Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

சனி, 15 செப்டம்பர், 2012

கள்ள தீர்மானங்கள் பாருங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் ,2010 செப்டம்பர் 12 இல் நடந்த பொதுக் குழுவில் கழிப்பறைகள் மட்டுமே கட்டப் போவதாக மக்கள்  மத்தியில் ஒரே ஒரு தீர்மானம் நிறைவேற்றுவதாக சொன்னார்கள்.ஆனால் புனரமைப்பு கமிட்டி நிர்வாகத்தையும் தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும் ,வரதட்சணை வாங்கும் மாப்பிள்ளைகளுக்கு பள்ளிவாசலில் வைத்து நிக்காஹ் நடத்த அனுமதி மறுப்பதாகவும் எனபது போன்ற ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றியதாக வும் மக்களை ஏமாற்றிய வஞ்சகத்தை பாருங்கள் .இந்த  கள்ள தீர்மானம் நிறைவேற்றிய பிறகு  எத்தனை வரதட்சணை திருமணங்கள் பள்ளிவாசலில் வைத்து நடந்தன என்று பட்டியல் போடவா?புனரமைப்பு கமிட்டி பணத்தை கைப்பற்றும் நடவடிக்கையை மறைக்கும் எண்ணத்தோடு  வரதட்சணை ஒழிப்பு என்ற கள்ள நாடகம் வேறு.நெல்லை மகாராஜா  நகரில் உள்ள I.O.B வங்கியில் பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி தங்களது  பெயரில் புனரமைப்பு கமிட்டி  பணத்தை மாற்றக் கோரி கொடுத்துள்ள ஆவணங்களில் பொதுக்குழு தீர்மானங்கள் பற்றி அவர்கள்  கொடுத்த நகல் வெளியிடப்பட்டுள்ளது 
7வது  பக்கத்தில் கமிட்டி உறுப்பினர்களின் கையெழுத்துகளும் 8வது பக்கத்தில் எட்டு நபர்களின் கையெழுத்துக்கள் மட்டுமே உள்ளன .இதுதான் பொதுக் குழுவா?
8வது பக்கத்தில் கையொப்பமிட்டுள்ள 8நபர்கள் கமிட்டி உறுப்பினர்களா? பொதுக் குழு உறுப்பினர்களா?
பக்கத்தின் மீது கிளிக் செய்து பெரியதாக்கி பார்க்க 

 மேலே உள்ள நகலில் எழுத்துக்கள் வாசிக்க இயலவில்லை என்றால் அதிலுள்ள செய்திகள் பிசகு இல்லாமல் கீழே  தரப்பட்டுள்ளது.
அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்]
  ஆறாம்பண்ணை முஹைதீன்பள்ளிவாசலின்  பக்கத்திலுள்ள மண்டபத்தில் வைத்து 2010 -ம் வருடம் செப்டம்பர் மாதம் 12 ம்தேதி ஞாயிற்று கிழமை மாலை அசர் தொழுகைக்கு பின் ஜமாஅத் தலைவர் கா.அ. முஹம்மது உதுமான் அவர்கள் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது .
                    பொதுக்குழு கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
1 .பள்ளிவாசல் விரிவாக்கம் செய்வதற்காக வக்ப்வாரியத்தை அணுகி தேவைப்படும் பணத்தை பெற முயற்சிகள் செய்வது,
2 .பள்ளிவாசல் புனரமைப்பு மற்றும் விரிவாக்கம் கமிட்டி நிர்வாகத்தை முஹைதீன் பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகமே ஏற்றுக் கொள்வது 
3 .நமது பள்ளிவாசலுக்கு தேவையான கழிப்பிடங்களை அதிகப்படுத்துவது ,
4 .முஹைதீன் பள்ளிவாசல் பைத்துல்மால் என்று ஏற்படுத்தி அதன்மூலம் நமதூர் மதரசாவை மேலும் மேம்படுத்துவது ,அதற்க்குண்டான நன்கொடை சந்தா வசூல் செய்ய ஆட்களை நியமிப்பது ,
5 வரதட்சணை ஒழிப்பின் முதல்படியாக வரதட்சணை வாங்கும் மாப்பிள்ளைமார்களுக்கு பள்ளிவாசலில்  வைத்து திருமணம் நடத்த [நிக்காஹ் ]அனுமதியை மறுப்பது என்று பொதுக்குழு தீர்மானிக்கிறது.
                          மேற்கண்ட தீர்மானங்களை பொதுக்குழு ஏகமனதாக ஏற்றுக் கொள்கிறது
தலைவர் ;கா.அ .முஹம்மது உதுமான் கையொப்பம்
உப தலைவர் ;K.S.பீர்முஹம்மது கையொப்பம்
செயலாளர்;S. பசிர் அஹ்மத்       '"              "
இணை செயலாளர் மீ.சா.அப்துர் ரஹ்மான் " "
துணை செயலாளர் ;S.A.அபுல் உசேன்  "       "
பொருளாளர் ; A .அப்துல் கனி                  "     "
S.இஸ்மாயில்                                      "   "
மு.அஹ்மது                          "   "
முஹம்மது அலி                 "              "
அ .முஹம்மது ஹனிபா    "    "
m .காஜா முஹிதீன்  "  "
T.M.A யாக்கூப்             "  "  
பொருளாளரும் துணை செயலாளரும்  இடம் மாறி கையெழுத்திட்டுள்ளனர் .என்ன அவசர கோலமோ !!! 

கருத்துகள் இல்லை: