Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

திங்கள், 31 டிசம்பர், 2012

பிராமணர்கள் எதிர்க்கும் முகலாய மன்னர்!



    சத்திரபதி சிவாஜியை இந்துத்துவ வாதிகள் ஆதர்ச நாயகனாக ஏற்று போற்றிவருவதையும் (தெரியாதவர்கள் எனது 2.2.2012 தேதியிட்ட பதிவை பார்க்கவும்) முகலாய அரசர் அவுரங்கஜேபை இஸ்லாமிய  மதவெறியராக இன்றும் தொடர்ந்து காட்டி வருவதையும் நடுநிலையாளர்களும் அறிந்துள்ள செய்திதான்!

     முகலாய அரசர்  அவுரங்க ஜேப்,இந்துத்துவ வாதிகள்  சொல்வதுபோல இஸ்லாமிய மதவெறியரா? என்றால் அது உண்மையில்லை. தனது தனித்த வருமானத்தில் தனது தேவைகளை நிறைவேற்றிக்கொண்டு,அரசின் பொது வருமானத்தை நிர்வாக செலவுக்கும்,பொதுமக்களின் நல்வாழ்வுக்கும் செலவு செய்து நல்லாட்சி செய்து வந்தவர். அதுமட்டும் இன்றி,தனது பேரரசுக்குள் இருந்துவந்த பல்வேறு இந்து சமயத்தைச் சேர்ந்த  சிற்றரசர்களுடனும்  நட்புடன் பழகி வந்தவர். சமய வேறுபாடுகளை காட்டாதவர். இந்து சமய மக்களின் சமய நம்பிக்கையில் தலையிடாமல்,அவர்களது வழிபாட்டினை மதித்து, ஏற்றுக் கொண்டவர்!.

    இப்படி  உண்மையை   சொன்னால், எங்கே ஆதாரம் என்று கேட்டு எகத்தாளம் செய்வதற்கு என்றே சிலர் இருக்கிறார்கள்! அவர்களுக்கு நான் எத்தனைதான் ஆதாரம் காட்டினாலும் அதனை  ஆதாரமாக ஏற்றுகொள்ள மாட்டார்கள்.   எனது ஒவ்வொரு பதிவுக்கும் ஆதாரம் என்று காட்டிக் கொண்டே இருப்பது வீண் வேலை என்பதால், பெரும்பாலும் ஆதாரங்களை  தவிர்த்து வருகிறேன்!(இந்த பதிவில் வரும் அவுரங்கஜெப்  குறித்த செய்திக்கு ஆதாரத்தை  குறிப்பிட்டு உள்ளேன்)


      அவுரங்கஜெப் தமது குறுநில மன்னர்களுடன் வங்காளம் நோக்கி செல்லும்போது,வாரணாசி வழியாக சென்றார்.அப்போது,அவருடன் வந்த குறுநில மன்னர்கள் ஒருநாள் வாரணாசியில் தங்கினால் தமது ராணிகள் கங்கையில் குளித்து  விசுவநாதர் ஆலயத்தில் வழிபாடு செய்துவிட்டு புறப்பட ஏதுவாக இருக்கும் என்று கேட்டனர்.

உடனே அவுரங்கஜெப் மன்னர் அவர்கள்,இந்து குறுநில மன்னர்களின் மத உணர்வுக்கு மதிப்பளித்து, தனது படைவீரர்கள் அனைவரையும்(பல்லக்கு தூக்குபவர்கள் தவிர) ராணிகள் குளிக்கும் இடத்துக்கு அயிந்து மைகளுக்கு அப்பால் கூடாரம் அமைத்து தங்குமாறு ஆணையிட்டார்.படைவீரர்களும் கூடாரம் அமைத்து தங்கினர்.

   சிற்றரசர்களின் ராணிகள் மட்டும் கங்கைக்கு சென்று,குளித்து ஸ்ரீ விஸ்வநாதர் ஆலயத்தில் பூஜைகள்  முடித்துவிட்டு திரும்பும்போது "கச் "பிரதேச ராணி மட்டும் காணாமல் போயிருந்தார்.உடனே அவரை தேட ஆணையிட்டும் தேடியும்,அவரைக் காணவில்லை. இதுபற்றி ஆலம்கீர் அவுரங்கஜெபிடம் முறையிடப்பட்டது. அவர் ஒற்றர் படையை அனுப்பி,வாரணாசி விஸ்வநாதர் ஆலயத்தை அலசும்படி ஆணையிட்டார் முதன்மை  அதிகாரி உடன்,  ஒற்றர்படையினர் கோவிலை சோதனை இட்டனர்.சோதனையில் அந்த கோயிலில் அமைந்து இருந்த கணேசர் சிலை அசையக்கூடிய அமைப்பில் இருப்பதைக் கண்டு,அந்தசிலையை திருகிப் பார்த்தனர்

     கணேசர் சிலை அசைந்து திருகியதும்,அதன் அடியில் படிகட்டுகள் தெரிந்தன.படிக்கட்டுகள் சுரங்கப் பாதையுடன் கீழ் அறைக்கு சென்று முடிவடைந்தது.வீரர்கள் அதன்வழியே சென்று பார்த்தபோது,சுரங்க அறையில்,  புனித  கங்கையில் நீராடிய,பாவத்தைப் போக்கும் விஸ்வநாதர்  ஆலயத்தில் தரிசிக்க வந்த,  "கச்"பிரதேச ராணி கற்பழிக்கப் பட்டு கிடந்தார்.கசங்கியிருந்த ஆடையுடன், கத்திய குரலுடன்,கண்ணீர் சிந்திய நிலையில் இருந்த அவளை கோயில் சுரங்க அறையில்  இருந்து மீட்டுவந்தனர்.சுரங்க அறை ,ச்ற்ற்ர் விஸ்வநாதர் ஆலய மூலவரின் சிலைக்கு நேர் கீழே இருந்தது.

அரசியின் கோலத்தைக் கண்டு சிற்றரசர்கள் கதறினார்கள், குமுறினார்கள், நடந்தது குறித்து அவுரங்க ஜெபிடம் முறையிட்டு,தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு நீதி வழங்குமாறு கேட்டு கொதித்தனர். பெண்களைக் கற்பழித்து இழிவுபடுத்திய கோயில் மூலவர் சிலை  வேறு இடத்துக்கு அப்புறப்படுத்தப் பட்டது. கோயில் தரை மட்டமாக்கப் பட்டது.கோயில் நிர்வாகிகள்,பூசாரிகள் அனைவரும் தண்டிக்கப்பட்டனர்.

(ஆதாரம் ஓடிஸா மாநில கவர்னராக இருந்த பிஷம்பர்நாத் பாண்டே அவர்கள் எழுதி,ஓடிஸா மாநில அரசு வெளியிட்ட அரசு வெளியிட்ட இஸ்லாமும் இந்திய கலாச்சாரமும் நூல் பக்கம் 70,71) 

பட்னா மீயுசியம் ,முன்னாள் ஆவணக் காப்பக இயக்குனராக இருந்த டாக்டர்.குப்தா என்பவரிடம் இருந்து பெற்ற ஆவணங்களுடன் பட்டாடி சீதாராமையர் தன எழுதிய நூலிலும் ஆதாரமாக இந்நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு உள்ளார்.

மற்றொரு நிகழ்சியையும் பார்ப்போம். அவுரங்கஜெபுக்கும் பார்ப்பனர்களுக்கும் நடந்த உரையாடல்

"என்ன நடக்கிறது இங்கே?"

"அந்த பெண்ணின் கணவன் இறந்துவிட்டான்"

"அதற்காக "

"அந்த பெண்ணும் அவனுடன் இறக்க வேண்டும்"

"சரி"

"அவள் மறுக்கிறாள்"

"அதனால்"

"நாங்கள் அவளை கணவருடன் எரிக்க முயன்று கொண்டிருக்கிறோம்"

"இது படுகொலை"

"இல்லை, இது எங்களின் பண்பாடு,மதச்சடங்கு"

"காட்டுமிராண்டித்தனம்"

"எங்கள் மதச்சடங்கைத் தடுக்க,விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை"

"இது எனது ஆளுகைக்கு உட்பட்ட இடம்.இங்கு படுகொலைகளை அனுமதிக்க முடியாது"

"நீங்கள் எங்கள் மதவிவகாரங்களில் தலையிடுகிறீர்கள்"

அவுரங்கஜெப் தனது வாளைஉருவி,"இங்கு யாராவது இந்த பெண்ணை பலாத்காரம் செய்தால் அவர்களின் தலை கீழே உருளும்" கோபத்துடன் சொல்லுகிறார்.

அந்த பெண்ணை பலாத்காரம் செய்தவர்கள் அவளை விட்டுவிட்டு ஓடிவிடுகிறார்கள். அந்தப் பெண் அவுரங்கஜெபை நன்றிப் பார்வை பார்த்துவிட்டு  அங்கிருந்து செல்கிறாள்!

இப்படிப்பட்ட அவுரங்கஜெபைதான் மதம்மாற மக்களை பலாத்காரம் செய்தான்,மாறாதவர்கள் மீது ஜசியா வரி விதித்தான் என்றெல்லாம் நமது பாடப் புத்தகங்களில் எழுதிவருகிறார்கள்.(நாமும் படித்து வருகிறோம்)  ஜெர்மன் நாஜி இட்லர் இப்படித்தான் வரலாற்றில் யூதர்கள் ஜெர்மானியரைக் கொடுமைப் படுத்தினார்கள் என்று மாற்றி எழுதிவைத்தான்.

நாசி இட்லர் வழியில், நமது பார்பன வரலாற்று ஆசிரியர்கள் அவுரங்கஜெபை இழிவுபடுத்தி எழுதி வருகிறார்கள்!

கடவுளின் பெயரால் காமக்களியாட்டம்.அதுவும் கடவுள் உள்ளதாக சொல்லப்படும் கோயில்களிலேயே! அரசிகளைக்கூட அஞ்சாது கற்பழிக்கும் அநியாயம்!!

தவறான செயல்களைக் கண்டித்துதண்டித்த அவுரங்கஜெப் மதவெறியராம்! கடவுள் இருக்கிறார் என்று நம்பிவந்த கோயிலிலேயே  கற்பழித்து, இரக்கமின்றி நடந்துகொண்ட,மனிதத் தன்மையற்ற செயல்களைச்  செய்தவர்கள்  பிராமணர்கள்,இந்துத்துவவாதிகள்  சாத்வீக,அஹிம்சா வாதிகளாம்.!!

   "இந்துத்துவ பாசிசம்" எனபது எப்போதும் தனது தவறுகளை,குற்றங்களை மறைத்து,.இருட்டடிப்பு செய்தும் வருவதுடன், தங்களது தவறுகளை  கண்டிப்பவர்கள் மீது,அவர்கள் எத்தனை உயர்ந்த மனிதர்களாக இருந்தாலும்  அவதூறு செய்து,பொய்யுரைத்து களங்கப்படுத்தவும் தவறுவதில்லை!

      இந்துத்துவ பாசிச வாதிகள் ,அவுரங்கஜெபை  இன்றும் தொடர்ந்து மதவெறியராக காட்டி வருவது ஏன்? ஏனென்றால்,அவுரங்கஜெபைப் படிக்கும் அனைவருக்கும் அவர்மீது வெறுப்பு வரவேண்டும்.என்பதுதான். அவுரங்கஜெப் மீது,அவரது ஆட்சிமீது  வெறுப்பு வந்தால்தான்,அவர் பலவந்தமாக மாற்றியதாக கூறும் முஸ்லிம்களின் வம்சாவளியினர் மீது,அதாவது இன்றைய  முஸ்லிம் மக்கள் மீதும் வரவேண்டும்  என்பதற்காகத்தான்  அவுரங்கஜெப் குறித்து தவறான வரலாறு  எழுதி, அதனை உண்மை என மக்களை நம்பசெய்து  வருகிறார்கள்!
நன்றிகள் 
வானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....!

வியாழன், 27 டிசம்பர், 2012

http://aatralarasau.blogspot.in/2012/12/blog-post_22.html


Ibrahim SheikmohamedDecember 23, 2012 12:23 AM
////வேலைவாய்ப்பு,கல்வியில் முஸ்லிம்களின் நிலை தேசிய சராசரியை விட அதிக்மாக இருப்பது குறித்தும் கருத்து சொல்லுங்கள் சகோ!!///
மோடியின் ஆட்சிகுமுன்பே அங்கு முஸ்லிம்களின் கல்வி ஹிந்துக்களை விட அதிகமாகவே இருந்திருக்கிறது .இதை நீங்கள் குறிப்பிட்டு காட்ட வேண்டிய அவசியமில்லை .

குஜராத்தில் இயல்பாகவே முஸ்லிம்கள் மீது கடும் வெறுப்பு இருந்தே வந்ததிருக்கிறது.2001 இல் அஹ்மதாபாத் அருகே உள்ள கலோல் என்ற இடத்தில் வியாபாரம் செய்து வந்த எங்கள் ஊரை சேர்ந்த நண்பரை பார்க்க சென்ற பொழுது நண்பர் வெளியே சென்று இருந்ததால் வீடு பூட்டியிருந்தது .எதிர்வீட்டில் விசாரித்தால் தங்களுக்கு தெரியாது என்று சொல்லிவிட்டார்.அதிக நேரம் காத்திருந்ததால் அந்த வீட்டு பெண்ணிடம் குடிக்க தண்ணீர் கேட்டோம் .பதிலே சொல்லாமல் கதவை சாத்திவிட்டார்.பிறகு நண்பர் வந்த பிறகு விசாரித்தும் முஸ்லிம்கள் என்றாலே பெரும்பாலும் இப்படி வெறுப்பு காட்டுபவர்களாகவே உள்ளனர் என்று கூறினார்.மேலும் அன்று இரவு வீட்டில் சாப்பிட்டோம் சாப்பிட்ட பிறகு இறைச்சியின் எலும்புகளை எடுத்து தனியாக தாளில் காட்டி வைத்தார் .இதை காலையில் வெளியே கிளம்பும் பொழுது அவுட்டரில் போட வேண்டும் இல்லையெனில் வீட்டு உரிமையாளரிடம் சொல்லி கொடுத்து காலி பண்ணிவிடுவார்கள் இந்த ஏரியாவில் எங்கேயுமே நான் வெஜி சாப்பிடமுடியாது என்றார்.

///கோத்ரா சம்பவத்தில் மோடி குற்ற‌வாளி என தீர்ப்பு வந்தால் ஏற்போம்.ஆனால் அதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு.////
எதனால் வாய்ப்பு மிக மிக குறைவு ,நீதிபதிகளிடம் நீதி கிடைக்காது என்று கருதுகிறீர்களா?.அப்படியே சொன்னாலும் கர்கரே கதிதான் ஏற்படும் என்று கருதுகிறீர்களா?

////ஏன் குஜராத்தில் ஒருவர் கூட மோடிக்கு மாற்று இல்லையா? தேசிய அளவில் மோடிக்கு மாற்று யார்?////
////மோடி ஒரு நல்ல ஆட்சியாளர் என்ற பிரச்சாரம் அவருக்கு இணையான மாற்றுத் தலைவன் இல்லை என்னும் சூழல் வந்தால் அவருக்கு இந்திய ஆட்சி கிட்டும் என்பதை உணருங்கள்!!////

பாரதிய ஜனதாக்கார்களில் ஒரு சிலர் மட்டுமே அவரை பிரதம வேட்பாளர் என்று கூறியுள்ளனர் .காசு வாங்கிய ஊடகங்களும் பிரதம வேட்பாளர் என்றே சங்கை உரக்க ஊதுகின்றன .ஆனனல் நீவிரோ அதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று மோடி பிரதமராகி பல ஆண்டுகள் ஆனது போலவும் அவருடைய ஆட்சியில் குறைகள் காணப்பட்டாலும் தேசிய அளவில் அவருக்கு மாற்று யார் ?என்று கேட்டுள்ளீர்கள் .உங்கள் உள்ளத்தில் மோடி இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார என்றால் உங்களை அறியாமலே உங்களை அடையாளம் காட்டுகிறீர்கள் .
எம்ஜியார் மூன்று முறை வெற்றிபெரவில்லையா?ஜோதிபாசு நான்கு வெற்றிபெரவில்லையா?அப்போதெல்லாம் எழுப்பப் படாத பிரதமர் கோசம் இப்போது பிரமாதப் படுத்துவது எதனால்?.
http://ibnlive.in.com/features/rday/stateofthenation/graph2.php

இத இணைப்பில் பாருங்கள் சிறந்த ஆறு முதல்வர்களில் நிதிஸ 76 சதம் ஒட்டு பெற்று முதலிடத்தில் உள்ளார் .உங்களது மோடி ஆறாவது இடத்திலே உள்ளார்.
பிரதமந்திரி க்கு அதிக ஆதரவு தேசிய அளவில் சோனியா காந்தியைத்தான் அதிகமானோர் ஆதரிக்கிறார்கள்
மோடி ஆட்சியில் இருக்கும் வரை அவரைப் பற்றி ஊழல் புகார் சொன்னால் அவரது முன்னாள் சக மந்திரியான ஹரே பாண்ட்யா கதிதான் சுட்டுத்தள்ளிவிட்டு கைவசம் உள்ளகுற்றச்சாட்டான முஸ்லிம தீவிரவாதிகள் என்னும் இந்திய முஜாஹிதீன் கொன்றுவிட்டார்கள் என்று கதையை முடித்துவிடுவார். பாவம் அவரது தந்தை கடந்த தேர்தலில் மோடியை எதிர்த்து போட்டியிட்டார்.இந்த தேர்தலில்பாண்ட்யாவின் மனைவி போட்டியிட்டார் .
ஊழல் குற்றச்சாட்டு மோடி தோல்வியை தழுவிய பிறகே.

சார்வாகன்December 23, 2012 1:18 AM
சகோ இப்பூ,

//மோடியின் ஆட்சிகுமுன்பே அங்கு முஸ்லிம்களின் கல்வி ஹிந்துக்களை விட அதிகமாகவே இருந்திருக்கிறது .இதை நீங்கள் குறிப்பிட்டு காட்ட வேண்டிய அவசியமில்லை .//

சரி அதிகம் ஆக இருந்து ,மோடி ஆட்சியில் குறைந்து இருந்தால் மட்டுமே சிக்கல்.அது குறித்து ஏதேனும் சொல்ல இயலுமா??
**
//எதனால் வாய்ப்பு மிக மிக குறைவு ,நீதிபதிகளிடம் நீதி கிடைக்காது என்று கருதுகிறீர்களா?.அப்படியே சொன்னாலும் கர்கரே கதிதான் ஏற்படும் என்று கருதுகிறீர்களா?//

இந்தியாவில் ஆளும் கட்சியினரின் மீதான வழக்குகளின் நிலை என்ன ? என்பதை அறிந்ததுதானே!!.கர்கரே விடயம் குறித்த சதிக் கோட்பாட்டிற்கு ஆதாரம் இல்லை!!
**
///.உங்கள் உள்ளத்தில் மோடி இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார என்றால் உங்களை அறியாமலே உங்களை அடையாளம் காட்டுகிறீர்கள் .//

மோடி ஒரு பிரதம வேட்பாளர் ஆகும் வாய்ப்பு உள்ள‌தால் மட்டுமே விவாதிக்கிறோம். பா.ஜ.க.வில் மோடி மட்டுமே மதவாதி போல் காட்டுவது வியப்பு அளிக்கிறது. மோடி இல்லை எனில் அத்வானி ,வேறு யார்?

மூமின் பதிவர்கள் யாரும் மோடி வெற்றி பற்றி கருத்து தெரிவிக்கவில்லை. நாம் பதிவு எழுதிய பிறகே சகோ அதிரையார் பதிவு இட்டார். நமக்கு தேவை பன்முக கருத்துகள். அதில் சரியானதை மக்கள் தேர்ந்து எடுக்கட்டும்.

நீங்கள் கொடுத்த சுட்டி மோடி வெற்றிக்கு பிந்திய நிலவரம் அல்ல!.
**
//ஊழல் குற்றச்சாட்டு மோடி தோல்வியை தழுவிய பிறகே//

தோல்விக்கு பின் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு என்றாலும். இப்போது ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லை என்பதே என் கேள்வி.

நன்றி!!

சார்வாகன்December 23, 2012 1:32 AM
சகோ இப்பூ,

//குஜராத்தில் இயல்பாகவே முஸ்லிம்கள் மீது கடும் வெறுப்பு இருந்தே வந்ததிருக்கிறது.//

எப்போதுமா? அல்லது இப்போது மட்டுமா???

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வித அரசியல்.தமிழகத்தில் பார்ப்பன எதிர்ப்பினைப் போல் ,வட இந்தியாவில் முஸ்லிம் எதிர்ப்பு.
வட இந்தியாவில் அதிகம் முஸ்லிம்களால் ஆளப் பட்டது காரணம் ஆக இருக்க்லாம்.

கஜினி முகமதால் 17 முறை கொள்ளையடிக்கப்பட்ட சோமநாத் கோயில் குஜராத்தில் உள்ளது.

//இந்த ஏரியாவில் எங்கேயுமே நான் வெஜி சாப்பிடமுடியாது என்றார்.//

வட இந்தியாவில் மாட்டுக் கரி சாப்பிடுவேன் எனக் கூட சொல்ல முடியாது.நானும் இதை அறிவேன்.

நன்றி!!

Ibrahim SheikmohamedDecember 23, 2012 9:02 AM
குஜராத்தில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறை 48%. இது மிகவும் ஏழ்மையான சோமாலியா நாட்டை விட அதிகம். சோமாலியாவில் வெறும் 33% மட்டுமே. இது குறித்து மோடி கருத்து தெரிவிக்கையில், குஜராத்தில் உள்ள பெண்கள் அனைவரும் உடல் குண்டாகி விடும் என்ற அச்சத்தில் பால் சாப்பிடுவதில்லை . எனவே தான் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவாக உள்ளது என கூறுகிறார். இவையனைத்தும் முட்டாள்தனமான வாதமாகும். குஜராத் குழந்தைகள் தொழிற்சாலைகள், சாலைகள் மின்சாரத்தையா உண்ண முடியும்?

குஜராத்தில் குழந்தை இறப்பு விகிதம் 1000க்கு 48 ஆக உள்ளது. இந்த மோசமான பட்டியலில் குஜராத் இந்திய அளவில் 10ஆவது இடத்தில் உள்ளது.

குஜராத்தில் வயது வந்த ஆண்களில் மூன்றில் ஒரு பகுதியினரின் உடல் நிறை குறியீட்டு எண்(BMI) 18.5 க்கு கீழே உள்ளனர். இதில் குஜராத் இந்திய அளவில் 7வது இடம் பெற்றுள்ளது.

பேறுகால இறப்பு விகிதம் மற்ற மாநிலங்களை குஜராத்தில் தான் அதிகமாக உள்ளது.

குஜராத்தின் கல்வி, பொது சுகாதாரம், வருவாய் இந்தியாவின் மற்ற 8 மாநிலங்களை விட பின் தங்கி உள்ளது. அதாவது குஜராத் 9ஆவது இடத்தில உள்ளது.

குஜராத்தின் கிராமப்புறத்தில் 51% மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இதில் 57% எஸ்.சி, 49% எஸ்.டி , மற்றும் 42% பொதுப்பிரிவினர் உள்ளனர்.

மோடி குஜராத்தில், பெரும் தொழிற்சாலைகளுக்கு மலிவான மின்சாரம் மற்றும் நிலங்களை தந்ததில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. குஜராத்தில் அதிகமான வறுமை, மிகவும் குறைந்த அளவு மனித மேம்பாடு இவையே மிகைத்து நிற்கின்றன. அரசுக்கு நேரடி வருமானம் பெறுவது குறித்த நடவடிக்கைகளில் குஜராத் அரசு அதிகமான கவனம் செலுத்துகின்றது. ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிடுகின்ற அளவில் குஜராத்தில் வறுமை தாண்டவமாடுகின்றது. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.

இந்த உண்மையை கண்டிப்பாக ஒருநாள் குஜராத் மக்கள் உணர்வார்கள்,

என தனது கட்டுரையிலே மார்கண்டேய கட்ஜு குறிப்பிட்டு உள்ளார்.



Ibrahim SheikmohamedDecember 23, 2012 9:45 AM
சாறு////ஆகவே நாம் மோடி என்பவர் பிரதமர் ஆகும் வாய்ப்பினை நடுநிலையுடன் அலசவே விரும்புகிறோம்.////
மோடியை பாரதிய ஜனதா முன்னணி தலைவர்களே இதுவரை அவரை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளவில்லை .நீங்களாகவே ஏன் துடிக்க வேண்டும்?
மோடி முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசினாலோ முஸ்லிம்களுக்கு சலுகைகள் அறிவித்தாலோ அவரது செல்வாக்கு க்ளோஸ். முஸ்லிமக்ளுக்கு எதிராக சோமநாத் கோயில் பற்றியும் பாக்கிஸ்தான் பற்றியும் மேலும் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதை சொல்லித்தான் அவரால் அரசியலில் நிற்க முடியும் .இந்தியா முழுவதும் இது போன்ற நிலை இல்லை .குஜராத்துக்கு வெளியே மோடி என்றால் மக்களின் வோட்டுக்கள் கிடைக்க வாய்ப்பில்லை .பிரதமருக்கு தகுதியானவர் யார் என்பதில் வாஜ்பாய் சோனியாவுக்கு அடுத்து வருகிறார் .23 சதவீத ஓட்டுக்களை பெருகிற்ற என்றால் அத்வானி 2 சதவீதத்துக்கும் கீழே உள்ளார் .அத்வானி வாஜ்பாயை ஒப்பிடுகையில் வாஜ்பாய் மிதமானவர் என்பதால் பாரதிய ஜனதாவைத்தாண்டி அவரை ஆதரிப்போர் உள்ளனர் .அத்வாநியைவிட தீவிரவாதியான மோடியை குஜராத்துக்கு வெளியே செல்லாக் காசு என்பது பிஜேபிக்கு தெரியும் .அவர் முதல்வராக தொடர்ந்து நீடிக்க என்ன விலை கொடுத்துள்ளனர் என்பது அவர்களுக்கு தெரியும் மேம்போக்காக மேயும் உமக்கு தெரிய வாய்ப்பில்லை .ஒருவேளை இவர் பிஜேபியால் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் ,அத்வானியை கொன்று விட்டு முஸ்லிம் தீவிரவாதிகள் மீது பலியை போடவும் தயங்கமாட்டார் என்பதும் அவர்களுக்கு தெரியும் .தன்னை எதிர்த்த காரணத்தால் சக அமைச்சரை கொன்றுவிட்டு முஸ்லிம் தீவிரவாதிகள் என்று பலி போட்டவர்மோடி .அமெரிக்கா விசா மறுத்தவுடன் தனது செல்வாக்கை நிலை நாட்ட இசாந்த் மற்றும் மூன்று மாணவர்களை என்கவுண்டரில் போட்டு தள்ளிவிட்டு தன்னை கொல்ல முயற்சி செய்ய திட்டமிட்டு வந்ததாக விளம்பரம் செய்து கொண்டார் .2001 இல் இடைதேர்தலில் தோல்வியுற்றபிஜேபியை இவர் ரயில் எரிப்பு நடத்தி கலவரத்தை உருவாக்கி ஹிந்துக்கள் ஓட்டை மதவாத அடிப்படையில் தக்க வைத்துக் கொண்டார் .தனது சொந்த செல்வாக்கில் பிகாரில் ஆட்சி புரியும் நிதிஸ் குமார் இவரை பிரதமவேட்பாளராக அறிவித்தால் கூட்டணியைவிட்டு வெளியேறுவார்.தேர்தலுக்கு பிறகே ஜெயலலிதா ஆதரிப்பார்.ஒரிசாவின் ஜே.பி பட்நாயக் ஆதரிக்க மாட்டார் கடந்த தேர்தலில் 96 சீட்களை மட்டுமே பெற்ற பிஜேபி அதைவிட குறைவாக.

சார்வாகன்December 23, 2012 10:06 AM
சகோ இப்பூ,
//மோடியை பாரதிய ஜனதா முன்னணி தலைவர்களே இதுவரை அவரை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளவில்லை .நீங்களாகவே ஏன் துடிக்க வேண்டும்?//

நல்ல நகைச்சுவை. மோடிக்கு எதிரான பாஜக தலைவர்களுக்கு முஸ்லிம்கள் ஆதரவா? மோடி,அத்வானி,சுஷ்மா இவர்களில் ஒருவருக்குதானே வாய்ப்பு!!.அத்வானி வயதானவர். சுஷ்மாவை விட மோடிக்கே அதிகம் வாய்ப்பு!!

பாஜக 200 இடங்களில் வென்றால் அப்படித்தானே!!. என்ன்மோ வாய்ப்பே இல்லாத விடயம் போல் பேசுகிறீர்கள்.பல தொலைக்காட்சிகளில் அலசிய விடயத்தைதானே பதிவில் சொன்னேன். மோடி என்றால் அவ்வளவு பயமா??
ஹா ஹா ஹா!!

// .அத்வானி வாஜ்பாயை ஒப்பிடுகையில் வாஜ்பாய் மிதமானவர் என்பதால் பாரதிய ஜனதாவைத்தாண்டி அவரை ஆதரிப்போர் உள்ளனர் .அத்வாநியைவிட தீவிரவாதியான மோடியை குஜராத்துக்கு வெளியே செல்லாக் காசு என்பது பிஜேபிக்கு தெரியும் //

அப்போ அடுத்த ஆட்சி பாஜக என முடிவே செய்து விட்டீர்களா!!

இந்த மிதம், கடினம், மதவாதி,மத சார்பற்ற‌வன் எல்லாம் வேடம்!!.
மிதம், என்பதை வரையறுங்கள் பார்ப்போம்!!
//தனது சொந்த செல்வாக்கில் பிகாரில் ஆட்சி புரியும் நிதிஸ் குமார் இவரை பிரதமவேட்பாளராக அறிவித்தால் கூட்டணியைவிட்டு வெளியேறுவார்.தேர்தலுக்கு பிறகே ஜெயலலிதா ஆதரிப்பார்.ஒரிசாவின் ஜே.பி பட்நாயக் ஆதரிக்க மாட்டார் கடந்த தேர்தலில் 96 சீட்களை மட்டுமே பெற்ற பிஜேபி அதைவிட குறைவாக//

நல்லா கதை சொல்ரீங்க இப்பூ ,

ஆட்சி அதிகாரம் ஜெயிக்க எதுவேண்டுமானாலும் சொல்வார் ,செய்வார் அரசியல்வாதிகள்!!

மோடி பிடிகாத நிதிஷ் குமாருக்கு பாஜக பிடிக்குமாம்!!

பாஜக நல்ல கட்சி, மோடி மட்டுமே மோசம் ஹி ஹி

உங்ளுக்கு நல்ல மூளை!!

சிந்திக்க மாட்டீர்களா!!
***

இன்னும் இரு வருடம் இருக்கிறது பார்க்கத்தானே போகிறோம்!!!

பொறுமை கடலினும் பெரிது. பதிவில் இருக்கும் வாய்ப்புகளை மட்டுமே கூறி இருக்கிறேன்!!

நீங்கள் காட்டிய கருத்துக் கணிப்பு பழையது இன்னும் இரு வருடத்தில் என்ன சூழல் வரும்!! பார்ப்போம்!!


நன்றி!!

சார்வாகன்December 23, 2012 9:49 AM
சகோ இப்பூ,
நாம் எப்போதும் ஒருவர் சொன்னவுடன், அது சரியா எனப் பரிசோதித்து பார்ப்போம்.ஆம் மார்க்கண்டேயெ கட்ஜூ இப்படிக் கூறி இருக்கிறார். சுட்டி அளிக்கிறேன். அவர் கூறியது சரியா எனவும் பார்க்க வேண்டும்.

http://justicekatju.blogspot.com/2012/12/on-gujarat-development.html

Apart from what was done to Muslims in 2002, let us consider a few facts.

(1) Child malnutrition at 48 % in Gujarat is higher than the national average, far higher than the poorest African sub Saharan countries of Somalia and Ethiopia where the rate is about 33%. When Modi was confronted with this he said that girls in Gujarat do not eat or drink milk for fear of becoming fat, the people are vegetarians, etc which is all nonsense. Should the Gujarati children eat the factories, roads and electricity Modi has created ?

(2) The infant mortality rate in Gujarat is 48 per thousand, which is the 10th worst in India.

(3) More than a third of Gujarat's adult men have a body mass index of less than 18.5, the 7th worst in India.

(4) Gujarat has a high maternal mortality rate.

(5) Education, health and income levels in Gujarat place it after 8 other Indian states.

(6) rural poverty is 51% in Gujarat, 57% among STs, 49% among STs, and 42% among OBCs.

No doubt Modi has given huge concessions to big industrial houses, giving them cheap electricity, land, etc and has built roads, etc. But what about the standard of living of the masses ? The figures given above paint a totally different picture.

I am sure the people of Gujarat will one day learn the truth

நன்றி!!!

Reply

சார்வாகன்December 23, 2012 10:57 AM
எதனையும் சரிபார்த்தல் நலம். இந்தியாவின் பிற மாநிலங்கள்,குஜராத் அதிக வித்தியாசம் இல்லை!!



http://www.ifpri.org/sites/default/files/publications/ishi08.pdf

Family
Welfare Statistics in India”.

http://mohfw.nic.in/WriteReadData/l892s/972971120FW%20Statistics%202011%20Revised%2031%2010%2011.pdf


http://www.pratirodh.com/pdf/human_development_report2011.pdf

Reply

சார்வாகன்December 23, 2012 11:09 AM
Gujarat: Significant decline in rural poverty

http://blogs.economictimes.indiatimes.com/policypuzzles/entry/the-gujarat-poverty-numbers



Adirai IqbalDecember 23, 2012 11:13 AM
சகோ சார்வாகனார்

//கஜினி முகமதால் 17 முறை கொள்ளையடிக்கப்பட்ட சோமநாத் கோயில் குஜராத்தில் உள்ளது.//
இச்செய்தியை இங்கு குறிப்பிடுவதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் !
இந்த வெறுப்பை இந்த நூற்றாண்டு வரை கொண்டு வந்தது யார் !

ஏன் கொண்டு வந்தார்கள் ?அதில் இந்த்துத்துவாவினரின் ஆதாயங்கள் என்ன? . சற்று சிந்தியுங்கள் அதற்கும் தற்போது அவர்களின் ஆட்சி நீடிப்பதற்கும் உள்ள தொடர்பை ஒத்துக்கொள்கிறீர்களா

தமிழ் நாட்டின் பிராமண எதிர்ப்பு இதிலிருந்து முற்றிலும் வேறுப்பட்டது
எதை எதோடு இணைக்கிறீர்கள்

Reply
Replies

சார்வாகன்December 23, 2012 11:29 AM
சகோ அதிரையாரே,

பாருங்க இப்ப குஜராத்தில் மோடி வெற்றிக்கு என்ன காரணம் நீங்க சொல்வீர்கள்?

மக்கள் மத ரீதியாக பிளவு பட்டனர் சரியா?. அதாவது இந்துத்வ கொள்கையை விரும்பும் மக்கள் மோடிக்கும்,விரும்பாதோர் காங்கிரசுக்கும் வாக்களித்த‌னர்.

ஏன் இந்துத்வ கொள்கை வட மாநிலங்களில் ஏற்கப்படுவது போல் தமிழ்நாட்டில் இல்லை?

தமிழகம் முஸ்லிம்களின் கீழ் அதிக நாள் இருந்தது இல்லை. ஆனால் வட மாநிலங்கள் அதிகம் முஸ்லிம் ஆட்சியாளர்களின் கீழே இருந்தது. இன்னும் சோம்நாத் என்பது குஜராத மக்களிடையே பரப்பரைக் கதைகளாக தொடர்கிறது.எத்த‌னை தடவை தாக்கப்ப்ட்டுள்ளது வரலாற்றில் பாருங்கள்??

http://en.wikipedia.org/wiki/Somnath

In 725 CE Junayad, the Arab governor of Sind, sent his armies to destroy the second temple.[12] The Gurjara Pratihara king Nagabhata II constructed the third temple in 815, a large structure of red sandstone.


Somnath temple, 1869
In 1024 CE, the temple was once visited by Mahmud of Ghazni[13][14] who raided the temple from across the Thar Desert. The temple was rebuilt by the Gujjar Paramara King Bhoj of Malwa and the Solanki king Bhimadev I of Anhilwara, Gujrat (present day Patan) between 1026 and 1042. The wooden structure was replaced by Kumarpal (r.1143-72), who built the temple of stone.[15][16]
In 1296 CE, the temple was once again destroyed by Sultan Allauddin Khilji's army.[12][13][16] According to Taj-ul-Ma'sir of Hasan Nizami, Raja Karan of Gujarat was defeated and forced to flee, "fifty thousand infidels were dispatched to hell by the sword" and "more than twenty thousand slaves, and cattle beyond all calculation fell into the hands of the victors".[12] The temple was rebuilt by Mahipala Deva, the Chudasama king of Saurashtra in 1308 AD and the Linga was installed by his son Khengar sometime between 1326 and 1351 AD.[16]
In 1375 CE, the temple was once again destroyed by Muzaffar Shah I, the Sultan of Gujarat.[12][16]
In 1451 CE, the temple was once again destroyed by Mahmud Begda, the Sultan of Gujarat.[12][13][16]
In 1701 CE, the temple was once again destroyed by Mughal Emperor Aurangzeb.[12] Aurangzeb built a mosque on the site of the Somnath temple, using some columns from the temple, whose Hindu sculptural motifs remained visible.[17]
Later on a joint effort of Peshwa of Pune, Raja Bhonsle of Nagpur, Chhatrapati Bhonsle of Kolhapur, Queen Ahilyabai Holkar of Indore & Shrimant Patilbuwa Shinde of Gwalior rebuilt the temple in 1783 AD at a site adjacent to the ruined temple which was already converted to a mosque
..
Before independence, Prabhas Pattan was part of the princely state of Junagadh. After integration of Jungadh in to Union of India, the Deputy Prime Minister of India, Sardar Vallabhbhai Patel came to Junagadh on November 12, 1947 to direct the stabilization of the state by the Indian Army and at the same time ordered the reconstruction of the Somanath temple.[19]
When Sardar Patel, K. M. Munshi and other leaders of the Congress went to Gandhi with the proposal of reconstructing the Somnath temple, Gandhi blessed the move,but suggested that the funds for the construction should be collected from the public and the temple should not be funded by the state. He expressed that he was proud to associate himself to the project of renovation of the temple[20] But soon both Gandhi and Sardar Patel died and the task of reconstruction of the temple continued under K. M. Munshi, who was the Minister for Food and Civil Supplies in the Nehru Government.[20]

ஆகவே வட இந்தியாவில் முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் எடுபடுகிறது.

ஆனால் தமிழ்நாட்டில் உயர்சாதி எதிர்ப்பு மதம் சாராமல் நிகழ்ந்தது.உயர்சாதி என்பது பார்ப்பனர்களை மட்டும் சுட்டிய இதர ஆதிக்க சாதி இயக்கமாக பரிணமித்தது.
Adirai IqbalDecember 23, 2012 11:25 AM
//மோடி ஒரு பிரதம வேட்பாளர் ஆகும் வாய்ப்பு உள்ள‌தால் மட்டுமே விவாதிக்கிறோம். பா.ஜ.க.வில் மோடி மட்டுமே மதவாதி போல் காட்டுவது வியப்பு அளிக்கிறது. மோடி இல்லை எனில் அத்வானி ,வேறு யார்?//
நன்றி இதுவரையிலும் ஒரு தவறான தளத்தில் (பாதையில்) விவாதித்துக்கொண்டிருக்கிறேன் என்பது புரிகிறது . நாங்கள் மோடியை மட்டுமல்ல ஒட்டுமொத்த முதலாளித்துவ இந்துத்துவத்திற்கு எதிராகத்தான் விவாதம் கொண்டு செல்லப்பட வேண்டும் என விரும்புகிறோம் . இந்துத்துவம் இல்லையென்றால் மோடி இல்லை . முஸ்லிம் எதிர்ப்பும் மனு தர்மமும்தான் இந்துத்துவத்தின் உயிர்நாடி , அந்த புள்ளியிலிருந்து நீங்கள் மோடியை நோக்குங்கள் மோடி எவ்வளவு அபாயகரமானவர் என்பது புரியும் . இவ்வாறு பார்த்தால் நீங்கள் வாஜ்பாய் , அத்வானி சுஷ்மா , மோடி இவர்களுக்கு மத்தியில் எந்த ஒரு வேறுப்பாட்டையும் காணமாட்டீர்கள் .

Reply
Replies

சார்வாகன்December 23, 2012 11:35 AM
ஏங்க நானா சொல்றேன் நம்ம் சகோ இப்பூ தானே மோடியைத் தவிர அனைவருக்கும் வாய்ப்பு என்கிறார்.

பல தொலைக்காட்சியிலும் சொன்னதை வாய்ப்பு என்ற அளவில் எழுதினேன். இன்னும் இருவருடம் இருக்கிறது. எதுவும் நடக்கும்!!!.

என்ன மோடியினால் அரசியல் பரப்ரப்பு அடைந்து இருக்கிறது.இந்தப் பதிவும் சூடான இடுகையில் வந்து பரபரப்பு ஆனது கூட நிரூபணம்!!

நாம் செய்வது அனைத்தும் கணிப்பே!! நடப்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்!!

நன்றி!!

Reply

Adirai IqbalDecember 23, 2012 11:42 AM
//ஆகவே வட இந்தியாவில் முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் எடுபடுகிறது.//

வாருங்கள் சார்வாகனாரே ! . இதைத்தானே விவாதம் முழுக்க நாங்கள் சொல்லி வருகிறோம் . மோடியின் வெற்றி என்பது (மொத்தத்தில் பி.ஜே.பி)முஸ்லிம் எதிர்ப்பினால் மட்டும்தான் சாத்தியமாகிறது .அவருடைய நல்லாட்சியால அல்ல . மேலும் காங்கிரஸ் . பி ஜே.பி . இரு கட்சிகளுமே முதலாளித்துவ கட்சிகள்தான் . நீங்கள் சொல்லும் முனேற்றம் என்பது கார்பரேட் கம்பெனிகளின் முன்னேற்றத்தை பற்றியே . அதாவது விரலின் வீக்கத்தை வளர்ச்சி என்று நியாப்படுத்த பார்கிறீர்கள் . 

மேலும் முஹம்மதின் படையெடுப்பு இந்து எதிர்ப்பால் அல்ல . அது அந்த காலங்களில் நிகழ்ந்த இரு அரசுக்கெதிரான போராட்டமாகவே பார்க்கப்பட வேண்டும். ஆனால் கோத்ரா கலவரம் அது போன்ற ஒன்று அல்ல 

குஜராத்தின் முன்னேற்றங்களை நீங்கள் தரவுகளின் அடிப்படையில் விளக்கவும் 

Reply

Adirai IqbalDecember 23, 2012 11:46 AM
முஹம்மதின் படையெடுப்பு என்பதை கஜினி முஹம்மதின் படை எடுப்பு என்று படிக்கவும்





Ibrahim SheikmohamedDecember 23, 2012 5:17 PM
//கஜினி முகமதால் 17 முறை கொள்ளையடிக்கப்பட்ட சோமநாத் கோயில் குஜராத்தில்
உள்ளது.//
17 முறை படையெடுத்து கோயிலை கொள்ளை யடித்தார்என்று கூறி வருகிராகளே .17 முறைகள் வந்து கொள்ளையடிக்கும் அளவில் அந்த கோயிலில் என்னதான் இருந்தது.ஒரு படையுடன் வருபவர்க்கு ஒருமுறை கொள்ளையடிக்கவே கோயில் காணாதே ..ஒருவேளை கோயிலையே கொள்ளையடித்து பகுதி பகுதியாக தூக்கி சென்றார்களா?
ஒரு முறை இரண்டு முறைகள் கொள்ளையடித்து போனபிறகாவது கோயில் நிர்வாகிகள் உசாராகி அந்த கோயிலுள்ள விலை மதிப்புள்ள பொருட்களை வேறு எங்காவது கொண்டு பதுக்கி வைத்திருப்பார்களே ,அதை கூட செய்யாமல் 17 முறைகள் வரும்வரை ஏன் இருந்தார்கள்? யார் பதில் சொல்லுவார்?

எந்த ஒரு நாட்டின் மீது போர் தொடுத்தாலும் அந்த நாட்டின் கனிமங்களை கைப்பற்றுவது அந்தக் கால மரபுதான் .ஆனால் ஐநா மூலம் போர் வரம்பு இயற்றிய பின்பும் சட்டங்கள இராக்கை கைப்பற்றி,லிபியாவை கைப்பற்றி எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் ஒபெக்கை ஒழித்து கட்டி அமெரிக்க அடிக்கும் கொள்ளையை யாராவது கொள்ளையடிப்பதாக கூறுகிறார்களா?இராக்கில் குர்துகளை தூண்டிவிட்டு போராடவைத்து பின்னர் குர்துகளை
காப்பற்றவருவது போலவும் லிபியாவில் ஜனநாயகத்தை காப்பாற்றுவது போலவும் வேடமிட்டு அடிக்கும் கொள்ளையை கொள்ளையென்று சொல்வாரில்லை .ஆனால் சோமநாதரை வழிபட சென்ற கஜினியை கொள்ளியடித்ததாக் சொல்லுகிரறாக்கள் .17 முறைகள் ஒருவர் கொள்ளையடிக்க செல்லமாட்டார் .திருசெந்தூர் கோயிலில் வைரவேலை பக்தகோடிகள் கொள்ளையடித்தார்கள் .அதைப்போலவே கஜினியும் அடிக்கடி சோமநாதரை வழிபட சென்று இருப்பார் ஒருமுறை கொள்ளையடித்திருப்பார்.மற்ற 16 முறைகள் வழிபடவே சென்று இருக்க வேண்டும் .

ReplyDelete
Replies

சார்வாகன்December 23, 2012 7:50 PM
சகோ இப்பூ,
//அதைப்போலவே கஜினியும் அடிக்கடி சோமநாதரை வழிபட சென்று இருப்பார்//

எப்புடீ இப்படீ

வாழ்த்துக்கள்!!

நன்றி!!

Reply

Ibrahim SheikmohamedDecember 23, 2012 5:55 PM
சாறு////பாஜக 200 இடங்களில் வென்றால் அப்படித்தானே!!. என்ன்மோ வாய்ப்பே இல்லாத விடயம் போல் பேசுகிறீர்கள்.///

பாஜக அமைச்சர்களில் 7 பேர் தோற்றுள்ளார்கள் .ஆனால் கோத்ரா வுக்கு பின்னர் நடந்த கலவர வழக்கில் தண்டிக்கப்பட்ட தால் ராஜினாம செய்த அம்ரித்சா வெற்றிபெற்றுள்ளார்.புரிகிறதா?மதவாதம் தான் வெற்றி பெற்றுள்ளது .இந்த மதவாதம் குஜராத்தை தாண்ட வாய்ப்பில்லை .அதனால் 200 இடங்கள் எல்லாம் பகல் கனவு .முதலில் பிஜேபி 100 இடங்களை ஜெயிக்கட்டும்.100 க்கு மேல் ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பில்லை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் .குஜராத்தில் 2009இல் கிடைத்த 15 இடங்கள் கூட கிடைக்க வாய்ப்பில்லை .உபியில் இழப்பு ,மத்திய பிரதேசத்தில் இழப்பு காத்திருக்கிறது

///மோடி பிடிகாத நிதிஷ் குமாருக்கு பாஜக பிடிக்குமாம்!!///
பிகார் சட்டசபை தேர்தலில் பிஜேபியுடன் கூட்டணி வைத்திருந்த நிதிஷ்குமார் மோடி பிகாருக்குள் பிரச்சாரம் பண்ண வரக் கூடாது என்று தடுத்த கதை தெரியாதா?

////பாஜக நல்ல கட்சி, மோடி மட்டுமே மோசம் ஹி ஹி

உங்ளுக்கு நல்ல மூளை!!////
நான் அப்படி சொல்லவில்லை .மற்றவர்கள் மூடி வைத்திருந்ததை மோடி திறந்து விட்டார் அவ்வளவே .
///இன்னும் இரு வருடம் இருக்கிறது பார்க்கத்தானே போகிறோம்!!!////
அப்படியா பயமாக இருக்கிறது .மோடி யின் அமைப்பான இந்தியா முஜாஹிதீன் எங்காவது குண்டு வைத்து விடக் கூடாது
////ஏங்க நானா சொல்றேன் நம்ம் சகோ இப்பூ தானே மோடியைத் தவிர அனைவருக்கும் வாய்ப்பு என்கிறார்.////

மோடியின் வெற்றியை வைத்து ஆட்டம் போடாதீர்கள். அதற்கு என்ன விலைகொடுத்து இருக்கிறார்கள் என்பது பிஜெபிக்காரகளுக்கே தெரியும் .பிஜேபி முன்னணியினர் அப்படி ஒரு வாதத்தை இன்னும் ஏற்கவே இல்லை நீவிர் ஏன் துள்ளி குதிக்கிறீர் என்றுதான் கேட்டுள்ளேன்.
////பல தொலைக்காட்சியிலும் சொன்னதை வாய்ப்பு என்ற அளவில் எழுதினேன். இன்னும் இருவருடம் இருக்கிறது. எதுவும் நடக்கும்!!!.////
எந்த தொலைகாட்சியில் என்ன வாய்ப்பை சொன்னார்கள்?


Replies

iTTiAMDecember 23, 2012 6:04 PM
//மேலும் அன்று இரவு வீட்டில் சாப்பிட்டோம் சாப்பிட்ட பிறகு இறைச்சியின் எலும்புகளை எடுத்து தனியாக தாளில் காட்டி வைத்தார் .இதை காலையில் வெளியே கிளம்பும் பொழுது அவுட்டரில் போட வேண்டும் இல்லையெனில் வீட்டு உரிமையாளரிடம் சொல்லி கொடுத்து காலி பண்ணிவிடுவார்கள் இந்த ஏரியாவில் எங்கேயுமே நான் வெஜி சாப்பிடமுடியாது என்றார்.//
ஊரோடு ஒட்ட ஒழுகுதல் என்பதை அவர் மதிக்கிறார் இதில் என்ன குறை கண்டீர்கள்.
முதலில் வீடு தருவதில்லை என குறை கூற வேண்டியது. கிடைத்தபின் அடுத்த பிரச்சினை தொடங்குவது என்று இருந்தால் யார் தாங்குவார்?

//மேலும் முஹம்மதின் படையெடுப்பு இந்து எதிர்ப்பால் அல்ல . அது அந்த காலங்களில் நிகழ்ந்த இரு அரசுக்கெதிரான போராட்டமாகவே பார்க்கப்பட வேண்டும்//
மேற்கண்டது எதன் படி? ஷரியாவின் படியா? அல்லது IPC படியா?
சரி, 1947 ன் ரத்தக் களரியினை எப்படி பார்க்க வேண்டும்.
காஷ்மீர பண்டிட்களின் துரத்தலை எப்படி பார்க்க வேண்டும்?
திரு. A. R. அந்துலே (அப்துல் ரஹ்மான் அந்துலே) அவர்கள் மகாராஷ்டிர முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எப்படி பார்க்க வேண்டும்.?
திரு. Y. சாமுவேல் ராஜசேகர ரெட்டி அவர்கள் ஆந்திர முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எப்படி பார்க்க வேண்டும்.?

//இந்துத்துவம் இல்லையென்றால் மோடி இல்லை . முஸ்லிம் எதிர்ப்பும் மனு தர்மமும்தான் இந்துத்துவத்தின் உயிர்நாடி , அந்த புள்ளியிலிருந்து நீங்கள் மோடியை நோக்குங்கள் மோடி எவ்வளவு அபாயகரமானவர் என்பது புரியும் .//
தங்களின் கூற்று சரி என கொண்டால், இது ஏன் செல்லுபடி ஆகிறது என்று சற்று யோசித்து சொல்லுங்களேன்.

உலகளாவிய கலீஃபா வும், காஃபிர் தூற்றல்களும், மத மாற்றல்களும், அதன் மூலமான ஆட்சியதிகார இச்சைகளும் இல்லையென்றால் _________ன் உயிர்நாடியே இல்லை. அந்த புள்ளியிலிருந்து நோக்குங்கள்.

Reply
Replies

சார்வாகன்December 23, 2012 7:54 PM
சகோ இட்டியம்,
மூமின் என்றால் அப்படித்தான். பாருங்க எல்லாக் குண்டுவெடிப்பையும் இந்துத்வ அமைப்புகள் மேல் சுமத்துகின்றார். திருப்பி நாம் சொன்னாலோ,படத்தில் ஏதேனும் நடந்த விடயம் காட்டினாலோ பொங்கி விடுவார்கள்.

பொறுப்போம்,ம்ம்ம்ம்

வாய்மையே வெல்லும்!!
நன்றி!!

Reply

Ibrahim SheikmohamedDecember 23, 2012 7:15 PM
சாறு //ஆகவே வட இந்தியாவில் முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் எடுபடுகிறது//

குஜராத்தில் மட்டும் .1998 உடன் சரி.இப்போது குஜராத் தவிர மற்ற மாநிலங்கள் ஒருகாலத்திலும் எடுபடாது .குஜராத் மாநில முஸ்லிம்கள் ,தமிழக முஸ்லிம்களைப் போல அன்று .

ReplyDelete

Ibrahim SheikmohamedDecember 23, 2012 7:41 PM
iTTiAM///ஊரோடு ஒட்ட ஒழுகுதல் என்பதை அவர் மதிக்கிறார் இதில் என்ன குறை கண்டீர்கள்.
முதலில் வீடு தருவதில்லை என குறை கூற வேண்டியது. கிடைத்தபின் அடுத்த பிரச்சினை தொடங்குவது என்று இருந்தால் யார் தாங்குவார்?////
முஸ்லிம் ஏரியாக்களில் உள்ளவீடுகளை வாடகைக்கு கொடுத்தால் நீங்கள் நான்வெஜி சாப்பிட வேண்டும் என்றோ பூஜைகள் பண்ணக் கூடாது என்றோ கூற முடியுமா? ஊரோடு ஒட்ட ஒழுகுவார்களா?
/மேலும் முஹம்மதின் படையெடுப்பு இந்து எதிர்ப்பால் அல்ல . அது அந்த காலங்களில் நிகழ்ந்த இரு அரசுக்கெதிரான போராட்டமாகவே பார்க்கப்பட வேண்டும்//
மேற்கண்டது எதன் படி? ஷரியாவின் படியா? அல்லது IPC படியா?

அசோகர் போரிட்டாரே அதன்படி

///சரி, 1947 ன் ரத்தக் களரியினை எப்படி பார்க்க வேண்டும்///.
இந்து முஸ்லிம்களின் வெறியாட்டமாக பார்க்க வேண்டும்

///காஷ்மீர பண்டிட்களின் துரத்தலை எப்படி பார்க்க வேண்டும்?///
காஷ்மீரிகளிடம்தான் கேட்க வேண்டும்.மேலும் இது பற்றி முன்னாள் நீதிபதி தார்குண்டே துக்ளக்கில் முன்பு ஒரு கட்டுரை எழுதியிருந்தார் .அதையும் நீங்கள் படிக்கக் வேண்டும் .

////திரு. A. R. அந்துலே (அப்துல் ரஹ்மான் அந்துலே) அவர்கள் மகாராஷ்டிர முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எப்படி பார்க்க வேண்டும்.?///
காங்கிரஸ் வெற்றி பெற்றால் ,இந்திராகாந்தி அதன் தலைவாராக இருந்தால் யாரை வேண்டுமானாலும் முதல்வாராக நியமிக்கமுடியும் என்ற கோணத்தில் பார்க்க வேண்டும்.
மேலும் அவர் முஸ்லிமாக் இருப்பதால் ஊழல்குற்றசாட்டுகள் நிருபிக்கபப்ட்டு 7ஆண்டுகள் தணடனைகள் பெற்றதையும் நமது முதல்வர் ஜெயலலிதாவை அவர்களை உச்ச்நீதிமன்றம் மன்னித்து விடுவதையும் எப்படிவேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளுங்கள்
////திரு. Y. சாமுவேல் ராஜசேகர ரெட்டி அவர்கள் ஆந்திர முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எப்படி பார்க்க வேண்டும்.?///
ரெட்டி சமூகமாக பார்க்க வேண்டும் .
///தங்களின் கூற்று சரி என கொண்டால், இது ஏன் செல்லுபடி ஆகிறது என்று சற்று யோசித்து சொல்லுங்களேன்.////
குஜராத்தில் மட்டுமே செல்லுபடியாகிறது .அவ்வாறெனில் குஜராத் முஸ்லிம்கள் மற்ற மாநில முஸ்லிம்கள் போலில்லை

ReplyDelete
Replies

சார்வாகன்December 23, 2012 7:58 PM
சகோ இப்பூ,
கலக்குறீங்க!!. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

1. முஸ்லிம்கள் செய்தது,செய்வது,செய்யப் போவது அனைத்துமே உலகில் எபோதும் சரியே!!

2. காஃபிர்கள் சும்மா இருக்க வேண்டும்.

ஹி ஹி இது தெரியாமல் நாங்கள் உளறுகிறோம் சரியா??

நன்றி!!




சனி, 22 டிசம்பர், 2012

சினிமா கூத்தாடிகளின் உண்மை முகம் ஒரு அலசல்

சமுதாயத்திலுள்ள பலதுறைகளில் கடைந்தெடுத்த கடைமட்ட கழிசடை துறைதான் சினிமாத்துறை .இங்கே பொய்,பித்தலாட்டம் ஏமாற்று ,விபச்சாரம் என்று அயோக்கியதனங்களின் அத்தனை சொற்களுக்கும் நேர்முக சாட்சிகளை பார்க்கலாம் .காசு சம்பாதிக்க எதை வேண்டுமானாலும் ,எப்படி வேண்டுமானாலும் செய்ய தயங்க மாட்டார்கள் .சென்சார் எதையெல்லாம் அனுமதிக்குமோ அத்தனையும் செய்ய துணிவார்கள்.சென்சார்போர்டு முழு நிர்வாணத்தையும் அனுமதிக்குமானால் எவ்வித வெட்கமும் இல்லாமல் நிர்வானமாக் காட்சி தர எந்த நடிகரும் நடிகையும் மறுக்கமாட்டார்கள் சமுதாயத்தில் குற்றங்களை கற்று கொடுப்பவர்களே இவர்கள்தான் .குற்றங்களை ,தப்பு தண்டவாளங்களை ,பாவங்களை எப்படி செய்ய வேண்டும், எங்ஙனம் திறம்பட செய்ய வேண்டும்?எங்ஙனம் எளிதாக செய்ய வேண்டும் என்பதையெல்லாம் இளைஞர்களுக்கு கற்றுகொடுத்து சமுதாயத்தை சீரழிப்பதில் முன்னோடிதான் சினிமா .

ஒரு சர்வேயில் சமுதாயத்தை சீரமைக்க தகுந்தவர்கள் யார் என்பதில்சினிமா கதாநாயகர்களே முதலிடம் வகித்தார்கள்.காரணம் என்னவெனில் ,இவர்கள் தொடர்ந்து நல்லவர்களாக நடிப்பதுதான் .ஒருவன் நல்லவனாக நடிக்கிறான் என்றால் அவன் கெட்டவன் என்றே பொருள் .ஏனெனில் நல்லவன் நல்லவனாக நடிக்க வேண்டிய அவசியமில்லை .மக்களை ஏமாற்றி திட்டமிட்டு அரசியலில் சமுதாயத்தில் புகழ் பெறவே தங்களது கேறேக்டர்களை சிறு பழுது கூட வராமல் பார்த்துக் கொள்கிறார்கள் .இந்த கதாநாயகன் போலிசாக நடித்தால் அவரை பரிசுத்த போலிசாக காட்டுவார்கள்.மற்ற அரசியல்வாதிகளை ,மேலும் மற்ற அனைத்து துறையினரையும் அயோக்கியர்களாக காட்டுவார்கள் .கதாநாயக போலீஸ்காரன் தான் அனைத்து குற்றவாளிகளையும் எதிர்த்து போராடி மக்களை காப்பாற்றியதாக காட்டுவார்கள்.கதாநாயகன் திருடனாகவோ ,ரவுடியாகவோ நடித்தால் அந்த ரவுடி யை நல்லவனாக் காட்டுவார்கள் .ரவுடி கதாநாயகன் மக்களுக்காக தனது ரவுடியிசத்தை காட்டி போராடுவது போலவும் போலிஸ்காரர்கள் ,அரசியல்வாதிகள் ,கதாநாயகின் அப்பாவான  தொழில் அதிபர் உட்பட அனைவரும் அயோக்கியர்களாக காட்டுவார்கள் .இந்த ரவுடி கதாநாயகனே வென்று மக்களுக்கு உதவுவதாக காட்டுவார்கள் கதாநாயகன் தொழிலாளியாக நடித்தால் தொழிலாளியை நல்லவனாகவும் தொழில் அதிபரை மற்றும் அதை சார்ந்த துறையினரை கொடுமைக்காரர்களாக காட்டுவார்கள். கதாநாயகன் தொழிற்சாலை உரிமையாளராக இருந்தால் தொழில் அதிபர் நல்லவராகவும் தொழிலாளிகள் அவருக்கு தொந்தரவு கொடுப்பவர்களாக வும் காட்டுவார்கள்.
இந்த கதாநாயகர்கள் தீ பிடித்த கட்டிடத்திற்குள் குதித்து அதனால் புகுந்து ஒருவரே கட்டிடத்திற்குள் உள்ள அனைவரையும் காப்பாற்றுவார்கள் .இதைப் பார்த்தே அவனுக்கு ரசிகனாக மாறி போஸ்டர் ஒட்டுவான் ,ஓட்டு போடுவான் .ஆனால் இவர்கள் அனைவரும் இருக்கும் சென்னையில் எத்தனை தடவைகள் தீப் பிடித்தும் எந்த கதாநாயகனும் தீயணைந்த பிறகு கூட வரமாட்டான்.இது மட்டுமா? அரசு துறைகளும் போலியோ சொட்டு மருந்து இவர்கள் சொன்னால்தான் குழந்தைக்கு ஊட்டுவார்கள் இல்லையெனில் அந்த குழந்தைகளுக்கு இளம்பிள்ளை வாதம்  வந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பது போல இவர்களை வைத்து விளம்பரம் செய்கிறார்கள் .ஊடாக சிகாமணிகளும் இவர்களைப் பற்றிய செய்திகள் இல்லைஎன்றால் மக்கள் பத்திரிக்கை வாசிப்பதையும் டிவி பார்ப்பதையும் நிறுத்தி விடுவது போல அவர்கள் திருமணத்தில் கட்டிய சேலை யின் நிறம் முதல் கொழு ,கொழு குழந்தை பிறந்தது வரை செய்திகள் சேகரித்து மக்களின் தகவல் தாகத்தை தீர்த்து வைப்பதில் முனைப்பு காட்டுவார்கள்.சினிமாக்காரர்களை வைத்து திறந்த எத்தனையோ கடைகள் மூடிவிட்டார்கள் .ஆனால் தரம் ,நியாய விலைகளில் வர்த்தகம் பண்ணும் மதார்சா ,ஆரெம்கேவி ,கடைகள் சந்தையில் நிலைத்து நிற்கின்றன.இவ்வாறு பலதுறையினரும் சினிமாக்காரர்களை உயர்த்தி பிடித்து சமுதாயத்தில் அவர்களுக்கு ஒரு உயர்ந்த அந்தஸ்தை கொடுத்துவிடுகிறார்கள் 
ஆனால்  இவர்கள் யார் என்பதை ,எத்தனை பெரிய கொடுமையான அயோக்கியர்கள் என்பதை 1989,அல்லது 1990 உள்ள குமுதம் வார ஏடுவில் ,ஒரு நடிகையின்கதை என்ற பெயரிலே அந்த நடிகையின் உதவியோடு ஸ்ரீனிவாசலு என்பவர் இவர்களை  தோலுரித்து காட்டினார் .பல உண்மைகளை வெளிப்படுத்தினார்ர். அந்தகால பிரபல நடிகையின்பேரில் கோவையில் தியேட்டர் வந்த கதை முதல் தன்னையும் தனது அம்மாவையும் ஒரே நேரத்தில் படுக்கையில் அனுபவித்த ஒரு மிருகத்தையும் பற்றி ,அவர் யார் என்பதை சினிமா ரசிகர்களுக்கு புரியும்படி சங்கேத வார்த்தைகளை கூறி எழுதினார்.அரண்டுபோன சினிமா உலகம் அப்போதைய நடிகர் சங்கத்தலைவர் ராதரவியுடன் குமுதம் அலுவலகத்தை தாக்கினார்கள் .அப்போது கலையுலக பிதாமகன் கருணாநிதி ஆட்சி என்பதால் அவர் தலையிட்டு குமுதத்தில் அத்தொடரை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டார்.ஸ்ரீனிவாசலு வும் எச்சரிக்கையுடன் அத்தொடரை நிறுத்தினார்.
இப்படி இவர்களைப் பற்றி உண்மையை சொன்னால்அக்ரோசப்பட்டு வன்முறையில் இறங்கிய சினிமா கூத்தாடிகள் முஸ்லிம்களைப் பற்றி தீவிரவாதியாக காட்டி இவர்களை தேச பக்தர்களாக இமேஜை உயர்த்துகிறார்கள் .தனது  அசல் வருமானத்தில் நூறில் ஒரு பங்கை கூட வருமானமாக காட்டமல் வருமான வரி கட்டாமல் வரி ஏய்ப்பு  செய்யும் இந்த எத்தர்கள் தேசிய கொடிக்காக் உயிரையும் துச்சமனே மதித்து காப்பாற்றுவது போல நடிப்பார்கள் .
அறுபது வயதை தாண்டிய பிறகும் அரைகுறை ஆடையுடன் வரும் 14 வயது பெண்ணுடன் காதல் வசனம் பேசுவது முதல் ஜட்டியுடன் காட்சிதருவார்கள் .முதலிரவு காட்சிகளில் கட்டிபிடித்து புரள்வார்கள் .கட்டிய மனைவியுடன் ரோட்டில் கைபிடித்து செல்லவே 95 %தமிழர்கள் வெட்கப்படுவார்கள் .ஆனால் இவர்களோ பலர் மத்தியில் படமெடுக்கப்படும் நிலையில் ,கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் தாரளமாக ,கட்டிய மனைவி பெற்ற பிள்ளைகள் ரசிக்க அந்நிய இளம் பெண்களுடன் படுக்கையறை காட்சிகளில் கட்டி புரள்வார்கள்..அந்த படத்தை தனது மகள் ,மகன் பேத்தி எல்லாம் பார்ப்பார்களே என்று வெட்கம் அற்ற மிருக ஜென்மங்கள் .
இவர்களுக்கு அத்தனை அரசியல்வாதிகளும் ஊதுகுழல்களாக செயல்படுகிறார்களே ஒழிய இவர்களைப் பற்றி விமர்சிக்கவே பயப்படுகிறார்கள் .
மிகவும் கேவலமான இந்த அயோக்கிய கூட்டம் தங்களுக்கு என்று தனி இமேஜை உருவாக்கி ,அதை மக்கள் நம்பும் வண்ணம் திரையில்  நல்லவர்களாக நடித்து வருகிறர்கள் .ஆனால் அவர்களது சுயரூபமோ முற்றிலும் திரைக்கு மாற்றாமாக் உள்ளது .இதில் எந்த முன்னாள் கதாநாயகர்களும் ,நாயகிகளும் இந்நாள் கதாநாயகர்களும் நாயகிகளும் விதிவிலக்கில்லை .குமுதத்தில் தொடர் எழுதிய 
ஸ்ரீனிவாசலு வைப்போல இவர்களது சுயரூபங்களை மக்கள் தோலுரித்து காட்டும் வண்ணம் டிவி சீரியல் 
தயார் செய்யப்பட வேண்டும் .முள்ளை ,முள்ளால் அகற்ற முயற்சிக்க வேண்டும் .

திங்கள், 17 டிசம்பர், 2012

எய்ட்ஸ்க்கு மருந்து தேவை இல்லை


சார்வாகன்
தங்கள் கூட்டம் விவேகானந்தரை முழுமையாகப் படிக்கவில்லை என்று தெரிகிறது. தாங்கள் கடவுள் உண்டா? பார்த்தவர்கள் இருக்கிறார்களா? என்று தேடி அலைந்ததுண்டா? அப்படி அலைந்து யாராலும் கடவுளைக் காட்ட முடியாதபோது ராமகிருஷ்ணர் அவருக்கு கடவுளைக் காட்டுகிறேன் என்று அவருக்கு வழிகாட்டியதனால் அவரை உலகம் போற்றும் அளவிற்கு உயர்ந்துள்ளார். சார்வாகனை இன்டர்நெட்டில் எத்தனை லட்சம் மக்கள் அறிவார்களோ தெரியாது. அவருடைய ஆற்றலைப் பாருங்கள். துப்பாக்கியையே தொட்டுப்பார்க்காதவர் தண்ணீரில் ஓடும் முட்டை ஓடுகளை மிகச் சரியாக சுடுகிறார். தன்னைச் சுற்றி துப்பாக்கி குண்டுகள் வந்தாலும் தியானத்தில் அசையாமல் இருக்கிறார். ஒரு என்சைக்ளோபீடியா புத்தகத்தை சில நிமிடங்களில் படித்துவிடுகிறார். இன்றும் இமயமலையில் ஏராளமான சன்யாசிகள் உடலில் ஆடையின்றி தவம்புரிகின்றனர். ஆண்டிபட்டி சாமி என்பவர் தேனி அருகில் நாழிமலையை சுற்றி கிரிவலம் செல்ல சாலை அமைத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய உடை கோவணம் மட்டுமே. உங்கள் கூட்டத்தாரில் எவருக்கேனும் தீராத வியாதி இருந்தால் அவரிடம் போய் தீர்த்துக்கொள்ளலாம். சதுரகிரி மலையில் ஒரு சன்யாசி வருகின்றவர்களுக்கு அன்னதானம் செய்து கொண்டிருக்கிறார். திருவண்ணாமலையிலும் சடைசாமி என்பவர் அன்னதானம் செய்கிறார். அவர்களைப் போன்றவர்கள் செய்வதில் உங்களால் ஒரு நூற்றில் ஒரு பங்கு செய்ய முடியாது. இதுபோல் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். நமக்குத் தெரியவில்லை. ஹரித்வாரில் சிவானந்தா ஆசிரமத்தில் முன்கூட்டியே பதிவு செய்து கொண்டால் 3 நாட்கள் உணவுடன் தங்கிக்கொள்ளலாம். தவறு செய்பவர்களின் தவறுகளைத் திருத்த நாம் கட்டுரைகள் வெளியிடலாம். ஆனால் நாத்திகம் வெத்துவேட்டு என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.



/////ஆண்டிபட்டி சாமி என்பவர் தேனி அருகில் நாழிமலையை சுற்றி கிரிவலம் செல்ல சாலை அமைத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய உடை கோவணம் மட்டுமே. உங்கள் கூட்டத்தாரில் எவருக்கேனும் தீராத வியாதி இருந்தால் அவரிடம் போய் தீர்த்துக்கொள்ளலாம்.////

தீராத வியாதிகளை தீர்த்து வைக்கும் இந்த சாமியை மக்களிடம் கொஞ்சம் விளம்பர படுத்தினால் என்ன?ராஜா, எத்தனை எளிய மக்கள் பணம் பிடுங்கி தனியார் மருத்துமனைகளில் படாதபாடுபடுகிறார்கள் .ஏன் இது மக்களுக்கு தெரியாமல் இல்லை.மீனாட்சி மிசன் மருத்துமனை கூட்டம் அப்படியே அங்கெ திரும்பியிருக்குமே !அது ஏன் இன்றும் நடக்கவில்லை?

சகோ இப்பூ,கலக்குறீங்க இருந்தாலும் நபி(சல்) சொல்வதை பின்பற்ற‌ மறுப்பதே நமது வருத்தம்




    1. 1. எய்ட்சுக்கு மருந்து
      5688. அபூ ஹுரைரா(ரலி) கூறினார் 
      இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'கருஞ்சீரக விதைiயில் 'சாமைத்' தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது' என்று கூறினார்கள். 
      இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள்: 
      'சாம்' என்றால் 'மரணம்' என்று பொருள். 'அல்ஹப்பத்துஸ் ஸவ்தா' என்றால், (பாரசீகத்தில்) 'ஷூனீஸ்' (கருஞ்சீரகம்) என்று பொருள். 
      Volume :6 Book :76

      2. மதினாவின் சிறப்பு

      பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7133 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
      மதீனாவின் தெருக்களில் வானவர்கள் (காவலுக்கு) இருப்பார்கள். அதில் கொள்ளை நோய் நுழையாது; தஜ்ஜாலும் நுழைய மாட்டான்.
      என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

      மதினாவில் மருத்துவரே தேவையில்லை!!!
      இறைவன் மிக பெரியவன்!!!!!!!!!
      நன்றி!!!!
  1. வணக்கம் சகோ.

    ஆன்மீகத்தை பற்றிய நல்ல‌ அலசல் பதிவிட்டுள்ளீர்கள் இதைப்பார்த்தாவது சாமியார்களின் உள் நோக்கங்களை பக்தர்கள் உணர்ந்து கொண்டால் சரியே!நான் தான் கடவுள்,தூதர், அவதாரம்,செவி வழிச் செய்தி,மாயாஜால வித்தைகள் போன்ற மோசடி வழிகளில் சிக்க வைத்து, மனிதர்களை மயக்க நிலையிலேயே மரணம் வரை தொடரும் இந்த அவலம் யாவும் கட்டுக் கதைகள் என்பதை இந்த சமுதாயம் உணரவேண்டும். அதற்கான உந்துதல் தங்களைப் போன்ற பொதுப் பார்வைப் பதிவர்களினால் தான் சாத்தியப்படும்.அதற்காக என் நன்றிகள்..

    //யாராலும் கடவுளைக் காட்ட முடியாதபோது ராமகிருஷ்ணர் அவருக்கு கடவுளைக் காட்டுகிறேன் என்று அவருக்கு வழிகாட்டியதனால் அவரை உலகம் போற்றும் அளவிற்கு உயர்ந்துள்ளார.//

    ராஜா நல்ல நகைச்சுவய் ஒன்றை உதிர்த்துள்ளார் பாருங்கள். எந்தக் கடவுள் என்று சொல்லாமல் பொதுவாக சொல்லி தப்பித்துக் கொண்டார்.இஸ்லாமில் கடவுளை யாராலும் பார்க்க முடியாது.இயேசு வேறு உயிரோடிருக்கிறாராம்.யார் கடவுள்???
  2. //2. மதினாவின் சிறப்பு

    பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7133 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
    மதீனாவின் தெருக்களில் வானவர்கள் (காவலுக்கு) இருப்பார்கள். அதில் கொள்ளை நோய் நுழையாது; தஜ்ஜாலும் நுழைய மாட்டான்.
    என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

    மதினாவில் மருத்துவரே தேவையில்லை!!!
    இறைவன் மிக பெரியவன்!!!!!!!!! ந‌ன்றி ச‌கோ....

    ம‌தினா மூமின்க‌ள் யாரும் இனி த‌டுப்பூசி போட்டுக் கொள்ளாம‌ல் வான‌வ‌ர்க‌ளை ந‌ம்பி இருப்பார்க‌ளாக‌ ஆமீன்!!!!!!!!!
    Reply
  3. முஹம்மது நபி[ஸல்] அவர்கள் , காலத்தில் இருந்த அனைத்து நோய்களுக்கும் மருந்து உள்ளதாக கூறியுள்ளார்கள் .இனி வரும் காலத்தில் உள்ள நோய்களுக்கும் மருந்து இதுதான் என்று சொல்லவில்லை .அவர்கள் காலத்தில் எய்ட்ஸ் இல்லை .அதனால் அதற்கு மருந்து தேவையும் இல்லை. மேலும் அனைத்து நோய்களுக்கும் மருந்து உள்ளது என்பதை இங்கு ஆலோசனையாகத்தான் சொல்லுகிறார்கள் .அதுவே தீர்வு என்று சொல்லவில்லை .இன்னும் எய்ட்ஸ் நோய் அவன் விபச்சாரம் செய்ததற்கு ஒரு சாட்சியாகும் .அதனால் எய்ட்ஸ்க்கு மருந்து தேவை இல்லை அவனது விபச்சார குற்றத்திற்கு மரண தணடனைவுள்ளதால் வைத்தியம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

    மதினாவில் கொள்ளை நோய் என்று சொல்லப்படுவது காலரா .அந்த நோய்அந்த ஹதித் சொல்லப்பட்ட காலத்தில்  அங்கு அப்போதைய கட்டத்தில் வராது என்று மட்டுமே ஹதித் சொல்லியிருக்கிறது .அதனால் அவற்றினை திரித்து புளகாங்கிதம் அடையவேண்டாம்

திங்கள், 10 டிசம்பர், 2012

மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்


Sunday, December 09, 2012


அரைகுறை ஆடையுடன் கூடிய மேற்கத்திய வாழ்க்கைதான் சுதந்திரத்தின் அடையாளம் என்று நான் வாழ்ந்த போது உணராத சுதந்திரமும் சமுகத்தில் எனக்கு கிடைக்காத அங்கீகாரமும் இன்று ஹிஜாபின் மூலமே எனக்கு கிடைத்தது. ஒரு முன்னாள் முஸ்லீம் அல்லாத பெண் என்கிற அனுபவத்தில் சொல்கிறேன் , ஹிஜாப் பெண்ணுரிமையின் அடையாளம்,சம நீதியின் குறியீடும், பெண் விடுதலையின் புதிய குறியீடும் நிகாப்தான் என்பதை அனைத்து பெண்களும் உணர வேண்டும்.ஹிஜாப் என் வாழ்கையில் ஏற்படுத்திய அமைதி மற்றும் மகிழ்ச்சியை போன்றே எல்லா பெண்களின் வாழ்விலும் கொண்டுவரும் என்பதில் சந்தேகம் இல்லை. - சாரா போக்கர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

ஹிஜாபின் பெருமை உலகெங்கிலும் பரவி வருகிறது.இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டும் வருகிறது .. முஸ்லிம் மக்கள் ஹிஜாப் பேணுவதில் எந்த பெருமையும் இல்லை.. மேற்குலக நாகரிகத்தில் மூழ்கிப் போன மாற்று மத சகோதரிகள் அதை உணர்ந்து அதன் பெருமையைச் சொல்லும் போது தான் அதன் மேன்மை புரிகிறது. இஸ்லாமிய பெண்களாகிய நாங்கள் அதை பற்றி பெருமிதமாக சொல்வதை விட முஸ்லிம்களை ஒடுக்க நினைக்கும் நாட்டில் இருந்து கொண்டு,மேற்கத்திய ஆடைகுறைப்பு நாகரிகத்தில் ஊறி திளைத்த ஒரு பெண் ஹிஜாப் மற்றும் குர்ஆனின் பெருமையைக் கூறும் பொழுது நமக்கு மெய் சிலிர்க்கவே செய்கிறது .. 


சாராபோக்கர்!

 மேலை நாட்டு கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்து ஒரு கால கட்டத்தில் இஸ்லாத்தை புரிந்து கொண்டு , ஹிஜாபின் பெருமை உணர்ந்து அல்லாஹ்வின் வழி காட்டலில்இன்று முஸ்லிம்மாக  வாழ்ந்து வரும் மாடல் அழகி இவர்! 

ஆரம்பகாலத்தில்: 
அமெரிக்காவின் நடுப்பகுதியில் பிறந்து, வளர்ந்த ஒரு அமெரிக்க பெண் . மற்ற பெண்கள் போலவே அந்த பெரிய நகரத்திற்கு உண்டான ஆடம்பர வாழ்க்கை முறையிலேயே வளர்ந்தார். ஒரு கட்டத்தில் , பகட்டு வாழ்க்கை முறைக்கு பெயர் போன புளோரிடா, மியாமி தென் கடற்கரை பகுதிக்கு நான் குடி பெயர்ந்தார். ஆரம்பத்தில் மேற்கத்திய பெண்களின் சராசரி மனநிலையே இவருக்கும் இருந்தது.பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் உடைகள் மற்றும் அலங்கார அணிகலன்கள் அணிவதும் அடுத்தவர் தம்மை கவுரமாக நினைப்பதே வாழ்க்கையின் அந்தஸ்து என்றும் எண்ணம் கொண்டிருந்தார். தனது கடுமையான உழைப்பின் மூலம் தனி நபர் பயிற்சியாளர் என்ற தகுதிக்கு தன்னை உயர்த்திகொண்டதோடு கடற்கரை ஒட்டி ஒரு வீடும் சொந்தமாக  வாங்கும் அளவுக்கு பொருளாதார அளவில் உயர்ந்த நிலையிலும் நாகரீக வாழ்க்கை வாழும் ஒரு பெண்மணியாக தன்னை ஆக்கினார்!

ஆண்டுகள் உருண்டோட ஆரம்பித்தது! பெண் அடிமைத்தனத்தை எதிர்க்கிறேன் பேர்விழி என்று உருவெடுத்த சாராவிற்கு வாழ்கைத்தரம் உயர்ந்த  அளவுக்கு வாழ்க்கையில் நிம்மதியும், சந்தோஷமும் உயரவில்லை.. மாறாக குறைந்து கொண்டே வந்ததை உணர ஆரம்பித்தார். தன் வாழ்க்கை முறை மற்றும் மனநிம்மதிக்கும் இடையேயான இடைவேளை அதிகமாகி கொண்டே போவதை உணரஆரம்பித்தார். போதை மற்றும் பார்ட்டிகளுக்கு அடிமையாய் இருந்த சாரா அவற்றில் இருந்து விடுபடவேண்டி தியானம், சேவை மற்றும் மத ரீதியான காரியங்களில் ஈடுபட தொடங்கினார்.ஆனால் அனைத்து வழிமுறைகளும் ஒரு தற்காலிக வலி நிவாரணியாக இருந்ததே தவிர அவருக்கு நிரந்தர தீர்வேதுவும் கொடுக்கவில்லை!

பெண்ணியம்,பெண் சுதந்திரம் மற்றும் புதிய உலகம் உருவாக வேண்டும் என்று கருத்துகளோடு உலாவி கொண்டு இருந்த சாராவிற்கு அதே எண்ணத்துடன் ஒத்துப்போகக்கூடிய  பொதுவுடைமை மற்றும் சுயமரிதை தொடர்பாக போராடி வரும் ஒரு நண்பரின் அறிமுகம் கிடைத்தது. அந்த கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு அவருடன் இணைந்து சாரா செயல்பட ஆரம்பித்தார். தான் இணைந்த புதிய இயக்கம் அவருக்கு வித்தியாசமாக இருந்தது! ஒரு சிறிய வட்டத்திற்குள் பெண்ணியம் பெண் உரிமை என்று இருந்த சாராவிற்கு சுதந்திரம், நீதி, சுயமரியாதை எல்லாம்  அனைத்து மக்களுக்கும் சமமானது என்றும் மக்கள் அனைவரும் சமமே முதன்முறையாக உணர ஆரம்பித்தார். 

மாற்றம் நிகழ்ந்த தருணம்:
அக்காலகட்டத்தில் தான் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்தது! மேற்கத்திய நாடுகளில் எதிர்மறையான கருத்துக்கள் கொண்ட ஒரு நூல் என்று சொல்லப்படக்கூடிய நூலை தற்செயலாக ஒரு நாள் படிக்க நேர்ந்தது. ஆம் குர்ஆன் தான் அது! அது வரை இஸ்லாம் என்றால் மனைவியை அடித்து கொடுமைபடுத்தும் பழக்கம்,வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்ட பெண்கள்,பயங்கரவாதம் மட்டுமே இஸ்லாம் என்று நினைத்துக்கொண்டிருந்த அவர் எண்ணத்தை அடியோடு மாற்றியது குர்ஆன்! குரானை படிக்க படிக்க அதன் பாணி, எழுதப்பட்ட விதம் மற்றும் அணுகுமுறை ஆகியவை சாராவை அதிகம் ஈர்த்தது!! படைக்கபட்டவை மற்றும் படைப்பாளிக்கான உறவை அதில் சொல்லி இருந்த விதம் சாராவை மிகவும் கவர்ந்தது.

குர் ஆன் முதன் முதலாக படித்தபோது அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை இவ்வாறு விவரிக்கிறார்: 
எந்த விதமான மொழிபெயர்ப்பும் தேவை இல்லாமல் எளிமையாக படிக்கும் வண்ணம் இருந்த குரான் என் இதயம் மற்றும் ஆன்மாவிற்கு மிகவும் நெருக்கமான முகவரியை எனக்கு கொடுத்தது.. இறுதியில் அந்த ஒரு கணத்தில் குர்ஆன் என்னை பார்த்ததன் உண்மையை உணர்தேன். தன்நம்பிக்கை மற்றும் நிறைவான வாழ்க்கை வாழ ஒரு முஸ்லிமாக மாற முடிவெடுத்தேன்.
ஆம்... சாரா தன் இரத்தத்திலேயே ஊறிய மேற்கத்திய கலாச்சாரத்தை தூக்கி எறிந்துவிட்டு ஒரு முஸ்லிம்மாக மாற முடிவெடுத்தார். உடனே அழகான நீண்ட உடையையும் தலையை மறைக்கும் விதமான ஸ்கார்ப்பும் வாங்கிக்கொண்டார். மேற்கத்திய பெண் என்ற ரீதியில் எந்த வீதியில் அரைகுறை ஆடைகளுடன் நடமாடினாரோ அதே தெருவில் தலையில் இருந்து கால் வரை மறைக்கும் விதமாக இருக்கும் ஹிஜாப் அணித்துச் செல்ல தொடங்கினார். அந்த அனுபவத்தை பற்றி சாரா குறிப்பிடுகையில் :பழகிய முகங்கள் ,பழகிய கடை வீதி என்றாலும் ஹிஜாப் அணிந்து நடமாடும் போது முதன்முறையாக மனதினில் தெம்பும் ,நிம்மதியும் ,தன்னிறைவும் பெற்ற ஒரு உணர்வு நிகழ்ந்தது என்னுள்.! தடைகள் தகர்ந்து புதிய உலகிற்குள் நுழைந்த சுதந்திர உணர்வை பெற்றேன்.வேட்டைக்கான இரையை போன்று ஒரு காலத்தில் பார்க்கப்பட்ட நான் இன்று இந்த சமுதாயம் முற்றிலும் புதிய கோணத்தில் என்னை பார்ப்பதை உணர்ந்தேன். என் தோள்களில் இருந்து மிக பெரிய பாரம் இறக்கி வைக்கப்பட்டது போன்று உணர்ந்தேன்.வேலை, ஷாப்பிங், ஒப்பனை என்று கழிந்த என் வாழ்க்கை இப்பொழுது சரியான திசையை நோக்கி செல்வதை உணர்ந்தேன்.இஸ்லாம் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான மார்க்கமாக உணர்ந்தேன். 

இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாயக்கொண்டு, ஹிஜாப்பை தன் உரிமையாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்த சாரா திருமணம் செய்ததும் ஒரு முஸ்லீம்மை தான்! நிகாப்(முகத்தை முழுமையாக மூடும் துணி) போடும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போன போது அதைபற்றிய ஆர்வம் அதிகரித்தது சாராவிற்கு! தான் ஏற்கெனவே அணிந்து கொண்டிருந்த ஹிஜாப் இல் இருந்தால் போதுமா, அல்லது நிகாப் அணிய வேண்டுமா என தன் கணவரிடம் ஆர்வமாய் கேட்க ஹிஜாப் அணிவது கடமை என்றும், நிகாப் அவரவரின் தனிபட்ட விருப்பம் என்றும் அவர் கூறினார். ஆனாலும் சாரா விடவில்லை..ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, நிகாப் அணிய ஆசையாக உள்ளதாக மீண்டும் தன்கணவரிடம் சொன்னார். அதோடு, அதிக அடக்கமாக இருப்பதனால் என் மன நிம்மதியையும் அது அதிகப்படுத்தும் என்றும் அவரிடம் கூறிகிறார். சாராவின் ஆர்வத்தை கண்டு கணவர் தன் மனையின் முடிவை ஆதரித்தார். 'இஸ்தால்' என்று சொல்லப் பட்ட ஒரு தளர்ச்சியான, தலை முதல் கால்வரை மூடும் ஒரு கருப்பு கவுனையும், கண்களைத் தவிர தலையையும் முகத்தையும் முழுமையாக மூடும் நிகாபையும் வாங்கிக் கொடுத்தார். 

வெகு விரைவில் சில அரசியல்வாதிகள்,கத்தோலிக்க பாதிரிகள் மற்றும் ,மனித உரிமை போராளிகள் என்று சொல்லிகொள்பவர்களிடமிருந்து ஹிஜாப் 
பெண்ணடிமைத்தனத்தின் அறிகுறி என்றும் ,முன்னேற்றத்துக்கான தடை என்றும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அந்த வேளையில் ஒரு எகிப்திய அதிகாரி ஹிஜாப் பிற்போக்கு சிந்தனையின் அடையாளம் என்றும் குறிப்பிட்டார்.
அந்த தருணத்தை பற்றி சாரா குறிப்பிடுகையில் :  
பெண்களுக்கு என்று பிரத்தியோகமான உடை மற்றும் சட்டங்கள் திணிக்கும் சில அரசாங்கள் இருக்கும் போது அதை எதிர்க்கவேண்டியவர்கள் எதிர்ப்பதில்லை! ஆனால் உண்மையான உரிமைகளான வேலை, கல்வி போன்ற எத்தனையோ துறைகளில் பெண்கள் பின்தங்கி இருக்கும் போது ,அதை எல்லாம் விட்டு விட்டு ஹிஜாபை கையில் எடுத்து கொண்டு பெண் விடுதலைகளுக்கு போராடுகிறோம் பேர்விழி என்று கூறிக்கொள்ளும் சில கையாலாகதவர்களின் வேற்று கூச்சலாகவே என்னால் இதை பார்க்க முடிந்தது. நல்ல கட்டளைகளை நிறைவேற்றவும் எந்த தீயசக்திகளுக்கு எதிராகவும் நீதி நெறியினை நிலைநாட்டவும் ஹிஜாப் தான் சரியான வழி. ஹிஜாப் அடிமைத்தனத்தின் அடையாளம் அல்ல அது முஸ்லிம் பெண்களின் உரிமை,சுதந்திரம் மற்றும் ,பாதுகாப்பின் குறியீடு என்று உணர வேண்டும்.
தன் கவர்ச்சியான உடையையும் , மேற்கத்திய போலி வாழ்க்கை முறையையும் கழற்றி எறிந்து விட்ட சாரா, படைத்தவனோடு நிம்மதியாக இருப்பதிலும், சுயமரியாதையும் கண்ணியமும் உள்ள ஒரு பெண்ணாக தன்னைச் சுற்றியிருப்பவர்களோடு வாழ்வதிலும்தான் அதிக சந்தோசமிருக்கிறதென்றும் அதனால்தான் நிகாப் அணிவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதாகவும், தன்னை விட்டுப் பிரிக்க முடியாத அதை அணியும் உரிமைக்காக உயிரை விடவும் செய்வேனென்றும் கூறுகிறார். மாஷா அல்லாஹ்...

சாரா ஹிஜாப் எதிர்ப்பாளர்களுக்கு சொன்ன பதில் இஸ்லாத்தின் கொள்கை மீதான அவரின் அசைக்க முடியாத நம்பிக்கையை காட்டுவதாக அமைந்துள்ளது.  
"நாகரீக மோகத்தில் ஹிஜாபை இழிவுபடுத்துபவர்களுக்கும் அதனை புறக்கணிப்பவர்களுக்கும் நான் கூற விரும்புவது ஒன்று தான்! நீங்கள் உங்கள் அறியாமையினால் எதை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணராமலே இழந்து கொண்டிருகிறீர்கள்"

தன்னை சார்ந்த சமூகத்திற்கு ஒரு நல்ல முஸ்லிம் பெண்ணா இருப்பதற்கும் ,கணவனுக்கு உறுதுணையாய் நிற்கும் ஒரு முஸ்லிம் மனைவியாக இருப்பதற்கும், மேலும் தன் குழைந்தைகளை இஸ்லாம் நெறிமுறையில் வளர்த்து வருங்கால மனிதகுலத்திற்கு ஒளி வீசும் ஒளிகீற்றுகளாய் வளர்ப்பதற்கும் தன்னால் ஆனதை முஸ்லீம் பெண்களுக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறார். 

இஸ்லாமிய வாழ்வியல் நெறியோடு முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை வாழ்ந்து, இப்போது இஸ்லாம் காட்டித்தந்த அழகான பாதையில் பயணிக்கும் சாரா தற்சமயம்   "த மார்ச் பார் ஜஸ்டிஸ்" என்ற மனித மற்றும் சிவில் உரிமைகள் இயக்கத்தின் தகவல் தொடர்பு இயக்குனராக உள்ளார். மேலும் "த குளோபள் சிஸ்டர்ஸ் நெட்வொர்க்" கின் துணை நிறுவனராகவும், புகழ்பெற்ற "ஷாக் அன்ட் ஏவ் கேலரி" யின் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அல்ஹம்துலில்லாஹ்.  அல்லாஹ் அவரின் முந்தைய பாவங்களை மன்னித்து , இம்மையிலும்  மறுமையிலும் வெற்றிகளை வழங்குவானாக. ஆமீன்
"எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கமுடையவராக ஆக்கிவிடுகிறான்"
reference:  The New Symbol of Women's Liberation 
த மார்ச் பார் ஜஸ்டிஸ் பற்றி அறிய  click
'Shock and Awe' Gallery காண click
நன்றி ;இஸ்லாமிய பெண்மணி 

வெள்ளி, 7 டிசம்பர், 2012

காங் ஐ விட பாஜக மிகப்பெரிய சாத்தான் ..! எடியூரப்பாவே தான் சொல்கிறார்..!


காங் ஐ விட பாஜக மிகப்பெரிய சாத்தான் ..! எடியூரப்பாவே தான் சொல்கிறார்..! 
 
முன்னாள் கர்நாடக முதல்வரும், கர்நாடக மாநில பாஜக வின் தலைவரும் ஆன எடியூரப்பா தான் இவ்வாறு கூறியுள்ளார். பெங்களூருவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எடியூரப்பா, காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தள கட்சிகளை விட மிகப்பெரிய சாத்தான் பாஜக தான், இது நூறு சதவீதம் உண்மை என்றார்.மேலும் கூறுகையில்,
 
மாநில கட்சியாக கர்நாடக ஜனதா என்ற கட்சியை தொடங்கி, தமிழ்நாட்டின் கருணாநிதியைப் போல, உத்திரப்பிரதேச முலாம்சிங் போல வருவேன் என்றார்.கர்நாடக மாநிலத்தில் அர்ஸ், நிஜலிங்கப்பா, ஹெக்டே, பங்காரப்பா போன்றவர்கள் ஏற்படுத்த தவறிய மாநில கட்சியை உருவாக்குவேன் என்றார்.அது அவரின் விருப்பம் நடக்கிறதா நடக்குமா என்பதை போகப் போக தெரிந்து கொள்ளலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
 
தனது 20 வது வயதில் ஆர்.எஸ்.எஸ்.- ல்  இணைந்து, அங்கு  பயிற்றுவிக்கப்பட்டு ( என்னத்த, என்ன பயிற்சி தருவார்கள்.அங்கு..? ஒரே மூளைச் சலவை செய்வார்கள்.முஸ்லிம்கள் நமது எதிரிகள், நமது பாரத நாடு பழம் பெரும் நாடு, நமது நாட்டிற்காக நமது உயிரை கொடுக்க வேண்டும் என்று 'ஸ்லிப்பர் செல்' பாணியிலும், உங்கள் வாழ்நாளில் ஒரு முஸ்லிமையாவது கொல்ல வேண்டும்.அப்படியே நமது மதம் இந்து மதம். இந்துக்கள் மட்டுமே வாழ வேண்டும் இங்கு. [ அப்பத்தானே பார்ப்பனியம் நீடித்து நிலைத்து நின்று அரசை இயக்க முடியும்..] என்று தரம் வாரியாக, அதாவது சிலருக்கு என்ன மண்டையில் ஏற்றினாலும்  தேமே என்று இருப்பவர்களை நைசாக கழட்டி விடுவார்கள், கொஞ்சம் சார்ப்பாக இருப்பவர்களை வருடக்கணக்கில் மூலச் சலவை செய்து வெளியே அனுப்புவார்கள்..) வெளியே வந்த நம்ம எடியூரப்பா அவர்கள் அரிசி ஆலையில் வேலைக்கு சேர்ந்து, அப்படியே அந்த அரிசி ஆலையின் ஓனர் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு ( ஒருவேளை திட்டம் போட்டு காதலித்து கை பிடித்திருப்பாரோ..? இருக்கலாம் தான்.இல்லாமலும் போகலாம் தான். ) ஜில்லா அளவில் ஜனசங்கத்தில் சேர்ந்து அப்படியே வளர்ந்து பாஜக என்று முதல்வராகி,தற்பொழுது மீண்டும் தனி கட்சி துவங்கி அடுத்த முதல்வராகி விடுவேன் என்கிறார்.
 
ஆக, ஆர்.எஸ்.எஸ்.என்ற மக்கள் விரோத இயக்கம் ஆட்களை ட்ரைனிங் கொடுத்து, அரசியல் என்றல்ல பல்வேறு துறைகளில் நுழைத்து இந்திய நாட்டையே மதவெறி நாடாக மாற்றி, இந்துமயமாக்கல் ஆக்கி, பல லட்சம் மக்களை, அருகில் உள்ள ஒரு சின்னஞ் சிறு நாட்டில் கொன்றார்கள் லட்சக்கணக்கில். உள்நாட்டில் மதவெறியை தூண்டி கொலை வெறியாட்டம் போட்டு பல ஆயிரம் முஸ்லிம் மக்களை கொன்றார்கள், தேவைப்படும் பொழுது மேலும் கொல்வார்கள். எல்லா துறைகளிலுமா..? என்று கேட்பவர்களுக்கு இதோ எடுத்துக்காட்டு
 
தற்பொழுது அணைத்து மொழிகளில் இயங்கும் இணைய தளங்களிலும் நுழைத்து விட்டார்கள். எந்த இணைய தளமாக இருக்கட்டும் அங்கு ஒருவர் அல்ல பலர் இந்த விஷ கருத்துக்களை பரப்பிக் கொண்டே இருப்பார்கள். ஈழம் தவிர்த்த இணையங்களில் மட்டும் இன்னும் அவர்களால் நுழைய முடியவில்லை..அங்கும் நுழைந்து விடுவார்கள். அதில் தான் அவர்களின் திறமை நுட்பம் இருக்கிறது. கிடக்கட்டும் இவைகள் எல்லாம். சாத்தான் விசயத்திற்கு வருவோம்.
 
இப்பேற்பட்ட இயக்கத்தில் பயின்று வந்துவிட்டு, அவர்களின் அரசியல் கட்சியில் தலைவர், பிறகு முதல்வர் என்று இருந்து விட்டு இப்பொழுது இவ்வாறு சொல்கிறார் என்றால் உண்மையைத் தவிர வேறு என்னவாக இருக்கும்..? கருணாநிதியைப் போல் வருவேன் என்கிறார். அப்படியென்றால் இவரின் குடும்பம் நம்ம தலைவர் அளவிற்கு பெரிதோ..? அல்லது ஆசியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் ஆக வருவேன் என்று சொல்ல வருகிறாரா என்ன..? முலாயம்சிங் போல என்கிறார். இவரின் மகனை அடுத்த வாரிசாக கொண்டு வந்தே தீருவேன் என்ற சபதமாக இருக்குமோ..? 
 
ஆக, அணைத்து அரசியல் கட்சிகளும் நூறு சதவீத சாத்தான்கள் என்று கருதலாமா..? என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
 
சங்கிலிக்கருப்பு 

வியாழன், 6 டிசம்பர், 2012

இது மத நம்பிக்கை அல்ல


"தான் நம்பும் மத நம்பிக்கைகளை தாய்வழிச் சமூகம் மூலம் குழந்தைகளுக்கும் பயிற்றுவிக்கப்பட்டு மத கருத்தியலை வளர்த்தெடுக்கிறது" என்பதை இந்த தாய் தன் மகனிடம் கொடூரமான முறையில் கையாண்டிருக்கிறார்.

குரானை மனப் படம் செய்யாத மகனை கொன்று எரித்து இருக்கிறார் இந்த தாய்!

குரான் வாசிப்பு இந்த தாயை இத்தனை வெறித்தனத்திற்கு உள்ளாக்குமா? http://www.aanthaireporter.com/?p=15847
Ibrahim Sheikmohamed - இந்த செய்தி தகுந்த ஆதாரத்துடன் வெளியிடப்படவில்லை .அந்த பெண் மன நிலை பாதிக்கப்பட்டவளாக இருக்க வேண்டும் .முதலில் கணவனை சொன்னவள் பிறகு காரணத்தை மாற்றியுள்ளார் .ஆதலால வேறு பிரச்னையாக கூட இருக்கலாம் .
இது உண்மையாக இருந்தாலும் ,மதகருத்தியலை வருத்தெடுத்தால் பெர்னாட்சா சொன்னதைப் போல உலகம் முகம்மது நபி ஸல் அவர்கள் ஆளப்படவேண்டும் என்ற கருத்தை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் .
மதகருத்தியலை வறுத்தெடுத்து இருந்தால் ,உமர் ரலி]ஆட்சியைப் போன்று ஜனநாயக ஆட்சியை விரும்புகிறேன் என்ற காந்திஜியின் கருத்தை இந்தியர்கள் அனைவரும் ஆமோதித்திருப்பார்கள் .

இந்த பெண் அவர்சொல்லுக்கு அவர்மகன் கீழ் படியவில்லையே என்ற சிலரிடம் இருக்கிற வெறி உணர்வே இவரை இப்படி செய்ய வைத்திருக்கிறது .இவர் குர்ஆன் இல்லை வேறு என்ன விசயமாக இருந்தாலும் அவர் சொல்லை கேட்கவில்லைஎன்றால் இது போன்று மிருகதனமாகவே நடந்திருப்பார். என்னை போருத்தவரி ஐந்தே பெண்ணே குர்ஆனை சரியாக படிக்கவில்லை .இஸ்லாத்தில் நிர்பந்தங்கள் இல்லை என்கிறது குர்ஆன் .ஒரு மனிதரைக் கொன்றவர் ஒரு சமுதாயத்தையே கொன்றவர் ஆவார் .என்கிறது குர்ஆன் .இவருக்கு மரண தண்டனை அளிப்பதே குர்ஆன் கூறும் சட்டம் .

http://baranikarai-pannaiyar.blogspot.in/2012/11/blog-post_7310.html
11:33

Ibrahim Sheikmohamed's profile photo
Ibrahim Sheikmohamed - இந்த செய்தி தகுந்த ஆதாரத்துடன் வெளியிடப்படவில்லை .அந்த பெண் மன நிலை பாதிக்கப்பட்டவளாக இருக்க வேண்டும் .முதலில் கணவனை சொன்னவள் பிறகு காரணத்தை மாற்றியுள்ளார் .ஆதலால வேறு பிரச்னையாக கூட இருக்கலாம் .
இது உண்மையாக இருந்தாலும் ,மதகருத்தியலை வருத்தெடுத்தால் பெர்னாட்சா சொன்னதைப் போல உலகம் முகம்மது நபி ஸல் அவர்கள் ஆளப்படவேண்டும் என்ற கருத்தை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் .
மதகருத்தியலை வறுத்தெடுத்து இருந்தால் ,உமர் ரலி]ஆட்சியைப் போன்று ஜனநாயக ஆட்சியை விரும்புகிறேன் என்ற காந்திஜியின் கருத்தை இந்தியர்கள் அனைவரும் ஆமோதித்திருப்பார்கள் .

இந்த பெண் அவர்சொல்லுக்கு அவர்மகன் கீழ் படியவில்லையே என்ற சிலரிடம் இருக்கிற வெறி உணர்வே இவரை இப்படி செய்ய வைத்திருக்கிறது .இவர் குர்ஆன் இல்லை வேறு என்ன விசயமாக இருந்தாலும் அவர் சொல்லை கேட்கவில்லைஎன்றால் இது போன்று மிருகதனமாகவே நடந்திருப்பார். என்னை பொறுத்தவரை ஐந்தே பெண்ணே குர்ஆனை சரியாக படிக்கவில்லை .இஸ்லாத்தில் நிர்பந்தங்கள் இல்லை என்கிறது குர்ஆன் .ஒரு மனிதரைக் கொன்றவர் ஒரு சமுதாயத்தையே கொன்றவர் ஆவார் .என்கிறது குர்ஆன் .இவருக்கு மரண தண்டனை அளிப்பதே குர்ஆன் கூறும் சட்டம் .

http://baranikarai-pannaiyar.blogspot.in/2012/11/blog-post_7310.html
11:33