Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

சனி, 22 டிசம்பர், 2012

சினிமா கூத்தாடிகளின் உண்மை முகம் ஒரு அலசல்

சமுதாயத்திலுள்ள பலதுறைகளில் கடைந்தெடுத்த கடைமட்ட கழிசடை துறைதான் சினிமாத்துறை .இங்கே பொய்,பித்தலாட்டம் ஏமாற்று ,விபச்சாரம் என்று அயோக்கியதனங்களின் அத்தனை சொற்களுக்கும் நேர்முக சாட்சிகளை பார்க்கலாம் .காசு சம்பாதிக்க எதை வேண்டுமானாலும் ,எப்படி வேண்டுமானாலும் செய்ய தயங்க மாட்டார்கள் .சென்சார் எதையெல்லாம் அனுமதிக்குமோ அத்தனையும் செய்ய துணிவார்கள்.சென்சார்போர்டு முழு நிர்வாணத்தையும் அனுமதிக்குமானால் எவ்வித வெட்கமும் இல்லாமல் நிர்வானமாக் காட்சி தர எந்த நடிகரும் நடிகையும் மறுக்கமாட்டார்கள் சமுதாயத்தில் குற்றங்களை கற்று கொடுப்பவர்களே இவர்கள்தான் .குற்றங்களை ,தப்பு தண்டவாளங்களை ,பாவங்களை எப்படி செய்ய வேண்டும், எங்ஙனம் திறம்பட செய்ய வேண்டும்?எங்ஙனம் எளிதாக செய்ய வேண்டும் என்பதையெல்லாம் இளைஞர்களுக்கு கற்றுகொடுத்து சமுதாயத்தை சீரழிப்பதில் முன்னோடிதான் சினிமா .

ஒரு சர்வேயில் சமுதாயத்தை சீரமைக்க தகுந்தவர்கள் யார் என்பதில்சினிமா கதாநாயகர்களே முதலிடம் வகித்தார்கள்.காரணம் என்னவெனில் ,இவர்கள் தொடர்ந்து நல்லவர்களாக நடிப்பதுதான் .ஒருவன் நல்லவனாக நடிக்கிறான் என்றால் அவன் கெட்டவன் என்றே பொருள் .ஏனெனில் நல்லவன் நல்லவனாக நடிக்க வேண்டிய அவசியமில்லை .மக்களை ஏமாற்றி திட்டமிட்டு அரசியலில் சமுதாயத்தில் புகழ் பெறவே தங்களது கேறேக்டர்களை சிறு பழுது கூட வராமல் பார்த்துக் கொள்கிறார்கள் .இந்த கதாநாயகன் போலிசாக நடித்தால் அவரை பரிசுத்த போலிசாக காட்டுவார்கள்.மற்ற அரசியல்வாதிகளை ,மேலும் மற்ற அனைத்து துறையினரையும் அயோக்கியர்களாக காட்டுவார்கள் .கதாநாயக போலீஸ்காரன் தான் அனைத்து குற்றவாளிகளையும் எதிர்த்து போராடி மக்களை காப்பாற்றியதாக காட்டுவார்கள்.கதாநாயகன் திருடனாகவோ ,ரவுடியாகவோ நடித்தால் அந்த ரவுடி யை நல்லவனாக் காட்டுவார்கள் .ரவுடி கதாநாயகன் மக்களுக்காக தனது ரவுடியிசத்தை காட்டி போராடுவது போலவும் போலிஸ்காரர்கள் ,அரசியல்வாதிகள் ,கதாநாயகின் அப்பாவான  தொழில் அதிபர் உட்பட அனைவரும் அயோக்கியர்களாக காட்டுவார்கள் .இந்த ரவுடி கதாநாயகனே வென்று மக்களுக்கு உதவுவதாக காட்டுவார்கள் கதாநாயகன் தொழிலாளியாக நடித்தால் தொழிலாளியை நல்லவனாகவும் தொழில் அதிபரை மற்றும் அதை சார்ந்த துறையினரை கொடுமைக்காரர்களாக காட்டுவார்கள். கதாநாயகன் தொழிற்சாலை உரிமையாளராக இருந்தால் தொழில் அதிபர் நல்லவராகவும் தொழிலாளிகள் அவருக்கு தொந்தரவு கொடுப்பவர்களாக வும் காட்டுவார்கள்.
இந்த கதாநாயகர்கள் தீ பிடித்த கட்டிடத்திற்குள் குதித்து அதனால் புகுந்து ஒருவரே கட்டிடத்திற்குள் உள்ள அனைவரையும் காப்பாற்றுவார்கள் .இதைப் பார்த்தே அவனுக்கு ரசிகனாக மாறி போஸ்டர் ஒட்டுவான் ,ஓட்டு போடுவான் .ஆனால் இவர்கள் அனைவரும் இருக்கும் சென்னையில் எத்தனை தடவைகள் தீப் பிடித்தும் எந்த கதாநாயகனும் தீயணைந்த பிறகு கூட வரமாட்டான்.இது மட்டுமா? அரசு துறைகளும் போலியோ சொட்டு மருந்து இவர்கள் சொன்னால்தான் குழந்தைக்கு ஊட்டுவார்கள் இல்லையெனில் அந்த குழந்தைகளுக்கு இளம்பிள்ளை வாதம்  வந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பது போல இவர்களை வைத்து விளம்பரம் செய்கிறார்கள் .ஊடாக சிகாமணிகளும் இவர்களைப் பற்றிய செய்திகள் இல்லைஎன்றால் மக்கள் பத்திரிக்கை வாசிப்பதையும் டிவி பார்ப்பதையும் நிறுத்தி விடுவது போல அவர்கள் திருமணத்தில் கட்டிய சேலை யின் நிறம் முதல் கொழு ,கொழு குழந்தை பிறந்தது வரை செய்திகள் சேகரித்து மக்களின் தகவல் தாகத்தை தீர்த்து வைப்பதில் முனைப்பு காட்டுவார்கள்.சினிமாக்காரர்களை வைத்து திறந்த எத்தனையோ கடைகள் மூடிவிட்டார்கள் .ஆனால் தரம் ,நியாய விலைகளில் வர்த்தகம் பண்ணும் மதார்சா ,ஆரெம்கேவி ,கடைகள் சந்தையில் நிலைத்து நிற்கின்றன.இவ்வாறு பலதுறையினரும் சினிமாக்காரர்களை உயர்த்தி பிடித்து சமுதாயத்தில் அவர்களுக்கு ஒரு உயர்ந்த அந்தஸ்தை கொடுத்துவிடுகிறார்கள் 
ஆனால்  இவர்கள் யார் என்பதை ,எத்தனை பெரிய கொடுமையான அயோக்கியர்கள் என்பதை 1989,அல்லது 1990 உள்ள குமுதம் வார ஏடுவில் ,ஒரு நடிகையின்கதை என்ற பெயரிலே அந்த நடிகையின் உதவியோடு ஸ்ரீனிவாசலு என்பவர் இவர்களை  தோலுரித்து காட்டினார் .பல உண்மைகளை வெளிப்படுத்தினார்ர். அந்தகால பிரபல நடிகையின்பேரில் கோவையில் தியேட்டர் வந்த கதை முதல் தன்னையும் தனது அம்மாவையும் ஒரே நேரத்தில் படுக்கையில் அனுபவித்த ஒரு மிருகத்தையும் பற்றி ,அவர் யார் என்பதை சினிமா ரசிகர்களுக்கு புரியும்படி சங்கேத வார்த்தைகளை கூறி எழுதினார்.அரண்டுபோன சினிமா உலகம் அப்போதைய நடிகர் சங்கத்தலைவர் ராதரவியுடன் குமுதம் அலுவலகத்தை தாக்கினார்கள் .அப்போது கலையுலக பிதாமகன் கருணாநிதி ஆட்சி என்பதால் அவர் தலையிட்டு குமுதத்தில் அத்தொடரை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டார்.ஸ்ரீனிவாசலு வும் எச்சரிக்கையுடன் அத்தொடரை நிறுத்தினார்.
இப்படி இவர்களைப் பற்றி உண்மையை சொன்னால்அக்ரோசப்பட்டு வன்முறையில் இறங்கிய சினிமா கூத்தாடிகள் முஸ்லிம்களைப் பற்றி தீவிரவாதியாக காட்டி இவர்களை தேச பக்தர்களாக இமேஜை உயர்த்துகிறார்கள் .தனது  அசல் வருமானத்தில் நூறில் ஒரு பங்கை கூட வருமானமாக காட்டமல் வருமான வரி கட்டாமல் வரி ஏய்ப்பு  செய்யும் இந்த எத்தர்கள் தேசிய கொடிக்காக் உயிரையும் துச்சமனே மதித்து காப்பாற்றுவது போல நடிப்பார்கள் .
அறுபது வயதை தாண்டிய பிறகும் அரைகுறை ஆடையுடன் வரும் 14 வயது பெண்ணுடன் காதல் வசனம் பேசுவது முதல் ஜட்டியுடன் காட்சிதருவார்கள் .முதலிரவு காட்சிகளில் கட்டிபிடித்து புரள்வார்கள் .கட்டிய மனைவியுடன் ரோட்டில் கைபிடித்து செல்லவே 95 %தமிழர்கள் வெட்கப்படுவார்கள் .ஆனால் இவர்களோ பலர் மத்தியில் படமெடுக்கப்படும் நிலையில் ,கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் தாரளமாக ,கட்டிய மனைவி பெற்ற பிள்ளைகள் ரசிக்க அந்நிய இளம் பெண்களுடன் படுக்கையறை காட்சிகளில் கட்டி புரள்வார்கள்..அந்த படத்தை தனது மகள் ,மகன் பேத்தி எல்லாம் பார்ப்பார்களே என்று வெட்கம் அற்ற மிருக ஜென்மங்கள் .
இவர்களுக்கு அத்தனை அரசியல்வாதிகளும் ஊதுகுழல்களாக செயல்படுகிறார்களே ஒழிய இவர்களைப் பற்றி விமர்சிக்கவே பயப்படுகிறார்கள் .
மிகவும் கேவலமான இந்த அயோக்கிய கூட்டம் தங்களுக்கு என்று தனி இமேஜை உருவாக்கி ,அதை மக்கள் நம்பும் வண்ணம் திரையில்  நல்லவர்களாக நடித்து வருகிறர்கள் .ஆனால் அவர்களது சுயரூபமோ முற்றிலும் திரைக்கு மாற்றாமாக் உள்ளது .இதில் எந்த முன்னாள் கதாநாயகர்களும் ,நாயகிகளும் இந்நாள் கதாநாயகர்களும் நாயகிகளும் விதிவிலக்கில்லை .குமுதத்தில் தொடர் எழுதிய 
ஸ்ரீனிவாசலு வைப்போல இவர்களது சுயரூபங்களை மக்கள் தோலுரித்து காட்டும் வண்ணம் டிவி சீரியல் 
தயார் செய்யப்பட வேண்டும் .முள்ளை ,முள்ளால் அகற்ற முயற்சிக்க வேண்டும் .

கருத்துகள் இல்லை: