Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

இந்தியா முஜாஹிதீன் என்று சொல்லிடதப்பா


ஜூனியர் விகடன் கருத்து கணிப்பு வெளியிடு .தமிழக் அரசியலில் எதிர்பாராத வகையில் அதிரடி திருப்பம்
ஜூனியர்விகடன் வார இதழ் அடுத்த பிரதமர் யார் ? என்று கருத்து கணிப்பு நடத்தி அதை 21.8 .2013 அன்று வெளியிட்டது அதில் தமிழ்நாட்டில் மோடிக்கு 52.85 % ஜெயலலிதா 16.19% ராகுல் காந்தி 15.79 மன்மோகன் சிங் 15.17 ஆதரவு உள்ளாதாக தெரிவித்துள்ளது.இதை அறிந்து அதிர்ந்து போன தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அடுத்து என்ன செய்வது என்பது அறியாது நிலைகுலைந்து போயினர் .அதிரடி நாயகி அம்மா அவர்கள் சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தார்.
சி.எம் அம்மாவிடமிருந்து போன் வந்திருப்பதாக தனது செயலாளர் சொன்னதும் நிகழந்த அதிர்வில் கலைஞர் தன்னையும் அறியாமல் வீல் சேரில் இருந்து எழுந்து ஓடோடி சென்று செயலாளரிடமிருந்து ரீசிவரை வாங்கினார் .ஜூனியர் விகடன் கருத்து கணிப்பை பார்த்தீர்களா? தமிழ்நாட்டில் மோடிக்கு 52.85 %செல்வாக்கு இருப்பதாக கூறியுள்ளது. ஆதலால் நாம் திராவிட பாரம்பர்யமிக்க கட்சிகள் சங்கபரிவார் கூட்டத்தை தமிழகத்தில் கால் பதிய அனுமதிக்கக் கூடாது .இதற்கு எனது ஆலோசனை என்னவெனில் ,என்னை நீங்கள் பிரதமருக்கு போட்டியிட ஆதரிக்க வேண்டும் .நான் பிரதமர் ஆனால் ,உங்களை முதல்அமைச்சர் ஆக்கிவிடுவேன் என்றார் .உடன் கலைஞர் நீங்கள் பிரதமர் ஆனால் நான் முதல் அமைச்சர் என்பது சரியாக இருக்காது ஆதலின் ஸ்டாலினை முதல் அமைச்சர் ஆக்கிவிடலாம் .இதன் மூலம் எனது குடும்ப சண்டைக்கும் முடிவும் வந்துவிடும் என்று அம்மாவின் ஆலோசனைக்கு கலைஞர் சம்மதித்தார்.
அனைத்து கட்சி கூட்டம் அம்மா தலைமையில் நடந்தது திமுக சார்பில் ஸ்டாலினும் மற்ற கட்சிகள் சார்பில் அம்மாவை அருகில் இருந்து பார்க்க கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்று போட்டிகள் இருந்தாலும் கடைசியில் அதன் உயர்மட்ட தலைவர்களே கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் அம்மாவை பிரதமராக தேர்ந்தெடுக்கவும் ஸ்டாலினை முதலவராகவும் தேர்ந்தெடுக்கக் முடிவு செய்யப்பட்ட்டது .மேயர் பதவிகளை காங்கிரசுக்கும் தேமுதிக வுக்கும் பகிர்ந்தளிப்பது என்றும் வன்னியர் பகுதிகளில் உள்ள அணைத்து நகராட்சிகளையும் பாமகவுக்கும் மற்ற நகராட்சிகளை கம்யுனிஸ்ட்டுகளுக்கும் விசி கட்சி செல்வாக்கு உள்ள நகராட்சிகளை அவர்களுக்கும் பேரூராட்சி பகுதிகளை மதிமுக சமக தமுமுக கட்சிகளுக்கும் ஊராட்சி தலைவர் பதவிகளை மற்ற சாதிய கட்சிகளுக்கும் விட்டு கொடுப்பதென முடிவு செய்யப்பட்டது .ஆனால் வைக்கோ தனது கட்சிக்கு நகராட்சிகளை ஒதுக்கித் தருமாறு உணர்ச்சிவசப்பட்டு கேட்டார் .ஆனால் மற்றவர்கள் அவரது கட்சிக்கு பல மாவட்டங்களில் செயலாளர் பதவிகளே காலியாக கிடைக்கையில் அதற்கு சம்மதிக்க மறுத்துவிட்டனர் .இதனால் கூட்டத்தை விட்டு வெளியேறிய வைகோ பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது வரலாற்று நாயகன் மோடி வெற்றிபெற்றால் முதலில் பாகிஸ்தான்,பங்களாதேஷ் கைப்பற்றிய பிறகு தமிழ் ஈழத்தை கைப்பற்றி அதை இந்தியாவுடன் இணைத்து ,ஈழத்தமிழ்நாடு அமைத்து அவரை முதல் அமைச்சர் ஆக்குவதாக உறுதி அளித்துள்ளார் .அதனால் இமயம் ஏறி சீனாவை சுண்டைக்காயாக்கும் சண்டமாருதன் மோடி அவர்களுக்கு அதரவு தெரிவிப்பதாகவும் ,தமிழா அனைத்து கட்சிகளின் கூட்டத்தை புறக்கணித்து விட்டதாகவும் கூறினார்.

வெங்கு பயல் மோடி பிரதமர் ஆவதற்கு ஒவ்வொருமாநில பத்திரிக்கைகளுக்கும் காசை அள்ளிவிறைத்து ,தனக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குகிறாராம் .15000 நாறியது போதாதா? பிகாரில் நிதிசை மிரட்ட புத்தகயாவில் சாமியார்களின் குண்டுவெடிப்பு உண்மை வெளிவந்துவிட்டது .
அமிதாப் பச்சன் பெயரில் மோசடி .இங்க்லாந்து அழைத்ததாக் பொய் அடுத்து ஆஸ்ட்ரேலியா எப்போது மறுப்பு வெளியிடும் என்பது தெரியவில்லை ?

எதையும் செய்து விட்டு போ ,உங்களது முன்னாள் அமைச்சரை போட்டுத் தள்ளிவிட்டு முஸ்லிம் தீவிரவாதி மீது பழியை போட்டதை போல பெரிசு அத்வானியை ஏதாவது செய்து இந்தியா முஜாஹிதீன் என்று சொல்லிடதப்பா
பின்குறிப்பு 2012 குஜராத்தேர்தலில் குஜராத்தில் மோடிக்கு 46%ஆதரவுதான் இருந்தது .

கருத்துகள் இல்லை: