Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

திங்கள், 31 டிசம்பர், 2012

பிராமணர்கள் எதிர்க்கும் முகலாய மன்னர்!



    சத்திரபதி சிவாஜியை இந்துத்துவ வாதிகள் ஆதர்ச நாயகனாக ஏற்று போற்றிவருவதையும் (தெரியாதவர்கள் எனது 2.2.2012 தேதியிட்ட பதிவை பார்க்கவும்) முகலாய அரசர் அவுரங்கஜேபை இஸ்லாமிய  மதவெறியராக இன்றும் தொடர்ந்து காட்டி வருவதையும் நடுநிலையாளர்களும் அறிந்துள்ள செய்திதான்!

     முகலாய அரசர்  அவுரங்க ஜேப்,இந்துத்துவ வாதிகள்  சொல்வதுபோல இஸ்லாமிய மதவெறியரா? என்றால் அது உண்மையில்லை. தனது தனித்த வருமானத்தில் தனது தேவைகளை நிறைவேற்றிக்கொண்டு,அரசின் பொது வருமானத்தை நிர்வாக செலவுக்கும்,பொதுமக்களின் நல்வாழ்வுக்கும் செலவு செய்து நல்லாட்சி செய்து வந்தவர். அதுமட்டும் இன்றி,தனது பேரரசுக்குள் இருந்துவந்த பல்வேறு இந்து சமயத்தைச் சேர்ந்த  சிற்றரசர்களுடனும்  நட்புடன் பழகி வந்தவர். சமய வேறுபாடுகளை காட்டாதவர். இந்து சமய மக்களின் சமய நம்பிக்கையில் தலையிடாமல்,அவர்களது வழிபாட்டினை மதித்து, ஏற்றுக் கொண்டவர்!.

    இப்படி  உண்மையை   சொன்னால், எங்கே ஆதாரம் என்று கேட்டு எகத்தாளம் செய்வதற்கு என்றே சிலர் இருக்கிறார்கள்! அவர்களுக்கு நான் எத்தனைதான் ஆதாரம் காட்டினாலும் அதனை  ஆதாரமாக ஏற்றுகொள்ள மாட்டார்கள்.   எனது ஒவ்வொரு பதிவுக்கும் ஆதாரம் என்று காட்டிக் கொண்டே இருப்பது வீண் வேலை என்பதால், பெரும்பாலும் ஆதாரங்களை  தவிர்த்து வருகிறேன்!(இந்த பதிவில் வரும் அவுரங்கஜெப்  குறித்த செய்திக்கு ஆதாரத்தை  குறிப்பிட்டு உள்ளேன்)


      அவுரங்கஜெப் தமது குறுநில மன்னர்களுடன் வங்காளம் நோக்கி செல்லும்போது,வாரணாசி வழியாக சென்றார்.அப்போது,அவருடன் வந்த குறுநில மன்னர்கள் ஒருநாள் வாரணாசியில் தங்கினால் தமது ராணிகள் கங்கையில் குளித்து  விசுவநாதர் ஆலயத்தில் வழிபாடு செய்துவிட்டு புறப்பட ஏதுவாக இருக்கும் என்று கேட்டனர்.

உடனே அவுரங்கஜெப் மன்னர் அவர்கள்,இந்து குறுநில மன்னர்களின் மத உணர்வுக்கு மதிப்பளித்து, தனது படைவீரர்கள் அனைவரையும்(பல்லக்கு தூக்குபவர்கள் தவிர) ராணிகள் குளிக்கும் இடத்துக்கு அயிந்து மைகளுக்கு அப்பால் கூடாரம் அமைத்து தங்குமாறு ஆணையிட்டார்.படைவீரர்களும் கூடாரம் அமைத்து தங்கினர்.

   சிற்றரசர்களின் ராணிகள் மட்டும் கங்கைக்கு சென்று,குளித்து ஸ்ரீ விஸ்வநாதர் ஆலயத்தில் பூஜைகள்  முடித்துவிட்டு திரும்பும்போது "கச் "பிரதேச ராணி மட்டும் காணாமல் போயிருந்தார்.உடனே அவரை தேட ஆணையிட்டும் தேடியும்,அவரைக் காணவில்லை. இதுபற்றி ஆலம்கீர் அவுரங்கஜெபிடம் முறையிடப்பட்டது. அவர் ஒற்றர் படையை அனுப்பி,வாரணாசி விஸ்வநாதர் ஆலயத்தை அலசும்படி ஆணையிட்டார் முதன்மை  அதிகாரி உடன்,  ஒற்றர்படையினர் கோவிலை சோதனை இட்டனர்.சோதனையில் அந்த கோயிலில் அமைந்து இருந்த கணேசர் சிலை அசையக்கூடிய அமைப்பில் இருப்பதைக் கண்டு,அந்தசிலையை திருகிப் பார்த்தனர்

     கணேசர் சிலை அசைந்து திருகியதும்,அதன் அடியில் படிகட்டுகள் தெரிந்தன.படிக்கட்டுகள் சுரங்கப் பாதையுடன் கீழ் அறைக்கு சென்று முடிவடைந்தது.வீரர்கள் அதன்வழியே சென்று பார்த்தபோது,சுரங்க அறையில்,  புனித  கங்கையில் நீராடிய,பாவத்தைப் போக்கும் விஸ்வநாதர்  ஆலயத்தில் தரிசிக்க வந்த,  "கச்"பிரதேச ராணி கற்பழிக்கப் பட்டு கிடந்தார்.கசங்கியிருந்த ஆடையுடன், கத்திய குரலுடன்,கண்ணீர் சிந்திய நிலையில் இருந்த அவளை கோயில் சுரங்க அறையில்  இருந்து மீட்டுவந்தனர்.சுரங்க அறை ,ச்ற்ற்ர் விஸ்வநாதர் ஆலய மூலவரின் சிலைக்கு நேர் கீழே இருந்தது.

அரசியின் கோலத்தைக் கண்டு சிற்றரசர்கள் கதறினார்கள், குமுறினார்கள், நடந்தது குறித்து அவுரங்க ஜெபிடம் முறையிட்டு,தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு நீதி வழங்குமாறு கேட்டு கொதித்தனர். பெண்களைக் கற்பழித்து இழிவுபடுத்திய கோயில் மூலவர் சிலை  வேறு இடத்துக்கு அப்புறப்படுத்தப் பட்டது. கோயில் தரை மட்டமாக்கப் பட்டது.கோயில் நிர்வாகிகள்,பூசாரிகள் அனைவரும் தண்டிக்கப்பட்டனர்.

(ஆதாரம் ஓடிஸா மாநில கவர்னராக இருந்த பிஷம்பர்நாத் பாண்டே அவர்கள் எழுதி,ஓடிஸா மாநில அரசு வெளியிட்ட அரசு வெளியிட்ட இஸ்லாமும் இந்திய கலாச்சாரமும் நூல் பக்கம் 70,71) 

பட்னா மீயுசியம் ,முன்னாள் ஆவணக் காப்பக இயக்குனராக இருந்த டாக்டர்.குப்தா என்பவரிடம் இருந்து பெற்ற ஆவணங்களுடன் பட்டாடி சீதாராமையர் தன எழுதிய நூலிலும் ஆதாரமாக இந்நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு உள்ளார்.

மற்றொரு நிகழ்சியையும் பார்ப்போம். அவுரங்கஜெபுக்கும் பார்ப்பனர்களுக்கும் நடந்த உரையாடல்

"என்ன நடக்கிறது இங்கே?"

"அந்த பெண்ணின் கணவன் இறந்துவிட்டான்"

"அதற்காக "

"அந்த பெண்ணும் அவனுடன் இறக்க வேண்டும்"

"சரி"

"அவள் மறுக்கிறாள்"

"அதனால்"

"நாங்கள் அவளை கணவருடன் எரிக்க முயன்று கொண்டிருக்கிறோம்"

"இது படுகொலை"

"இல்லை, இது எங்களின் பண்பாடு,மதச்சடங்கு"

"காட்டுமிராண்டித்தனம்"

"எங்கள் மதச்சடங்கைத் தடுக்க,விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை"

"இது எனது ஆளுகைக்கு உட்பட்ட இடம்.இங்கு படுகொலைகளை அனுமதிக்க முடியாது"

"நீங்கள் எங்கள் மதவிவகாரங்களில் தலையிடுகிறீர்கள்"

அவுரங்கஜெப் தனது வாளைஉருவி,"இங்கு யாராவது இந்த பெண்ணை பலாத்காரம் செய்தால் அவர்களின் தலை கீழே உருளும்" கோபத்துடன் சொல்லுகிறார்.

அந்த பெண்ணை பலாத்காரம் செய்தவர்கள் அவளை விட்டுவிட்டு ஓடிவிடுகிறார்கள். அந்தப் பெண் அவுரங்கஜெபை நன்றிப் பார்வை பார்த்துவிட்டு  அங்கிருந்து செல்கிறாள்!

இப்படிப்பட்ட அவுரங்கஜெபைதான் மதம்மாற மக்களை பலாத்காரம் செய்தான்,மாறாதவர்கள் மீது ஜசியா வரி விதித்தான் என்றெல்லாம் நமது பாடப் புத்தகங்களில் எழுதிவருகிறார்கள்.(நாமும் படித்து வருகிறோம்)  ஜெர்மன் நாஜி இட்லர் இப்படித்தான் வரலாற்றில் யூதர்கள் ஜெர்மானியரைக் கொடுமைப் படுத்தினார்கள் என்று மாற்றி எழுதிவைத்தான்.

நாசி இட்லர் வழியில், நமது பார்பன வரலாற்று ஆசிரியர்கள் அவுரங்கஜெபை இழிவுபடுத்தி எழுதி வருகிறார்கள்!

கடவுளின் பெயரால் காமக்களியாட்டம்.அதுவும் கடவுள் உள்ளதாக சொல்லப்படும் கோயில்களிலேயே! அரசிகளைக்கூட அஞ்சாது கற்பழிக்கும் அநியாயம்!!

தவறான செயல்களைக் கண்டித்துதண்டித்த அவுரங்கஜெப் மதவெறியராம்! கடவுள் இருக்கிறார் என்று நம்பிவந்த கோயிலிலேயே  கற்பழித்து, இரக்கமின்றி நடந்துகொண்ட,மனிதத் தன்மையற்ற செயல்களைச்  செய்தவர்கள்  பிராமணர்கள்,இந்துத்துவவாதிகள்  சாத்வீக,அஹிம்சா வாதிகளாம்.!!

   "இந்துத்துவ பாசிசம்" எனபது எப்போதும் தனது தவறுகளை,குற்றங்களை மறைத்து,.இருட்டடிப்பு செய்தும் வருவதுடன், தங்களது தவறுகளை  கண்டிப்பவர்கள் மீது,அவர்கள் எத்தனை உயர்ந்த மனிதர்களாக இருந்தாலும்  அவதூறு செய்து,பொய்யுரைத்து களங்கப்படுத்தவும் தவறுவதில்லை!

      இந்துத்துவ பாசிச வாதிகள் ,அவுரங்கஜெபை  இன்றும் தொடர்ந்து மதவெறியராக காட்டி வருவது ஏன்? ஏனென்றால்,அவுரங்கஜெபைப் படிக்கும் அனைவருக்கும் அவர்மீது வெறுப்பு வரவேண்டும்.என்பதுதான். அவுரங்கஜெப் மீது,அவரது ஆட்சிமீது  வெறுப்பு வந்தால்தான்,அவர் பலவந்தமாக மாற்றியதாக கூறும் முஸ்லிம்களின் வம்சாவளியினர் மீது,அதாவது இன்றைய  முஸ்லிம் மக்கள் மீதும் வரவேண்டும்  என்பதற்காகத்தான்  அவுரங்கஜெப் குறித்து தவறான வரலாறு  எழுதி, அதனை உண்மை என மக்களை நம்பசெய்து  வருகிறார்கள்!
நன்றிகள் 
வானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....!

கருத்துகள் இல்லை: