Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

புதன், 1 செப்டம்பர், 2010

புதிய பக்கங்களுடன் .பண்ணையார்களின் போர்க்களம்.

1930 முதல் 1940 க்குள் இருக்கலாம் என்று நம்புகிறேன் அக்காலத்தில் நமதூரில் பாலிய முஸ்லிம்கள் சங்கம் என்ற பெயரில் முஸ்லிம் இளைஞர்கள் சங்கம் இருந்தது.இதில் ஆனா.சேனா.செய்யதுமுஹம்மதுவும் கானாமுனா முஹம்மதுகாசிமும் இருந்தனர்.இவர்களின் தந்தையர்கள் பெரும் நிலச்சுவந்தர்கள் ஆவார்கள் .ஆனாசேனாவுக்கு 120 ஏக்கர் நன்செய்யும் 50 ஏக்கர் புன்செய்யும் இருந்தது.மேலும் ஆ.சே.வுக்கு ரங்கூனில் ஆயில்மில் மிகவும் நன்றாக நடந்துவந்தது. காண.முனாவுக்கு75யெக்கர நிலமும் இருந்த்தது.ரங்கூனில்gentralmerchants பெரியளவில் வியாபாரம் செய்து வந்தனர்.இதனால் இவர்களிடையே இருந்த  ஈகோ நாளடைவில் பெரும்சண்டையாக மாறியது.இருதரப்பினரும் தங்களுக்கு அடியாட்கள் வைத்துக்கொண்டனர்.அடியாட்களை மோதவிட்டு பெரும்பணம் செலவழித்தனர்.கல் எறிதல் அடிதடி நடந்து வந்தது.ஒருசமயத்தில் பொன்னுதேவர் என்பவர் ஆனாசேனா வின் மச்சான் சல்லிமுட்டி ஷேக்மதாரை வெட்டிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆனாசெனா தன்னுடைய ஆட்களிடம் பதிலடி கொடுக்கச்சொன்னார்.புங்கமுடயாதேவர் பொண்ணுதேவரை வெட்டி கொலை செய்துவிட்டார். ஆனாசேனா வின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கிற்காக ஆனாசெனா வுக்கு ஜான் டிக்ஸ் என்ற பிரிட்டிஸ் வக்கீல் ஆஜரானார்.                                                             கானா மூனா பார்டியினர் எப்படியாயினும் ஆனா சேனா வை கைவிலங்கு மாட்டி கைது செய்திடவேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமாக இருந்தனர்.ஆனாசெனா வோ போலீசில் சிக்காமல் கோர்ட்டில் சரண்டர் ஆகிவிடவேண்டும் என்று எண்ணி குன்னத்தூர் மலைபகுதியில் தலைமறைவு ஆனார்..அவர் சரண் அடைவதற்கான கெடு முடியும் நாள் வந்தது.காண மூனாவினர் ஸ்ரீவை கோர்ட் அருகில் வரை போலீசாரை நிறுத்தி சரணடையுமுன் அவரை அர்ரெஸ்ட் பண்ணிட வேண்டும் என எண்ணி வேலை செய்தனர்.ஆனால் ஆனாசெனாவின் வக்கீல் அவரை தனது ஜீப்பில் ஏற்றிக்கொண்டு தனது கருப்பு கோட்டை ஆ.செ.வை அணியசெய்து கோர்ட் வாசல் முன் ஜீப்பை நிறுத்தியவுடன் யாரும் எதிர் பாரா வண்ணம் ஆ.செ. வக்கீல் கோர்ட் அணிந்த நிலையில் மாஜிஸ்ட்ரேட் முன் சரணடைந்தார்.கை விலங்கு மாட்டுவதிலிருந்து தப்பித்துக்கொண்டார்.இந்த ஈகோ வில் இரு பார்டியினரும் பணத்தை வாரி இரைத்தனர்.இந்த வழக்கில் இறுதியில் ஆ,செ.விடுதலையானார்.தனது ரங்கூனில் உள்ள   தனது மில்களை கவனிக்காமல் ஊரிலிருந்தே சண்டையில் காலம் கழித்தாலும் அதற்காக கடும் பணத்தை செலவளித்ததாலும் பெரும் பொருளாதார சரிவுக்குள்ளானார்.ஊரிலுள்ள குடும்ப வழக்குகளில் இவர் மிகவும் நேர்மையாகவும் திட்டவட்டமாகவும் தீர்த்து வைப்பவராக இருந்து  உள்ளார்.இவருடைய ஊதாரி போக்கினால் பொருளாதாரம் சரிவடைந்து வரும் நிலையில் இவருடைய சகோதரர் தனது மச்சான் மூலம் பாகபிரிவினை கேட்டார்.ஆ.செ.வோ மச்சானை அனுப்பிவிட்டு தனது தம்பியை மட்டும் அழைத்தார். ஊர் வழக்குகெல்லாம் தீர்ப்பு சொல்லும் தனக்கு மற்றவர்கள் வந்து பஞ்சாயத்து பேசிவிடக்கூடாது என்பதில் கவனமாய் இருந்த அவர் ,தன்னிடம் உள்ள அனைத்து சொத்து பத்திரங்களையும் தனது தம்பியிடம் கொடுத்து வேண்டியதை எடுத்துகொண்டு மீதியை வைத்துவிட்டு போகச்சொன்னார்.இறுதிவரை தனது பிரச்டீஜை விட்டுகொடுக்காமலே மறைந்தார்.ஈகோ விசயத்தில் ஹீரோவாக இருந்த அவர் மார்க்க விசயத்தில் சீரோ .இதில் இன்னொரு சுவையான செய்தி எனவேனின்,ஆ.செ.வின் பெரிய தந்தையின் மகன் உதுமான் அவர்கட்க்கு,கானா.மூனா.வின் மூத்த சகோதரி ஏற்கனவே திருமணமாகி இருந்தது.இந்த சண்டை நடந்த சமயம்,உதுமான் அவர்கள் தனது மனைவியை அவரது தயார் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.சண்டை உச்சகட்டத்தில் இருந்தபோது,கணவன்,மனைவிக்கிடையே எந்தொரு பிரச்சனையும் இல்லாமலிருந்தும் தலாக் விடும் சூழ்நிலை வந்தது.இருப்பினும் பொறுமை காக்கப்பட்டு சண்டை முடிந்ததும் இல்வாழ்க்கை தொடர்ந்தது.                         

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Assalamualaikum
sakothararkale eluthi irukkum vasahangal nandraga padiyungal.
pannai makkalukku mukkiya arivippu oru kodiya seyal paravi kondu irukkirathu athu ennavendral ovvaru tholugaikku piragum pallipalathil amarnthu kondu
1. puram pesuvathu( periyavargai keli seivathu,avan viral asaikiran,ivan thadi vaithu irukkiran,Ivan sunnath jamath,Ivan najath, matrum MNP.........matrum pala visayangal ithil adangum)
2. sunnath jamath periyatha & TNTJ periyatha enru sandai poduvathu

Ithanal pathikka paduvathu school manavargal matrum kuripaga manavigal yen endral Pallivasal palathil amarnthu kondu enakku intha pennai pidithu irukkirathu antha pennai pidithu irukkirathu endru pen parka solli thuthu viduvathu Ithanal oorukkul sandai than varukirathu , Ithu sariya sollungal moomingale

Ippadikku A.P.nalam virumbum Nal ullangal
by
.................

பெயரில்லா சொன்னது…

Assalamualaikum
sakothararkale ooril natakum unmayai
sutti katinal sathyam seyya solluvathu nalla panba.thavarai thiruthi kolluvathu nalla panbu .


ippadikku a.pannai nalam virumbum sakothararkal

பெயரில்லா சொன்னது…

assalamu alaikum:தறுதலை ஜமாஅத் காரர்கள் எந்த விதத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த ஒரு சம்பவமே சாட்சியாக உள்ளது,
இதற்க்கு அந்த ஜமாத்தை சேர்ந்தவர்கள் என்ன சொல்ல போகிறார்கள்?இதற்கும் ஒரு மேடை போட்டு செய்தது சரி என்று வாதாட போகிறார்களா?அந்த அமைப்பில் உள்ள உறுப்பினர் இடமே அனுமதி இல்லாத துப்பாக்கி என்றால் தலைவரிடம் எதனை துப்பாக்கி? நடந்த இந்த கொலைக்கு யார் பொறுப்பு? ரமலான் மாதம் என்று கூட பார்க்காமல் அநியாயமாக சுட்டு தள்ளிய இந்த இரு குடும்பத்தாரின் நிலை இன்று எப்படி இருக்கும்?ஊருக்கு உபதேசம் சொல்லும் தலைவர்கள் தன்னுடைய அமைப்பை சேர்ந்த உறுப்பினர்களுக்கு ஏன் அறிவுரை சொல்ல வில்லை? அனுமதி இல்லாத துப்பாக்கி இவனுக்கு எப்படி வந்தது இவனுனுடைய பின்னணி என்ன என்று ஆராய நாம் அனைவரும் தமிழக காவல் துறைக்கும், உள் துறைக்கும் உடனடியாக தந்தி அனுப்புவோம்,இவன் எந்த இயக்கத்தை வைத்து துப்பாக்கி பெற்றான்? ஊருக்கு உபதேசம் சொல்லும் முன் நம்மை சார்ந்த இயக்க வாதிகளுக்கு முதலில் அறிவுரை சொல்லுங்கள்.
இந்த இரு சகோதரர்களின் பாவங்களை எல்லாம் மன்னித்து விட நாம் அனைவரும் இந்த நன்னாளில் துவா செய்வோம்.