Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

வெள்ளி, 11 மே, 2012

செங்கொடி ,


செங்கொடி ,நீங்கள் கொண்டு வந்த 
கேட்பொலி ஆதாரம் ;அவர்கள் ,”அடிங்க’ என்று சொன்னார்களா ?இல்லையா ? என்றால் அடிங்க என்று சொன்னார்கள் என்பதற்கு மட்டுமே 'கேட்பொலி'யை  ஆதாரமாக கொள்ள முடியும் .நியாய சிந்தனையுள்ள நடுநிலையாளர்கள் யாரும் அதை அடித்ததற்கு ஆதாரமாக கொள்ளமாட்டார்கள்.
2. காணொளி ஆதாரம் ;அடிக்கவில்லை என்பதற்கு 'காணொளி 'ஆதாரமாக மிகத் தெளிவாக உள்ளது . அடிக்கவேண்டும் என்ற சிநதனையில் சிலர் இருந்தார்கள் .ஆனால் உங்களின் நிலைக்கு , அதாவது அடிக்கப்பட வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டீர்களே என்று பலர் வருத்தப்பட்டதாகா முல்லா தெளிவாகக் கூறுகிரார்..இதைவிட அடிக்கபடவில்லை என்பதற்கு என்ன ஆதாரம் வேண்டும்?வார்க்கப்பட்ட தோசையை திரித்து மீண்டும் இட்லி பண்ண முயற்சிக்க வேண்டாம்.
மேலும் அங்கே உள்ள துராப்சாவும் அதை ஆமோதிக்கிறார்..அவர் அடிபட்டிருந்தால் , சிலர் எனனை அடித்துவிட்டார்கள் ,இருப்பினும் எனக்கு அது பொருட்டல்ல ,நான் அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டேன்.நான் தாக்கப்பட்டதை விட அவர்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன் என்று நாசுக்காக கூட அவர் தாக்கப்பட்டதை பதிவு செய்திருக்கலாம் ஆனால நடவாத ஒன்றை ஏன் சொல்லவேண்டும்? என்றே அவர் அங்கு ஏதும் கூறவில்லை.
நொண்டி ஆதாரங்கள் நொறுங்கிப்போன பிறகு உதாரணத்தை தேடி பூமியை சுத்திவருகிறார்.என்னிடம் கேட்பொலி இருக்கிறது ,காணொளி இருக்கிறது என்று போட்ட ஆதாரங்கள் பொய்த்துப் போனபிறகு இப்போது பைத்தியம் என்கிறார்.அது யாருக்கு என்பது போக போகத் தெரியும்.கம்யுனிச வெறிபிடித்து பேயாட்டம் போடும் செங்கொடி தனது காட்டுமிராண்டித்தனத்தை நிருபித்து வருகிறார்..இவருடைய உதாரணத்தை அவர்தான் மெச்சிக் கொள்ளவேண்டும்.இவர் படத்தைக் காட்டியது உண்மைதான் .ஆனால் அது வடிவேல் வடிவத்தில் உள்ளது.மக்களிடம் பணத்தை வாங்கி கடவுளை காட்டப்போவதாக காட்டிற்கு அழைத்து சென்று குன்றின் உச்சியை காட்டி அங்கே கடவுள் தெரிவதாக சொல்லி மக்களிடமிருந்து நழுவியது போல ,இவர் நழுவாமல் ,ஒரு சாப்பாடு தட்டு படத்தை காட்டி ,இதுதான் பூமியின் செயற்கைக்கோள் படம் இதை பாருங்கள் ,இது கோளவடிவத்தில் உள்ளது ,என்கிறார்.அங்கு சென்ற நான் நீவிர் காட்டியிருப்பது தட்டு படம் ,அது எப்படி கோள வடிவத்தில் இருக்கும் என்று கூறினால் எனனை பார்த்து பைத்தியம் என்கிறார்.
///தோழர் துராப்ஷாவின் கருத்துச் சுதந்திரத்தை மீறி காட்டுமிராண்டிகளால் தாக்கப்பட்டார். இது சரியா? தவறா? அது தவறானது, காட்டுமிராண்டித்தனமானது என்று ஆதாரத்துடன் காட்டியிருக்கிறேன். ///
ரசியாவில் ஸ்டாலின் ஆட்சியில் உள்ள கருத்து சுதந்திரத்தை கொஞ்சம் மக்கள் மத்தியில் காணொளி ,கேட்பொலி இல்லாவிட்டாலும் , உங்களது சோஷலிச இருப்பிலிருந்தாவது ஒன்றை காட்டலாம் இல்லையா? உழைக்கும் முஸ்லிம் மக்கள் மத்தியில் முஹம்மது நபி[ஸல்] அவர்களை போல படம் போட்டதற்கே கலவரம் நடந்ததை அறியமாட்டீர்களா? அவ்வாறிருக்க குர் ஆனில் இலாத ஒன்றை எங்கிருந்தோ கொண்டு வந்து ஏன் விமர்சிக்க வேண்டும்? முஸ்லிம்கள்,கம்யுனிஸ்ட்கள் மத்தியில் வந்து சோஷலிச உங்களது தெய்வம் ஸ்டாலினோடு ,ஸ்டாலின் கதை பாதி தெரிந்து மீதி முடிவு இல்லாவிட்டால் நித்தியானந்தா கதையோடு இணைத்து முடித்தால் அதற்கு பெயர் விமர்சனமா?கருத்து சுதந்திரமா?இல்லை முஸ்லிம்கள் அப்படி ஏதாவது செய்தார்களா? இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டீர்களா? எப்படியும் நாசமாக போகவேண்டியதுதானே ,இஸ்லாத்தை விமர்சித்தால் , அதை உழைக்கும் மக்கள் மத்தியில் கொண்டு சென்றால் ,அவர்கள் உணர்வுபூர்வமாக எதையாவது செய்ய வேண்டும் ,அதன் மூலம் பிரபல்யமாக வேண்டும் என்பதுதானே உங்களது குறிக்கோள் . எவனும் அடித்துக் கொண்டு சாகட்டும். நாங்கள குளிரறையில் உட்கார்ந்து கொண்டு கீபோர்டு தட்டி வேடிக்கையை ரசிக்கிறோம் என்பது பச்சையான மொள்ளமாறித்தனமா ஆகாதா? இவர் கருத்துப்படி , துராப்சா காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டார் என்று வைத்துக் கொள்வோம் .அப்போது இவரது தோழரை காப்பாற்ற இவர் என்ன செய்தார் ? இவர் தோழர் தாக்கப்படும் போழ்து ஓடோடி வந்து அவருக்கு உற்ற துணையாக இருக்க வேண்டுமா?இல்லையா ? அவர் விசாரிக்க அழைக்கப்பட்டால் அழைத்தவர்களை தொடர்பு கொண்டு அவரது கருத்து சுதந்திரம் பற்றி பேசியிருக்க வேண்டாமா?அவர்களுடன் வாதாடி உமது நியாயத்தை கேட்டிருக்க வேண்டாமா?அவாரில்லாமல் தன்னை காப்பாற்ற எடுத்த முயற்சியில் ,தந்திரத்தில் ,கொஞ்சமேனும் தோழருக்காக செய்யவில்லையே , அதுவும் ஒரு மொள்ளமாரித்தனம் என்பதாலே குறிப்பிட்டுள்ளேன் .
கருத்து சுதந்திரமா?இல்லாத ஒன்றை இட்டு கட்டுவது கருத்து சுதந்திரமா ? ஆதாரம் ,தாரம் இல்லாமல் தவிக்கிறது .இவர் ஆதாரத்துடன் காட்டிவிட்டாராம்.நீவிர் காட்டிய கானொளியில் சிலர் அடிக்க வேண்டும் என்ற சிந்தனையில் இருந்தார்கள் என்று தெளிவாக இருக்கிறது..நீவிர் காட்டிய கானொளியில் அவர் கண்ணியமாகவே காட்டப்பட்டுள்ளார். அதை நீவிர் கன்னியாக ,,,,,,இழுத்துக்கொண்டே போனால் எனெக்கென்ன ஆயிற்று?
////காணொளியில் தோழர் தாக்கப்பட்டார் என்று தான் அந்த முல்லா கூறியிருக்கிறார் என்பதை தெளிவாக நிறுவியிருக்கிறேன். ஒன்று அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது மறுத்து அவரின் விளக்கங்களை கூற வேண்டும். மறுத்து கூற முடியவில்லை என்றால் ஏற்றுக் கொண்டதாகத்தான் பொருள்.///
அடிக்க வேண்டும் என்ற சிந்தையில் இருந்திருக்கிரறாக்கள் என்று முல்லா தெளிவாக கூறுவது தாக்கப்பட்டார் என்று கூறியிருப்பதாக அர்த்தமாம். அதையும் தெளிவாக நிருவியிருக்கிராராம் .கேழ்வரகில் நெய்வடிகிறது,,,,,,,,செங்கொடியும் அவரது செல்லகிளிகளும் தான் நக்கிக் கொள்ளவேண்டும்.மேலும் கேட்பொலியில் பிற சேர்க்கை சாத்தியம் என்றுதான் சொல்லியுள்ளேன் .அதை அவர் மறுத்தது தோடு நில்லாது அதையும் அவரே நிருபித்திருக்க வேண்டும்.இல்லைஎன்றால் நான் அக்கருத்தை வலியுறுத்தாத பொழுது அதை பிடித்து தொங்கி கொண்டிருப்பது ஏனோ? வேறு வாதங்களுக்கு வாய்ப்பில்லை என்று நினைத்துவிட்டாரோ?
அடித்தற்கு கேட்பொலி ஒரு ஆதாரமே இல்லை .அடிப்போம் என்று கூறினார்களா இல்லையா ?என்பதற்கே இந்த கேட்பொலியை ஆதாரமாகக் கொள்ளமுடியும் .
////அடிக்காதீர்கள் என்று சிலர் கூறுகிறார்கள் என்றாலே அவர்கள் அடிக்கப் பாய்ந்திருக்கிறார்கள் என்பதாகத்தான் இருக்கும். ///
அப்படிஎன்றால் அடிக்கவில்லை என்றுதானே அர்த்தம்.
////இல்லையென்றால் அடிக்காதீர்கள் என்று கூற வேண்டிய தேவை இல்லையே.///
அடிக்காதீர்கள் என்று அவரது உறவினர்கள் கூறியுள்ளதால் அடிக்க படவில்லை என்பதுதானே உண்மை.
//இவ்வளவு தூரம் முனைப்பு காட்டியவர்கள் அடிக்க மட்டும் செய்யவில்லை என்றால் அது எப்படி? அப்படி இப்ராஹிம் நம்ப விரும்புகிறார் என்பதால் நாமும் அப்படித்தான் நம்ப வேண்டுமா? பாவம் ///
இவ்வளவு தூரம் கேட்பொலி ,காணொளி எடுத்தவர்கள் ஒரு அடி விழுவதையாவது காட்டியிருக்க வேண்டுமா இல்லையா எப்படி? அப்படி அடித்ததாக செங்கொடி நம்ப விரும்புகிறார் என்பதால் அப்படித்தான் எல்லோரும் நம்பவேண்டுமா?
அடிப்பதை கானொளியில் படம்பிடித்துக் காட்டினாலும் அழுக்கை துடைத்ததாக கூறுவேணாம். . அடித்தால்தானே படம் எடுப்பதற்கு ?நடவாத ஒன்றை எப்படி படம் எடுக்க முடியும்? நல்லவேளை இந்தியாவில் செங்கொடி தெய்வம் ஸ்டாலின் ஆட்சி இல்லை .இல்லைஎன்றால் காணோளியாவது கேட்பொலியாவது ? காணமும் கேப்பையும்தான் கிடைக்கும் சிறையில் .
///இப்போதும் கூட நேரில் கண்ட ஒருவர் தோழர் தாக்கப்பட்டார் என்று கூறியிருக்கிறார். ///
என்னிடம் கூட நேரில் கண்டவர் ஒருவர் கூறினார் ,தாக்கப்படவில்லை என்று.
பரசுராமபுரம் பள்ளியில் கூறியது தீர்ப்பாம் ,முபாரக் பள்ளியில் கூறியது அறிவிப்பாம்.சே ,,உங்களது வியாக்கியானமே தனி அலாதி. முபாரக் பள்ளியின் அறிவிப்பிற்கு யாரும் கட்டுபடவில்லையாம் . பரசுராமபுரம் பள்ளியில் சொன்னபிறகு ஒருவரும் கோழிகடைக்கு செல்லவில்லையாம் .முபாரக் பள்ளியை மஹல்லாவாக கொண்டவர்கள் ஐந்து சதவீதம் இருப்பார்கள் .அதனால் அவர்கள் மட்டும் கட்டுபட்டிருப்பார்கள் .பரசுராமபுரம் பள்ளியை மஹல்லா வாக கொண்டவர்கள் 75 சதவீதம் பேர்கள் இருப்பார்கள் .அதனால் அனைவரும் கட்டுபட்டிருக்க வேண்டும்.ஆக இரண்டுமே அறிவிப்புகள் தான் .
///எந்த இரண்டு பேர் தம்பதியரோ அந்த இருவரோடும் தொடர்பில்லாத இன்னொருவர் மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் அந்த இருவரும் கணவன் மனைவி அல்லர் என்று கூறினால் அது அறிவிப்பா? தண்டனையா? ///
எந்த இரண்டு பேர் தம்பதியரோ அந்த இருவரும் அவர்களோடு தொடர்புடைய பெற்றோரும் தங்களை தம்பதியர்களாக்க எங்கே விண்ணப்பித்து கட்டணம் கட்டி அவர்கள் தம்பதியர்கள் என்று சாட்சிகளுடன் உறுதி செய்யபப்ட்டு ,அவர்களை தம்பதியர்கள் என்று அறிவித்தார்களோ , அந்த ஜமாத்தும் எதன் அடிப்படையில் அறிவித்ததோ ,அந்த அடிப்படையை ,அந்த தமபதியர்களில் ஒருவர் மீறினால் , அவர்களுக்கு அவர்கள் இஸ்லாத்தின் அடைப்படையில் கணவன் மனைவி அல்ல என்று கூறினால் அது அறிவிப்பே .தண்டனை அல்ல .அதன் பிறகும் அவர்கள் கணவன் மனைவியாக வாழ்ந்து அவர்களில் ஒருவருக்கு கசையடி கொடுத்தாலே தண்டனை.சிலர் அந்த அறிவிப்பையே தண்டனையாக கொண்டால் அதற்கு ஜமாஅத் பொறுப்பல்ல .
பிஸ்மி சொல்லி கற்பு அழித்ததாக கூறும் ஒருவர் தனது கடையில் பிஸ்மி சொல்லி கோழியை அறுக்க ஆள் வைத்திருக்கிறார் என்றால் அது கேலி செய்வதாக கொள்ளமுடியும் என்பதே எனது சொல்லின் சாராம்சம் .நான் நேரடியாக கூறினார் என்று கூறவில்லை.
///லூத் ஒரு லூஸு எனும் கட்டுரையில், கட்டுரையாளர் லூத்தை ஏன் லூஸ் என்று கூறுகிறார் என்பது மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தைரியமோ, திராணியோ இருந்தால் கட்டுரையாளர் கூறுவது தவறு என்று நிரூபித்துவிடுங்கள் பார்க்கலாம்.///
செங்கொடி பற்றி கதை எழுத ஆரம்பித்து ,அவரது இணைய தளம் மூடி விட்டு ஓடிவிட்டாதால் அதற்கு மேல் அவரைப்பற்றி ஒன்றும் தகவல் இல்லாததால் மீதி கதையை செந்தோழன் நிகழ்வுடன் முடித்தால் அதற்கு என்ன பெயர்? இருவரும் செந்தோழர்கள் தானே .
மீண்டும் மீண்டும் சொல்லுகிறோம் ,லூது நபி[அலை]அவர்களின் கதையை குர்ஆனில் சொல்லவில்லை. அவர்களின் வாழ்க்கையை ஒரு குறிப்பிட்ட குற்ற செயலுக்காக ,அதை கண்டித்து மக்கள் அதலிருந்து விடுபடவேண்டும் என்பதர்க்ககா ஒரு பாடமாக சொல்லப்பட்டுள்ளது.அதிலிருந்து உமது அல்ப புத்தி கதையை துவங்கினால் முஸ்லிம்கள் கண்டிக்கவே செய்வார்கள்.உங்களுக்கு தேவையானால் அது போன்ற படங்கள் நிறைய இருப்பதால் அங்கே உமிழ்ந்து கொள்ளுங்கள்.மேலும் உமர்[ரலி] பற்றிய ஹதிது புகாரியில் உள்ளது ஹதித் எண் அடுத்து தருவோம்
//பழைய ஏற்பாட்டில் இருப்பதையும் அதுவே குரானில் கூறப்பட்டிருக்கும் விதத்தையும் இதற்கு முன்னர் ஒப்பு நோக்கப்பட்டதே இல்லையா? ///
இதற்கு முன்னர் என்ன ஒப்பு நோக்கப்பட்டது?சொல்லுங்கள்.
///அப்பரசண்டிகளா! இப்படித்தான் பார்ப்பன பயங்கரவாதிகளும் நம்புகிறார்கள். அயோத்தியில் குறிபிட்ட இடத்தில் தான் ராமன் பிறந்தான் என்று. அதை மட்டும் ஏன் மறுக்கிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நம்பிக்கை மட்டும் கேள்வி கேட்கப்படக் கூடாது. அடுத்தவர் நம்பிக்கையை கிண்டிக் கிளறி ஆதாரம் கேட்பீர்கள் அப்படித்தானே. இதற்குப் பெயர்தான் பாசிசம். ///
செங்கொடியின் அறிவின் முதிர்ச்சி வெறித்தனம் ஆகி நாளடைவில் உளற ஆரம்பித்துவிட்டது.இதைத்தான் பட்டுகோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைபாக்குக்கு விலை சொல்வதாக சொல்லுவார்கள்.குர் ஆனில் என்ன உள்ளதோ ,அதை மட்டுமே நாங்கள் நம்புகிறோம் . அந்த நம்பிக்கைப் பற்றி இவரது தச்ச ஆள விமர்சிக்கட்டும் .துச்சமெனக் கொண்டு பதிலுரைப்போம். பைபிளில் உள்ள கதையை குரானின் தொடராக சேர்த்தது மொள்ளமாறித்தனமா இல்லையா? பைபிள் எங்களது நம்பிக்கையா? இதற்கும் ராமன் பிறந்த நம்பிக்கை எங்களுக்கு பொருட்டல்ல அதற்காக அங்குள்ள பள்ளிவாசலை இடித்து இடத்தை வன்முறையில் பெறுவதும் ஒன்றாகுமா?அடுத்தவர் நம்பிக்கைக்கு ஆதாரம் கேட்கவில்லை .குறிப்பிட்ட பள்ளிவாசலை இடிப்பதற்கும் ,அந்த இடத்தை அவர்களிடம் ஒப்படைப்பதற்கும் தான் ஆதாரம் கேட்கப்பட்டுள்ளது.மேலும் இதில் அரசியல் உலகறிந்த உண்மை .அதை தூக்கி கொண்டு இங்கே செங்கொடி வருவது ,தமிழன் போன்றவர்கள் இவர் புகழ் பாடவே .
அடுத்து இவர் அப்ரண்டிஸ் என்பதை நிருபிக்கிறார் .உட்கார்ந்துதான் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று நபி[ஸல்] அவர்கள் நடத்தை நெறியாக வற்புருத்தியுள்ளர்கள்.ஆனால் உட்கார்ந்தால் அசுத்தமாகிவிடும் என்று கருதப்பட்ட இடத்தில் நின்று சிறுநீர் கழித்துள்ளார்கள் .அதை போலவே ,உமர் [ரலி] அவர்கள் இன்ஜிலை வாசித்த சமயத்தில் மக்களுக்குஅது தேவை இல்லை எனப்பட்ட காலம் . முகம்மதுநபி[ஸல்] அதனால்அதை வாசிப்பதை நிறுத்த வேண்டுகிறார்கள்.ஆனால் இப்போது கஹ்பா நிலைக்குமா?குரான் இறைவேதமா ? என்று அவர்கள் இஸ்லாத்தை விமர்சிக்க ,அதை ஒழிக்க முனையும் பொழுது அவர்களோடு தர்கித்து உண்மையை மக்களுக்கு விளக்க அவர்களது வேதத்தை பாராயண செய்தது தவறில்லை.கம்யுனிசத்தில புரளும் தாங்கள் இஸ்லாத்தை இப்படி அரைகுறையாக அறிந்து கொண்டு விமர்சிப்பது அழகன்று .
துராப்சாவின் நிலைபாட்டை மக்கள் அறிந்திருந்தும் அவர் கடையில் கோழிக்கறி வாங்கினார்கள் என்று செங்கொடி கூறியதாலே ,அப்படி என்றால் துராப்சா ஆயிசா[ரலி]அவர்கள் பற்றி கூறிய இந்த கருத்தையும் மக்கள் அறிந்து இருந்தார்களா? என்று கேட்டிருந்தேன் .அதற்கு செங்கொடி என்ன பதில் சொல்லியிருக்க வேண்டும்? ஆம் அலல்து இல்லை என்றுதான் பதில் சொல்லியிருக்க வேண்டும் .ஆனால் அதை செய்யாமல் தனது குரூர புத்தியை வெளி கொணர்ந்து அந்த செய்தியின் உள்ள நுழைகிறார்.செந்தோழன் என்ற பெயரில் துராப்சா ஆயிசா பற்றி எழுதியதை வற்புருத்த்கிறார்.
முகம்மது நபி[ஸல்] அவர்கள் காலத்திலும் அவர்களுக்கு முந்தைய ,பிந்திய காலத்திலும் நடைமுறையில் உள்ள வழக்கபடியே ,.சபிய்யா [ரலி] அவர்கள் கைபர் போரில் கைதானபோளுது அவருக்கு வயது பதினேழி என்று கூறப்படுகிறது.ஆனால் அதற்கு முன்பே அவர் யூதராக இருக்கையிலே இரண்டு திருமணம் செய்துள்ளார் என்றால் அவரது முதல் திருமணம் என்ன வயதில் நடந்திருக்கும்?இந்த மாதிரி இளம் வயதிலே திருமணம் நடந்துள்ளதால் ,தோழிகள் மூலம் இல்லற வாழ்க்கையி அவர்கள் அறிந்து இருக்கவே முடியும்.அதனால் கற்பழிப்பு என்று கூறுபவர்கள் நிர்வாண ஊரில் கோவணம் கட்டியவன் தான் பைத்தியக்காரன் .ஆனாலும் முஹம்மது நபி [ஸல்] அவர்கள் பெண்களின் சம்மதத்துடனே திருமணம் என்று வரையருத்திருப்பதிளிருந்து ,உலகின் முதன் முதலாக பால்யவிவாகத்திர்க்கு முற்றுப் புள்ளி வைத்தது இஸ்லாமே .
மேலும் ,பெண்களை வலுகட்டாயமாக் அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை.[அல் குர் ஆன் 4;19 ]
///இப்ராஹிம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்ற அவசியமில்லாமல் அதை விட தெளிவாகவே குரான் வசனம் இருக்கிறது.///
மூக்கில் வடிவதை நேரடியாகவே துடைத்துக் கொள்ளுங்கள்
குழந்தை திருமணத்தை ஆதரிக்கும் வசனத்தை கூறுங்கள்.

கருத்துகள் இல்லை: