Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

இந்த போட்டா விற்கான விளக்கம்

  இந்த போட்டா விற்கான விளக்கம் கீழே 


பள்ளி கட்டிடத்திலும்,குழந்தைகள் விளையாட்டு மைதானமாக உபயோகிக்க கொடுக்கப் பட்ட மனையிலும் வேறு சில கட்சிகள் ,மத இயக்க காரியங்களுக்காக பயன்படுத்துவதாகவும் தெரிய வருகிறது..இக்காரியங்கள் கொடுக்கப்பட்ட ஒப்பந்தங்களை மீறிய செயலாகும்.,என்று நமது பள்ளிவாசல் தலைவர் அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளார்கள்.
கடந்த இருவருடங்களுக்கு முன்பு பெண்கள் ,ரமலான் இரவு தொழுகை நடத்த பள்ளி வகுப்பறைகள் கொடுத்ததை கூறியுள்ளார்கள்.இந்த வருடம் ஆண்கள் இரவு தொழுகை நடத்த இடம் கேட்டார்கள் .நான் கொடுக்கவில்லை.ஆனால் தொழுகை நின்று விட்டதா?இறைவன் அருளால் ஒரு சகோதரர் இடம் கொடுத்துள்ளார்.
அதைபோல் பெருநாள் தொழுகை நடத்த மைதானத்தை கொடுத்ததையும் குற்றம் கண்டுள்ளனர்.இன்சா அல்லாஹ் இந்தவருடம் மைதானத்தை கொடுக்காவிட்டால் திடல் தொழுகை நின்றுவிடுமா? இறைவன் வேறு எங்காவது இடம் கொடுப்பான் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.மேலும் இன்னொரு விசயத்தையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.தூத்துக்குடி தவ்ஹித் ஜமாத்க்கு திடல் தொழுகை நடத்த நகராட்சி பள்ளிமைதானத்தில் இடம் கொடுத்தார்கள்.ஆழ்வார் திருநகரில் ஜி.டி.ஜிஸ்கூல் மைதானத்தில் இடம் கொடுத்தார்கள்.என்பதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
பள்ளி கட்டிடத்தை ரத்த தான முகாம் ,இலவச மருத்துவ முகாம் தவ்ஹித்ஜமாஅத் சார்பில் நடை பெற்றபோது இடம் கொடுத்ததையும் இங்கு குற்றம் பிடித்துள்ளார்கள்.நமது ஜமாஅத் தலைவர் அவர்களே இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டதைத்தான் மேற்கண்ட போட்டாவில் பார்க்கிறீர்கள்.இதுபோன்ற நற் சேவைகளுக்கு யார் கேட்டாலும் பள்ளி கொடுப்பது வழக்கம். மற்ற ஊர்களிலும் டி.என்.டிஜே சார்பாக ரத்ததான முகாம்,மருத்துவமுகாம் நடைபெறவே செய்கின்றன.பல ஸ்கூலில் இடம் கொடுக்கவே செய்கின்றனர்.இதெல்லாம் ஒருகுற்றமா? 


திங்கள், 8 ஆகஸ்ட், 2011

தினமணியின் அயோக்கியத் தனம்


பயங்கரவாதி என்று இந்து மதத்தைச் சேர்ந்தவரை தவறாகச் சுட்ட ராணுவம் 

First Published : 08 Aug 2011 03:39:20 PM IST


காஷ்மீர், ஆக.8: ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த மனரீதியாக பாதிக்கப்பட்ட ஒருவரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அபு உஸ்மான் என அடையாளம் காணப்பட்ட ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். எனினும் பின்னர் பிரேதப் பரிசோதனையின்போது அவர் அபு உஸ்மான் இல்லை;  மனநலம் பாதிக்கப்பட்ட இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
ராணுவ வீரர் ஒருவர் அளித்த தவறான தகவலின்பேரில் பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய ராணுவத்தின் 16-வது படைப்பிரிவின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
கருத்துகள்

8/8/2011 10:39:00 PM
 So there is no terrorist in Hindu? it's belong to particular religion only? don't give report like this. 
By Muthu Raja 
8/8/2011 10:32:00 PM
 முஸ்லிம் மக்களையும் ராணுவம் சுட்டுகொல்கிறது ஹிந்து என்றல் நியூஸ் வருகிறது முஸ்லிம் என்றல் தீவிரவாதி என்றுமூடி மறைகிறது எந்த அப்பாவியாய் சுட்டாலும் தப்பு தப்புதான் 
By shahul 
8/8/2011 9:25:00 PM
 TM
 இதே தவறாக ஒரு முஸ்லிமோ அலது ஒரு christeen யோ தவறாக சூட் பண்ணி இருந்தால் என்ன நடந்திருக்கும் இந்தியாவில் 
By செந்தில்வேல் 
8/8/2011 6:08:00 PM
M
 பயங்கரவாதிகளே இந்து மதத்தில் இல்லாதவாறும், முஸ்லிம்கள் தான் பயங்கரவாதிகள் போன்றும் செய்தியை சித்தரிக்கும் ஆசிரியரின் நோக்கம் என்ன? ஊடகங்கள் மத சாயல் பூசிகொள்வது இந்திய ஜனநாயகத்துக்கு அழிவே அன்றி வேறு இல்லை...! ஆசிரியர் செய்தியை திருத்தி வெளியிடுவது அவர் கடமை....! 
By நவாப் 
8/8/2011 4:39:00 PM
 தினந்தோறும் கஷ்மீரில் ராணுவம் அப்பாவி முஸ்லிம்களை பயங்கரவாதி என்று சித்தரித்து கொடூரமாக கொலை செய்து கொண்டிருகிறது. இன்று பாவம் ஒரு அப்பாவி இந்து சகோதரர் மாட்டி கொண்டாற்போல் தெரிகிறது. இன்று இராணுவத்தினரின் கண்களுக்கு முஸ்லிம்கள் யாரும் தென்படவில்லை போலும். தற்போது நாட்டு மக்களை காப்பதை விட கொள்ளுவதே ராணுவதினற்கு பிடித்துள்ளது போல் தெரிகிறது. ஒருவரை தீவிரவாதியா அல்லது அப்பாவியா என்று கண்டு பிடிக்க முடியாமல் இருந்தால் அவர் எதற்கு ராணுவத்துக்கு போக வேண்டும். வேறு எங்காவது புரோட்டா மாஸ்டர் வேளைக்கு போய் புரோட்டா சுட வேண்டியது தானே. 
By kadhar 
8/8/2011 4:30:00 PM
 செய்தியின் தலைப்பை தினமணி மறுபரிசீலனை செய்ய வேண்டும். தலைப்பில் இந்து என்ற ஒரு வார்த்தை தவறான கண்ணோட்டத்தை காண்பிப்பதாக உள்ளது. ஒரு வேலை இறந்தவர் முஸ்லிமாக இருந்தால் "பயங்கரவாதி என்று முஸ்லிம் மதத்தை சேர்ந்தவரை தவறாக சுட்ட ராணுவம்" என்று தலைப்பு போடுவீர்களா? யோசித்துப்பாருங்கள். முஸ்லிம்கள் எல்லோரும் தீவிரவாதிகள் அல்ல. தீவிரவாதிகளுக்க்ம் அல்லாதவர்களுக்கும் மத சாயம் பூசி தங்கள் நடுநிலை தவறால் தவறி விட வேண்டாமே! 
By அன்பு 
8/8/2011 4:25:00 PM
 இதே போன்று ராணுவத்தினரால் பல முஸ்லிம்கள் தவறுதலாக சுடப்பட்ட போது 'பயங்கரவாதி என்று இஸ்லாமிய மதத்தை சார்ந்தவாரை தவறாக சுட்ட இராணுவம்' என்று தினமணி ஏன் செய்தி வெளியிடவில்லை? 

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011


கண்ணியவான்களே! யானையை சோற்றில் மறைக்கும் பொய் புளுகும் நிர்வாகம் பாரீர் !
மீனா மெற்றிகுலேசனில் வேலை பார்க்கும் இப்ராஹீம் என்பவர்,அப்போதைய பள்ளி நிர்வாகத்தில் குடிசை அமைத்து ஜும்மாநடத்தவும் அரபி பள்ளி நடத்தவும்
மூன்று ஆண்டுகள் ஒப்பந்தம் போட்டு பெற்ற இடத்தில் , மூன்று வருடங்களாக குடிசை அமைக்கவில்லை.ஜும்மா தொழுகை நடத்தவில்லை.அரபி பள்ளி நடத்தவில்லை .வம்புக்காக இருநூறு ரூபாய் வாடகை கொடுத்து வருகிறார்,இப்போது கட்டடம் கட்ட முயற்சிக்கிறார் .எனவே அந்த இடத்தை காலி பண்ண வேண்டும் .மேலும் கட்டிடம் கட்ட இடைக்கால உத்தரவும் வக்கீலுக்கு பத்தாயிரம் ரூபாய் பீஸ் கொடுத்து வாங்கியுள்ளனர்.பள்ளிவாசல் நிர்வாகத்தினர்.
கொஞ்சம் கூட இறை அச்சம் இன்றி தொழுகை இல்லாத நிர்வாகம் , பள்ளிவாசலுக்கு வந்தால் கால் வலிக்கும் நிர்வாகம் ,தூத்துக்குடிக்கும் .முரப்பனாடுவுக்கும் திருவை குண்டத்திற்கும் கால் வலி இல்லாமல் அலையும் நிர்வாகம் ,ரமலான் மாதத்தில் பொய் கேஸ் தொடுத்துள்ளார்கள்.
பள்ளிவாசலுக்கு நல்ல இமாமை நியமிக்க,வழியின்றி காலிமனையை கைப்பற்ற மக்களிடம் நஜாத் காரர்களை இல்லாமல் ஆக்கப் போகிறோம் ஊரை ஒற்றுமையாகஆக்கப் போகிறோம் என்று கள்ளத்தனமாக வசூல் செய்து போலீசுக்கும் வக்கீலுக்கும் காசை கரியாக்கும் செயலை இந்த நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.இமாமுக்கும் பள்ளி ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுப்பதில் கறாராக இருக்கும் நிர்வாகம் வக்கீலுக்கும் கோர்ட்டுக்கும் காசை விரயமாக்கி வருகிறது.தங்கள் குடும்பங்களிலே ஒற்றுமையாக இருக்காத இவர்கள் ஊர் ஒற்றுமைக்கு பாடுபடுவது போல் வேஷம் காட்டி மக்களை ஏமாற்றும் இவர்களே ஊர் ஒற்றுமைக்கு முதல் எதிரிகள்.
மீரா என்ற பெயரை வக்கீலிடம் சரியாக சொல்லாமல் மீனா என்று சொல்லி,அங்கெ நான் வேலை பார்ப்பதாக எழுதி என்னை கேவலப் படுத்துவதாக இவர்களுக்கு நினைப்பு.அல்லாஹ் யாரை கேவலப் படுத்துவான் என்பது போக போகத் தெரியும்

திங்கள், 1 ஆகஸ்ட், 2011


ஒற்றுமை வியாபாரிகள்

ஒற்றுமை வியாபாரிகள் 
                                                                                                                            அபுஷிரின் 
                  நம்மவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஏதாவது பிரச்னைகள் வந்தால்," நம்மிடம் ஒற்றுமை இல்லை அதுதான் இந்த கதி" என்ற வார்த்தை எல்லோரிடமும் ஒற்றுமையாக வரும்.தனக்கு வேண்டாதவனுக்கும் அந்நியருக்கும் பிரச்னைகள் வந்து அதில் வேண்டாதவன் பாதிக்கப்பட்டால் இவனுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்என்பார்கள்.அதே சமயத்தில் அவன் அந்நியரால் பாதிக்கப் பட்டால் நம் சமுதாயத்தில் ஒற்றுமை இல்லை என்ற கோசத்தை ஓங்கி முழங்குவார்கள்.அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் 'முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்று கூறி தங்களது அமைப்பில் சேருமாறு அழைக்கின்றனர்.அவர்கள் கூறும் ஒற்றுமை என்பது ஒரு தலைமையின் கீழ் அணைத்தது முஸ்லிம்களும் செயல்பட வேண்டும் என்பதே .ஒவ்வரு அமைப்பிலும் ஒரு தலைவர் இருக்கும் நிலையில் ,அந்த தலைவருக்காக ,அந்த தலைவரை சுற்றி ஒரு கூட்டம் இருக்கும் வரையில் எப்படி ஒரு தலைமையின் கீழ் ஒற்றுமை வரும்,?.ஆக அந்த தலைவர்கள் ஒற்றுமை பற்றி பேசுவது தங்களது ஆதாயத்துக்காகவே ஒழிய சமுதாயத்துக்காக அல்ல என்பதே உண்மை. 


ஒற்றுமை பற்றி பேசுபவர்கள் மக்களை எளிதில் வெல்ல அவர்கள் கண்ட உத்தி ,உணர்வுகளை தூண்டி விடுவதுதான் .மற்ற மக்களை விட உணர்வுகளுக்கு எளிதில் அடிமையாவதில் முதலிடம் வகிப்பது முஸ்லிம்களே!. தூண்டி விடப்படும் உணர்வுகள் மெல்ல, மெல்லஇளைஞர்களின் உள்ளத்தில் சேர்ந்து உள்ளங்கள் நிரம்பியதும் அது வெடிக்கும் பொழுது சமுதாயம் அதன் பாதிப்பை தாங்குகிறது.ஆனால் சமுதாயத் தலைவர்கள் அதன் ஆதாயத்தை அடைந்து விடுவார்கள்.ஆதாயம் அடைந்த  தலைவர்கள் மெல்ல மறைந்து விடுவார்கள்.பாதிக்கப்பட்ட சமுதாயமோ மீண்டும் ஒற்றுமையை தேடி அலைகிறது.ஆனால் மக்களிடம் உண்மையான ஒற்றுமை எங்கிருந்து வர வேண்டுமோ ,அதை சுட்டி காட்டினாலோ,அதை தட்டி கழிப்பதில் காலத்தை கடத்தி விடுகிறார்கள்..கடந்த சில நாட்களுக்கு முன் நமதூரில் மூன்று இளைஞர்கள் நண்பர் ஒருவரை அவரது வீட்டில் சந்தித்து இரண்டாவது ஜமாத்தை நிறுத்துவது பற்றியும் ஒற்றுமையாக இருப்பது பற்றியும் இரு தரப்பிலும் அமர்ந்து பேசுவோம் என்றும் ஆனால் அங்கு குரான் ஹதீத் பற்றி பேசுவதை தவிர்க்குமாறும் கூறியுள்ளனர்.தவறு அந்தஇளைஞர்களிடம் இல்லை. இன்றைய சமுதாயத்தின் நிலையை இந்த "ஒற்றுமை"இளைஞர்கள் மிகத் தெளிவாக படம் பிடித்து காட்டுகின்றனர்.இவர்களது வாதமெல்லாம் குரான் ஹதித் பற்றி பேசினால் ஒற்றுமை ஒட்டாத மை ஆகிவிடும் என்பதுவே. அவ்வாறெனின்,அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்பட்டவர்கள் என்ற அர்த்தத்தில் வரக் கூடிய முஸ்லிம் என்ற பெயருக்கு சொந்தக்காரர்கள் ஒற்றுமையாக வாழவேண்டு மென்றால் குர்ஆனையும் ஹதித்களையும் புறக்கணிக்க வேண்டுமா? என்பதே நமது கேள்வி.
ஒற்றுமையை எங்கிருந்து கொண்டு வர வேண்டுமோ அங்கிருந்து ஆரம்பிப்பதில்லை. அதனாலேயே பாலஸ்தீனத்தில் இத்தனை ஆண்டுகள் போராடியும் வெற்றி கிடைக்க வில்லை"நாரேதக்பீர் " "ஈட்டி முன் நிறுத்தினாலும் ஈமானை இழக்க மாட்டோம்" போன்ற கோசங்கள் மக்களிடம் ஒற்றுமையை நிலைக்க செய்யாது. குர்ஆனை ஒற்றுமையின் அடிப்படையாக்குங்கள்  என்றால் அந்த குரானிலிருந்தே ஒற்றுமையை கயிறாக காட்டி,அதன் அர்த்தத்தை திரித்து, அந்த கயிறு எப்படி இருக்கும்? எங்கிருந்து வரும் என்பதை சொல்ல மறந்துவிட்டார்கள்.குர்ஆன் அல்லாஹ்வின கயிற்றை பற்றி பிடித்துக் கொள்ளுங்கள் என்று மிகத் தெளிவாக கூறியிருக்கையில் ,இவர்களோ ஒற்றுமை என்னும் கயிறு என்கிறார்கள்.அல்லாஹ்வின் கயிருவை பற்றி பிடித்துக் கொள்ளுங்கள் என்றால் அல்லாஹ்வுக்கும் நமக்கும் தொடர்பு  ஏற்படுத்தக் கூடிய கயிறு குர்ஆனே என்று ஆழாமாக சிந்திக்க தவறிய மொழி பெயர்ப்பாளர்கள் மேலோட்டமாக ஒற்றுமை என்னும் கயிறு என்ற மொழியாக்கத்தை திணித்து விட்டார்கள். அந்த மொழியாக்கம் தவறு என்பதை அரபு இலக்கண வாயிலாகவும் ஏனைய மொழியாக்கங்களின் வாயிலாகவும் நிருபித்த பிறகும் அதை மறுக்க முடியாதவர்கள் அந்த பழைய தவறான மொழியாக்கத்தை கை விட மறுக்கிறார்கள் என்றால் இவர்கள் மூலம் எப்படி ஒற்றுமையை கொண்டு வர முடியும?
முஸ்லிம்களின் ஒற்றுமை பற்றி அதிகமாக பேசுவதும் அதற்கு வேட்டு வைப்பதும் மர்ர்க்க அறிஞர்களே .ஏனெனில் இவர்கள் மக்களை கிள்ளுக் கீரையாக நினைத்துக் கொண்டு, இவர்களுக்கு என்ன மார்க்கம் தெரியும்?நாங்கள் சொல்லுவதை கேட்டுக் கொண்டு அப்படியே பின்பற்ற வேண்டும். கேள்விகள் கேட்க ஆரம்பித்தால் வருமானத்தில் இடி விழுந்து விடும் என்பதால் மக்கள் தங்களிடம் கேள்விகளே கேட்கக் கூடாத நிலையிலே அவர்களை அறியாமையிலே மூழ்க வைத்திருந்தனர். இந்த மார்க்க அறிஞர்கள் தங்களுக்கு ஆதாயம் என்றால் ஒற்றுமை பற்றி பேசுவார்கள். தங்களது ஆதாயம் என்றால்  அதே ஒற்றுமைக்கு எதிராகவும் பேசுவார்கள். இவர்கள் முஸ்லிம்களின் நலனை பற்றி சிந்தித்தால் எப்போதே முஸ்லிம்களுக்காக இட ஒதுக்கீடு பற்றி வாயளவில் கூட பேசியிருக்கவேண்டும்.அதை கூட அவர்கள் செய்யவில்லை.முதன்முதலாக தவ்ஹித் சிந்தனை யாளர்கள் தமிழகத்தில் தவ்ஹித் கொள்கைகளை மக்கள் மத்தியில் சொல்ல வேண்டும் என்பது பற்றி ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள் ..1984அப்போது ஓர் பெரும் செல்வந்தர் கூறினாராம்.,'என்னிடம் ஒரு நூறு மில்லியன் டாலர் கொடுங்கள் ,ஒரே நாளில் தமிழகத்தை தவ்ஹித் கொள்கைக்கு கொண்டு வந்துவிடுகிறேன் என்று, எப்படி என்றால் தமிழக ஜமாத்துல் உலாமா சபையை கூட்டி ,உங்களில் ஒவ்வொரு மவ்லவிகளுக்கும் ஆளுக்கு பத்து லட்ச ரூபாய் தருகிறேன் ,நீங்கள் இனி மவ்லிது,தர்கா போன்ற சிர்க்,மற்றும் பித்னா,அனாச்சாரங்கள் மார்க்கம் இல்லை என்றும் குர்ஆனும் ஹதித்கலுமே மார்க்கம் என்று மக்களிடம் பிராச்சாரம் செய்ய வேண்டும் என்று கூறினால் போதும் .அல்லாஹு அக்பர் என்று கூறி கரும்பும் அதை திங்க கூலியும் தரும் பொது எங்களுக்கு உலகத்தில் வேறு என்ன வேண்டும் என்று பெற்றுக் கொண்டு அவர்கள் தங்களிடம் கட்டுண்டு கிடக்கும் மக்களை ஒரே நாளில் தவ்ஹித் கொள்கைக்கு கொண்டு வந்து விடுவார்கள் என்று அந்த செல்வந்தர் கூறினார்.இது முற்றிலும் உண்மை.இந்த மவ்லவிகளின் சொல்லை ஒவ்வொரு முஸ்லிம்களும் கண்மூடித்தனமாக பின்பற்றாமல்  சிந்தித்து பின்பற்றுவார்களே யானால் ஒற்றுமை முஸ்லிம்களிடையே  நொடிப்பொழுதில்  வந்து விடும் ,என்பதையே அல்லாஹ் ,குரானில்தனது குரானை பற்றி பிடித்துக் கொள்ளுமாறு கூறுகிறான்.[தொடரும் இன்சால்லாஹ்]