Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

செவ்வாய், 22 நவம்பர், 2011

செந்தோழன் மறுப்பும் எனது பதிலும்


  1. செந்தோழன்நவம்பர் 20, 2011 இல் 10:25 பிற்பகல் #
    இப்ராஹிம் அண்ணே ! ஏண்ணே கோபப்படுறீங்க நம்ம 2 பண்டிகையும் ஏழைகளை கவனத்தில் கொண்டே கொண்டாடப்படுகிறது என்பது ஒருபக்கம் இருக்கட்டும்.ஆனா ஏங்கூட சேர்கிற பயபுள்ள( மாற்று மதத்தவர்) என்ன சொல்றார்ன்ன இதையேதான் நாங்களும் கோவில்ல அறுத்து செய்கிறோம்.அப்படின்னா 2 மதமும் ஒன்றுதானே என்கிறான்.இப்போ ஹஜ் வழிபாட எடுத்துக்கொள்ளுங்கள் இங்கிருந்து அங்கேபோய் கல் கட்டிடத்தைசுற்றி வாராங்க,மொட்டை போடுறாங்க,புனிதநீருன்னு (ஜம்ஜம் தண்ணீர்) சொல்றாங்க,அப்புறம் அறிவியலின் உச்சகட்டமாம் சைத்தானை (நரபலியை தடுத்த நல்ல மனிதரை)கல்லவுட்டு எரிவது இதுதானே ஹஜ் யாத்திரை.இதைத்தான் இங்குள்ள இந்து மதத்திலும் செய்றாங்க அதுமட்டும் மூடநம்பிக்கை அப்படின்னு சொல்றோம்.எண்ணாண்ணே! இதுக்கு விளக்கம் சொல்லுங்கண்ணே எனக்கு ஒன்னும் புரியமாட்டேங்குது.எனக்கும் இது சரின்னுதான்படுது. ஓரே அறிவியல்,விஞ்ஞானம்னு படுச்சு பார்க்கும்போது கம்யூனிசம் சொல்றது சரின்னுபடுது இஸ்லாத்தில வருசத்தில் 5 நாள் மட்டும் ஏழைகளை கவனிக்கிறோம்(மற்ற நேரம் அவன் எக்கேடும் கெட்டுபோகிறான் ) ஆனால் கம்யூனிசத்தில் ஏழைகளே இருக்கக்கூடாதுன்னு சொல்றாங்க அப்போ எதுண்ணே சரியானது? ஏழையை இல்லாமல் ஒழிக்க அல்லாகிட்ட ஆயுதம் இல்லையா? ஆனால் கம்யூனிசத்தில் ஏழ்மையை ஒழிக்கும் அந்த ஆயுதம் இருக்குண்ணே. அல்லா தன் தூதர் இப்ராஹிமிடம் எனக்காக உன் குழந்தையை அறுத்து நரபலியிடு என்று கட்டளையிடுபவன் எப்படி கருணையாளனாய் இருக்கமுடியும்.(மதம் அன்பை போதிக்கிறதாம் எந்த முட்டாள் சொன்னான்) அப்போ இங்கே பூசாரி குழந்தையை கடத்திக்கொண்டு போய் கருணையே இல்லாமல் கடவுளின் பெயரால் நரபலி கொடுக்கின்றானே! அப்போ 2 மதமும் செய்றதுக்கு பெயர் தியாகமாண்ணே ! அப்போ உங்க அகராதியில தியாகம்ன்னா பெத்த புள்ளய போட்டு ஈவுயிரக்கமில்லாமல் கழுத்த அறுக்கிறதானா ? அண்ணே !சோமாலியா, சோமாலியான்னு ஒரு நாடு இருக்கு அல்லாஹ்வுக்கு தெரியுமான்னு கேளுங்க அங்கே சோறு தண்ணி இல்லாமல் பயபுள்ளைங்க சாகுறாங்க அல்லா எப்போ வருவான் எப்போ வருவாருன்னு கேட்டுக்கொண்டே இருக்கிறாங்க அங்குள்ள மக்கள்.நீங்க துஆ (செல்போன்) மூலமா செய்தியை சொல்லி அல்லாவை அங்கே ஒரு விசிட் போய்ட்டு வர சொல்லுங்கண்ணே! என்ன செய்றது அந்த நாட்டையும் அல்லாதான் படைத்திருப்பான் என்ன செய்ய பல வேலைகள் இருப்பதால் மறந்திருப்பான் நீங்கள் கண்டிப்பாக ஞாபகப்படுத்திடுங்கள். பசியோடுயிருக்கும் ஏழை மக்கள் மத்தியில் இப்ராஹிம் அண்ணன் குர் ஆன் ஹதீஸை படித்து விளக்கி பயான் செய்கிறார். இப்ராஹிம் ; கல்லில்யிருக்கும் தேரைக்கும் அல்லாவே உணவளிப்பவன். ஏழை ;எவண்டா அவன் இங்கே மனுசன் சோறு தண்ணியில்லாம தவிக்கிறான் அல்லா புடுங்கினாறாம்.எங்க ஏழ்மையை கேலி செய்யவா வந்திருக்க ஏய் !இவனை கல்லால் அடித்து வெரட்டுங்கடா………….!

    • S.Ibrahimநவம்பர் 21, 2011 இல் 10:20 மு.பகல் #
      ///ஏழை ;எவண்டா அவன் இங்கே மனுசன் சோறு தண்ணியில்லாம தவிக்கிறான் அல்லா புடுங்கினாறாம்.எங்க ஏழ்மையை கேலி செய்யவா வந்திருக்க ஏய் !இவனை கல்லால் அடித்து வெரட்டுங்கடா………….!////
      ஏழைகளே ,இப்படி உத்தரவு போட்டு ஏமாற்றுபவர் எங்கே இருக்கிறார் தெரியுமா?இவர் உங்களுடன் எத்தனை நாட்கள் பட்டினியாக கிடந்தார் என்று தெரியுமா? ஏழைகள் உணவில்லாமல் இருக்கிறார்கள் அதனால் ஒருநாள் கூட வயிறு புடைக்க சாப்பிட மாட்டேன் என்று இருந்தது உண்டா? என்று இவரிடம் கேளுங்கள். இவர் எங்கேயோ கார்பொரேட் கம்பெனியில் வேலை பார்த்துக்கோ கொண்டு ,கொளுத்த தீனிகளை வயிற்றில் திணித்துக் கொண்டு கம்யுனிச நாடகத்தில் ஆட்டம் போடும் சோமாறி யாக இருப்பார். உழைப்பை பற்றி பேசும் அண்ணன் செங்கொடி தனது பெயரை மாற்ற எவ்வளவு கஷ்டப் படவேண்டும் என்பதை பக்கம் பக்கமாக எழுதுகிறார்.இவர்களுக்கு எல்லாம் பாமர மக்கள் உணவுக்காக ,அரசு சலுகைகளுக்காகக் என்ன பாடுபடுகிறார்கள் என்பது கடுகளவாது தெரியுமா?என்னவோ கீ போர்டில் தட்டிவிட்டால் ஏழைகளோடு உறவாடுவது  போல் காட்டிக் கொள்கிறார்கள்போலும் 

      • செந்தோழன் ,நீங்கள் சிவப்பு மயமாக பெயர்களை வைத்துக் கொள்வது ,சிவப்பு உடைகள் அணிவது,இதற்கும் பொதுவுடமை கொள்கைக்கும் என்ன தொடர்போ ,அது போன்றே ஹஜ் கிரியைகளும் ,.தனி ஒரு மனிதனாக என்று ஏக இறை கொள்கையை நிலை நாட்ட போரிட்ட இப்ராஹீம் நபி[அலை]அவர்களின் தியாக உணர்வுகளை நினைவு கூறும் வண்ணமாக,நடை பெரும் செயல்பாடுகளைத்த தவிர அதில் கட்டாய கடமைகள் இல்லை.அது போன்றே ஜம்ஜம் நீர் புனிதமாக கருதப் படவில்லை.ஆனால் அதன் அற்புதமும் மகிமையுமே போற்றப்படுகிறது.25 லட்சம் மக்கள் கூடும் நாட்களில் அனைத்து மக்களுக்கும் தலா 20௦ லட்டர் ஒரு கிணற்றிலிருந்து கிடைக்கச்செயகிறது என்றால் அதன் அற்புதத்தை மறைக்கமுடியுமா?
        மேலும் இஸ்லாத்தில் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் ஏழைகளை கவனிக்கவில்லை.இரு இரு பெருநாட்களையும் குறிபிட்டது ஏன் என்றால் எங்களது மகிழ்ச்சிகரமான நாட்களும் ஏழைகளின் மகிழ்ச்சியில் பகிர்ந்து கொள்வதே .நாங்கள் கீபோர்டில் உட்கார்ந்து கொண்டு ஏழைகளைப் பற்றி பேசவில்லை.ஏழைகளின் வாசல் தேடி உதவி செய்கிறோம் என்பது கலை நிகழ்ச்சி காணும் கம்யுனிஸ்ட் களுக்கு தெரிய நியாயமில்லை. இன்னும் பிச்சைகாரர்கள் பிச்சை எடுக்க தேர்ந்தெடுத்த நாளை பார்த்தீர்களா? வெள்ளிகிழமை என்னும் ஜும்மா நாளில். சக்காத்,சதக்கா ,போன்ற கடமைகள்,அடுத்த வீட்டுக்காரன் பசித்திருக்க நீ வயிற்றை நிரப்பாதே போன்ற நபிமொழிகள் ஏழைகளின் மீது இஸ்லாம் காட்டும் அக்கறையை வெளிப்படுத்தும்.எங்களது பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒரு பெரும் செல்வந்தர் தனது வருட “ஏழைவரி” என்னும் சக்காத்தை வருடம் தோறும் தனது உறவு,மற்றும் ஊரை சேர்ந்த [சுமார்ஐந்து லட்ச ரூபாய்] ஒரே நபருக்கு கொடுத்து அவர்கள் அதன் மூலம் வியாபாரம் செய்து முன்னேற வழிவகுக்கிறார்.இது போன்று இரண்டு கோடி ரூபாய் சக்காது கொடுக்கும் செல்வந்தர்களை நான் அறிவேன் என்றும் அந்த மக்களின் சக்காதை முறைப்படுத்தினால் ஏழைகள் இல்லாமற் செய்துவிடலாம் என்று முன்பு ஒரு மாவட்ட ஆட்சி தலைவராக இருந்த ஒருவர் இப்போது தமிழ்நாடு தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரி ஒரு நிகழ்ச்சயில் கூறியதை இங்கு நினைவு கூறுகிறேன்.கம்யுனிசம் ஏழைகளை இல்லாமற் செய்யுமா?அல்லது இன்னும் ஏழைகளை அதிகரிக்க செய்யுமா?என்று ரஷ்யாவில் சென்று பார்த்து வந்தால்தான் தெரியும்.பெயர் மாற்றம் செய்யவே உழைக்காதவர்கள் ,இது போன்று விசயங்களில் அரசு சலுகைகள் பெற ஏழை மக்கள் படும் அவஸ்தைகளை நேரில் கண்டு அனுபவித்து பார்க்க ,பகிர்ந்து கொள்ள சங்கடப் படுபவர்கள குளிர் சாதன அறையிலிருந்து கொண்டு கீ போர்டில் ஏழைகளை இல்லாமற் செய்வோம் என்று தட்டுவது போன்ற காரியங்களை இஸ்லாம் செய்ய வில்லை.கலை நிகழ்ச்சயில் ஏழைகளாக நடித்தும் காட்டுவதிலும் இஸ்லாம் ஏழை உபகார நிகழ்ச்சியாக்கவில்லை. கிறித்தவர்கள் ஏழை நோயாளிகளை கவனித்தது போன்று உங்களது கம்யுனிச காம்ரேடுகள் செயல் பாட்டினை எங்காவது என்றாவது நடத்தியதாக கூற முடியுமா?
        தனது மகனை சில சமயங்களில் உன்னை கொன்னுடுவேன் என்று சொன்னால் அந்த தாய் பெற்ற பிள்ளையை நரபலி கேட்கிறார் என்று செந்தோழன் பொருள் கொள்வாரா என்ன ?
        ///பசியோடுயிருக்கும் ஏழை மக்கள் மத்தியில் இப்ராஹிம் அண்ணன் குர் ஆன் ஹதீஸை படித்து விளக்கி பயான் செய்கிறார். ///
        நீங்கள் இந்தியாவில் இருந்து கொண்டு ரஷ்யாவைப் பற்றி சொல்லாதீர்கள் .இந்தியாவில் மாதம் இப்பொது இருபது கிலோ அரிசி இலவசமாக கிடைக்கிறது .ஆகவே இங்கே யாரும் பசியோடு இருக்கவில்லை.ஏழைகளை அணைத்துக் கொண்டு பணக்காரர்கள் மத்தியில் வியர்வை உலருமுன் உழைப்பவர்களின் கூலியை நியாயமான முறையில் கொடுத்துவிடுங்கள் என்ற குர்ஆன் ஹதிதையே பயான் பண்ணிக் கொண்டிருக்கிறோம் .எங்களின் பயானின் பயன் ஏழைமக்களுக்கு தெரியும்.

திங்கள், 21 நவம்பர், 2011

நரேந்திர மோடியின் நரபலி வெறி


இஷ்ரத் ஜஹன்என்கவுன்ட்டர் போலியானது: சிறப்புப் புலனாய்வுக் குழு

First Published : 21 Nov 2011 04:40:11 PM IST

ஆமதாபாத், நவ.21: குஜராததில் இஷ்ரத் ஜஹன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட என்கவுன்ட்டர் சம்பவம் போலியானது என உயர்நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கை அளித்துள்ளது. இதையடுத்து இந்த போலி என்கவுன்ட்டர்  சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் 302-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது நரேந்திர மோடி அரசுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இஷ்ரத் ஜஹன், ஜாவீத் ஷேக், அம்ஜத் அலி ராணா மற்றும் ஜீஷன் ஜோஹர் ஆகியோர் 2004-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி ஒரு என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக குஜராத் போலீசார் தெரிவித்திருந்தனர். ஆனால் அதற்கு முன்னதாகவே அவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சிறப்புப் புலனாய்வுக் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
எனினும் சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கையின் விவரங்களை உயர்நீதிமன்றம் முழுமையாக வெளியிட மறுத்துவிட்டது. அது விசாரணையை பாதிக்கும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது
http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Latest%20News&artid=510735&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=இஷ்ரத்%20ஜஹன்என்கவுன்

வெள்ளி, 18 நவம்பர், 2011

தியாக பெருநாள் பற்றி செந்தோழன் கருத்துக்கு பதிலாக


செந்தோழன்நவம்பர் 16, 2011 இல் 10:18 பிற்பகல் #
நண்பர் இப்ராஹிம் அவர்களே! இந்த கட்டுரையை படித்ததும் வாயடைத்துபோய் விட்டீர்கள் என்பது உங்கள் பதிலில் இருந்து தெரிகிறது.தியாகம் (இஸ்லாமிய நம்பிக்கை) என்ற பெயரில் நாம் இதுவரை செய்த நரபலி (தியாகம்) ஆனைத்தும் முட்டாள்தனமானது,மூடநம்பிக்கை என்று ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்துறாங்களே என்ற கோபமா? ஆனால் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளக்கூடாது.இந்துக்களை பாருங்கள் பெரியார் எவ்வளவோ எடுத்துச்சொன்னார். கேட்கவா செய்தார்கள் இல்லையே.அவங்க எப்பொழுதும்போல் கோவில்ல ஆடு,பன்றியை வெட்டுவதைபோல் நாமும் எதையும் கண்டுகொள்ளவே கூடாது.நாமும் எப்போழுதும்போல் ஆடு,மாடு பலியிட்டு அல்லாவை இரத்தால் அபிஷேகம் பண்ணுவோம்.யார் யாரோ எதாவது சொன்னால் ஏன்? எதற்கு என்று சிந்தித்து விடாதீர்கள்.அப்படி சிந்தித்து விட்டால் அல்லாஹ் நம்மை மன்னிக்கமாட்டான். அல்லாவும்,நபியும் சொன்னதுக்கு மேல் நாம சிந்திக்கவேகூடாது.ஆனாலும் நாம் இஸ்லாத்தை அறிவியல் பூர்வமானது என்று வெளியில் பீற்றிக்கொள்வோம் நீங்கள் இதற்கெல்லாம் கோபப்படக்கூடாது. அதுக்குதான் நம்ம பிஜே அண்ணே இருக்கிறாரே.இஸ்லாத்தையும், அறிவியலையும் ஒன்றாக ஒப்பிட்டு பேசி விஞ்ஞானிகளை எல்லாம் திணறடித்து விடுவார்.விஞ்ஞானிகளே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு விஞ்ஞான விளக்கம் சொல்லி நம்ம இஸ்லாத்தை காப்பாற்றிவிடுவார்.நீங்கள் கவலைப்படாதீர்கள். அண்ணே பிஜே அண்ணே!வாங்கண்ணே வந்து தியாகத்தையும்,விஞ்ஞானத்தையும் கலந்து ஒரு கலக்கு கலக்கி இஸ்லாத்தை காப்பாத்துங்கண்ணே.அப்படியே உங்க கல்லாவையும் கட்டிட்டு போங்கண்ணே.
  • செந்தோனுக்கு பதில் 


செந்தோழன் ,வாயடைத்து போகுமளவுக்கு உங்கள் அண்ணன் என்ன கூறியிருக்கிறார்.? குரான் வசனங்களை தனது மனம் போல் திரித்து ,புரிந்து எழுதியுள்ளதை உங்கள் மனம் சரி கண்டுவிட்டால் ஏனையோர் வாயடைத்து   விட்டனர் என்பது பொருள். அன்று .நான் எழுதி உள்ளவற்றில் சிலதை உங்கள் நண்பர் வெளியிடவில்லை.இப்ராஹீம் நபி [அலை]அவர்களையும் அவரது தியாகத்தையும் விமர்சித்து ,ஒரு மருத்துவரின் தியாகம் ஒன்றை கூறி பாராட்டும் வேளையில் உங்களது கம்யுனிச தியாகங்களையும் அங்கெ குரிப்பிட்ட்ருக்கவேண்டும் அல்லவா?
 //தனது அடிமைப்பெண்(பணிப்பெண்)ஹாஜிராவுடன் செய்த லீலைகளின் காரணமாக இஸ்மாயில் என்ற மகனை பெற்றெடுக்கிறார். //
இப்ராஹீம்[அலை]அவர்கள் ஹாஜர் அவர்களை பைத்துல் முகத்தசில் வைத்து திருமணம் செய்ததாக ஒரு செய்தி அல்பிதாயா வன்னிஹாயா என்ற நூலிலிருந்து தப்சீர் இப்னு கசிர் தமிழாக்கத்தில் உள்ளது .ஆனால் உமது குரங்குமனமோ வழக்கம்போலவே தனது விகாரத்தை காட்டியுள்ளது.
///இப்ராஹிமிற்கு இஸ்ஹாக் என்ற மகனைக் கொண்டு நற்செய்தியை (கு 6:84, 11:71-72, 15:53, 19:49, 21:72, 29:27, 37:113, 38:45, 51:28) தனது தூதர்கள் வாயிலாக கூறுகிறான்  இதைக்கேட்ட  தொண்ணூறு வயதான அவரது மனைவி சாரா நம்பமுடியாமல்தனது முகத்திலறைந்தவாறு சப்தமிட்டு சிரிக்கிறார்///
அவர் அதனால் தான் சிரித்தார் என்பது தவறான புரிதலா?அல்லது வேண்டுமென்றே கூறப்பட்டதா?மேலும் யூக கதைகள் என்று அவரே கூறி ஒரு சிலவற்றை மட்டும் குறிப்பிட்டுள்ளார்.மாதவிடாய் நின்றதாக கூறியது,பாறை பிளந்தது என்பதும் போன்று அநேக யூகங்களை கூறியுள்ள அவர் அதை யூகம் என்று குறிப்பிட மறுக்கிறார்.அவ்வாறெனின் அவதூறு எழுதுவது தானே உங்களது திட்டம்.
இப்ராஹீம் நபி[அலை] அவர்கள் தனி ஒரு நபராக நின்று ஒரு அரசனை  எதிர்த்து நீதிக்காக போராடுவதை உங்களால் ஜீரணிக்க முடியவில்லை .ஒரு சர்வாதிகாரியின்   கீழ் இருந்தால் தான் கம்யுனிசம் காணும்  சோஷலிச பாதையை கண்டு பிடிக்க முடியும் என்று கூறும் கம்யுனிச கொள்கை போல் ஓரிறை கொள்கையை உலகமக்கள் ஏற்றுக் கொண்டால்தான் நீதியான ஒரே சட்டத்தை நிறுவி மக்களை நெறிபடுத்த முடியும்  என்பதால் பல சோதனைகளையும் தாங்கிக் கொண்டு தனி ஒரு மனிதனாக் நின்று கொண்டு ஒரு அரசையே   எதிர்த்து போராடுகிறார். அந்த சோதனை போதாது என்று 86 வயதில் பிறந்த அற்புத குழந்தை பற்றிய சோதனை கனவாக வருகிறது. அவர் இறை தூதர் என்பதால் ,அந்த கனவின் மகிமை உங்களுக்கு எப்படி தெரியும் ?தனது மனைவியும் குழந்தையும் இறை கட்டளை ஏற்று, அவனிடமே பிராத்தித்து தனியாக விட்டு செல்ல வில்லையா? இறைவனும் அவரது நம்பிக்கைக்கு ஏற்றவாறு அந்த பூமியை செழிப்பாக்க விலையா ? அன்றோடு மட்டுமல்ல. இன்று வரை உலகமே  பொருளாதார பின்னடைவை சந்தித்தபோழ்து சவூதி மட்டும் செழிப்பாக இருக்க வில்லையா? எனவே தனக்கு வயோதிகத்தில் குழந்தை தந்த இறைவன் ,அக்குழந்தையையும் ,மனைவியையும் தனியாக விட்டுசென்றபோளுதும் தனது பிரார்ர்தனைக்கு ஏற்றவாறு அந்த காட்டு பகுதியை நகரமாக ஆக்கிவிட்ட இறைவன் ,இன்று தனது மகனை அறுத்து பலியிட வேண்டிய போதும் அதற்கு தயாராகிவிட்டதால் ,அதன் மூலம் இன்று பல ஆடுகள் மாடுகள் அறுக்கப்பட்டுஏழை மக்களுக்கு உணவாகவுகவும் ஒரு வாரகாலம் கிடைக்கவில்லையா? ஆடு மாட்டு தோலகள் விற்கப்பட்டு பல ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்யப்படவில்லையா? எங்களது கிராமத்தில் தோல் விற்ற பணம் ரூ .23000 /= ஒரு பெண்ணின் இதய அறுவை சிகிச்சை செய்ய உதவியுள்ளோமே.இது போன்று எத்தனை இடங்களில் நடந்து வருகிறது என்பதை உமது காமாலைக் கண்களுக்கு தெரியுமா? இன்னும் சவூதி அரேபியாவால் குர்பானி உணவு பதப்படுத்தப்பட்டு பல ஏழை நாடுகளுக்கு அனுப்பபடவில்லையா?உங்களைபோல் உண்டியல் ஏந்தி கலை நிகழ்ச்சி நடத்தி அவற்றினை போலி கம்யுனிச குடும்பங்களே கண்டு கழித்து நாட்களை நாங்கள் கடத்த வில்லை. 
////தியாகம் (இஸ்லாமிய நம்பிக்கை) என்ற பெயரில் நாம் இதுவரை செய்த நரபலி (தியாகம்) ஆனைத்தும் முட்டாள்தனமானது,மூடநம்பிக்கை என்று ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்துறாங்களே என்ற கோபமா//
நாங்கள் நரபலி செய்தோமா?என்ன உளறல்? நாங்கள் ஒவ்வொரு பண்டிகையையும் ஏழை மக்களை கவனத்திற்கொண்டே ,அவர்களுக்கு உதவுவதே எங்களது பண்டிகை கொண்டாட்டாமாக இருக்கிறது. எங்களது இரண்டு பண்டிகைகளும் ஏழைகளின்  சிரிப்பில் இறைவானை காண்பதே .ஆனால் இவற்றை நாங்கள் அரசியல் வாதிகள்போல் ,மகஇக போல் வாயளவில் அல்ல செயலளவில். ஒன்று தர்ம பெருநாள் ,இன்னொன்று தியாக பெருநாள் .இரண்டு நாள்களிலும் ஏழைகளுக்கு உணவு உடை அளிக்க வேண்டும் என்பதே முழு நோக்கமும் .இஸ்லாம் அறிவு பூர்வமானதும் ஏழைகளை மதிக்கும் மனித நேயமிக்கதுமாகவே தனது அனைத்து செயல்பாடுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

புதன், 16 நவம்பர், 2011

கூட்டு குர்பானி வரவு- செலவு விவரம் 2011 நவம்பர்


                 வரவு 
                செலவு

பங்கு 1க்கு ரூ .1300  வீதம்  105 பங்குகளுக்கு ,,,,,,,,,,
தலைமை வரவு 1மாடு,,,,,,,,,,,,,,,,, 
தனி நபர் 1மாடுக்கு,,,,,,,,,,, 
நன்கொடை,,,,,,,



மொத்த  வரவு


136500.
    
   8400. 

  11500.
    1910.

158310.

17  மாடுகள் வாங்கிய வகை
17 மாடுகள் உரிப்பு &வெட்டுக் கூலி
வண்டி  வாடகை
மண்டப  வாடகை
இதர  செலவுகள்

மொத்த செலவு 

138890.


 16000.
      755.
 
      600.
    2065.


158310.


பற்றாக்குறை ரூபாய்1910 /=  நன்கொடை மூலம் சரிகட்டப்பட்டுள்ளது.


17  மாட்டுத் தோல்கள் விற்று வரவு ரூ.12500 .௦௦00
39  ஆட்டுத் தோல்கள் விற்று வரவு ரூ.10975 .00
மொத்த வரவு ரூ,.23475.00 
கிளை ஆலோசனையின் பேரில் தகுந்த நபர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்படும்.