Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

செவ்வாய், 23 அக்டோபர், 2012

BEAUTIFUL HDR CITY VIEWS



              
                         Dream Place for Vacations

First World Hotel has 6,000 rooms, theme parks, malls, artificial tropical forest, 80 stores, 90 restaurants, cineplex , karaoke bars and casinos.

located in Malaysia

Beautiful HDR City Views

City Views Pics (14)
City Views Pics (4)
City Views Pics (1)
City Views Pics (2)
City Views Pics (3)
City Views Pics (5)
City Views Pics (6)
City Views Pics (7)
City Views Pics (8)
City Views Pics (9)
City Views Pics (10)
City Views Pics (11)
City Views Pics (12)
City Views Pics (13)
City Views Pics (15)
City Views Pics (16)
City Views Pics (17)
City Views Pics (18)
City Views Pics (19)
City Views Pics (20)

       World's Most beautiful horse

Turkey got the record of having the World's Most beautiful and astonishing looking horse. Here is the sample of the picture taken of the most beautiful gold color elegant horse in turkey.

திங்கள், 22 அக்டோபர், 2012

லஞ்சம் வாங்கி கையும் களவுமாக மாட்டிக்கொண்ட மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்

உலகத்திலே எங்கள் கொள்கையே உண்மையானது என்று பறை சாற்றி வந்த செங்கொடி ,என்ற செத்தகொடியின் கட்சி ஏழை நாடான நேபாளத்தில் ஆட்சியை பிடித்து ஒரு வருட காலம் ஆகவில்லை .அதற்குள் தொழிலாளர் துறை அமைச்சர் லஞ்சபுகாரில் கையும் களவுமாக மாட்டியதால் ராஜினாமா செய்துள்ள அவலத்தை பாருங்கள் .

லஞ்சப் புகார்: நேபாள அமைச்சர் ராஜிநாமா

First Published : 22 October 2012 12:36 AM IST தினமணி 
வேலைக்கு ஆள்களைத் தேர்வு செய்யும் நிறுவனங்களிடமிருந்து நேபாள தொழிலாளர் நலத் துறை அமைச்சர் குமார் பெல்பேஸின் உதவியாளர் லஞ்சம் கேட்கும் விடியோ வெளியானதைத் தொடர்ந்து தனது பதவியை அவர் ராஜிநாமா செய்தார்.
இத்தகவலை அரசின் செய்தித் தொடர்பாளரும், தகவல் தொடர்புத் துறை அமைச்சருமான ராஜ் கிஷோர் யாதவ் தெரிவித்தார்.
முன்னதாக அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யுமாறு குமார் பெல்பேஸýக்கு பிரதமர் பாபுராம் பட்டராய் அறிவுறுத்தினார்.
இதையடுத்து தொழிலாளர் நலத் துறையின் பொறுப்பு, கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சரான பகதூரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள்களை அனுப்பும் நிறுவனங்களை பதிவு செய்து அங்கீகாரம் வழங்க ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று குமார் பெல்பேஸின் உதவியாளர் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதை சிலர் ரகசியமாக கேமராவில் பதிவு செய்து, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினர்.
இதையடுத்து பெல்பேஸ் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இவர் ஆளுங்கூட்டணியில் அங்கம் வகிக்கும் நேபாள கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியைச் சேர்ந்தவர்.
l

புதன், 10 அக்டோபர், 2012

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் 

மாநில தலைமையின் முக்கிய அறிவிப்பு..               தகவல் tntjnet

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, October 10, 2012, 14:19
சகோதரர் பி.ஜே. அவர்களுக்கு வலதுபுற மார்பின் மேற்பகுதியில் (Skin) தோலுக்கடியில் சிறிய அளவில் ஒரு கேன்சர் கட்டி உள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.மேலும் இதுவல்லாத மாற்று மருத்துவ முறைகளிலும் சிகிச்சைகள் உள்ளதாக சிலர் ஆலோசனை கூறுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக படைத்தவனின் அருள் கொண்டே தவிர நிவாரணம் இல்லை என்பதே நமது நம்பிக்கை.
வழக்கம் போல் அவர்கள் தமது பணிகளைச் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
எனவே அவர்களுக்காக வல்ல அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நேரிலோ அல்லது தொலைபேசியிலோ அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். இது குறித்து சகோதரர் பி.ஜே. அவர்கள் மாநில நிர்வாகத்திற்கு அனுப்பிய கடிதத்தை கீழே தருகிறோம்.
இப்படிக்கு
மாநில நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
10.10.2012
சகோதரர் பி.ஜே. அவர்களின் கடிதம்
மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். எனது உடல் நிலை குறித்து உங்களுக்கு இருக்கும் அக்கரையை நான் அறிவேன். ஆனாலும் என்ன சிகிச்சை செய்ய வேண்டி வந்தாலும் என் சக்திக்கு உட்பட்டு என்ன செய்ய இயலுமோ அதை இன்ஷா அல்லாஹ் நான் செய்து கொள்வேன். ஜமாஅத் மூலமோ தனிப்பட்ட நபர்கள் மூலமோ எனது சிகிச்சைக்காக செலவு செய்வதை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
எனது நோய் தனிப்பட்ட மனிதன் என்ற முறையில் எனக்கு ஏற்பட்டுள்ளது. ஜமாஅத் பணிகளால் ஏற்படும் இழப்புகளைத் தான் ஜமாஅத் செய்யும் கடமை உண்டு.
ஒருவேளை என்னால் செலவு செய்ய இயலாத அளவுக்கு பெரும் செலவு ஏற்படும் நிலை வந்தால் நான் அழகிய பொறுமையை மேற்கொள்வேனே தவிர யாருடைய உதவியையும் நான் பெற்று சிகிச்சை மேற்கொள்ள நான் தயாராக இல்லை. இதற்காக யாரிடமும் கடனாகக் கூட வாங்கி செலவிடவும் நான் தயாராக இல்லை. என் சக்திக்கு உட்பட்ட வகையில் நான் முடிவு செய்யும் வகையில் என்னை விட்டுவிடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
என் மருத்துவ செலவு தொடர்பாக எந்த ஆலோசனையும் செய்ய வேண்டாம் என்று கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் சில நிர்வாகிகள் இதை தமக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருப்பதாகக் கேள்விப்படுகிறேன். இது மறைக்க வேண்டிய விஷயம் அல்ல. மறைப்பதால் எந்த நன்மையும் இல்லை. நோய் வந்தால் ஃபித்னா செய்வார்கள் என்று நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறாகும். எந்த ஃபித்னா வந்தாலும் அதற்கு மார்க்க அடிபடையில் பதில் இருக்கும் போது பித்னாக்களுக்குப் பயந்து மறைப்பது ஏற்புடையதாக இல்லை. மறைக்கவும் முடியாது.
நான் மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது அடுத்த நிமிடம் உளவுத்துறைக்கு தெரிந்து எதிரிகளின் இயக்கங்களுக்கும் உடனே தெரிந்து விடும். அவர்கள் வழியாக நம் நிர்வாகிகளுக்குத் தெரியவரும் போது அது ஜமாஅத்தைப் பாதிக்கும். மனிதனுக்கு நோய் வருவது இயல்பானது தான். அல்லாஹ் இதுவரை எந்தப் பெரிய நோயும் இல்லாமல் எனக்கு பேருதவி புரிந்துள்ளான். இதுதான் ஆச்சரியமானது. இப்போது நோய் வந்துள்ளது ஆச்சரியமானது அல்ல. ஏதோ கொலைக் குற்றத்தை மறைப்பது போல் நோயை நீங்கள் மறைப்பதாக நான் கருதுகிறேன்.
புற்றுநோய் என்பது ஆபத்தான நோய் என்றாலும் மருத்துவ சிகிச்சை பெரும்பாலும் பயனளிப்பதில்லை என்றாலும் அல்லாஹ்வின் அருளால் குணமாக வாய்ப்பு உள்ளது. எனவே இதை நிர்வாகிகளுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் சொல்வதால் பலருடைய துஆக்கள் எனக்குக் கிடைக்கும். அதை நீங்கள் தடுக்கத் தேவை இல்லை.
அன்புடன்
பி.ஜைனுல் ஆபிதீன்
10.10.2012