்றவர்கள். (அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். அவர்கள் எதையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள். (அல்குர்ஆன். 2/171)
أَمِ اتَّخَذُوا مِنْ دُونِهِ آَلِهَةً قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ هَذَا ذِكْرُ مَنْ مَعِيَ وَذِكْرُ مَنْ قَبْلِي بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ الْحَقَّ فَهُمْ مُعْرِضُونَ  (الأنبياء 21-24)  
அல்லது அவர்கள் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்களை எடுத்துக் கொண்டார்களா? அப்படியாயின் உங்கள் (கொள்கைக்கு) அத்தாட்சியை நீங்கள் கொண்டு வாருங்கள், இதோ என்னுடன் இருப்பவர்களின் வேதமும் (குர்ஆனும்), எனக்கு முன்புள்ளவர்களின் வேதமும் இருக்கின்றன என்று (நபியே!) நீர் கூறும். எனினும் அவர்களில் அதிகமான பேர் சத்தியத்தை அறிந்து கொள்ளமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் (அதைப்) புறக்கணிக்கின்றார்கள். (அல்குர்ஆன். 21/24)
وَآَتَيْنَاهُمْ آَيَاتِنَا فَكَانُوا عَنْهَا مُعْرِضِينَ  (الحجر 15-81)
நம்முடைய ஆதாரங்களை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். (எனினும்) அவற்றை அவர்கள் புறக்கணிக்கக்கூடியவர்களாகவே இருந்தனர். (அல்குர்ஆன். 15/81)
خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ  (الأعراف 7-199)
 (நபியே!) மன்னிப்பைக் கைக்கொள்வீராக! மேலும் நன்மையை ஏவுவீராக! மேலும் மடையர்களைப் புறக்கணித்துவிடும்! (அல்குர்ஆன். 7/199)
எனவே சத்தியத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கேள்வி கேட்பவர்களுக்கு பதிலளிப்பது வீண் வேலையாகும்.
       எனினும் சத்தியத்தை அறிய விரும்பும் நடு நிலை மக்களுக்காக எனது இணைய தளத்தில் எனது பதிலை இன்ஷா அல்லாஹ் எழுதிக்கொண்டு தான் இருப்பேன்.
       அல்லாஹ் நன்மைக்கு உதவி செய்வானாக! ஆமீன்!

நான் முஸ்தபாவுக்கு அளித்த  பதில் 

மவ்லவி முஹம்மது முஸ்தபாவுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் .உங்கள் பதிலை இணையதளத்தில் பார்த்தேன் .அதில் எனக்கு பதில் அளிக்ககாலதாமதம் ஆனதற்கு காரணம் சொல்லியிருந்தீர்கள் .நன்றிகள் .இருப்பினும் போனில் அட்டென் பண்ணி இதை சொல்லியிருக்கலாம் .அப்புறம் "பக்ரீத் லீவில் 'என்று குறிப்பிட்டுள்ளீர்கள் அதென்ன பக்ரீத் ? பக்ரீத் என்றால் மாட்டு பொங்கல் என்றுதான் பொருள் வரும் .தியாகத் திருநாள் [ஈதுல் அல்ஹா]என்று குறிப்பிட்டிருக்கலாமே .
பீஜே உணர்வு வார இதழில் தூத்துக்குடி விவாதம் பற்றி பொய்யான தகவல்களை எழுதியுள்ளதால் அதற்கு தாங்கள் பதில் அளிக்க மூழ்கிவிட்டதால் எனக்கு பதில் அளிக்காமல் போயிற்று என்று கூறியுள்ளீர்கள் உங்களது இணைய தளத்தில் அந்த விவாதம் பற்றி எழுதுகையில் உணர்வில் பீஜே பொய்களை கூறியுள்ளதால் அதற்கான மறுப்பாக இதை வெளியிடுகிறேன் என்று குறிப்பிடவில்லையே ஏன்? பீஜே உணர்வில் என்ன பொய் கூறியிருந்தார் என்பதை எடுத்துக்காட்டி அது பொய் என்பதை நிருபித்து உண்மை என்னவென்பதை சொல்லியிருக்க் வேண்டும் அல்லவா?ஆனால அதில் அவ்வாறு சொல்லப்படவில்லை .
உலகத்தில் யார் வேண்டுமானாலும் பொய் சொல்லிவிட முடியும் .ஆனால் பீஜே பொய் சொல்லிவிட முடியாது.பீஜே என்ன எங்களது கிளையில் கூட அதன் உறுப்பினர்களை சுன்னத் ஜமாஅத் கண்காணித்து வருகிறது .பீஜெ பற்றி அவர் சொல்லாதை எல்லாம் சொன்னதாகஅல்லது சொன்னதை திரித்து  பேசப்பட்டு வருகையில் அவர் பொய் சொன்னால் விட்டு வைப்பார்களா?கண் கொத்தி பாம்பாக பல உலமாக்களும் அமைப்புகளும் கவனித்து வருகின்றன. அப்படி இருக்கையில் அவர் மறந்தும் கூட பொய் சொல்ல முடியாத நிலையை தமிழக முஸ்லிம்கள் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள் .அப்படியிருக்க வீடியோ பதிவு உங்களாலும் பதிவு செய்யப்பட்டிருக்கையில் அவர் பொய் சொல்லியிருக்கிறார் என்பதை நம்ப முடியாது .
உங்களது பதில்களை பார்ப்போம் .
தூத்துக்குடி விவாதத்தில் எழுத்து பிழைகளை யூதர்கள் மட்டுமே இதுவரை சொல்லிவந்தார்கள் என்ற உங்களது வாதத்தை முறியடித்து விட்டார்கள் என்பதை 
விவாதம் முடியும் வரை ஒப்புக் கொள்ளாமல் சஹாபாக்கள் தவறு செய்துவிட்டதாக தவ்ஹித் ஜமாஅத்கூறிவருவதாக பொல்லாங்கு கூறிய நீங்கள்  இங்கே ஒப்புக் கொண்டீர்கள் .உங்களது கண்ணியத்தை மதிக்கிறோம் .புகழ் இறைவனுக்கு மட்டுமே .
////ஆனால் த.த.ஜ. வின் படுதோல்வியையும், அவர்களின் கொள்கை புதை குழிக்கு அனுப்பப்பட்டதையும் விவாதத்தைப் பார்த்த அனைத்து நடுநிலையான ( பி.ஜே. யிடம் அறிவை அடகு வைக்காத ) மக்களும், குறிப்பாக அரபு மொழியை முறையாக அறிந்த அனைத்து அறிஞர்களும் நன்கு விளங்கியுள்ளார்கள்.////இது நீங்கள் எனக்கு எழுதியுள்ளபதிலில் உள்ள வாசகம் .அந்த அனைத்து நடுநிலையான மக்களில் ஒருவரை சொல்லுங்கள் .

////உங்களின் இக்கேள்விக்கு நான் நேரடியான ஆதாரத்தை உங்களுக்கு தந்துவிட்டால் “நுஞ்சி” சரியாகத்தான் எழுதப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
      ஆம்! ஏற்றுக் கொள்வேன்! என்று நீங்கள் பதிலளித்தால் இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக உங்களுக்கு அதற்குரிய நேரடி ஆதாரத்தை நான் கூறுவேன்.////
நீங்கள் எழுதியவற்றில் உங்களிடம் விளக்கம் கேட்டால் விளக்கம் தருவதே அறிஞர்களின் கடமை .நான் சொன்னால் சொன்னதுதான் அதற்கு பதில் சொல்லிவிட்டால் நீ அதை ஏற்றே  தீர வேண்டும் அப்போதுதான் சொல்லுவேன் என்பது எனது அறிவை உங்களிடம் அடகு வைக்க தூண்டுகிறீர்கள் என்று பொருள் .நீங்கள் நான் ஏற்கனவே பீஜெவிடம் எனது அறிவை அடகு வைத்துவிட்டதாக சொல்லியுள்ளீர்கள் .நான் அதை மீட்டால்தானே உங்களிடம் திருப்பி அடகு வைக்க முடியும் .ஆகவே நான் எனது அறிவை மீட்பதற்கு உங்களது ஆதாரத்தை அறிவுக்கு ஒவ்வாத நிபந்தனைகள் இல்லாமல் வையுங்கள் .அதுதான் உங்களை அறிஞர் வரிசையில் சேர்க்கும் .இல்லையெனில் வெறும் மிரட்டல் பேர்வழியாக சமுதாயம் எடுத்துக் கொள்ளும் .


 ////இல்லை! நேரடி ஆதாரம் தந்தாலும் அதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்! என்று விதண்டாவாதமாக நீங்கள் பதிலளித்தால் உங்களின் கேள்விக்கு நான் பதிலளிப்பது வீண் வேலையாகும். எனவே உங்களுக்காக நான் பதில் எழுதி எனது பொன்னான நேரத்தை வீணடிக்கமாட்டேன்.////
உங்களிடம் நேரடியான ஆதாரங்கள் இருந்தால் அது தான்  இந்த விவாதற்கு அடிப்படையான விஷயம் .அந்த நேரடியான் ஆதாரத்தை தராமல் நீங்கள் எடுத்து வைக்கும் வாதங்கள் அர்த்தமற்றவைகள் .விவாதத்தில்ஆதாரத்தை வைக்காமல் பொத்தி வைக்க வேண்டிய அவசியம் என்ன? பீஜே அவர்கள் வெறும் நூலின் பெயரை மட்டும் சொல்லுவதில்லை .எந்த நூல் என்பதையும் பக்கம் என்பதையும் மூல வாசகங்களையும் எடுத்து வைப்பதே அவரது விவாத பாங்கு .நீங்கள் அந்த நேரடியான் ஆதாரத்தை வையுங்கள் அதை சரி பார்த்து ஏற்றுக் கொள்வோம் .நீங்கள் யூதர்கள் மட்டுமே குர்ஆனில் பிழைகள் இருப்பதாக சொன்னது சுத்த பொய் என்று ஏற்கவில்லையா அது போல ஏற்றுக் கொள்வோம் ,ஆனால் ஆதாரத்தை வைக்காமல் கண்மூடித்தனமாக நான் சொன்னால் அது சரி என்று கொள்ளவேண்டும் என்றால் அதென்ன அறிவுடமையா? 
நேரடி ஆதாரம் தந்தாலும் நான் ஏற்க மாட்டேன் என்று நான் கூறவில்லையே ,அந்த ஆதாரம் சரியானதா என்று பார்க்க வேண்டாமா?
ஏனெனில்,அல் இத்கான் என்ற நூலில் உள்ள வாசகத்தை மக்கள் முன் வைத்துதான் நீங்கள் வாதித்திருக்க வேண்டும் .குர்ஆன் வந்து 700 ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட அந்த நூலில் இப்படித்தான் எழுத வேண்டும் என்று விதி இருக்க வேண்டும் .அவ்வாறு விதிகளை சொல்லுவதற்கு 
குர்ஆனுக்கு முந்தையகாலத்து நூல்களிலிருந்து ஆதாரம் காட்டியிருக்க வேண்டும் .
குர்ஆன் வந்த பிறகு குர் ஆனில் ஏன் அங்ஙனம் எழுதப்பட்டுள்ளது என்பதை அனுமானமாக சொன்னால் அது விதியாக இருக்காது .ஆகவே அல்  இத்கான் நூலில் உள்ள விதிகள் நான் சொன்னவாறு இருந்தால் நுஞ்சி என்பது சரியாகத்தான் எழுதியிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறேன் .
அடுத்து 
///யுஹ்யீ (يُحْيِي) என்பதில் ஒரே இனத்தைச்சார்ந்த இரண்டு “யே ((ي அடுத்தடுத்து வந்து  அதில் இரண்டாவது “யே ((ي சுக்கூன் பெற்றிருப்பதால் அதை ஸஹாபாக்கள் விட்டு எழுதியுள்ளனர்.

குர்ஆனிலுள்ள அனைத்து யுஹ்யீ (يُحْيِي) களும் இவ்வாறுதான் எழுதப்பட்டிருக்கும். எனினும் சட்ட அடிப்படையில் விடப்பட்ட அந்த எழுத்தை உச்சரிக்க வேண்டும் என்பதற்காகவும், ஆரம்பகால எழுத்து விதியை நாம் அறியாததாலும் விடப்பட்ட “யே ((يவை அறிவிப்பதற்காக எழுதப்பட்டிருக்கும் “யே ((يக்கு அருகில் அரபுநாட்டு குர்ஆன் பிரதியில் ( ) ஒரு சிறிய “யே ((يயும் இந்திய நாட்டு குர்ஆன் பிரதியில் யே ((يக்கு கீழ் கடாஜேரும் ( ) போடப்பட்டிருக்கும்.////

அடுத்து,நனசக் ,நுன்சிஹா என்ற சொற்கள் ஏன் இதே அடிப்படையில் எழுதப்படவில்லை ?

மேலும் உங்களிடம் கேட்க விழைவது ,நீங்கள் குர்ஆனில் பீஜே எழுத்து பிழைகள் உள்ளதை அல்லாஹ்வுக்காக அதை தவறு என்று எடுத்துக்காட்டி சரிபடுத்த வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் இருந்தால் ,பீஜே அவர்கள் அவரது மொழியாக்கத்தில் குர்ஆனில் உள்ள 19எழுத்து  பிழைகளை பட்டியலிட்டுள்ளார். அவைகள் அனைத்தும் எழுத்து பிழைகள் இல்லை என்பதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி அவருக்கு நேரிலோ தபாலிலோ அனுப்பி விளக்கம் கேட்டிருக்க வேண்டும் .அதன்பிறகும் அவர் உங்களுக்கு விளக்கம் அளிக்கவில்லைஎன்றால் உங்களது அஹ்லு சுன்னா மாத இதழில் அல்லது  இணைய தளத்தில் அதைப்பற்றி எழுதியிருக்க வேண்டும் .அதற்கு அவர் பதில்அளித்திருப்பார் . அதன் பிறகு விவாதத்திற்கு அழைத்திருக்கவேண்டும்.ஆனால் ஒரு நாலைந்து சொற்களில் மட்டும் பிழைகள் இல்லை என்பதை உங்கள் அறிவுக்கு ஏற்றவாறு ஆய்வு செய்துவிட்டு ,அதை வைத்து பீஜெவுடன் விவாதம் நடத்தி தமிழகத்தில் பிரபலம் ஆகவேண்டும் என்பது உங்களது அற்புத கனவு .நாங்கள் பீஜேவை ஆருயிராக மட்டுமே கருதுகிறோம் .ஆனால் நீங்களோ பீஜெவுடன் விவாதித்தால்தான் தமிழகத்தில் பிரபல ஆகமுடியும் என்று பீஜேமீது வரம்புமீறி நம்பிக்கை வைத்துஉள்ளீர்கள் .அந்த நம்பிக்கையை  அல்லாஹ் தகர்த்துவிட்டான் .அவனுக்கே புகழனைத்தும் .

நான் அறியாமை காலத்தில் பக்ரீத் என்று கூறி வந்தேன் இப்போது எழுத்தளவில் ஈதுல் அல்ஹா என்றும் பேச்சளவில் ஹஜ்ஜு பெருநாள் என்றும் கூறிவருகிறேன் .நீங்கள் இன்னும் அறியாமை காலத்தில் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளேன் 
உங்களது வியாக்கியானப்படி பார்த்தால் ,மாட்டு பொங்கல் அன்று மாட்டை குளிப்பாட்டி அதன் கொம்புகளுக்கு பெயிண்ட் அடித்து ,திலகமிட்டு ,அதற்கு மாலை சூடி ,பொங்கலிட்டு வணங்குவார்கள் .அதனால் அதை மாட்டுக்கு திருநாள் என்றும் சொல்வதுண்டு .
ஆனால் மாட்டை அறுத்து பிரியாணி பொங்கி சாப்பிடுவதால் மாட்டு பொங்கல் என்பது ஈதுல் அல்ஹாவுக்குத்தான் பொருந்தும் என்று கூற வருகிறீர்களா?

முஸ்தபா மவ்லவி ///சத்தியத்தை அறிய விரும்பும் நடு நிலை மக்களுக்காக எனது இணைய தளத்தில் எனது பதிலை இன்ஷா அல்லாஹ் எழுதிக்கொண்டு தான் இருப்பேன்.///
அதென்ன நடுநிலை நாளேடு மாதிரி நடுநிலை மக்கள் என்று இஸ்லாம் அனுமதிக்கிறதா ?

நம்முடைய ஆதாரங்களை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். (எனினும்) அவற்றை அவர்கள் புறக்கணிக்கக்கூடியவர்களாகவே இருந்தனர். (அல்குர்ஆன். 15/81)
நீங்கள் இந்த வசனத்தை கூறியது போல ஆளுக்கு ஆள் ஏதோ ஒரு ஆதாரத்தை தந்துவிட்டு இதே வசனத்தை காட்டமுடியும் .யாரை வேண்டுமானாலும் குற்றம் படுத்தி விட்டு அதற்கு தொடர்பான வசனங்களையும் ஹதித்களையும் வரிசைபடுத்த என்னாலும் முடியும் .ஆனால் அந்த குற்றங்களை நிருபிக்க முடியுமா? 
ஆதாரம் கேட்டாலே நான் தரும் ஆதாரத்தை கணணி மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்வாயா ?அப்போதுதான் தருவேன் என்றால் அந்த ஆதாரம் யாருக்கு வேண்டும்?கேட்டவுடன் ஆதாரத்தை அள்ளி போடுவதல்லவா ஆலிம்களுக்கு அழகு ?
எனக்கு ,முஸ்தபா அளித்த பதில் 
இணை கற்பித்த இப்றாஹீம் அவர்களே!

நீங்கள் இணை கற்பித்த தருணத்தை கவனியுங்கள்.

‘உலகில் யார் வேண்டுமானாலும் பொய் சொல்லிவிட முடியும். ஆனால் பி.ஜே. பொய் சொல்லிவிட முடியாது! பி.ஜே. என்ன! எங்களது கிளையில் கூட அதன் உறுப்பினர்களை சுன்னத் ஜமாஅத் கண்கானித்து வருகிறது............. கண் கொத்தி பாம்பாக பல உலமாக்களும், அமைப்புகளும் கவனித்து வருகின்றன. அப்படியிருக்கையில் அவர் மறந்தும் கூட பொய் சொல்ல முடியாத நிலையை தமிழக முஸ்லிம்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்’ என்று கூறியுள்ளீர். அப்படியென்றால்

1 – அல்லாஹ்வின் விஷேசமான நேரடி கண்கானிப்பில் வாழ்ந்த, வளர்ந்த நபிமார்கள் பாவங்கள் செய்ததாக எப்படி கூறுகிறீர்?

2 – உங்களின் கூற்றுப்பிரகாரம் அல்லாஹ்வின் விஷேசமான நேரடி கண்கானிப்பில் இருந்த நபிமார்களே பாவங்கள் செய்ய முடியும் என்றும், பாவங்கள் செய்தார்கள் என்றும்  கூறுகிற நீங்கள் சுன்னத் ஜமாஅத் மற்றும் பல அமைப்புகளின் கண்கானிப்பில் இருக்கிற பி.ஜே. பொய் சொல்ல முடியாது என்றும், மறந்தும் கூட அவர் பொய் பேச முடியாது என்றும், உலகில் மற்ற யார் வேண்டுமானாலும் பொய் சொல்ல முடியும் என்றும்  கூறியுள்ளீர்களே!

நபிமார்களை விட பி.ஜே. உயர்ந்தவரா?

பி.ஜே.யை விட நபிமார்கள் தாழ்ந்தவர்களா?

பி.ஜே.யின் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் கூட நபிமார்கள் மீது வைக்கவில்லையே!?

3 – சுன்னத் ஜமாஅத்தினரின் கண்கானிப்பில் பி.ஜே. இருப்பதால் அவர் மறந்தும் கூட பொய் சொல்ல முடியாது என்கிறீர்!

அப்படியென்றால் அல்லாஹ்வின் விஷேசமான நேரடி கண்கானிப்பில் இருந்த நபிமார்கள் பாவம் செய்ய முடியும்! மனிதக் கண்கானிப்பில் இருக்கிற பி.ஜே. பாவம் செய்ய முடியாது என்ற உங்களது கொள்கை எவ்வளவு ஆபத்தானது என்பது புரியவில்லையா!?

மனிதக் கண்கானிப்பை விட இறைக் கண்கானிப்பு தரம் தாழ்ந்த்தா!?

மனிதக் கண்கானிப்பின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் கூட மனிதனைப் படைத்த அல்லாஹ்வின் மீது வைக்கவில்லையே!?

-------------------------------------------------------

பக்ரீத் தான் பதில் என்று நினைத்துக் கொண்டீர்களோ! அது உங்களது அறிவாற்றல் பற்றிய துணுக்கு மட்டுமே! என்று கூறியுள்ளீர்கள்.

இப்றாஹீம் அவர்களே! நான் அதை பதில் என்று நினைக்கவேயில்லை. மாறாக உங்களது அறியாமைக்கு நீங்களே கொடுத்த அத்தாட்சியாகத்தான் கருதுகிறேன். ஏனெனில் பக்ரீத் என்ற சொல்லுக்கு ‘மாட்டுப் பொங்கல்’  என்று நீங்கள் தவறாக பொருள் கொடுத்துள்ளீர்கள். மட்டுமல்ல, அப்படித்தான் பொருள் கொடுக்க வேண்டும் என்றும் இப்பொழுது கூறியுள்ளீர்கள். அப்படியென்றால் ஈத் என்ற அரபுச் சொல்லுக்கு ‘பொங்கல்’ என்று தான் பொருளா? அதற்குரிய ஆதாரத்தை முன் வையுங்களேன்!

பக்ரீத் என்றால் மாட்டை இறைவனுக்காக அறுத்து தியாகத்தை வெளிப்படுத்தும் பெருநாள் என்று தான் பொருள். இச்சொல்லுக்கு  இப்படித்தான் பொருள் கொள்ள வேண்டும் என்பதற்கு அந்நாளில் முஸ்லிம்கள் செய்கிற செயலே சான்றாகும்.

இறைவனுக்காக எதையும் தியாகம் செய்வேன் என்ற உணர்வை வெளிக்காட்டும் விதத்தில் மாட்டை அறுத்து, அதன் இறைச்சிகளை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து, நாமும் உண்டு மகிழ்கிறோம். எனவே பக்ரீத் என்றச் சொல்லுக்கு மாட்டை இறைவனுக்காக அறுத்து தியாக உணர்வை வெளிப்படுத்தும் பெருநாள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.

ஆனால் நீங்களோ பக்ரீத் என்ற முஸ்லிகளின் சொல்லுக்கு மாட்டுப் பொங்கல் என பொருள் கொடுத்துள்ளீர்களே!

மாட்டுப் பொங்கல் என்றால் நீங்கள் குறிப்பிட்டதைப் போன்று மாட்டுப் பொங்கல் அன்று மாட்டைக் குளிப்பாட்டி, அதன் கொம்புகளுக்கு வண்ணமிட்டு, திலகமிட்டு, அதற்கு மாலை சூடி, மாட்டை வணங்குவார்கள். அதனால் அந்நாளை மாட்டுக்குத் திருநாள் என்று சொல்வதுண்டு எனக் கூறியுள்ளீர்கள்.

நீங்கள் மாட்டுப் பொங்கலுக்கு விளக்கம் கூறியதைப் போன்று தான் முஸ்லிம்கள் பக்ரீத் என்று கூறுகிற நாளில் மாட்டுக்குத் திலகமிட்டு, மாட்டை வணங்குகிறார்களா? அப்படி வணங்கினாலல்லவா பக்ரீத் என்றச் சொல்லுக்கு மாட்டுக்குத் திருநாள் என்று கூற முடியும்!?

------------------------------------------------

நன்ஸக், நுன்ஸிஹா வுக்கு பதிலளிக்கப்பட்ட பிறகும் மீண்டும் அதைக் கேட்டுள்ளீர்கள்.

------------------------------------------------

நேரடியான ஆதாரத்தை தராமல் நீங்கள் எடுத்து வைக்கும் வாதங்கள் அர்த்தமற்றவைகள் என்று கூறியுள்ளீர்கள்.

பி.ஜே.யிடம் உங்கள் அறிவை அடகு வைத்ததை ஒப்புக் கொண்ட இப்றாஹீம் அவர்களே! நேரடி ஆதாரத்தை உங்களுக்குத் தந்தாலும் உங்களிடம் செய்கிற வாதங்கள் அர்த்தமற்றவைகள் தான். ஏனெனில் தூ.டி. விவாதத்தில் உங்கள் அண்ணனிடம் நேரடி ஆதாரங்கள் பல கொடுத்தும் அதை அவர் ஆதாரமின்றி மறுத்தாரே!

------------------------------------------------

நான் நேரடி ஆதாரம் தந்தால் அதை ஏற்றுக் கொள்வீர்களா? என்ற எனது கேள்விக்கு நீங்கள் எனக்கு அளித்த பதில் ; நீங்கள் நேரடி ஆதாரத்தை வையுங்கள். அதை சரி பார்த்து ஏற்றுக் கொள்வோம் என்று கூறியுள்ளீர்கள். பின்பு உங்களின் சரிபார்த்தல் என்ற செயலுக்கு பின் வருமாறு விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.

‘குர்ஆன் அருளப்பட்டு 700 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்ட அந்த நூலில் (இத்கான்) ‘இப்படித்தான் எழுத வேண்டும் என்று விதி இருக்க வேண்டும். அவ்வாறு விதிகளைச் சொல்வதற்கு குர்ஆனுக்கு முந்தைய காலத்து நூல்களிலிருந்து ஆதாரம் காட்டியிருக்க வேண்டும். குர்ஆன் வந்த பிறகு குர்ஆனில் ஏன் அங்ஙனம் எழுதப்பட்டுள்ளது என்பதை அனுமானமாக சொன்னால் அது விதியாக இருக்காது. ஆகவே அல்இத்கான் என்ற நூலிலுள்ள  விதிகள் நான் சொன்னவாறு இருந்தால் நுஞ்சி என்பது சரியாகத்தான் எழுதப்பட்டிருக்கிறது  என்பதை ஏற்றுக் கொள்வோம்’ என்று கூறியுள்ளீர்கள்.

உங்கள் கூற்றுப்பிரகாரம்

1 - ‘குர்ஆன் அருளப்பட்டு 1400 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்ட இன்றைய காலத்தில் ஒருவர் இருந்து கொண்டு, சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்புள்ள குர்ஆனில் எழுத்துப் பிழைகள் இருப்பதாக அவர் வாதிடுவதாக இருந்தால் அவர் குர்ஆனுக்கு முந்தைய காலத்து நூல்களிலிருந்து எழுத்து விதிகளைக் கூறி குர்ஆனில் எழுத்துப் பிழைகள் இருப்பதாக வாதிட்டால் தானே அதை ஏற்க வேண்டும்?

உங்கள் அண்ணன் குர்ஆனுக்கு முந்தைய காலத்து நூலை குறிப்பிட்டுத்தான் குர்ஆனில் பிழை இருப்பதாக வாதம் செய்தாரா?

2 – குர்ஆன் அருளப்பட்ட 700 ஆண்டுகளுக்குப் பின்பு எழுதப்பட்ட நூலில் அதன் ஆசிரியர் குர்ஆனில் எழுத்துப் பிழை இல்லை என்று சொன்னால் ஏற்கமாட்டீர்கள்!

குர்ஆன் அருளப்பட்டு 1400 ஆண்டுகளுக்குப் பின்பு வாழ்கிற பி.ஜே. குர்ஆனில் எழுத்துப் பிழை இருக்கிறது என்று சொன்னால் அதை ஏற்பேன் என்று கூறுகிறீர்களே! இது தான் உங்களின் சரி பார்க்கும் முறையோ! வேறொன்றும் இல்லை. நீங்கள் உங்களது அறிவை முழுவதுமாக பி.ஜே.யிடம் அடகு வைத்துள்ளதை மென்மேலும் மெய்ப்படுத்துகிறீர்கள்.

3 – குர்ஆன் அருளப்பட்டு 700 ஆண்டுகளுக்குப் பின்பு ஒருவர் ‘குர்ஆனில் இச்சொல் ஏன் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது என்று அனுமானமாக சொன்னால் அது விதியாக இருக்காது’ என்று கூறியுள்ளீர்கள்.

இப்றாஹீம் அவர்களே! நான் உங்கள் அண்ணனுக்கு அளித்த பதில்களில் குறிப்பிட்ட அரபு அறிஞர்கள் எவரும் அவர்களது அனுமானத்தை வைத்து சட்டம் கூறவில்லை. மாறாக ஏன் அவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்ற காரணத்தையும், சட்டத்தையும் முறையாக வைத்துத் தான் கூறியுள்ளார்கள்.

4 – ஒரு மொழியைப் பற்றி அந்த மொழியை தாய் மொழியாகக் கொண்ட அறிஞர்கள் கூறும் விளக்கத்தை மற்ற மொழிக்காரர்கள் ஏற்றுக் கொள்வது தான் அறிவுடமையாகும். இப்பேருண்மையை விரும்பியோ, விரும்பாமலோ  உங்கள் ஆருயிர் அண்ணன் பி.ஜே.யும் ஒப்புக் கொண்டுள்ளார். அதற்கான வீடியோ ஆதாரத்தை கூடிய விரைவில் இன்ஷா அல்லாஹ் வெளியிடுவேன். எதிர்பாருங்கள்.

----------------------------------------------------

பி.ஜே. பற்றி அவர் சொல்லாததை எல்லாம் சொன்னதாக, அல்லது சொன்னதை திரித்து பேசப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளீர்கள்.

இது நீங்கள் பி.ஜே.யின் மீது கொண்டிருக்கும் பலமான நம்பிக்கையையும், உங்கள் அறிவை அவரிடம் அடகு வைத்ததையும் காட்டுகிறது. எனவே தான் மலக்குமார்கள், நபிமார்கள், ஸஹாபாக்கள், இமாம்கள் சொல்லாததை எல்லாம் சொன்னதாக, அல்லது சொன்னதை திரித்து பி.ஜே. பேசினாலும் அவற்றை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறீர்கள்.

அடுத்து; இப்றாஹீம் அவர்களே! நான் சொல்லாததை எல்லாம் சொன்னதாக என் மீது நீங்கள் இட்டுக்கட்டியுள்ளீர்களே?

1 – தூ.டி விவாதத்தில் ‘எழுத்துப் பிழைகளை யூதர்கள் மட்டுமே இது வரை சொல்லி வந்தார்கள் என்ற உங்களது வாதத்தை முறியடித்துவிட்டார்கள் என்பதை விவாதம் முடியும் வரை ஒப்புக்கொள்ளாமல் ஸஹாபாக்கள்  தவறு செய்துவிட்டதாக தவ்ஹீத் ஜமாஅத் கூறிவருவதாக பொல்லாங்கு கூறிய நீங்கள்’ இங்கே ஒப்புக்கொண்டீர்கள் என்று கூறியுள்ளீர்கள்.

எதை ஒப்புக்கொண்டேன்? எங்கு ஒப்புக்கொண்டேன்? உங்கள் அண்ணன் செய்த யூதத்தனத்தை அவர் யூதத்தனம் செய்யவில்லை என்று கூறினேனா?

2 – நீங்கள் ‘யூதர்கள் மட்டுமே குர்ஆனில் பிழைகள் இருப்பதாக சொன்னது சுத்த பொய்’ என்று ஏற்கவில்லையா? என்று என் மீது இட்டுக்கட்டியுள்ளீர்கள்.

நான் எப்பொழுது அதை ஏற்றுக் கொண்டேன்? அவ்வாறு நான் ஏற்று இருந்தால் அதற்குரிய ஆதாரத்தை வீடியோவாகவோ, அல்லது எனது எழுத்திலிருந்தோ நிரூபித்துக் காட்டுங்களேன்.

 மிக அவசரப்படாதீர்! இப்றாஹீம் அவர்களே! குர்ஆனில் எழுத்துப் பிழைகள் இருப்பதாக கூறுவது யூத, நஸாராக்கள் மட்டுமே என்பதையும், தூ.டி. விவாதத்தில் எங்கள் இமாம்கள் மீது பி.ஜே. செய்த இட்டுக்கட்டுகளையும் தூ.டி விவாதத்தில் நாங்கள் விளக்கியுள்ளோம். இன்னும் மிகத்தெளிவாக எனது இணைய தளத்தில் இன்ஷா அல்லாஹ் வெளியிடவுள்ளேன். அதற்குள் அவசரப்படாதீர்கள்.

3 – நீங்கள் எழுதியவற்றில் உங்களிடம் விளக்கம் கேட்டால் விளக்கம் தருவதே அறிஞர்களின் கடமை. ‘நான் சொன்னால் சொன்னது தான். அதற்கு பதில் சொல்லிவிட்டால் நீ அதை ஏற்றே தீரவேண்டும். அப்போதுதான் சொல்லுவேன் என்பது எனது அறிவை உங்களிடம் அடகு வைக்கத் தூண்டுகிறீர்கள்’ என்று பொருள் எனக் கூறியுள்ளீர்.

இப்றாஹீம் அவர்களே! நான் பதில் சொன்னால் அதை ஏற்றே தீரவேண்டும். அப்போதுதான் பதில் சொல்வேன் என்று நான் எப்பொழுது கூறினேன்?

நேரடி ஆதாரம் கேட்கும் நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளும் மனதுடன் கேட்கிறீர்களா? அல்லது மறுத்து விதண்டாவாதம் பண்ணும் நோக்கத்துடன் கேட்கிறீர்களா? என்பதை நான் அறிந்தால்தானே அறிவிலிகளை புறக்கணியுங்கள் என்ற இறை வழிகாட்டுதலை பின்பற்றமுடியும்? எனவே நான் உங்கள் அறிவை என்னிடம் அடகு வைப்பதைத் தூண்டவில்லை. மாறாக என் நேரத்தை வீணடிக்காமல் இருக்க வேண்டும் என்று தான் அதன் பொருளாகும்.

---------------------------------------------------------

ஒரு நாலைந்து சொற்களில் மட்டும் பிழைகள் இல்லை என்பதை உங்கள் அறிவுக்கு ஏற்றவாறு ஆய்வு செய்துவிட்டு அதை வைத்து பி.ஜே.யுடன் விவாதம் நடத்தி தமிழகத்தில் பிரபலம்  ஆகவேண்டும் என்பது உங்களது அற்புத கனவு என்று கூறியுள்ளீர்கள்/

தமிழகத்தில் யாராலும் உங்கள் அண்ணனிடம் விவாதம் பண்ணமுடியாது என்று மனக்கோட்டை கட்டிய  உங்களுக்கும், உங்களைப் போன்றவர்களுக்கு உங்கள் அண்ணனின் பித்தலாட்டங்களை அவருடன் நேருக்கு நேர் விவாதித்து அம்பலப்படுத்தியதை நீங்கள் தாங்கிக் கொள்ளமுடியாமல் மேற்கண்டவாறு கூறி உங்கள் மனதை தேற்றிக்கொள்கிறீர்களோ!

வெறும் நாலைந்து சொற்களை தவறாக ஆய்வு செய்து தவறான சட்டம் கூறியவர் உங்கள் அண்ணன் பி.ஜே.தான். அவர் எதை பிழை என்று அவரது மொழிபெயர்ப்பில் பட்டியலிட்டாரோ அவற்றை அவர் தூ.டி. விவாதத்தில் தக்க ஆதாரத்துடன் எடுத்துக்கூறி அவரின் கொள்கை உண்மையென நிரூபித்திருக்கலாம். ஆனால் அதை செய்வதற்கு உங்கள் அண்ணன் பயந்து நடுங்கிவிட்டார். எனவேதான் பட்டியலில் இல்லாத புதிய விஷயங்களை அவரின் அறிவுக்கேற்ப ஆய்வு செய்துவிட்டு அவற்றையும் பிழைகள் என்று கற்பனை செய்து கொண்டு தூ.டி. விவாதத்தில் அவரின் புதிய சரக்குகளை அவிழ்த்து விட்ட பொழுதும் அவற்றிற்கும் முறையாக  தக்க ஆதாரத்தைக் கூறி அவைகளும் சரியாகத்தான் எழுதப்பட்டு இருக்கிறது என்பதை அல்லாஹ்வின் அருளால் நிரூபித்தோம். எனவே அறைகுறை ஆய்வை மேற்கொண்டு தவறாக சட்டம் சொன்னவர் பி.ஜே.தான் என்பது இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை இப்றாஹீம் அவர்களே! உங்களுக்கு எப்படி புரியும்! நீங்கள் தான் அறிவை அடகு வைத்துவிட்டீர்களே!

அடுத்து; நான் பி.ஜே.யிடம் விவாதித்து தமிழகத்தில் பிரபலமடைய கனவு கண்டதாக என் மீது குற்றம் சாட்டியுள்ளீர்கள்.

பி.ஜே. மற்றவர்களை விவாதத்திற்கு அழைத்தால் அதை அவரின் அறிவாற்றல் என த.த.ஜ.வினர் புகழாரம் சூட்டுகின்றனர்.

மற்றவர்கள் பி.ஜே.யின் தவறான கொள்கையை விமர்சித்தால் அவர்களைப் பார்த்து எங்கள் அண்ணனிடம் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? என்று கேள்வி கேட்கிறார்கள்?

சவாலை ஏற்று உங்கள்  அண்ணனுடன் விவாதம் புரிந்தால் விவாதம் செய்தவர்களை பிரபலமடைய கனவு காணக்கூடியவர் என்று குறை கூறுகிறீர்கள்.

இந்தப் போக்கு நீங்கள் முழுமையாக பி.ஜே.வுக்கு அடிமையாகிவிட்டதை காட்டுகிறது.

அடுத்து; இமாம்களையும், ஸஹாபாக்களையும், நபிமார்களையும் விமர்சித்த வந்த உமது அண்ணன், இறுதியாக குர்ஆனிலும் பிழை இருக்கிறது என்று கூறியுள்ளார் என்றால் அவர்தான் பிரபலத்தையும், அதை தக்க வைப்பதையும் விரும்பியுள்ளார் என்பதை காட்டுகிறது.

-------------------------------------------------------------------------

இப்றாஹீம் அவர்களே! யாரை வேண்டுமானாலும் குற்றப்படுத்தி விட்டு அதற்கு தொடர்பான வசனங்களையும், ஹதீஸ்களையும் வரிசைப்படுத்த என்னாலும் முடியும் எனக் கூறியுள்ளீர்கள்.

அதை நீங்கள் அவ்வாறு கூறுவது சரியல்ல. மாறாக அது மட்டும் தான் உங்களுக்கும், உங்கள் அண்ணனுக்கும், தம்பிமார்களுக்கும் தெரியும் என்று கூறவேண்டும். ஏனெனில் நீங்கள் யாரையெல்லாம் குறை கூறுகிறீர்களோ அவர்களை அப்படித்தான் குறை கூறுகிறீர்கள்.

--------------------------------------------------------------------------------

ஆதாரங்களை அள்ளிப்போடுவது தான் ஆலிம்களுக்கு அழகு என்று கூறியுள்ளீர்கள்.

ஆதாரங்களை அள்ளிப்போட்ட பின்பும் விதண்டாவாதமாக மறுப்பது தான் உங்களைப் போன்றவர்களுக்கு அழகோ!!

--------------------------------------------------------------------------

1 – பி.ஜே. உணர்வில் என்ன பொய் கூறியிருந்தார்? என்பதை எடுத்துக் காட்டி அது பொய் என்பதை நிரூபித்து உண்மை என்ன என்பதை சொல்லியிருக்க வேண்டுமல்லவா?

2 – கண் கொத்தி பாம்பாக பல உலமாக்களும், அமைப்புகளும் பி.ஜே.யை கவனித்து வருகின்றன. அப்படியிருக்கையில் அவர் மறந்தும் கூட பொய் சொல்ல முடியாத நிலையை தமிழக மக்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அப்படியிருக்க வீடியோ பதிவு உங்களாலும் பதிவு செய்யப்பட்டிருக்கையில் அவர் பொய் சொல்லியிருக்கிறார் என்பதை நம்பமுடியாது என்று கூறியுள்ளீர்கள்.

இப்றாஹீம் அவர்களே! மிக அவசரப்படுகிறீர். அவசரப்படாதீர். உங்கள் அண்ணன் உணர்வில் கூறிய பொய்களை இன்ஷா அல்லாஹ் விரைவில் ஆதாரத்துடன் நிரூபிக்கிறேன். அதன் பின்பு உமது அண்ணன் ‘வீடியோவில் உண்மை நிகழ்வு பதிவாகியிருந்தாலும் துணிந்து பொய் சொல்பவர்தான்’ என்பதை நம்புவீர்கள். மன்னிக்கவும். நீங்கள் நம்பமாட்டிர்கள் என்பதை நீங்களே ஒப்புக்கொண்டுவிட்டீர்களே! எனவே நடுநிலை மக்கள் நம்புவார்கள். உண்மையை விளங்குவார்கள்.

-------------------------------------------------------------

நடுநிலை மக்கள் என்று இஸ்லாம் அனுமதிக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளீர்கள்.

அறியாமை காலத்திலிருந்து விடுபட்டதாக வியாக்கியானம் பேசும் இப்றாஹீம் அவர்களே! இன்னும் நீங்கள் அறியாமை காலத்தில்தான் இருக்கின்றீர்கள் என்பதை மேற்கண்ட உமது கேள்வியே பறைசாற்றுகிறது.

காஃபிர்கள் தெளிவான அத்தாட்சி வந்த பின்பும் அவர்களுடைய தலைவர்களின் வசீகரச் சொற்களில் மதிமயங்கி குருடர்களாகவும், செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருந்து, அவர்களின் வழிகெட்ட தலைவர்கள் மீது குருட்டு நம்பிக்கை வைத்தது போல,

யூத, நஸாராக்கள் அவர்களின் தலைவர்களின் வசீகரப் பேச்சில் மதிமயங்கி குருடர்களாகவும், செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருந்து, அவர்களின் வழிகெட்ட தலைவர்கள் மீது குருட்டு நம்பிக்கை வைத்தது போல,

த.த.ஜ.வினர்களும், நீங்களும் உங்கள் இயக்கத் தலைவர் பி.ஜே.யின் வசீகரப் பேச்சில் மதிமயங்கி குருடர்களாகவும், செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் ஆகிவிட்டீர்கள். அதன் வெளிப்பாடாக ‘உலகில் யார் வேண்டுமானாலும் பொய் சொல்ல முடியும். ஆனால் பி.ஜே. பொய் சொல்ல முடியாது. ஏன்! மறந்து கூட அவர் பொய் சொல்ல முடியாது. அவர் பொய் சொல்வதாக கூறப்பட்டால் அதை நம்பவும் முடியாது என்று கூறி பி.ஜே.யின் மீது குருட்டு நம்பிக்கை வைத்துள்ளீர்கள்.

அது போல் இல்லாமல் நடுநிலையாக இருப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறது என்று கூறுவதை விட அப்படியிருப்பதைத்தான் இஸ்லாம் ஏவுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

‘நாம் உங்களை நடுநிலையான சமுதாயமாக ஆக்கியுள்ளோம்’ (அல்குர்ஆன். 2/143) என்று இறைவன் முஸ்லிம்களைப் பற்றிக் கூறுகிறான்.

ஆனால் நீங்களோ நடுநிலை மக்கள் என்பதை இஸ்லாம் அனுமதிக்கிறதா? என்று கேள்வி கேட்கிறீர்.

மவ்லவி முஸ்தபா அவரகளே ,கடன் வாங்கியவனிடம் ,கடன் கொடுத்தவன் கடன் கேட்டபொழுது வாய் மூடி மவுனமாக இருந்தவன் ,உனக்கு செவிடா ?நான் கேட்பது கேட்கவில்லையா? என்றதும் ஐயோ ,என்னை செவிடன் என்று சொல்லிவிட்டார் ,எனக்கு செவிடா எல்லோரும் வாருங்கள் .எனக்கு செவிடு இல்லை என்பதை நான் நிருபித்து காட்டுகிறேன் என்று கூச்சல் போட்டானாம்.உடன் கடன்காரன் உனக்கு செவிடு இல்லை நான் ஒத்துக் கொள்கிறேன் .எனது கடனை கொடப்பா என்றார்..உடன் கடன் வாங்கியவன் அதெல்லாம் முடியாது .இப்போது என்னை செவிடன் என்று ஏன் சொன்னீங்க ,அதை நிருபித்துவிட்டுத்தான் கடன் பற்றி எல்லாம் பேச வேண்டும் என்றுவாதிட்டது போல வாதங்களை வைத்துள்ளீர்கள் ..இருப்பினும் இறையருளால் உங்களது அத்தனை நியாயமற்ற வாதங்களுக்கும் பதில் அளிக்கிறேன் ,இறைவன் நாடினால் ,,,
முஸ்தபாவுக்கு எனது பதில் 

திசை திருப்ப முயலும் மவ்லவி

பிஸ்மில்லா ஹிரஹ்மா நிரஹீம் ,,,,

மவ்லவி முஸ்தபா அவரகளே,அஸ்ஸலாமு அலைக்கும் ,கடன் வாங்கியவனிடம் ,கடன் கொடுத்தவன் கடன் கேட்டபொழுது வாய் மூடி மவுனமாக இருந்தவன் ,உனக்கு செவிடா ?நான் கேட்பது கேட்கவில்லையா? என்றதும் ஐயோ ,என்னை செவிடன் என்று சொல்லிவிட்டார் ,எனக்கு செவிடா எல்லோரும் வாருங்கள் .எனக்கு செவிடு இல்லை என்பதை நான் நிருபித்து காட்டுகிறேன் என்று கூச்சல் போட்டானாம்.உடன் கடன்காரன் உனக்கு செவிடு இல்லை நான் ஒத்துக் கொள்கிறேன் .எனது கடனை கொடப்பா என்றார்..உடன் கடன் வாங்கியவன் அதெல்லாம் முடியாது .இப்போது என்னை செவிடன் என்று ஏன் சொன்னீங்க ,அதை நிருபித்துவிட்டுத்தான் கடன் பற்றி எல்லாம் பேச வேண்டும் என்றுவாதிட்டது போல வாதங்களை வைத்துள்ளீர்கள் ..இருப்பினும் இறையருளால் உங்களது அத்தனை நியாயமற்ற வாதங்களுக்கும் பதில் அளிக்கிறேன் ,இறைவன் நாடினால் ,,, 
மவ்லவி முஸ்தபாவுக்கு .தங்களது பதில்கள பார்த்தேன் .எனது இரண்டு கேள்விகளைத் தவிர மற்ற அனைத்திற்கும் தவறான பதில் அளித்து கடும் முயற்சியில் திசைதிருப்ப முனைகிறீர்கள் .மாட்டு பொங்கல் இணைவைப்பு ,துணை ஓய்ப்பு ,நடுநிலை பற்றியெல்லாம் நிறைய எழுதுவோம் ,விவாதிப்போம் .
ஆனால் அதற்கு முன்னர் எனது இரு கேள்விகளும் உங்களுக்கு தெரியும் .
1.குர்ஆனில் எழுத்து பிழை உள்ளது என்பது யூத நாசராக்களின் நச்சு கருத்தாகும் என்பதற்கு ஆதாரமாக answering islam என்ற கிறித்தவர்களின் தளத்திலிருந்து ஆதாரம் காட்டினீர்கள். அதற்கு பீஜே அவர்கள் பாக்கியாநியிளிருந்து பதில் தந்தார் .மேலும் ஆயிசா [ரலி] அவர்களும் இப்னு அப்பாஸ் [ரலி] அவர்களும் சொன்ன பிழைகள் சரியில்லாவிட்டாலும் குர்ஆனில் எழுத்து பிழைகள் உள்ளன என்று சொன்னதற்கு ஆதாரம் வைத்தார்கள் .அவற்றை மறுக்க வழி இல்லாமல் திணறி ,ஐயோ ஆயிசா [ரலி] அவர்கள் பற்றியும் அவதூறு சொல்லிவிட்டார்களே என்ற கூச்சலைத் தவிர வேறொன்றும் அதற்கு எதிராக வைக்கமுடியவில்லை .இது குறித்து நான் கேட்டதற்கு ,பொத்தாம் பொதுவில் உங்களது கொள்கைகளை குழிதோண்டி புதைத்துவிட்டோம் என்று கூறி முடித்துவிட்டீர்கள் .அப்படிஎன்றால் யூத கருத்துக்கள் சம்பந்தமாக மவுனம் .மவுனம் ஒப்புதலே என்பது நியதி .இப்போது சொல்லுங்கள் ,யூதர்கள் மட்டும் சொல்லியிருந்தாலே யூத கருத்துகளாக இருக்க முடியும் .அவ்வாறெனில் பீஜே கொடுத்த ஆதாரங்கள் அனைத்தையும் தவறு என்று நீங்கள் நிரூபித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளீர்கள் .நீங்கள் நிருபிக்கவிட்டால் ஒப்புக் கொண்டதாகவே பொருள்.நீங்கள் விவாதத்தில் நிறுபித்தது உண்மை என்றால் அந்த வீடியோவுக்கு இங்கே லிங்க் கொடுங்கள் .
அப்படி காட்டவில்லைஎன்றால் நீங்கள் சொன்ன ஆயத்து உங்களுக்கு முற்றிலும் பொருந்தும் .
"நம்முடைய ஆதாரங்களை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். (எனினும்) அவற்றை அவர்கள் புறக்கணிக்கக்கூடியவர்களாகவே இருந்தனர்". (அல்குர்ஆன். 15/81)
2.அல்இத்கான் என்ற நூலில் உள்ள ஆரம்பகால விதியை காட்டுங்கள் .///ஏனெனில் தூ.டி. விவாதத்தில் உங்கள் அண்ணனிடம் நேரடி ஆதாரங்கள் பல கொடுத்தும் அதை அவர் ஆதாரமின்றி மறுத்தாரே!///
தவறான ஆதாரங்கள் என்பதால்தானே மறுத்தார் .ஆதாரங்கள் என்று சொல்லி விட்டால் அதை ஆய்வு இல்லாமல் ஏற்றுக் கொள்ள முடியுமா?உங்கள் ஆதாரத்தை பீஜே மறுத்தால் அதை நீங்கள் மறுத்து உங்களது ஆதாரத்தை நீங்கள் நிலை நிறுத்தியிருக்க வேண்டாமா? பீஜே ஆதாரமின்றி மறுத்தார் .என்று சொல்லியுள்ளீர்கள் .அதைத்தான் கேட்கிறேன் .ஆரம்பகால விதிகளுக்கு நீங்கள் கொடுத்த நேரடி ஆதாரத்தையும் பீஜே அதை ஆதாரமின்றி மறுத்ததையும் சொன்னால் எனது கேள்விக்கு பதில் கிடைத்தாயிற்று .

குர்ஆனுக்கு பிறகு 700 ஆண்டுகளுக்கு பின்னர் குர்ஆனில் எழுத்து பிழைகளுக்கு சொல்லப்பட்ட காரணங்களையும் 1400 ஆண்டுகளுக்கு பின்னர் சொல்லப்பட்ட காரணங்களையும் சமளவில் தான் வைத்துத்தான் பார்க்க வேண்டும் .ஆரம்பகால விதிகள் என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது ஆரம்பகால விதிகளுக்கு ஆதாரம் வைக்கபப்ட வேண்டும் .விதிகள் என்பதற்கான வியாக்கியானமும் அதில் இருக்க வேண்டும் .

///ஒரு மொழியைப் பற்றி அந்த மொழியை தாய் மொழியாகக் கொண்ட அறிஞர்கள் கூறும் விளக்கத்தை மற்ற மொழிக்காரர்கள் ஏற்றுக் கொள்வது தான் அறிவுடமையாகும். இப்பேருண்மையை விரும்பியோ, விரும்பாமலோ உங்கள் ஆருயிர் அண்ணன் பி.ஜே.யும் ஒப்புக் கொண்டுள்ளார். அதற்கான வீடியோ ஆதாரத்தை கூடிய விரைவில் இன்ஷா அல்லாஹ் வெளியிடுவேன். எதிர்பாருங்கள்..///
பீஜே உங்களுக்கு ஆதரவாக சொல்லியிருந்தால் அதை அப்படியே ஏற்றுக் கொள்வீர்கள் .அவர் அப்படி சொல்லியிருந்தாலும் தாய் மொழி அறிஞர்களின் கருத்துக்கு மாறாக தக்க ஆதாரங்கள் இருந்தால் அதைத்தான் ஏற்றுக் கொள்ளமுடியும். தாய் மொழி அறிஞர்களைவிட மாரிஸ் புகைல் குர்ஆனில் அரபு சொற்களுக்கு அருமயான மொழிபெயர்ப்புகளை அளித்துள்ளார் .அதில் "அலக் "என்ற சொல்லுக்கு அவர் தரும் விளக்கம் பிரபல்யம் .பீஜேவிடம் உங்களுக்கு சாதகமான விசயங்களில் தாங்களே மூளையை அடகு வைத்துள்ளீர்கள் 
நன்ஸக், நுன்ஸிஹா வுக்கு பதிலளிக்கப்பட்ட பிறகும் மீண்டும் அதைக் கேட்டுள்ளீர்கள்என்று கூறி உள்ளீர்கள் ,அந்த பதிலிலிருந்து தான் எனது கேள்விகள் .


///யுஹ்யீ (يُحْيِي) என்பதில் ஒரே இனத்தைச்சார்ந்த இரண்டு “யே ((ي அடுத்தடுத்து வந்து அதில் இரண்டாவது “யே ((ي சுக்கூன் பெற்றிருப்பதால் அதை ஸஹாபாக்கள் விட்டு எழுதியுள்ளனர்.///
அதைப்போல நன்சக் ,நுன்சிஹா விழும் ஒரே இனத்தை சேர்ந்த இரண்டு நூன்கள் அடுத்தடுத்து வந்து அதில் இரண்டாவது நூன் சுக்கூன் பெற்றிருப்பதால் ,அந்த இரண்டாவது நூனை விட்டு சஹாபாக்கள் எழுதவில்லையே ஏன்?
//எனினும் சட்ட அடிப்படையில் விடப்பட்ட அந்த எழுத்தை உச்சரிக்க வேண்டும் என்பதற்காகவும், ஆரம்பகால எழுத்து விதியை நாம் அறியாததாலும் விடப்பட்ட “யே ((يவை அறிவிப்பதற்காக எழுதப்பட்டிருக்கும் “யே ((يக்கு அருகில் அரபுநாட்டு குர்ஆன் பிரதியில் ( ) ஒரு சிறிய “யே ((يயும் இந்திய நாட்டு குர்ஆன் பிரதியில் யே ((يக்கு கீழ் கடாஜேரும் ( ) போடப்பட்டிருக்கும்.////
எனினும் சட்ட அடிப்படையில் இரண்டாவது சுக்கூன் உள்ள நூனை விட்டு எழுதி ,அந்த சொல்லை சரியாக உச்சரிக்க வேண்டும் என்பதற்காக ,ஆரம்பகாலத்து எழுத்து விதியை நாம் அறியாததாலும் விடப்பட்ட நூனை அரபு நாட்டு குர் ஆன் பிரதியில் ஒரு சிறிய நூனும்,இந்திய நாட்டு பிரதியில் நூனுக்கு கீழ் கடோஜெரும் போடப்படவில்லையே ஏன் ?

///ஆதாரங்களை அள்ளிப்போடுவது தான் ஆலிம்களுக்கு அழகு என்று கூறியுள்ளீர்கள்.

ஆதாரங்களை அள்ளிப்போட்ட பின்பும் விதண்டாவாதமாக மறுப்பது தான் உங்களைப் போன்றவர்களுக்கு அழகோ!!////
ஆதாரம் கேட்டால் இப்படி இழுத்தடித்து ஆதாரம் தராமல் தேவை இல்லாததை எழுதி கொண்டிருக்கும் உங்களது முறைகேட்டை என்னே வென்று சொல்லுவது !!!
ஆரம்பகால விதிகளுக்கு ஆதாரங்களை நுள்ளி கூட போடாமல் அள்ளிப் போட்டத்தாக அவிழ்ப்பது பச்சை பொய்.உங்களது ஆதாரம் விவாதத்திலே அடித்து நொறுக்கப்பட்டது .நொறுங்கிப் போன கண்ணாடிகள் போன்ற உங்களது ஆதாரத்தை மீண்டும் எப்படி வைக்க முடியும்? அதனாலே குரான் வசனங்களையும் ,பக்ரீத் பற்றிய தேவையற்ற விளக்கத்தையும் எழுதி அலட்டிகொண்டுவருகிரீர்கள் .
இன்சா அல்லாஹ் ,பக்ரீத் ,நடுநிலை ,சவால்விட்டது யார்?இணைவைப்பு பற்றி அடுத்து விவாதிக்கலாம் .முதலில் மேற்கண்டவற்றுக்கு உங்களது பதில்களை வையுங்கள் 

திசை திருப்புவது யார் ?எனக்கு மவ்லவி முஸ்தபாவின் பதில்


அறியாமையையும் இணைவைப்பையும்

அறியாமையையும், இணை வைப்பையும் அறியாத இப்றாஹீம் அவர்களே!

நீங்கள் கூறிய கடன் கதை நல்லாத்தான் இருக்கிறது. எனினும் அக்கதையில் உள்ள கடன் வாங்கியவரின் கதாபாத்திரம் முழுக்க உங்களுக்குத்தான் பொருந்தும்.

-------------------------------------------------------

நான் உங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் கடும் முயற்சியில் திசை திருப்ப முனைந்து மாட்டுப் பொங்கல், இணை வைப்பு, நடு நிலை ஆகியவற்றைப் பற்றி எழுதுவதாக கூறியுள்ளீர்!

இப்றாஹீம் அவர்களே! உங்கள் அண்ணனின் யூதக்கொள்கை தூ.டி. விவாதத்தில் அடித்து நொறுக்கப்பட்டு, நொறுங்கிப்போன கண்ணாடிகள் போன்று ஆனதால் தான் எனது கேள்விக்கு முறையான பதிலளிப்பதை விட்டு விட்டு பக்ரீதுக்கு மாட்டுப் பொங்கல் என்றும், பி.ஜே. மறந்து கூட பொய் கூற முடியாத மனிதர் என்றும், அவரை சுன்னத் ஜமாஅத் உலமாக்கள் மற்றும் பல அமைப்புகள் கண்கொத்தி பாம்பாக கண்கானிக்கிறது என்றும் பி.ஜே. புகழ் பாடியும், நடு நிலை மனிதர் என்று இஸ்லாம் அனுமதிக்கிறதா? என்றும், இன்னும் இது போன்ற தேவையில்லாத பல விஷயங்களைக் கூறி அசல் விஷயத்தை விட்டும் திசை மாறி தப்பிக்க முயல்கிறீர்.

---------------------------------------------------------------

 ‘உலகில் யார் வேண்டுமானாலும் பொய் சொல்லிவிட முடியும். ஆனால் பி.ஜே. பொய் சொல்லிவிட முடியாது! பி.ஜே. என்ன! எங்களது கிளையில் கூட அதன் உறுப்பினர்களை சுன்னத் ஜமாஅத் கண்கானித்து வருகிறது............. கண் கொத்தி பாம்பாக பல உலமாக்களும், அமைப்புகளும் கவனித்து வருகின்றன. அப்படியிருக்கையில் அவர் மறந்தும் கூட பொய் சொல்ல முடியாத நிலையை தமிழக முஸ்லிம்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்’ என்று கூறியுள்ளீர். அப்படியென்றால்

1 – அல்லாஹ்வின் விஷேசமான நேரடி கண்கானிப்பில் வாழ்ந்த, வளர்ந்த நபிமார்கள் பாவங்கள் செய்ததாக எப்படி கூறுகிறீர்?

2 – உங்களின் கூற்றுப்பிரகாரம் அல்லாஹ்வின் விஷேசமான நேரடி கண்கானிப்பில் இருந்த நபிமார்களே பாவங்கள் செய்ய முடியும் என்றும், பாவங்கள் செய்தார்கள் என்றும்  கூறுகிற நீங்கள் சுன்னத் ஜமாஅத் மற்றும் பல அமைப்புகளின் கண்கானிப்பில் இருக்கிற பி.ஜே. பொய் சொல்ல முடியாது என்றும், மறந்தும் கூட அவர் பொய் பேச முடியாது என்றும், உலகில் மற்ற யார் வேண்டுமானாலும் பொய் சொல்ல முடியும் என்றும்  கூறியுள்ளீர்களே!

நபிமார்களை விட பி.ஜே. உயர்ந்தவரா?

பி.ஜே.யை விட நபிமார்கள் தாழ்ந்தவர்களா?

பி.ஜே.யின் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் கூட நபிமார்கள் மீது வைக்கவில்லையே!?

3 – சுன்னத் ஜமாஅத்தினரின் கண்கானிப்பில் பி.ஜே. இருப்பதால் அவர் மறந்தும் கூட பொய் சொல்ல முடியாது என்கிறீர்!

அப்படியென்றால் அல்லாஹ்வின் விஷேசமான நேரடி கண்கானிப்பில் இருந்த நபிமார்கள் பாவம் செய்ய முடியும்! மனிதக் கண்கானிப்பில் இருக்கிற பி.ஜே. பாவம் செய்ய முடியாது என்ற உங்களது கொள்கை எவ்வளவு ஆபத்தானது என்பது புரியவில்லையா!?

மனிதக் கண்கானிப்பை விட இறைக் கண்கானிப்பு தரம் தாழ்ந்ததா!?

மனிதக் கண்கானிப்பின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் கூட மனிதனைப் படைத்த அல்லாஹ்வின் மீது வைக்கவில்லையே!? என்று நீங்கள் செய்த இணை வைப்பை உங்களுக்கு விளக்கினேன்.

இறைவனின் விஷேசக் கண்கானிப்பில் இருந்த நபிமார்களே பாவங்கள் செய்துள்ளனர் என்று கூறுகிற நீங்கள் மனிதக் கண்கானிப்பில் இருக்கிற பி.ஜே. மறந்து கூட பொய் சொல்லமாட்டார் என்று நீங்கள் கூறியது பச்சை ஷிர்க் அல்லவா!

இதை நான் உங்களுக்கு எடுத்துக் கூறும் பொழுது ஷிர்க்கை உணர்ந்து தவ்பா செய்வதை விட்டு விட்டு திருநெல்வேலிக்காரனுக்கே அல்வாவா? தவ்ஹீத்காரன் மீதே இணை வைப்புக் குற்றமா? என்று ஆணவமாக பதிலளித்துள்ளீர்.

ஷிர்க்கை ஒழிக்க வந்த இறைத்தூதர் நபி யூனுஸ் (அலை) அவர்கள் இணை கற்பித்து விட்டதாக உங்கள் அண்ணன் மொழி பெயர்ப்பில் எழுதியுள்ளார். ஷிர்க்கை ஒழிக்க வந்த இறுதித் தூதர் எங்களது உயிரிலும் மேலான பெருமானார் நபி (ஸல்) அவர்களும் இணை வைத்ததாக உங்கள் அண்ணன் பி.ஜே. கூறியுள்ளார். (நவூதுபில்லாஹ்)

இத்தகைய இழி கொள்கையை பரப்புகின்ற நீங்கள் தவ்ஹீத்காரன்களா? உங்கள் மீது இணை வைப்புக் குற்றத்தைக் கூறினால் உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லையா?

நபிமார்கள் இணை வைத்துவிட்டதாக உங்கள் அண்ணன் கூறுவதை உங்களால் ஏற்றுக் கொள்ளமுடிகிறது!

இக்கேடுகெட்ட கொள்கையைவுடைய உங்கள் மீது இணை வைத்துவிட்டதாக கூறினால் உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லையோ???

-----------------------------------------------------------------

ஈத் என்ற அரபுச் சொல்லுக்கு பொங்கல் என்று நீங்கள் பொருள் கொடுத்ததால் அதற்குரிய ஆதாரத்தை வையுங்களேன்! என்று உங்களிடம் கூறினேன்.

அதற்கு நீங்கள் பதிலளிக்கையில்  ‘பக்ரீத் என்று சொன்ன நீங்கள் ஈதுல் அழ்ஹாவை மாட்டு பெருநாள் என்று சொல்வதற்கு ஆதாரம் தாருங்கள் என்று கூறியுள்ளீர்.

இப்றாஹீம் அவர்களே! இதுவரை பக்ரீதுக்கு மாட்டுப் பொங்கல் என்று கூறிவந்த உங்களிடம் நான் ஈத் என்ற அரபுச் சொல்லுக்கு பொங்கல் என்றுதான் பொருளா? அப்படியென்றால் ஈத் என்றச் சொல்லுக்கு பொங்கல் என்று தான் பொருள் என்பதற்கும், பக்ரீதுக்கு மாட்டுப் பொங்கல் என்று தான் பொருள் என்பதற்கும் ஆதாரங்களை வையுங்களேன்! என்ற எனது கேள்விக்கு உங்களிடம் ஆதாரம் இல்லாததால் இப்பொழுது பக்ரீதுக்கு மாட்டு பெருநாள் என்று பொருள் கொடுத்துள்ளீர்கள்.

ஆக மொத்தம் ஈத் என்றச் சொல்லுக்கு பொங்கல் என்று பொருள் இல்லை என்றும், அவ்வாறு பொருள் கொடுப்பது தவறு என்பதையும் ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி!

அடுத்து ஈதுல் அழ்ஹாவுக்கு பக்ரீத் என்று நான் குறிப்பிட்டதால் அவ்வாறு கூறுவதற்கு இப்பொழுது ஆதாரம் கேட்டுள்ளீர்கள்.

பக்ரீத் என்பதற்கு என்ன பொருள் கொடுக்க வேண்டும் என்பதையும், அதற்குரிய விளக்கத்தையும் ஏற்கனவே நான் கூறியுள்ளேன்.

நான் அவ்வாறு கூறியது தவறு என்றால் ஏன் தவறு என்பதற்குரிய ஆதாரத்தை நீங்கள் வையுங்களேன் பார்ப்போம்.

-------------------------------------------------------------

இப்றாஹீம் அவர்களே! குர்ஆனில் எழுத்துப் பிழை இருக்கிறது என்று கூறுவது யூதர்களின் கொள்கை என்ற எனது வாதத்திற்கு பி.ஜே. அவர்கள் பாக்கிலானீ, ஆயிஷா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோரின் கூற்றிலிருந்து ஆதாரம் தந்தார் என்றும், அவற்றை மறுக்க வழியில்லாமல் திணறி ஐயோ! ஆயிஷா (ரலி) அவர்கள் பற்றியும் அவதூறு சொல்லிவிட்டார்களே என்று கூச்சலைத்தவிர வேறொன்றும் அதற்கு எதிராக நாங்கள் வைக்கவில்லை என்றும். யூதர்கள் மட்டுமே சொல்லியிருந்தால் தான் அது யூதக் கருத்துக்களாக இருக்கமுடியும்! எனவே பி.ஜே. கொடுத்த ஆதாரங்கள் அனைத்தும் தவறு என்று நீங்கள் நிரூபித்தே ஆக வேண்டுமென்ற கட்டாயத்தில் உள்ளீர்கள் என்றும் கூறியுள்ளீர்கள்.

மேலும் நீங்கள் விவாதத்தில் நிரூபித்தது உண்மையென்றால் அந்த வீடியோவுக்கு இங்கே லிங்க் கொடுங்கள் என்றும் கூறியுள்ளீர்.

இன்ஷா அல்லாஹ் அதற்குரிய லிங்கை கூடிய விரைவில் கொடுக்கிறேன். எதிர்பாருங்கள்.

இன்ஷா அல்லாஹ் பாக்கிலானீ (ரஹ்), ஆயிஷா (ரளி), இப்னு அப்பாஸ் (ரளி) ஆகியோர்கள் விஷயமாக உங்கள் அண்ணன் கூறிய பொய், பித்தலாட்டங்களையும் மிகத்தெளிவான ஆதாரங்களுடன் நிரூபிக்கிறேன். எதிர்பாருங்கள்.  

-------------------------------------------------------------------------

குர்ஆனில் எழுத்துப் பிழை இல்லை என்பதற்குரிய விதியை குர்ஆன் இறங்கி 700 ஆண்டுகளுக்குப் பின்னால் எழுதப்பட்ட நூலில் (இத்கான்) கூறப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும், குர்ஆன் இறங்குவதற்கு முன்புள்ள நூலிலிருந்து விதியைக்கூறி குர்ஆனில் எழுத்துப்பிழை இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் நீங்கள் கூறியதால் உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன்.

அதை மறுபடியும் ஞாபகமூட்டுகிறேன்.

உங்கள் கூற்றுப்பிரகாரம்

1 - ‘குர்ஆன் அருளப்பட்டு 1400 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்ட இன்றைய காலத்தில் ஒருவர் இருந்து கொண்டு, சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்புள்ள குர்ஆனில் எழுத்துப் பிழைகள் இருப்பதாக அவர் வாதிடுவதாக இருந்தால் அவர் குர்ஆனுக்கு முந்தைய காலத்து நூல்களிலிருந்து எழுத்து விதிகளைக் கூறி குர்ஆனில் எழுத்துப் பிழைகள் இருப்பதாக வாதிட்டால் தானே அதை ஏற்க வேண்டும்?

உங்கள் அண்ணன் குர்ஆனுக்கு முந்தைய காலத்து நூலை குறிப்பிட்டுத்தான் குர்ஆனில் பிழை இருப்பதாக வாதம் செய்தாரா?

2 – குர்ஆன் அருளப்பட்ட 700 ஆண்டுகளுக்குப் பின்பு எழுதப்பட்ட நூலில் அதன் ஆசிரியர் குர்ஆனில் எழுத்துப் பிழை இல்லை என்று சொன்னால் ஏற்கமாட்டீர்கள்!

குர்ஆன் அருளப்பட்டு 1400 ஆண்டுகளுக்குப் பின்பு வாழ்கிற பி.ஜே. குர்ஆனில் எழுத்துப் பிழை இருக்கிறது என்று சொன்னால் அதை ஏற்பேன் என்று கூறுகிறீர்களே! இது தான் உங்களின் சரி பார்க்கும் முறையோ! வேறொன்றும் இல்லை. நீங்கள் உங்களது அறிவை முழுவதுமாக பி.ஜே.யிடம் அடகு வைத்துள்ளதை மென்மேலும் மெய்ப்படுத்துகிறீர்கள்.

3 – குர்ஆன் அருளப்பட்டு 700 ஆண்டுகளுக்குப் பின்பு ஒருவர் ‘குர்ஆனில் இச்சொல் ஏன் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது என்று அனுமானமாக சொன்னால் அது விதியாக இருக்காது’ என்று கூறியுள்ளீர்கள்.

இப்றாஹீம் அவர்களே! நான் உங்கள் அண்ணனுக்கு அளித்த பதில்களில் குறிப்பிட்ட அரபு அறிஞர்கள் எவரும் அவர்களது அனுமானத்தை வைத்து சட்டம் கூறவில்லை. மாறாக ஏன் அவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்ற காரணத்தையும், சட்டத்தையும் முறையாக வைத்துத் தான் கூறியுள்ளார்கள்.

மேற்கண்ட எனது கேள்விக்கு முறையான பதில் உங்களிடம் இல்லை. எனவே கீழ்கண்டவாறு கூறி நழுவியுள்ளீர்கள்.

குர்ஆனுக்கு பிறகு 700 ஆண்டுகளுக்கு பின்னால் குர்ஆனில் எழுத்துப் பிழைகளுக்கு சொல்லப்பட்ட காரணங்களையும், 1400 ஆண்டுகளுக்கு பின்னர் சொல்லப்பட்ட காரணங்களையும் சம அளவில் வைத்துத்தான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளீர்கள்.

அந்தப்பதிலையும் கூட உங்களுக்கு எவ்வாறு சொல்லித்தரப்பட்டுள்ளதோ அவ்வாறே ஒப்பித்துள்ளீர்கள். ‘குர்ஆனுக்குப் பிறகு 700 ஆண்டுகளுக்கு பின்னால் குர்ஆனில் எழுத்துப் பிழைகளுக்கு சொல்லப்பட்ட காரணங்களையும்’ என்று கூறியுள்ளீர்கள். ஆனால் நான் தூ.டி. விவாதத்தில் ஆதாரமாக குறிப்பிட்ட  இத்கான் என்ற நூலிலும், மற்ற நூல்களிலும் குர்ஆனில் எழுத்துப் பிழைகளுக்கு காரணங்கள் கூறப்படவில்லை. மாறாக எழுத்துப் பிழைகள் இல்லை என்பதற்குத்தான் காரணங்கள் கூறப்பட்டுள்ளன.

----------------------------------------------------------

2 - ஒரு மொழியைப் பற்றி அந்த மொழியை தாய் மொழியாகக் கொண்ட அறிஞர்கள் கூறும் விளக்கத்தை மற்ற மொழிக்காரர்கள் ஏற்றுக் கொள்வது தான் அறிவுடமையாகும். இப்பேருண்மையை விரும்பியோ, விரும்பாமலோ  உங்கள் ஆருயிர் அண்ணன் பி.ஜே.யும் ஒப்புக் கொண்டுள்ளார். அதற்கான வீடியோ ஆதாரத்தை கூடிய விரைவில் இன்ஷா அல்லாஹ் வெளியிடுவேன். எதிர்பாருங்கள் என்ற எனது நியாமான வாதத்திற்கு எங்கே வீடியோ ஆதாரம் கேட்டால் வெளியிட்டுவிடுவேனோ என்று பயந்துவிட்டீர்களோ!

எனவே தான் எனது அக்கேள்விக்கு பதிலளிக்காமல் கீழ்கண்டவாறு கூறி நழுவ முயற்சித்துள்ளீர்கள்.

பி.ஜே. உங்களுக்கு ஆதரவாக சொல்லியிருந்தால் அதை அப்படியே ஏற்றுக் கொள்வீர்கள். பி.ஜே.யிடம் உங்களுக்கு சாதகமான விஷயங்களில் தாங்களே மூளையை அடகு வைத்துள்ளீர்கள் என்று கூறியுள்ளீர்கள்.

இப்றாஹீம் அவர்களே! ஷைத்தான் கூட சில சமயங்களில் உண்மையை கூறியுள்ளான். எனவே ஷைத்தான் கூட உண்மையை ஏற்றுக் கொண்டான் என்று நான் கூறினால் நான் ஷைத்தானிடம் எனக்கு சாதகமான விஷயங்களில் எனது மூளையை அடகு வைத்ததாக ஆகாது. அவ்வாறே நான் எனக்கு சாதகமான விஷயங்களில் உங்கள் அண்ணனிடமும் எனது மூளையை அடகு வைக்கவில்லை. எனினும் நீங்கள் உங்கள் அறிவை அவரிடம் அடகு வைத்துள்ளதால் அவரின் கூற்றை உங்களுக்குத் தந்தாலாவது உண்மையை ஏற்றுக் கொள்வீர்களா என்பதைப் பார்க்கத்தான் உங்கள் அண்ணனின் கூற்றையும் உங்களுக்குக் கூறினேன்.

----------------------------------------------------------

ஒரு மொழியைப் பற்றி அந்த மொழியை தாய் மொழியாகக் கொண்ட அறிஞர்கள் கூறும் விளக்கத்தை மற்ற மொழிக்காரர்கள் ஏற்றுக் கொள்வது தான் அறிவுடமையாகும் என்ற எனது நியாயமான வாதத்தை மறுக்க நிறைய முயற்சி செய்துள்ளீர் இப்றாஹீம் அவர்களே!

உங்களின் அர்த்தமற்ற வாதத்தை நன்கு கவனியுங்கள்.

தாய் மொழி அறிஞர்களின் கருத்துக்கு மாறாக தக்க ஆதாரங்கள் இருந்தால் அதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியும். தாய் மொழி அறிஞர்களை விட மாரிஸ் புகைல் குர்ஆனின் அரபுச் சொற்களுக்கு அருமையான மொழி பெயர்ப்புகளை அளித்துள்ளார். அதில் அலக் என்ற சொல்லுக்கு அவர் தரும் விளக்கம் பிரபல்யம் என்றுக் கூறி உங்கள் அறியாமையை மென்மேலும் வளர்த்துக் கொள்கிறீர் இப்றாஹீம் அவர்களே!

மேற்கண்ட உங்கள் வாதமும், அதற்கு மாரிஸ் புகைலின் உதாரணமும் தவறானதே!.

மனிதக் கருவியலின் முக்கிய அம்சங்கள் என்னும் நூலை டாக்டர் கைத் மூர் எழுதியுள்ளார். அந்நூலை அறைகுறையாக படித்த டாக்டர் வில்லியம் கேம்பல் என்ற யூதன் ‘அலக்’ என்றச் சொல்லுக்கு இரத்தக்கட்டி என்று பல அரபி அறிஞர்கள் பொருள் கொடுத்துள்ளனர். ஆனால் கருவியலின் பயணத்தில் இரத்தக்கட்டி என்ற ஒரு நிலை கிடையவே கிடையாது. ஆகையால் இந்தப்பொருள் ஒரு மிகப் பெரும் விஞ்ஞான சிக்கலாக உருவெடுத்துவிடுகின்றது என்றும், கருவியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் (உ+ம். 23/12-14) குர்ஆன் தெளிவாக தவறிழைக்கிறது என்றும் டாக்டர் வில்லியம் கேம்பல் என்ற யூதன் கூறியுள்ளான்.

டாக்டர் யூதனுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அளித்த பதிலை நன்கு கவனியுங்கள்.

(23/12-14 வசனத்திலுள்ள) அலக்கத் என்ற சொல்லுக்கு மூன்று பொருள்கள் உள்ளன.

1 –வது : ஒட்டிக்கொண்டிருப்பது என்ற பொருள். இது மிகவும் பொருத்தமான, உகந்த பொருளாகும். ஏனெனில் கற்பப்பையின் நேர் சுவற்றோடு அந்த சிசு ஒட்டிக் கொண்டே இருக்கிறது.

2 –வது : அட்டையைப் போன்றது என்ற பொருள். இவ்வாறும் பொருள் கொள்ளலாம். ஏனெனில் கற்பத்திலுள்ள சிசு தன்னுடைய ஆரம்ப கட்டத்தில் பார்ப்பதற்கு அட்டையைப் போன்றே காட்சியளிக்கின்றது. வடிவம், உருவம் போன்றவற்றிலும், வேறு சில கோணங்களிலும் அட்டையைப் போன்றே தோற்றமளிக்கின்றது, இரத்தத்தின் மூலமாகத்தான் வளர்ச்சியடைகின்றது.

3 –வது : இரத்தக்கட்டி என்ற பொருள். டாக்டர் வில்லியம் கேம்பல் இந்தப் பொருளைத்தான் ஆட்சேபிக்கிறார். இங்கே குர்ஆன் தவறிழைத்துவிட்டது என்றும் குற்றம் சாட்டுகிறார். ஒரு போதும் குர்ஆன் தவறிழைக்காது. டாக்டர் வில்லியம் கேம்பல் தான் தவறிழைக்கிறார். இன்று மருத்துவ விஞ்ஞானம் இந்த அளவுக்கு அபார வளர்ச்சியை அடைந்துவிட்ட பிறகும், டாக்டர் கெய்த் மூர் கற்ப சிசுவின் ஆரம்ப நிலை இரத்தக்கட்டியைப் போன்ற தோற்றத்திலும் காட்சியளிக்கின்றது என்பதை ஒத்துக்கொள்கிறார். கற்ப சிசுவின் படங்களை முன் வைத்து ஒப்பிட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். மூன்றாவது, நான்காவது வாரத்தில் அலக்காவின் தோற்றம் ஏறக்குறைய இரத்தக்கட்டியைப் போன்றே காடிசியளிக்கின்றதா? இல்லையா?   

சுருக்கமாகச் சொல்வதென்றால் : கற்ப சிசுவின் பரிணாம வளர்ச்சி நிலைகளை குர்ஆன் ஒப்பீட்டு வார்த்தைகளைக் கொண்டு விளக்குகின்றது. குர்ஆன் எவ்வாறு விவரிக்கின்றதோ அதைப் போலத்தான் கற்ப சிசு காட்சியளிக்கின்றது. முதல் கட்டத்தில் உண்மையிலேயே பார்ப்பதற்கு அது இரத்தக் கட்டியைப் போல, அட்டையைப் போல, ஒட்டிக் கொண்டிருக்கும் பொருளைப் போலவே காட்சியளிக்கின்றது. பிறகு அலக்கா என்பது முல்கா வாக மாறுவதாக குர்ஆன் குறிப்பிடுகிறது. அதாவது மெல்லப்பட்ட சதைக் கட்டியைப் போல் அது உருமாறுகின்றது. இதுவும் சரியான கருத்தே!

டாக்டர் கெய்த் மூர் பிளாஸ்டிக்கின் ஒரு துண்டை எடுத்து வாயில் நன்றாக மென்று அதை ஒப்பிட்டு நோக்கினார். அலக்கா என்பது முல்காவாக உருமாறிய பிறகும் அதாவது ஏறக்குறைய எட்டரை மாதங்கள் கழிந்த பிறகும் மெல்லப்பட்ட சதைக்கட்டியைப் போன்றே அது காட்சி தருவதாக டாக்டர் கெய்த் மூர் தெரிவிக்கிறார்.

மேற்கண்டவாறு டாக்டர் யூதனுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் பதிலளித்துள்ளார். எனவே இப்றாஹீம் அவர்களே! அலக் என்ற அரபுச் சொல்லுக்கு அரபி அறிஞர்கள் சரியான பொருளைத்தான் கொடுத்துள்ளனர் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். டாக்டர் யூதனை போன்று அரபி அறிஞர்கள் மீதும், குர்ஆன் மீதும் வீண் பழி சுமத்தாதீர்.

குறிப்பு : இப்றாஹீம் அவர்களே! டாக்டர் ஜாகிர் நாயக்கின் கூற்றை நான் கூறியதால் நான் அவரிடம் எனது மூளையை அடகு வைத்ததாக தவறாக விளங்கிக் கொள்ளாதீர். அவர் அலக்கா விற்கு கூறிய மூன்று பொருள்களும் அரபி அகராதியில் இருக்கின்றது.

----------------------------------------------------------------

 இப்றாஹீம் அவர்களே! தாய் மொழி அறிஞர்களின் கருத்துக்கு மாறாக தக்க ஆதாரங்கள் இருந்தால் அதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியும் என்று கூறி விஞ்ஞான விஷயங்களை கூறியுள்ளீர். அதற்கும் கூட தவறான உதாரணத்தையே கூறியுள்ளீர்.

ஆனால் நாம் இப்பொழுது பேசிக்கொண்டிருப்பது விஞ்ஞானக்கூற்றுக்களை அல்ல. மாறாக அரபு மொழியின் இலக்கனத்தைப் பற்றியும், அதன் எழுத்து விதிகளைப் பற்றியுமாகும்.

ஒரு மொழியின் இலக்கனச் சட்டத்தைப் பற்றியும், அதன் எழுத்து விதிகளைப் பற்றியும் அந்த மொழியை தாய் மொழியாகக் கொண்ட அறிஞர்களின் கூற்றை ஏற்பது தானே அறிவுடமையாகும். இது கூடவா உங்களுக்குப் புரியவில்லை.

-------------------------------------------------------------------------

இப்றாஹீம் அவர்களே! ஆதாரங்களை அள்ளிப்போட்ட பின்பும் விதண்டாவாதமாக மறுப்பது தான் உங்களைப் போன்றவர்களுக்கு அழகோ!! என்ற எனது கேள்விக்கு, ஆதாரம் கேட்டால் இப்படி இழுத்தடித்து ஆதாரம் தராமல் தேவையில்லாததை எழுதிக் கொண்டிருக்கும் உங்களது முறை கேட்டை என்னேவென்று சொல்லுவது? என்று கூறியுள்ளீர்.

தூ.டி. விவாதத்தில் நாங்கள் கொடுத்த ஆதாரங்கள் அனைத்தையும் ஆதாரமின்றி மறுத்த உங்கள் அண்ணனின் பரிதாபத்திற்குரிய நிலையை என்னேவென்று கூறுவது?  உங்கள் அண்ணனின் அச்செயலை அப்படியே குருட்டுத்தனமாக பின்பற்றும் உங்களின் மிக பரிதாபத்திற்குரிய நிலையை என்னேவென்று கூறுவது??!

-----------------------------------------------------------

ஆரம்ப காலத்து விதிகளுக்கு ஆதாரங்களை நுள்ளி கூட போடாமல் அள்ளிப் போட்டதாக அவிழ்ப்பது பச்சை பொய் என்று கூறியுள்ளீர்.

குர்ஆனிலுள்ள பல சொற்கள் பிழையாக எழுதப்பட்டிருக்கிறது என்று உங்கள் அண்ணன் புளுகிய பொய்களுக்கு மறுப்பாக   ஆரம்ப காலத்து விதிகளையும், அதன் ஆதாரங்களையும் லிஸானுல் அரப், அதபுல் கிதாப், அல்இத்கான், அல்புர்ஹான், அல்முக்னிஃவு, புகாரி, தபரீ போன்ற பல நூற்களிலிருந்து நாங்கள் அள்ளிப்போட்டும், நுள்ளி கூட போடவில்லை என்று நீங்களும், உங்கள் அண்ணனும், தம்பிமார்களும் கூறுவதுதான் பச்சைப் பொய்யாகும்.

-----------------------------------------------------------------------

இப்றாஹீம் அவர்களே! நான் பி.ஜே.யிடம் விவாதித்து தமிழகத்தில் பிரபலமடைய கனவு கண்டதாக என் மீது குற்றம் சாட்டினீர்.

பி.ஜே. மற்றவர்களை விவாதத்திற்கு அழைத்தால் அதை அவரின் அறிவாற்றல் என த.த.ஜ.வினர் புகழாரம் சூட்டுகின்றனர்.

மற்றவர்கள் பி.ஜே.யின் தவறான கொள்கையை விமர்சித்தால் அவர்களைப் பார்த்து எங்கள் அண்ணனிடம் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? என்று கேள்வி கேட்கிறார்கள்?

சவாலை ஏற்று உங்கள்  அண்ணனுடன் விவாதம் புரிந்தால் விவாதம் செய்தவர்களை பிரபலமடைய கனவு காணக்கூடியவர் என்று குறை கூறுகிறீர்கள்.

இந்தப் போக்கு நீங்கள் முழுமையாக பி.ஜே.வுக்கு அடிமையாகிவிட்டதை காட்டுகிறது என்று நான் கூறினேன்.

அதற்கு நீங்கள் பதிலளிக்கையில்; பி.ஜே. சவால் விட்டாரா? நீங்கள் சவால் விட்டீர்களா? அபூஜஹ்லின் வாரிசுகள் யார்? என்ற தலைப்பில் சவால் விட்டு பின்பு சவடால் ஆகி, குர்ஆனில் எழுத்துப் பிழைகளா? என்று சவாலை மாற்றியது யார்? என்று கேள்வி கேட்டுள்ளீர்.

அபூஜஹ்லின் வாரிசுகள் யார்? என்றத்தலைப்பில் நான் உங்கள் அண்ணனை விவாதத்திற்கு அழைத்ததாக கூறியுள்ளீரே! அதற்குரிய ஆதாரத்தை முன் வையுங்களேன்!

வேறொன்றுமில்லை. உங்களுக்கு என்ன சொல்லித்தரப்படுகிறதோ அதை நன்றாக ஒப்பித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும், நீங்கள் முழுமையாக பி.ஜே.வுக்கு அடிமையாகிவிட்டதையும்  மென்மேலும் மெய்ப்படுத்திக் கொண்டிருக்கிறீர்.

------------------------------------------------------

இப்றாஹீம் அவர்களே! எனக்கும், என்னைப் போன்ற பலருக்கும் பி.ஜே. பெரும் சவாலகவே உள்ளார் என்று கூறியுள்ளீர்.

உண்மையைத்தான் உரைத்துள்ளீர் இப்றாஹீம் அவர்களே! எனக்கும், என்னைப் போன்ற பல சுன்னத் ஜமாஅத் அறிஞர்களுக்கும் யூதக்கைகூலிகள் பெரும் சவாலாகவே உள்ளனர்.

--------------------------------------------------------------------------

நன்ஸக், நுன்ஸிஹா வுக்கு பதிலளிக்கப்பட்ட பிறகும் மீண்டும் மீண்டும் அதைக் கேட்டுள்ளீர்கள். உங்களின் இந்த அறியாமைக்குத்தான் தெளிவாக பதில் அளித்துள்ளேன். அந்தப் பதில் உங்களுக்குப் புரியவில்லையென்றால் உங்களுக்கு குர்ஆனை பார்த்து ஓதத்தெரியவில்லை என்பதை அது உணர்த்துகிறது. எனவே உண்மையை விளங்க குர்ஆனை அரபியில் ஓதக் கற்றுங்கள்.

-----------------------------------------------------------------

‘யுஹ்யீ (يُحْيِي) என்பதில் ஒரே இனத்தைச்சார்ந்த இரண்டு “யே ((ي அடுத்தடுத்து வந்து  அதில் இரண்டாவது “யே ((ي சுக்கூன் பெற்றிருப்பதால் அதை ஸஹாபாக்கள் விட்டு எழுதியுள்ளனர்.

எனினும் சட்ட அடிப்படையில் விடப்பட்ட அந்த எழுத்தை உச்சரிக்க வேண்டும் என்பதற்காகவும், ஆரம்பகால எழுத்து விதியை நாம் அறியாததாலும் விடப்பட்ட “யே ((يவை அறிவிப்பதற்காக எழுதப்பட்டிருக்கும் “யே ((يக்கு அருகில் அரபுநாட்டு குர்ஆன் பிரதியில் ( ) ஒரு சிறிய “யே ((يயும் இந்திய நாட்டு குர்ஆன் பிரதியில் யே ((يக்கு கீழ் கடாஜேரும் ( ) போடப்பட்டிருக்கும்.

என்று ‘யுஹ்யீ (يُحْيِي) க்கு கூறப்பட்ட விளக்கத்தை குர்ஆனை பார்த்து ஓதத்தெரிந்த சிறு பிள்ளைக்கு விளக்கினாலும் அது கூட விளங்கிவிடும். உங்களுக்கு விளங்கவில்லையென்றால் குர்ஆனை பார்த்து ஓதக் கற்றுங்கள் என்று தான் நான் உங்களுக்கு கூறமுடியும்

அரபு நாட்டு குர்ஆன் பிரதியில் “யே ((يக்கு அருகில் ஒரு சிறிய “யே ((يயும், இந்திய நாட்டு குர்ஆன் பிரதியில் யே ((يக்கு கீழ் கடாஜேரும் போடப்பட்டிருக்கும் என்ற சிறிய விஷயத்தைக் கூட விளங்குமளவுக்கு போதிய அரபு ஞானம் இல்லாததால் தான் கீழ் கண்டவாறு நீங்கள் நுஞ்சி விஷயமாக கேள்வி எழுப்பியதற்கு காரணமாகும்.

எனினும் சட்ட அடிப்படையில் இரண்டாவது சுக்கூன் பெற்றுள்ள நூனை விட்டு எழுதி, அந்த சொல்லை சரியாக உச்சரிக்க வேண்டும் என்பதற்காக ஆரம்ப காலத்து விதியை நாம் அறியாததாலும், விடப்பட்ட நூனை அரபு நாட்டு குர்ஆன் பிரதியில் ஒரு சிறிய நூனும், இந்திய நாட்டு குர்ஆன் பிரதியில் கடா ஜேரும் ஏன் போடப்படவில்லை?

இப்றாஹீம் அவர்களே! உமது இக்கேள்வி உங்களின் உச்ச கட்ட  அறியாமையை மிகத்தெளிவாக காட்டுகிறது. கொஞ்சமாவது குர்ஆனை அரபியில் ஓதக் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் மேற்கண்ட உமது கேள்வி எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை புரிந்து கொள்வீர். இந்த இலட்சனத்தில் நீங்கள் அரபு மொழியின் இலக்கன விதிகளை சரி பார்க்கப் போகிறீர்களா?

மேற்கண்ட உமது கேள்வி எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை நீங்கள் உணர்வதற்கு ஒரு சிறு உதாரணத்தைக் கூறுகிறேன். அப்பொழுதாவது உங்களின் உச்சகட்ட அறியாமையை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா என்று பார்ப்போம்.

தமிழ் மொழியில் ‘மா’ ‘தா’ ‘கா’ போன்றவற்றில் நீட்டல் குறியீடாக துணைக்கால் வருகிறது. ஆனால் ‘ஆ’ என்பதற்கு நீட்டல் குறியீடாக துணைக்கால் ஏன் வரவில்லை? என்றும்,

‘கி’ ‘தி’ ‘மி’ ‘யி’ போன்றவற்றில் நீட்டல் குறியீடாக அவற்றிலுள்ள வளைவின் நுனிப்பகுதியை சுருட்டி ‘கீ’ ‘தீ’ ‘மீ’ ‘யீ’ என்று எழுதப்படுகிறது. ஆனால் ‘இ’ என்பதின் நீட்டல் குறியீடாக அதிலுள்ள வளைவின் நுனிப்பகுதியை சுருட்டாமல் ‘ஈ’ என்று ஏன் எழுதப்படுகிறது? என்றும் தமிழ் மொழி தெரியாதவன் கேள்வி எழுப்பி ‘ஆ’ என்பதும், ‘ஈ’ என்பதும் பிழையாக எழுதப்பட்டுள்ளது என்று குறை கூறுவது போல் உள்ளது உங்களின் மேற்கண்ட கேள்வி.

குர்ஆனை அரபி மொழியில் பார்த்துக் கூட ஓதத்தெரியாத நிலையில் இருந்து கொண்டு குர்ஆனில் எழுத்துப் பிழைகள் இருக்கிறது என்று கூறி நீங்கள் கண் மூடித்தனமாக பி.ஜே.யை பின்பற்றுகிறீர்கள் என்று கூறுவதை விட அவருக்கு அடிமையாகவே நீங்கள் ஆகிவிட்டீர்கள் என்பதைத்தான் உங்களின் மேற்படி கேள்வியும், நிலையும் உணர்த்துகிறது.

மவ்லவி  முஸ்தபாவுக்கு எனது பதில்கள் பதிலகள் 

மவ்லவி முஸ்தபா ,அவர்களுக்கு ,அஸ்ஸலாமு அலைக்கும் .முதலில் எனது கேள்விகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் .முக்கியமாக பேசப்படும் விசயத்தை புறம் தள்ளிவிட்டி கடாஜேர் பற்றி தேவையற்ற விமர்சனம் வைத்துள்ளீர்கள் .கடாஜேர்  என்பதைவிட அரபு நாட்டு குர்ஆனில் அந்த சிறிய 'யே 'ஏன் போடப்பட்டுள்ளது என்பது பற்றியே நீங்கள் விளக்கியிருக்க வேண்டும் .அதை தவிர்த்துவிட்டு சின்னப்பிள்ளை பெரிய பிள்ளை என்று உங்களது அகத்தை அதிகமாக காட்டியுள்ளீர்கள் .பீஜெவுக்கே கிளிப்பிள்ளை போல பாடம் நடத்தியவர் ஆயிற்றே நீங்கள் ?
முஸ்தபா கூறுவதைப் பாருங்கள் 
////மேலும் நீங்கள் விவாதத்தில் நிரூபித்தது உண்மையென்றால் அந்த வீடியோவுக்கு இங்கே லிங்க் கொடுங்கள் என்றும் கூறியுள்ளீர்.

இன்ஷா அல்லாஹ் அதற்குரிய லிங்கை கூடிய விரைவில் கொடுக்கிறேன். எதிர்பாருங்கள்.

இன்ஷா அல்லாஹ் பாக்கிலானீ (ரஹ்), ஆயிஷா (ரளி), இப்னு அப்பாஸ் (ரளி) ஆகியோர்கள் விஷயமாக உங்கள் அண்ணன் கூறிய பொய், பித்தலாட்டங்களையும் மிகத்தெளிவான ஆதாரங்களுடன் நிரூபிக்கிறேன். எதிர்பாருங்கள். ///இவ்வாறு முஸ்தபா எழுதியுள்ளார் .

எனது பதில்  இவ்வளவு பெரிய கட்டுரை எழுதியவர்க்கு லிங்க் கொடுக்க முடியாதா?ஏற்கனவே அந்தவிவாதத்தை இந்த வலைபதிவில் வெளியிட்டுள்ளார் .அதை பார்த்து லிங்க் கொடுப்பதற்கு எவ்வளவு நேரமாகும்? இருந்தால்தானே தருவதற்கு?
விரைவில் எதிர்பாருங்கள் நான் நிருபிக்கிறேன் ,இதென்ன சினிமாக்காரன் ஸ்டையிலில் ,அவனாவது ட்ரெய்லர் போட்டுத்தான் விரைவில் எதிர்பாருங்கள் என்பான் .விவாதம் முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்டது .நிருபித்ததை விரைவில் எதிர்பார்க்க வேண்டுமாம் ..மிகத் தெளிவான ஆதரங்களுடன் நிருபிக்கிறேன் என்று கூறியுள்ளதிலிருந்து ,இதுவரை நிருபிக்கவில்லை என்றுதானே அர்த்தம் .பிறகு நான் சொன்னது எப்படி பொய்யாகும் ?ஆரம்பத்திலிருந்தே இது பற்றி நான் கேட்டதற்கு ,பதில் சொல்லாமல் மவுனம் சாதித்து விட்டு நான் அந்த மவுனத்தை கிளறிய பிறகே ,நிருபிக்கிறேன் என்று சொல்லியுள்ளீர்கள் .இதுவரை நிருபிக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டதற்கு மிகுந்த நன்றிகள் .அல்ஹம்துலில்லாஹ் .


அடுத்து யுஹ்யீ என்ற சொல்லை பற்றி நான் கேட்டதற்கு தமிழ் இலக்கணத்தை காட்டி ,உச்சகட்ட அறியாமை ,அரபி வாசிக்க கூட தெரியாது சிறு பிள்ளைக் கூட தெரிந்த விஷயம் என்று அதிகமாகவே அலட்டியுள்ளார் .அரபு இலக்கணம் வேறு தமிழ் இலக்கணம் வேறு .மா 'என்ற உயிர் மெய் நெடிலில் உயிர் நெடில் இல்லாமல் வராது .ம் +ஆ =மா .அதாவது ஆ 'வின் நெடில் இல்லாமல் மா வராது .[ஆவின் பால் இல்லாமல் பால்மாவு வராது என்று நினைத்துக் கொள்ளவேண்டாம் ].."ஆ'வை வைத்துதான் 'மா' வைத்தவிர :'மா'வை வைத்து 'ஆ 'அல்ல .ஆதலின் நீங்கள் கேட்பது போல மா'வுககு வரக் கூடிய  துணை எழுத்து ஆவுக்கு ஏன் வரவில்லை என்று யாரும் கேட்பதில்லை .நான் கேட்டிருப்பதற்கு பொருத்தமில்லாத உதாரணத்தை கொடுத்து தப்பிக்கவே முயற்சி செய்கிறீர்கள் .

///யுஹ்யீ (يُحْيِي) என்பதில் ஒரே இனத்தைச்சார்ந்த இரண்டு “யே ((ي அடுத்தடுத்து வந்து அதில் இரண்டாவது “யே ((ي சுக்கூன் பெற்றிருப்பதால் அதை ஸஹாபாக்கள் விட்டு எழுதியுள்ளனர்.
எனினும் சட்ட அடிப்படையில் விடப்பட்ட அந்த எழுத்தை உச்சரிக்க வேண்டும் என்பதற்காகவும், ஆரம்பகால எழுத்து விதியை நாம் அறியாததாலும் விடப்பட்ட “யே ((يவை அறிவிப்பதற்காக எழுதப்பட்டிருக்கும் “யே ((يக்கு அருகில் அரபுநாட்டு குர்ஆன் பிரதியில்சிறிய “யே ((يயும் போடப்பட்டிருக்கும் ////இது உங்களது கூற்று .

எனது பதில்  சஹாபாக்கள் ஆரம்பகால விதிகளின்படி ஒரு' யே' யை  விட்டு எழுதியுள்ளதை ,எதை வைத்து கண்டு பிடித்தார்கள்? ஓசையை வைத்துதான் ,யுஹ்யீ என்ற சொல்லில் நெடில் வருகிறது ,எனினும் சட்ட அடிப்படையில் ஒரு யே "விடப்பட்டிருக்கும் .எனவே விடப்பட்ட அந்த எழுத்தை உச்சரிக்கவேண்டும் என்பதற்காகவும் ,ஆரம்ப கால் எழுத்து விதியை நாம் அறியாததாலும் விடப்பட்ட 'யே 'யை யே((ي க்கு அருகில் அரபுநாட்டு குர்ஆன் பிரதியில்ஒரு சிறிய “யே ((يயும் போடப்பட்டிருக்கும் .அது போலவே ,நன்சக் 'என்ற சொல்லிலும் ஒரே இனத்தை சேர்ந்த இரண்டு நூன்கள் அடுத்து அடுத்து வந்து அதில் இரண்டாவது நூன் சுக்கூன் பெற்றிருப்பதால் அதை சஹாபாக்கள் ஏன் விட்டுவிடவில்லை.? அப்படி விதியிருந்தால் இங்கேயும் ஒரே இனத்தை சேர்ந்த இரண்டு எழுத்துக்கள் வந்து இரண்டாவது எழுத்து சுக்கூன் பெற்றிருப்பதால் ஒரு நூனை விட்டிருக்க வேண்டும் .அப்படி அவர்கள் விட்டிருந்தாலும் நன்சக் என்றே உச்சரித்து வந்திருப்பார்கள் ...
ஆக நன்சக் என்றே ஓதி வந்திருப்பதால் அந்த விடுபட்ட" நூன் " எழுத்தை உச்சரிக்க வேண்டும் என்பதற்காகவும் ஆரம்பகலாத்து எழுத்து விதியை நாம் அறியாததாலும் விடப்பட்ட நூன் ஐ ن அறிவிப்பதற்காக எழுதப்பட்டிருக்கும் நூன் க்கு அருகில் அரபு நாட்டு குர்ஆன் பிரதியில் ஒரு சிறிய நூன் ஐ ஏன் போடவில்லை?
இதுதான் எனது கேள்வி .அதற்கு பதில் சொல்லுங்கள் .
இதில் நெடிலுக்காக 'யே " உள்ளதா என்பதல்ல .ஆரம்பகாலத்து விதிகளின்படி ஒரு யே விடப்பட்டிருக்கிறது .அதை உச்சரிப்பை வைத்து அறிந்து ,ஒரு சிறிய யே போட்டுள்ளனர்..அதை போலவே ,நன்சக் ,நுன்சிஹா விலும் ஆரம்பகாலத்து விதிகளின்படி ஒரு நூன் விடப்பட்டிருக்க வேண்டும் .பின்னர் உச்சரிப்பை வைத்து அறிந்து ஒரு சிறிய நூன் போடப்பட்டிருக்க வேண்டும் .அவ்வாறு போடப்படவில்லையே ஏன் என்று கேட்டால் ,உங்களது அரபி மேதாவித்தனத்தையும் தமிழ் அறியாமையும் வைத்து பூச்சாண்டி காட்டுகிறீர்களா?
இவற்றையே முன்னுரிமை கொடுத்து பதில் சொல்லுங்கள் உங்களது மற்ற விமர்சானங்களை தொடர்கிறேன்.

மவ்லவி சாப் ////நீங்கள் கூறிய கடன் கதை நல்லாத்தான் இருக்கிறது. எனினும் அக்கதையில் உள்ள கடன் வாங்கியவரின் கதாபாத்திரம் முழுக்க உங்களுக்குத்தான் பொருந்தும்.////
கடன் வாங்கியவரின் கதாபாத்திரம் உங்களுக்கே உரியது ,உங்களுக்கே பொருந்தும் .
கடன் கொடுத்தவர் கடன் கேட்டார் 
அதைப்போலவே ,நான் உங்களிடம் மார்க்க சம்பந்த கேள்விகளை கேட்டேன் .
கடன் வாங்கியவர் பதில் சொல்லவில்லை .
நீங்களும் 2 மாதங்களாக பதில் சொல்லவில்லை .
கடன் கொடுத்தவர் ,நான் கடனை கேட்டுட்டே இருக்கிறேன் ,நீங்கள் வாய் திறக்க மறுக்கிறீர்கள் ?என்று கேட்டார் .அதற்கு அவர் நீங்கள் சொல்லுவது காதில் விழவில்லை என்று சொன்னார் .
நீங்களும் அவரை போலவே பக்ரீத் லீவுக்கு ஊருக்கு போய்விட்டேன் என்றீர்கள் .
கடன் கொடுத்தவர் ,காதில் விழவில்லை என்றால் செவிடா என்று கேட்டார் .
நானும் பக்ரீத் லீவு என்றால் மாட்டு பெருநாளா/ என்று கேட்டேன் .
ஐயோ ,என்னை செவிடு என்று சொல்லிவிட்டார் ,அதை நிறுபித்து காட்டவேண்டும் .இல்லையெனில் கடன் திருப்பி கொடுக்க மாட்டேன் என்றார் .
நீங்களும் மாட்டு பெருநாள் பற்றியே விளக்கம் கேட்டு வருகிறீர்கள் ,அல் இத்கான் பற்றிய விளக்கம்தர மறுத்து வருகிறீர்கள் 
இப்போது யாருக்கு பொருந்தும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் .

////ஷிர்க்கை ஒழிக்க வந்த இறைத்தூதர் நபி யூனுஸ் (அலை) அவர்கள் இணை கற்பித்து விட்டதாக உங்கள் அண்ணன் மொழி பெயர்ப்பில் எழுதியுள்ளார். ஷிர்க்கை ஒழிக்க வந்த இறுதித் தூதர் எங்களது உயிரிலும் மேலான பெருமானார் நபி (ஸல்) அவர்களும் இணை வைத்ததாக உங்கள் அண்ணன் பி.ஜே. கூறியுள்ளார். (நவூதுபில்லாஹ்)/////இந்த குற்றச்சாட்டுகளை பீஜே மொழிபெயர்ப்பில் உள்ளதை பக்கங்களுடன் கூறுவதே நல்ல பண்பு .இணை வைத்ததை சொல்லுங்கள் .புரட்டாதீர்கள் .
இணைவைப்பு பற்றி நான் இவ்வாறு பதில் சொல்லியிருந்தேன் ,இவற்றுக்கு பதில் சொல்லவில்லையே ஏன்?
நீங்கள் எழுதிவருவதை அல்லாஹ்வும் பாக்கிறான் ,நானும் பார்க்கிறேன் .இதற்கு பெயர் இணைவைப்பா? என்னால் நெட் கனக்சன் மற்றும் கம்புய்ட்டர் இல்லாமல் உங்கள் எழுத்துக்களை பார்க்க முடியாது .அல்லாஹ் எந்த துணையும் இன்றி பார்க்க முடியும் .பீஜே பகிரங்கமாக பேசுவதையும் ,எழுதுவதையும் மட்டுமே நம்மால் கண்காணிக்க முடியும் .ஆனால் அல்லாஹ்வோ பீஜே வின் மறைவான பொய்களையும் பாவங்களையும் கண்காணிக்க கூடியவன் .நபிமார்கள் தவறு செய்யக் கூடியவர்கள் பீஜே தவறே செய்யாதவரா? என்று கேட்டுள்ளீர்கள் .நபிமார்கள் தவறுகளை இறைவனே கூறுகிறான் ,அதிலிருந்து நமக்கு படிப்பினைகள் பெறுவதற்காக .பீஜேயின் பாவங்களையும் அல்லாஹ் இப்பொது சொல்லப் போவதில்லை உங்களைப்போல என்னைப்போல மறுமையிலே அவைகள் பற்றி அவரிடம் கேட்பான் .நான் இப்படித்தான் பீஜே வை நம்பிக் கொண்டு இருக்கிறேன் அதற்கு மேலும் நீங்கள் பீஜே உங்களை ,உங்கள் கவனங்களை ஆக்கிரமித்து இருந்தால் நான் என்ன செய்ய முடியும்?உங்களுக்கு மட்டுமல்ல ,உங்களை போன்ற பலருக்கும் அவர் பெரும் சவாலாகவே உள்ளார் .
எனது மீது இணைவைப்பு குற்றம் சொன்னீர்கள் .அதற்கு நான் மேல்கண்ட பதிலை சொல்லியுள்ளேன் அந்த பதிலில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும் .அல்லது அத்துடன் முடித்திருக்க வேண்டும்..ஆனால் மேலும் பீஜே மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளீர்கள் .அந்த குற்றச்சாட்டுகளையும் ஆதாரத்தோடு வைக்கவில்லை .


பீஜே போன்றவர்களுக்கே கிளிபிள்ளை போல பாடம் எடுக்கும் மேதாவியான  தாங்கள் சாதாரண மக்கள் மற்றும் பிற மத மக்கள் சொல்லுவது போல பக்ரீத் என்று கூறியதை மாட்டு பொங்கல் என்று நான் சுட்டிகாட்டியதை பிடித்து தொங்கும் மவ்லவி சாப், நீங்கள் குர் ஆன் ,ஹதிதில் சொல்லபட்டது போல ஈதுல் அல்ஹா என்று சொல்லியிருக்க வேண்டும் .
அவ்வாறு சொல்லாமல் ,பக்ரீத் என்பது அடைமொழி என்றால் அரபு நாட்டுபழக்கப்படி ஒட்டகமும் ஆடுகளும் அறுத்து வருகையில் மாட்டு பெருநாள் என்று நீங்கள் சொல்லியது எப்படி அடைமொழியாகும்? 
நீங்கள் குர்ஆனையும் ஹதித்களையும் பின்பற்றவில்லை ,வட இந்திய அஜமிகள் எழுதிய ரத்துள் முக்தார் ,ஆலம்கீரி களை பின்பற்றுவது போல வட இந்தியாவில் அதிக மாடுகள் அறுப்பதால் பழக்கத்திற்கு வந்த மாட்டு பெருநாள் என்று சொல்லியுல்லீர்களே என்று குத்தலாக கேட்டுள்ளேன் .
மாட்டு பொங்கல் என்பது மாட்டு பெருநாள் அல்ல என்று அறிவை கசக்கி பிழிந்து உள்ளீர்கள் . தை பொங்கலை ,தமிழர் திருநாள் என்று சொல்லுவதை அறிய மாட்டீர்களா? அவர்களிடம் புது அரிசி பொங்கும் நாளை பொங்கல் என்று சொல்லாமல் திருநாள் என்று கேட்பீர்களா? ஆதலின் மாட்டு பொங்கலை மாட்டு திருநாள் என்று தாரளமாக சொல்லலாம் .மேலும் மாட்டுக்காக யாரும் பொங்க மாட்டார்கள் .மாட்டு தின்னும் புண்ணாக்கையும் பருத்தி விதைகளையும் யாரும் பொங்க மாட்டர்கள் .ஆதலால மாட்டு பொங்கல் என்பதைவிட மாட்டு பெருநாள் என்று சொல்லுவதே பொருந்தும் .இப்ராஹிம் நபி [அலை] அவர்களின் தியாகத்தை நினைவு கூறாமல்,மாட்டுக்கறி வாசனையை நினைவு கூர்ந்து மாட்டு பெருநாள் என்பதை விட மாட்டுக்கறி பிரியாணியை பொங்கும் நாளை மாட்டு பொங்கல் என்று சொன்னால் உங்களை போன்றவர்களுக்கு என்ன பிழை?

மவ்லவி அவர்களே ////1 - ‘குர்ஆன் அருளப்பட்டு 1400 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்ட இன்றைய காலத்தில் ஒருவர் இருந்து கொண்டு, சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்புள்ள குர்ஆனில் எழுத்துப் பிழைகள் இருப்பதாக அவர் வாதிடுவதாக இருந்தால் அவர் குர்ஆனுக்கு முந்தைய காலத்து நூல்களிலிருந்து எழுத்து விதிகளைக் கூறி குர்ஆனில் எழுத்துப் பிழைகள் இருப்பதாக வாதிட்டால் தானே அதை ஏற்க வேண்டும்?

உங்கள் அண்ணன் குர்ஆனுக்கு முந்தைய காலத்து நூலை குறிப்பிட்டுத்தான் குர்ஆனில் பிழை இருப்பதாக வாதம் செய்தாரா?/////இப்படி கேட்டுள்ளீர்கள் .

பீஜே ஆரம்ப கால எழுத்து விதிகளின் அடிப்படையில் பிழைகள் இருப்பதாக வாதம் செய்யவில்லை . ஓசை வடிவில் குரான் பாதுகாக்கப் பட்டுள்ளது .அந்த ஓசைக்கு மாற்றமாக எழுத்து பிழைகள் 19 உள்ளதால் அந்த இடத்தில் ஓசை கேற்றவாறு அந்த பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளது என்று பீஜே கூறி இருக்கிறார் .அதனால் பீஜே குர்ஆனுக்கு முந்தைய காலத்து எழுத்து விதிகளை கூற வேண்டியதில்லை ஆனால் நீங்களோ அது பிழை இல்லை ஆரம்பகால விதிகளின்படியே எழுதப்பட்டுள்ளது .அது நமக்கு தெரியாததால் விதிகளின் அடிப்படையில் விடப்பட்ட எழுத்துக்கள் அங்கு எழுதப்பட்டுள்ளது என்று கூறி வருகிறீர்கள் .அப்படி என்றால் இப்போது யார் ஆரம்பகால விதிகளுக்கு ஆதாரம் தரவேண்டும் ?
2–/// குர்ஆன் அருளப்பட்ட 700 ஆண்டுகளுக்குப் பின்பு எழுதப்பட்ட நூலில் அதன் ஆசிரியர் குர்ஆனில் எழுத்துப் பிழை இல்லை என்று சொன்னால் ஏற்கமாட்டீர்கள்!
குர்ஆன் அருளப்பட்டு 1400 ஆண்டுகளுக்குப் பின்பு வாழ்கிற பி.ஜே. குர்ஆனில் எழுத்துப் பிழை இருக்கிறது என்று சொன்னால் அதை ஏற்பேன் என்று கூறுகிறீர்களே! இது தான் உங்களின் சரி பார்க்கும் முறையோ! வேறொன்றும் இல்லை. நீங்கள் உங்களது அறிவை முழுவதுமாக பி.ஜே.யிடம் அடகு வைத்துள்ளதை மென்மேலும் மெய்ப்படுத்துகிறீர்கள்.////
700 ஆண்டுகளுக்கு முன்னால்  அல்ல 1400 ஆண்டுகளுக்கு முன்னால்  சொல்லப்பட்டாலும் அதற்குரிய ஆதாரத்துடன் சொல்லியிருக்க வேண்டும் .அல்இத்கான் நூலில் ஆதாரத்தைகாட்டுவதே ஏற்புடைய செயலாக இருக்கும் .700 வருடங்களுக்கு முன்பு உள்ள நூல் என்பது மட்டும் ஆதாரம் ஆகாது.அதிக வருடங்கள் என்பதால் அதுவே சரியானது என்று முடிவு செய்யமுடியாது .அதிக வருடங்களை காட்டி சொல்லாடல் வேண்டாம் .எழுத்து விதிகளுக்கான ஆதாரத்தை மட்டும் காட்டுங்கள் .
///அந்தப்பதிலையும் கூட உங்களுக்கு எவ்வாறு சொல்லித்தரப்பட்டுள்ளதோ அவ்வாறே ஒப்பித்துள்ளீர்கள். ‘////
எனக்கு சொல்லித்தரப்படவில்லை என்பது அல்லாஹ்வின் மீது சத்தியமாக உண்மை .அதை நீங்கள் மறுக்க முடியுமா? நான்  விவாதத்தை நேரிலும் சிடியிலும் கேட்டு எழுதுகிறேனே தவிர இப்படி எழுதுங்கள் என்று எனக்கு யாரும் சொல்லிதரவில்லை .மேலும் இது தலைமைக்கு தெரியவும் செய்யாது .