Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

திங்கள், 24 அக்டோபர், 2011

வக்ப் தேர்தல் முடிவுகளும் பஞ்சாயத்து தேர்தல் முடிவுகளும்

அன்பார்ந்த சகோதரர்களே ,அஸ்ஸலாமு அலைக்கும். 

                                                  நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை பார்த்திருப்பீர்கள்.இந்த முடிவுகள் மூலம் சில உண்மைகளை அறிய முடியும்.கடந்த உள்ளாட்சிதேர்தல்களில் 1986 நடந்தது போன்று போட்டிகள் ஏற்பட்டு ஒரே ஊரில் உறவினர்களிடையே குடும்ப உறவுகள் பாதிக்ககூடாது என்று 1996 இல் நிர்வாகம் ஜும்மாவுக்கு பிறகு பொதுக் குழு கூடி போட்டியின்றி பஞ்சாயத்து தலைவரும்,யூனியன் கவுன்சிலர் வேட்பாளரும் தேர்வு செய்யப்பட்டனர்.அதே போன்றே 2001  இலும் தேர்வு செய்யப்பட்டனர்.2006 லும் அதே போன்றே போட்டியின்றி தேர்வுகள் நடந்தன.இருப்பினும் துரதிர்ஷ்ட வசமாக போட்டி  ஏற்பட்டது .

அதே போன்று இப்போதைய உள்ளாட்சி தேர்தல் பற்றியும் ஆலோசனை நடத்த ஜும்மாவுக்கு பிறகு பொது குழுவை கூட்டாமல் மக்கள் அதிகம் கூடாத செவ்வாய் மக்ரிபில் கூட்டம் நடத்தினர் அதில் எடுத்த முடிவுகளை இரவு பதினோரு மணியளவில் மாற்றினார்கள்.இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பத்துக்கும் குறைவானவர்களே .தலைவர் வெகுளியானவர் என்பதும் அவருக்கு இதில் எந்த பங்கும் இல்லை என்பதும் அனைவரும் தெரிந்த விசயம்தான். செயலாளர்,இதற்கு முன்னர் எந்த ஒரு பொது நலனிலும் அக்கறை எடுத்துக் கொண்டவர் அல்லர்.இந்த உள்ளாட்சி தேர்தல் விசயத்திலும் அவர் மேம்போக்காகவே இருந்துள்ளார்.பொருளாளர் ,உடல் நலக் குறைவாக உள்ளார்.கமிட்டி உறுப்பினர்கள் பலருக்கு இந்த கூட்டம் நடப்பதே தெரியாது..உறுப்பினர்கள் அல்லாத சிலர் நாங்கள் தான் நிர்வாக தேர்தலை கொண்டு வந்தோம் ,ஆதலால் நாங்களே நிர்வாகத்தை கவனிப்போம் என்ற ரீதியில் பள்ளியின் நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொண்டு ,அவர்கள் மனம் போன போக்கில் நிர்வாகத்தை கேலிக்குரியதாக்கி விட்டனர்.தனி நபர் பகைமையையும் காழ்ப்புணர்வுகளையும் கொள்கையின் பேரால் மக்களை பிளவுபடுத்தி வந்தனர். அதன் பேரில் பஞ்சாயத்திலும் ஆதாயம் அடைய கனவுகண்டனர். தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தையும் வக்ப் போர்டு என எண்ணிக் கொண்டனர்.இறைவன் அருளால் மக்கள் தீர்ப்பு மாற்றமாகவே இருந்தது.அவனுக்கே புகழனைத்தும். பள்ளிவாசலில் நடக்கும் இத்தனை கேலி கூத்துக்களையும் மக்கள் கண்டு கொள்ளவே இல்லையே என்று தவறாக நினைத்துவிட்டோம்.ஜமாத்தார் மவுனமாகவே இவர்களது நடவடிக்கைகளையே கவனித்தே வந்துள்ளனர்.தவ்ஹித் ஜமாஅத் என்று சொல்லி மக்களை ஏமாற்றி விடலாம் என்ற அவர்களது பசப்புகள் பலிக்கவில்லை.தவ்ஹித் ஜமாத்தினர் என்ன செய்து வருகிறார்கள் என்பதை அவர்கள் அறியாமல் இல்லை.இல்லையெனில் பித்ரா காசுகள் தவ்ஹித் ஜமாத்திடம் ரூ. 115000/= வசூலாகி இருக்குமா? நமதூர் பொது நலனில் எவ்வித அக்கறையும் இல்லாத ,இதுவரை  கலந்து கொள்ளாத சிலர் ,தவ்ஹித் ஜமாஅத் தனது சிறப்பான செயல்பாட்டினால் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வருகிறதே என்ற பொறாமை குணத்தால்   உந்தப்பட்டவர்கள் சூழ்ச்சி செய்தனர்.ஏகத்துவ கொள்கையுள்ள PFI இளைஞர்களை ,ஏகத்துவமில்லாத PFIகளை வைத்து அவதூறுகளை அள்ளி வீசி பிரித்தனர் தங்கள் கையில் ஒரு இளைஞர்கள் க்ரூப் இருக்கிறது என்று எண்ணி பள்ளிவாசலின் நிர்வாகத்தை கைப்பற்ற திட்டமிட்டனர்.இதனிடையே தவ்ஹித் ஜமாத்தினர் மீது மக்களிடம் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அரசியல்வாதிகளையும் மிஞ்சும் வண்ணம் சில அபார சூழ்ச்சிகள் செய்தனர். பள்ளியில் அசருக்கு பின்னர் மவ்ளுத் ஓதியவர்கள் மீது கற்களை வீசினர்.சிந்தா  தர்கா கந்தூரியின்போது யானை ஊர்வலம் தெருக்குள் சென்ற வேளையில் தர்காவின் அரண்மனை கொடி என்று சொல்லப்படும் கொடியை கீழிறக்கி கொளுத்த முயன்றனர். மேலும் தர்காவின் டியுப் லைட்கள் உடைக்கப்பட்டன.இது விசயமாக மறுநாள் தர்கா நிர்வாகம் போலீசில் தவ்ஹித் ஜமாத் மீது கம்ப்ளைன்ட் கொடுக்க சென்றனர்.விவகாரம்   முற்றுவதை அறிந்த தவறு செய்தவன் உண்மையை ஒப்புக் கொண்டதால் போலிஸ் ஸ்டேசனுக்கு சென்றவர்கள் பாதியில் திரும்பி வந்தனர்.அதன் பின்னர் தவ்ஹித் ஜமாஅத் போர்டு சுவரில் மாட்டு சாணியடிப்பதை வழக்கமாக கொண்டனர்.இதை நாங்கள் கண்டு கொள்ளாத வேளையில் தீடிரென்று தர்காவின் நெற்றி சுவரில் மாட்டு சாணியால் பூசியிருந்தனர்.அதாவது தவ்ஹித் ஜமாத் சுவரில் சாணி அடித்ததும்  அவர்களே ,அதன் பின்னர் தர்க்கா சுவரில் சாணியடித்ததும் அவர்களே.தவ்ஹித் சுவரில் சாணியடித்ததால் பதிலுக்கு நாங்கள் தர்கா சுவரில் சாணியடித்தது போல் போலிஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க இப்படி ஒரு அற்புத திட்டம்.இறையருளால் உளவு துறை மூலம் அதுவும்   தகர்க்க பட்டது..சாணியடித்தவர்கள் பெயர்களை கூறியும் அவர்கள் கண்டுகொள்ளப்படவே இல்லை. இவ்வாறாக  தவ்ஹித்  ஜமாத்துக்கு எதிராக செயல்பட்டவர்கள் பள்ளிவாசல் நிர்வாக தேர்தல் கொண்டு வரும்பொருட்டு தங்களுக்கு தெரிந்த வக்ப் போர்டு உறுப்பினர் சிக்கந்தர் மூலமாக பல புகார்கள் செய்தனர்..அதன்  பின்னர் வக்ப் சூப்ரன்ட் உதுமான் மைதின் என்பவர் தேர்தல் இல்லாமல் நிர்வாக கமிட்டி ஏற்படுத்தும் முயற்சி தோல்வி அடைந்ததும் நாங்கள் சொன்ன யோசனைகளையும் ஏற்காது வக்ப் அதிகாரிகள் அவர்கள் கையில் உள்ளனர் என்ற மமதையில் தேர்தலை கொண்டு வந்தனர். தேர்தலில் அணி பிரித்தது முதல் சில தவறுகள் நடக்கவே செய்தன.மேலும் விதிமுறைகளின்படி ஓட்டு பெட்டிகளை சீல் வைத்த பிறகு அவற்றை தனி அறையில் வைத்து பூட்டி சீல் வைத்திருக்க வேண்டும்.அதிகாரிகள் தனி அறையில் திறந்த அலுவலகத்தில் இருந்தே வாக்கு பற்றிய விவரங்களை சரி பார்க்க வேண்டும் . ஆனால் அனைவரையும் வெளி ஏற்றிவிட்டு அனைத்து கதவுகளையும் பூட்டிவிட்டு ஓட்டு பெட்டிகளுடன் இருந்த மர்மம் என்ன?இவ்வாறு அதிகாரிகள் நடந்து கொள்ள விதிமுறைகள் அனுமதிக்கின்றனவா?இல்லை .இந்த தவறுகளை சுட்டிக்காட்டி மறுநாளே தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்குமாறு ஸ்டே ஆர்டர் வாங்க முடியும்.ஆனாலும் நாங்கள் நல்ல முறையில் நிர்வாகம் செய்தால் சரி என்றே விட்டுவிட்டோம் அவர்கள் வீம்புகாட்டமாட்டர்கள் என்று நம்பினோம்.இருக்கட்டும். இப்போது நடந்த தேர்தல் முடிவுகளை பாருங்கள் .பஞ்சாயத்து தேர்தலில் உள்ள ஒன்று முதல் ஐந்து வரை உள்ள வார்டுகளை ஒருவார்டாகவும் ஆறு முதல் ஒன்பது வரை உள்ள வார்டுகளை ஒரு வார்டாகவும் வக்ப் தேர்தலில் பிரித்து இருந்தனர்.அதன்படியே இப்போதுள்ள தேர்தல் முடிவுகளையும் வக்ப் தேர்தலையும் ஒப்பிட்டு பார்த்தால் உண்மை புரியும்.

மெயின் ரோடு ,வடக்குத்தெரு ,நடுத்தெரு மேல்பகுதி நீங்கலாக  அடங்கிய வார்டில் டி.ஏன்.டிஜே ஆதரவு  பெற்ற அப்துல் பாரி அணி பெற்ற ஓட்டுக்கள் ;97 ;வைஸ் உதுமான் அணி பெற்ற ஓட்டுக்கள்  77    தெற்குதெரு,அரபாத் நகர் அடங்கிய வார்டில் அப்துல் பாரி அணிக்கு  32ஓட்டுக்கள்: வைஸ் உதுமான் அணிக்கு 97ஓட்டுக்கள் 
அதே போன்று பஞ்சாயத்து தேர்தலில் ,மெயின் ரோடு ,வடக்கு தெரு ,நடுத்தெரு மேல் பகுதி நீங்கலாக உள்ள வார்டில் ஹனிபாவுக்கு 366  ஓட்டுக்கள்  மதார் அவர்கட்கு286 ஓட்டுக்கள் 
நடு தெரு மேல்பகுதி  ,தெற்கு  தெரு அரபாத்  நகர்  நாடார் தெரு , sc  தெரு அடங்கிய   வார்டில் ஹனிபாவுக்கு 176 ஓட்டுக்களும் மதாருக்கு 174 ஓட்டுக்களும்  விழுந்துள்ளன 
முதல் வார்டில் அப்துல் பாரி  அணி [டிஎன்டிஜே ],வைஸ் உதுமான் அணியை விட 20௦ ஓட்டுக்கள் அதிகம் .அதே வார்டுகளில் ஹனிபா 80  ஓட்டுக்கள் அதிகம்.பெற்றுள்ளார்.அதாவது மொத்த ஓட்டுக்கள் நான்கு மடங்காகும் போது வித்தியாசமும் நான்கு மடங்காகி உள்ளது.
இரண்டாவது வார்டில் வைஸ்உதுமான் அணிக்கு 65  ஓட்டுக்கள் அப்துல் பாரி அணியை விட அதிகம்.அதேபோல் இப்போது நான்கு மடங்காக அதிகம் கிடைக்காவிட்டாலும் ஒரு மடங்காவது அதிகமாக கிடைத்திருக்க வேண்டும்.ஆனால் ஹனிபாவுக்கே 2  ஓட்டுக்கள் அதிகம் கிடைத்துள்ளது.ஹனிபாவுக்கு 176  ஓட்டுக்களும் மதாருக்கு 174  ஓட்டுக்களும் கிடைத்துள்ளன.இதை சமம் என்று வைத்துக் கொள்ளலாம்.நாடார் ஓட்டுக்கள் sc  ஓட்டுக்கள் இருதரப்புக்கும் சமமாக  விழுந்திருக்கின்றன. இப்படி சமமாகவோ  அல்லது ஐந்து அல்லது அதிக பட்சமாக பத்து ஓட்டுக்களோ அதிகமாக வைஸ் உதுமான் அணிக்கு கிடைத்திருக்க வேண்டும். எவ்வ்வித காரணமும் இன்றி 65  ஓட்டுக்கள் அதிகமாக கிடைக்க வாய்ப்பில்லை.ஆக வக்ப் தேர்தலில் மோசடி நடந்திருக்கிறது என்பதற்கு பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் அற்புதமான ஆதாரம்.

கருத்துகள் இல்லை: