Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

செவ்வாய், 25 ஜனவரி, 2011


திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மை ஸ்கூல் நிறுவனத்துடன் இணைந்து முதன்முறையாக ஒரு வருட MBA படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. 

செவ்வாய், 18 ஜனவரி, 2011

மதுரையில் இளம்பெண்ணை கடத்திய எஸ்.டி.பி.ஐ


மதுரையில் இளம்பெண்ணை கடத்திய எஸ்.டி.பி.ஐ

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 21, 2011, 20:17
”தேசத்தை நமதாக்குவோம்! மாற்றுப்பாதைக்கு வழிவகுப்போம்” என்பது இதுதானோ?
கடந்த 12.1.11 வியாழன் அன்று மதுரை மஹபூபாளையம் பகுதியச்சேர்ந்த 17 வயது நிரம்பிய ஒரு பெண்ணை கடத்தியதாக மதுரை மாவட்ட எஸ்.டி.பி.ஐயின் 29வது வார்டு கிளை பொருளாளர் அல்லாஜி மற்றும் எஸ்.டி.பி.ஐ துணைச்செயலாளர் பரக்கத், அந்தப்பகுதியின் எஸ்.டி.பி.ஐ செயல்வீரர் பாபு என்பவர் உட்பட நான்கு பேரை எஸ்.எஸ்.காலணி காவல்துறை கைது செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபச்சாரத்தில் ஈடுபட்டு சமுதாயத்தைச் சீரழித்த பெண்களுக்கு தக்கபாடம் புகட்டவே அந்த பெண்ணை கடத்தியதாக கூறுகின்றனர் அந்த கொள்கை(?)வாதிகள். ஆட்டோவில் வைத்து கடத்திச்செல்லும் போதே என்னை படாத பாடுபடுத்திவிட்டார்கள் என்று கடத்தப்பட்ட பெண் காவல்நிலையத்தில் கூடுதலாக புகார் தெரிவித்துள்ளார்.
விபச்சாரத்தை காட்டுப்படுத்துவதற்காக இந்தக்கடத்தல் என்றால், இந்திய திருநாட்டில் அதுவும் தமிழகத்தில், அதுவும் மதுரை மாவட்டத்தில், அதுவும் மஹபூபாளையம் பகுதியில் மட்டும் தான் இது நடைபெறுகின்றதா? இந்தியா முழுவதும் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் தமிழ்நாடு முழுவதுமாவது இந்தக்கொள்கை(?)க்கூட்டம் விபச்சாரம் செய்யும் விபச்சாரிகளை கடத்தாது ஏன்? மதுரையைத் தவிர்த்த மற்ற ஊர்களில் அவர்கள் செய்யும் தொழிலில் இவர்களுக்கு பங்குண்டு என்பதற்காகத்தான் மற்ற விபச்சாரிகளை கடத்தாமல் விட்டுவைத்துள்ளார்களா? நியாயமான நமது இந்த சந்தேகத்திற்கு அவர்கள் பதில் சொல்லக்கடமைப்பட்டுள்ளனர்.
விபச்சாரத்தில் ஈடுபட்டு சமுதாயத்தைச் சீரழித்த பெண்களுக்கு தக்கபாடம் புகட்டவே அந்த பெண்ணை கடத்தியதாக இந்த எஸ்.டி.பி.ஐ கொள்கை(?)வியாதிகள் கூறிவரும் அதே நேரத்தில், எஸ்.டி.பி.ஐயின் அந்த நிர்வாகிகள் அம்ற்ரும் செயல்வீரர் உட்பட மற்ற நால்வரும் அந்தப்பெண்ணை விலைபேசி விபச்சாரத்திற்கு அழைத்து செல்லும் வழியில் ஏற்பட்ட தகராறு காரணமாகத்தான் இந்த கொள்கை(?)குன்றுகளை அந்தப்பெண் போலிசில் மாட்டிவிட்டு விட்டார் என்றும் பரவலாக பேசப்படுகின்றது.
அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், ”தேசத்தை நமதாக்குவோம்! மாற்றுப்பாதைக்கு வழிவகுப்போம்” என்ற இவர்களுடைய சுலோகத்தின் செயல்முறைவிளக்கத்தை மக்களுக்கு விளங்க வைப்பதற்காகத்தான் இந்த கடத்தல் நிகழ்ச்சியோ என்ற சந்தேகம் நம் உள்ளத்தில் எழுகின்றது.
அத்தோடுமட்டுமல்லாமல், எஸ்.டி.பி.ஐயின் பொருளாளர், துணைச்செயலாளர் மற்றும் செயல்வீரர்கள் இணைந்து கூட்டுமுயற்சியில் இந்த கேடுகெட்ட வேலையை செய்திருப்பது நமக்கு மற்றொரு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. “பசியிலிருந்து விடுதலை – பயத்திலிருந்து விடுதலை” என்று இவர்கள் தங்களது பேனர்களில் போடுகிறார்களே, இவர்கள் எந்தப்பசியிலிருந்தும், எந்த பயத்திலிருந்தும் விடுதலை பெற இந்த சமுதாயத்தை அழைக்கிறார்கள் என்பது தான் நமது அடுத்த சந்தேகம்.
கடத்தலில் ஈடுபட்ட இந்த கேடுகெட்டவர்களை போலீஸார் துரிதமாக செயல்பட்டு கைது செய்தனர். கைது செய்த சம்பவம் மதுரையில் பரவ, கேவலப்பட்ட செயலில் ஈடுபட்ட இந்த தியாகிகளுக்கு(?) ஆதரவாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் முஹம்மது கொஸ் களமிறங்கியுள்ளார். மாமா கட்சி என்ற தங்களது கட்சியின் பெயருக்கு தகுந்தாற்போல் இவர்களது நிலை இருப்பதில் நமக்கொன்றும் ஆட்சரியமில்லை. நாங்கள் தான் மாமா கட்சி என்பதை இவர்கள் நிரூபிக்க அருமையான சந்தர்ப்பமாக இதை அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்.
இப்படிப்பட்ட கேவலமான செயல்களுக்கெல்லம் வரிந்துகட்டிக்கொண்டு வரவேண்டாம் என்று காவல்துறை இவர்களுக்கும், மற்ற எஸ்.டி.பி.ஐ மாவட்ட நிர்வாகிகளுக்கும் அறிவுரை சொல்லி அனுப்பிவைத்துளது. மறுபக்கத்தில், பரையர் பேரவையினர் இந்த கேடுகெட்டவர்களை உடனே பிடித்த காவல்துறைக்கு நன்றி தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் இந்த கொள்கை குன்றுகளைப்பற்றி சிலவிஷயங்களை இந்த நேரத்தில் நாம் பதிவு செய்யக்கடமைப்பட்டுள்ளோம். இவர்கள் எந்த ஒருபணியை கையில் எடுத்தாலும் அதில் தங்களது கேவலபுத்தியை காட்டாமல் இருக்கமாட்டார்கள். முதலில் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிய வாருங்கள் என்று அழைப்புவிடுத்தார்கள். ஜனநாயகம் என்பது இணைவைத்தல் என்றார்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இப்படித்தான் கொடிபிடித்து ஆர்பாட்டம், போராட்டம் நடத்தி,
கண்டிக்கிறோம்; கண்டிக்கிறோம்;
அபூஜஹிலை கண்டிக்கிறோம்;
திரும்பிப்போ! திரும்பிப்போ!
அபூஜஹிலே திரும்பிப்போ!”
கோஷம் போட்டர்களா? என்றெல்லாம் கேட்டு நம்முடைய அறப்போராட்டங்களை கேலிசெய்தார்கள். அதிலாவது அவர்கள் உண்மையாளர்களாக இருந்தார்களா?
எதையெல்லாம் இணைவைத்தல் என்று விமர்சித்தார்களோ அதைவிட கேவலமான நிலைக்கு சென்று “விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து பேனர்” வைக்கும் அளவுக்கு ஆகிவிட்டனர். அதைப்போல ஏழைகளுக்கு நாங்கள் தோல்பணத்தை வசூலிக்கின்றோம் என்ற பெயரில் வசூல் செய்து வாரிச்சுருட்டியதாகட்டும், பித்ராவை வசூலிக்கிறோம் என்ற பெயரில் ஏப்பம் விட்டதாகட்டும், 20பேர் படிக்கும் மதரஸாவிற்கு வசூல் செய்கின்றோம் என்ற பெயரில் நாடு முழுவதும் வசூல்வேட்டை நடத்தியதாகட்டும், பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு நிதியுதவி என்ற பெயரில் பல லட்சங்களை வசூலித்து வாயில் போட்டதாகட்டும் இவர்களுடைய அத்தனை அத்தனை அஜண்டாக்களிலும் தாங்கள் கேடுகெட்டவர்கள் என்ற தனிமுத்திரை பதிக்க இவர்கள் தவறியதில்லை.
அந்த வழியில் தற்போது இந்த கொள்கைக்குன்றுகள் விபச்சாரத்தை தடுக்கப்போகின்றோம் என்ற பெயரில் புதிய அஜண்டாவை கையில் எடுத்துள்ளனர். இவர்கள் வழியில், ”தேசத்தை நமதாக்குவோம்! மாற்றுப்பாதைக்கு வழிவகுப்போம்” என்ற பாதையில் சமுதாயம் செல்லுமேயானால், தேசம் நமதாகாமல், மறுமையில் எரியும் நரக நெருப்பு தான் நமதாகும், இந்த வழிகேடர்கள் காட்டும் பாதை நரகப்பாதையாகத்தான் இருக்குமே தவிர, மாற்றுப்பாதையாக இருக்காது, இவர்களின் இந்த மாற்றுப்பாதை நரகப்பாதைக்குத்தான் வழிவகுக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

தப்லீக் பற்றி அறிந்து கொள்ள
இங்கே க்ளிக் செய்யுங்கள். 
.http://www.onlinepj.com/vimarsanangal/ithara_vimarasanagal/thableek_jamath_patri/ .


பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா  பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள 


இந்த லிங்கில் க்ளிக் செய்யவும்  . http://www.onlinepj.com/vimarsanangal/ithara_vimarasanagal/popular_frent_patri/ .






ஞாயிறு, 16 ஜனவரி, 2011

.மார்க்க விளக்க பொதுக்கூட்டம் படங்கள்.

பள்ளிவாசல் தெருவில் 14 .01 .2011 நடந்த பெண்கள் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் மற்றும் ஜனவரி 27 பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் ஏன்?என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மாநிலத் தலைவர் பக்கீர் முகம்மது அல்தாபி அவர்கள் பேசிய படங்கள்.





ஆலிமா சலீனா வின் மார்க்க உரை யாற்றும் நிகழ்வு
பெயரில்லா கூறியது...
பெண்ணை  ஊர்வலம்மாக  அழைத்து  வந்ததை  குறைகூற  உங்களுக்கு  என்ன  தகுதி  உள்ளது ? ஆலிம  சக்கீன  நடு  தெருவில்  பொது  மேடையில்  பேசுவது  மட்டும்  கூடுமா?
17 ஜனவரி, 2011 5:48 am


பதில்.>நன்றிகள்.நியாயமாகவே கேட்டுள்ளீர்கள்.பெயரை சொல்ல என்ன தயக்கம்?முதற் அமர்வு மக்ரிப் முதல் இசா வரை பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட மார்க்கவிளக்க கூட்டம் நடந்தது.பர்தாவுடன் வெளியில் வந்து மற்ற காரியங்களை செய்கையில் ,மார்க்க விளக்கம் அழிப்பது மட்டும் கூடாதா?ஆண்களுக்கு மத்தியில என்ன காரனத்திர்க்காகவோ மாலை இடப்பட்டு அழைத்து வருவதற்கும் பெண்களுக்கு மத்தியில் ஒரு பெண்ணே மார்க்க விளக்கம் அளிப்பதற்கும் வித்தியாசம் இல்லையா? ஆலிமா சக்கீனா அல்ல ஆலிமா சலீனா ,மேலும் இந்த பதிலில் தவறு இருந்தால் கேளுங்கள்.


நீக்கு .

சனி, 15 ஜனவரி, 2011

பாப்புலர் பிரன்ட்ஆப் இந்தியா -----



இஸ்லாம் கூறும் அழைப்பு பணி எங்களுக்கு தேவை இல்லை.... (ஒப்புதல் விடியோ 02)

அன்பு சகோதர சகோதரிகளே ஒரு முஸ்லீம் என்பவன்இஸ்லாம் கூறும் உயர்ந்த கொள்கைகளையும்வழிமுறைகளையும் தான் மட்டும் பின்பற்ற வேண்டும்என்று நினைக்க கூடாதுஏன் என்றால் இஸ்லாம் என்பதுஉலக மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்ட நம்மைஎல்லாம் படைத்த இறைவன் புரத்தில் இருந்து வந்தமார்க்கம்.

முஸ்லீமாக பிறந்த ஒவ்வொரு சகோதரசகோதரிகளுக்கும் இந்த அழைப்பு பணியானது மிகவும் முக்கியமான ஒன்று.


ஒருவன் தனது தனிபட்ட வாழ்வில் மட்டும் இஸ்லாத்தை கடைபிடித்துவிட்டு தனதுகுடும்பத்தாரும் தன்னுடன் இருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நன்பர்களும் எப்படிவேண்டுமானாலும் போகட்டும் என்று அவர்களுக்கு இஸ்லாத்தை கூறாமல் இருப்பதும்இஸ்லாத்தை பொருத்தவரை தவறு தான் இதை அல்லாஹ்வும் அவனது தூதர் நபி(ஸல்)அவர்களும் பல இடங்களில் வழியுறுத்தி கூறியுள்ளனர்...

நீங்கள் மனித குலத்துக்காக தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருகிறீர்கள் !நன்மையை ஏவுகிறீர்கள் ! தீமையை தடுகிறீர்கள் ! அல்லாஹ்வை நம்புகிறீர்கள் !வேதமுடையோர் நம்பிக்கை கொண்டு இருந்தால் அது அவர்களுக்கு சிறந்ததாகஇருந்து இருக்கும்அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர்அவர்களில்அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.
(அல்‍‍குர்ஆன் 3:110)

அவர்கள் உம்மிடம் விதன்டாவாதம் செய்வார்களானால் " என் முகத்தைஅல்லாஹ்வுக்கே வழிபடச் செய்து விட்டேன்என்னை பின்பற்றியோரும் (இவ்வாறேசெய்து விட்டனர்)" எனக் கூறுவிராக ! வேதம் கொடுக்கபட்டோரிடமும் எழுத படிக்கதெரியாதோரிடமும் "இஸ்லாத்தை ஏற்கிறீர்களா ?" என்று கேட்பிராக ! அவர்கள்இஸ்லாத்தை ஏற்றால் நேர்வழி பெற்றனர்புறகணித்தால் எடுத்து சொல்வதே உமக்குகடமைஅல்லாஹ் அடியார்களை பார்ப்பவன்.
(அல்‍‍குர்ஆன் 3:20)

அவர்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்து சொல்வதே உமது கடமை.
(அல்‍‍குர்ஆன் 16:82)

இப்படி பல இறை வசணங்கள் இந்த அழைப்பு பணியின் அவசியத்தை பற்றி முஸ்லிம்சமுதாயத்திற்க்கு எடுத்து கூறியுள்ளது.

தீமையை தடுபதோடு மட்டும் நின்று விடாமல்!! நன்மையை ஏவுவதோடு மட்டும் நின்றுவிடாமல் !! மக்களை நேர் வழியில் அழைப்பதன் மூலம் தான் ஒவ்வொரு முஸ்லிமும் வெற்றிஅடைய முடியும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

ஆனால் இன்று முஸ்லிம்களின் ஒரு சிலரை தன் வசம் வைத்துள்ள இந்த SDPI அழைப்புபணியை முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து மறக்கடித்துவாருங்கள் அதிகாரத்தை நோக்கிஎன்றும் ஆட்சியை நமதாக்குவோம் என்றும் முஸ்லிம்கள் மத்தியில் குர்ஆன் ஹதீஸ் கூறும்வழிமுறைகளை புறகணித்து மக்களை குறிப்பாக இளைஞர்களை தவறான பாதைக்குஅழைத்து சென்று கொண்டு இருப்பதை நம்மால் கண்கூடாக கான முடிகின்றது.

இளைஞர்கள் மத்தியில் அறிவுபூர்வமான சிந்தனையை ஊட்டாமல் உணர்வுபூர்வமான இயக்கவெறியினை ஊட்டி இளைஞர்களின் சிந்தனைக்கு பூட்டு போட்டு பூட்டி வைத்துள்ளனர் இந்தகொள்கை இல்லா கூட்டத்தினர்.

இதற்க்கு சான்று நாம் வெளியிட்ட விடியோ மற்றும் இன்ஷா அல்லாஹ் இன்னும் நாம்வெளியிட போகும் விடியோகள் ஆகும் .

இஸ்லாம் கூறும் அறிவு பூர்வமாண வாதங்களுக்கு பதில் அளிக்க முடியாத இவர்கள்கூட்டத்தை கூட்டி வந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளையும்பேச்சாளர்களையும்,உறுபினர்களையும் மற்றும் மர்கஸ்களையும் அவ்வபோது தாக்கி வருவதும் ஆங்காங்கேநடந்தேரி கொண்டு தான் வருகிறது. (விடியோ ஆதாரம் விரைவில் வெளியிடப்படும்)

இப்போது இந்த விடியோவை பாருங்கள்....




(உங்கள் இன்டர்நெட் வேகத்தை பொருத்தே விடியோ ஒடும்)



இந்த விடியோவை நடு நிலை சிந்தனையோடு பார்க்கும் பலருக்கும் அவங்க தான்சமுதாயத்தை உயர்துவது தான் அவங்க பணி என்று கூறுகின்றார்களே விடு விட வேண்டியதுதானே என்று மனதில் தோன்றும்.

ஆனால் இஸ்லாமியனுக்கு தேவையான குர்ஆன் மற்றும் நபி(ஸல்அவர்களின் சொல் செயல்அங்கிகாரத்தின் அடிப்படையில் பார்த்தால் இவர்கள் இஸ்லாமிய சமுதாய மக்களையும்இளைஞர்களையும் அவர்களுக்கு கிடைக்க வேன்டிய பல நன்மயான கரியங்களில் இருந்துதடுத்து பல தீம்மைகளின் பக்கம் எப்படி அழைத்து சென்று கொண்டு இருக்கிறார்கள் என்பதுபுரியும்.

உதாரணமாக இந்த விடியோவில் SDPI திருபூர் மாவட்ட தலைவர் அமானுல்லாஹ்கூறியிருப்பதை தெளிவாக கவணித்தால் புரியும்சுன்னத் ஜமாஅத் ஒரு வேலைசெய்கின்றார்கள் தப்லிக் ஜமாஅத் ஒரு வேலை செய்கின்றார்கள் மொளலீது ஒத கூடியவர்கள்அதை ஓதி கொண்டு தான் இருப்பார்கள் , தர்காவிற்க்கு போக கூடியவர்கள் போய் கொண்டுதான் இருப்பார்கள் அதே போல் குர் ஆன் ஹதீஸ் சொல்ல கூடிய வேலை தவ்ஹீத் ஜமாதுக்குஆனால் இது எங்க வேலை இல்லை எங்களுக்கு மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்துசெயல்படுவது தான்  ஆனால் நான் என் வாழ்வில் கடைபிடிப்பேன் என்று  கூறியிருக்கின்றார்.

இதன் மூலம் இவர்கள் இரட்டை வேடம் போடக் கூடியவர்கள் என்பது நமக்கு தெளிவாகவிளங்குகின்றதுஇது போன்றவர்கள் பற்றி அல்லாஹ்வும் தனது திருமறையில் தெளிவாககூறியுள்ளான்.

நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது " நம்பிக்கை கொண்டுள்ளோம்"என்று கூறுகின்றனர்தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது " நாங்கள்உங்களை சேர்ந்தவர்களேநாங்கள் (அவர்களைகேலி செய்வோரேஎனகூறுகின்றனர்.
(அல்குர்ஆன் 2:14)

இப்படி தான் இவர்கள் மக்களை அழைப்பதற்க்காக நாங்கள் குர் ஆன் ஹதீஸ் படிதான்நடகின்றோம் என்றும் இயக்க நிலைபாடு என்று வரும் போது குர் ஆன் ஹதீஸ் போதிப்பதுஎங்கள் பணி இல்லை என்றும் முன்னுக்கு பின் முரணாக பேசிக் கொண்டும் இரட்டை வேடம்போட்டுக் கொண்டும் உள்ளனர்.

அழைப்பு பணி செய்வது எங்கள் வேலை இல்லை என்று கூறும் இவர்கள் இந்த அழைப்புபணியினால் கிடைக்கும் எவ்வளவு நன்மைகளை இழக்கிறார்கள் என்று தெரியுமா ?

தர்மம்நன்மையான காரியம்மக்களிடையே நல்லிணக்கம் ஏற்ப்படுத்துதல்ஆகியவற்றை ஏவியதை தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுகளில் எந்தநன்மையும் இல்லைஅல்லாஹ்வின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்குமகத்தான கூலியை வழங்குவோம்.
(அல்குர்ஆன் 4:114)

நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நன்பர்கள்.அவர்கள் நன்மையை ஏவுவார்கள்தீமையை தடுப்பார்கள்தொழுகையை நிலைநாட்டுவார்கள்ஸகாத்தையும் கொடுப்பார்கள்அல்லாஹ்வுக்கும்அவனதுதூதருக்கும் கட்டுபடுவார்கள்அவர்களுக்கே அல்லாஹ் அருள்புறிவான்அல்லாஹ்மிகைத்தவன்ஞானமிக்கவன்.
(அல்குர்ஆன் 9:71)


(அவர்கள்மன்னிப்புத் தேடுபவர்கள்வணங்குபவர்கள்; (இறைவனைப்புகழ்பவர்கள்;நோன்பு நோற்பவர்கள்ருகூவு செய்பவர்கள்ஸஜ்தாச் செய்பவர்கள்நன்மையைஏவுபவர்கள்தீமையைத் தடுபவர்கள்அல்லாஹ்வின் வரம்புகளை பேணிக்கொள்பவர்கள். (இத்தகையநம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!
(அல்குர்ஆன் 9:112)

இந்த வசணங்கள் எல்லாம் அழைப்பு பணியினால் கிடைக்கும் நன்மைகளை பற்றிகூறுகின்றனஇவர்கள் இந்த அழைப்பு பணியை செய்யாததன் மூலம் அல்லாஹ்விடமிருந்துகிடைக்கும் மகத்தான கூலியையும்அவனது அருளையும் , அவனிடமிருந்து மறுமையில்கிடைக்க இருக்கும் நற்செய்திகளையும் இழந்தவர்களாக இருக்கின்றார்கள்.

இவர்கள் மட்டும் இலக்காமல் இவர்களை சார்ந்தவர்களுக்கும் இந்த நன்மைகளை கிடைக்கபெறாமல் வைத்துள்ளனர்.

இதை எல்லாம் சொன்னால் தன்னை என்றுமே இஸ்லாமிய அமைப்பு என்று கூறியதுகிடையாது ஆனால் அதில் இஸ்லாமியர்கள் அதிகம் இருகின்றார்கள் என்றும் வியாக்கியானம்பேசிக்கொண்டு இருக்கின்றார்கள்.

இவர்களை போல் பேசக் கூடியவர்களுக்கும் அல்லாஹ் தனது திருமறையிலே ஒருவசணத்தில் தெளிவாக கூறுகின்றான்.

எவர் அல்லாஹ்வின் பக்கம் அழைத்தாரோநற்செயல் புரிந்தாரோமேலும் நான்முஸ்லீம் (இறைவனுக்கு முற்றிலும் கீழ்படிந்தவன்என்று கூறினாரோஅவரை விடஅழகிய வார்த்தை கூறுபவர் யார் இருக்கிறார் ? (அல்குர்ஆன் 41:33)

அனால் இவர்கள் என்றும் தன்னை முஸ்லிம் என்று கூறியது இல்லை என்று கூறிக் கொண்டுஅழைகின்றார்கள்.

இதில் இருந்து இவர்கள் இரட்டை வேடம் போட்டுக் கொண்டு அழைபவர்கள் என்பது தெளிவாகதெரிகின்றதுஅதே போல் தான் மட்டும் இஸ்லாத்தை சரியாக பின்பற்றுவேன்(பின்பற்றவில்லை என்பது ஒரு புறம் இருக்கஆனால் என்னை சார்ந்த மக்களுக்கு சொல்லமாட்டேன்சுன்னவல் ஜமாஅத் தர்கா தாயத்து மொளலீது என்று எப்படி வழிகெட்டாலும் சரி ,தப்லிக் ஜமாஅத் குர் ஆன் ஹதீஸை விட்டு தஹ்லீம் என்று போனாலும் சரி என்று இவர்கள்இருக்கின்றார்கள்.

இதுவும் நபி வழிக்கு மாற்றமானது என்பதை பின்வரும் நபி மொழி நமக்கு தெளிவுபடுத்தும்.

நபி(ஸல்அவர்கள் கூறினார்கள்.

உங்களில் ஒருவர் தமக்கு விரும்பியதை தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை(முழுமையானஇறை நம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார்.
அறிவிப்பவர் : அனஸ்ரலி)
ஆதாரம் : புகாரி 13

ஆனால் இவர்களோ நான் பின்பற்றுவேன் ஆனால் மற்றவர்களுக்கு கூறமாட்டேன் என்று கூறிநபி மொழிக்கு மாற்றமாக மக்களை அழைத்து செல்வதை உறுதி செய்துள்ளனர்.

இவர்களை போண்று அழைப்பு பணிக்கு ஆப்பு வைக்கும் கொள்கை இல்லா கூட்டங்களைபுறகணித்து அல்லாஹ் கூறும் அழைப்பு பணியை மறுமை வெற்றி ஒன்றை மட்டும்குறிக்கோளாக கொண்டு செய்து அல்லாஹ்விடம் மகத்தான கூளியை பெறுவோமாக.

பதில் சொல்ல தெரியாத இவர்கள் தகுதலில் ஈடுபட்டதையும் மிரட்டல் விடுத்ததையும்இன்ஷா அல்லாஹ் விடியோ ஆதாரங்களுடன் விரைவில் வெளியிடுவோம. .



பெயரில்லா பெயரில்லா கூறியது...





உங்கள்  வலைதளத்தின்  பெயரை  "புரணி "(புரம்பெசுவது )கரை  பண்ணையார்  என்று  வைத்தால் தான்  பொருத்தமாக  இருக்கும் .பொய் ,புரணி ,இட்டுக்கட்டி  பேசுவது ,மற்றவரின்  கருத்துக்கு  நீங்களாகவே  ஒரு  விளக்கம்  சொல்லி  அதை  வைத்து  பொய்  வாதம்  செய்வது ,இதையே  தொழிலாக  வைத்திருக்கும்  உங்களுக்கு  "புரநிக்கரை  பண்ணையார் "என்பதுதான்  பொருத்தமான  பெயர் 
.

15 ஜனவரி, 2011 9:12 pm
நீக்கு
பெயரில்லாத தாங்கள் அடுத்தவருக்கு பெயர் வைப்பது வேடிக்கை. நான் சொன்ன பொய் புறம் ,இட்டுகட்டி பேசியது ஆகியவற்றை ஆதாரத்தோடு சொல்லுங்கள் மேலும் மற்றவர்களின் என்ன கருத்துக்கு நானாகவே என்ன விளக்கம் சொன்னேன்.அதை வைத்து நான் என்ன பொய் வாதம் செய்தேன். நீங்கள் சொல்லுவது போல் நான் விளக்கம் செய்திருந்தால் அங்கேயே மறுத்திருக்கலாமே நான் அதை வைத்து பொய் வாதம் செய்தால் உங்களிடம் உண்மை இருந்தால் உங்கள் உண்மை வாதத்தை வைத்து எனது பொய் வாதத்தை உடைத்திருக்கலாமே .அத்தனையும் விட்டு விட்டு இப்போது அபாண்டாமாக என் மீது இப்படி பலி போடுவது சரியா?இப்பவும் ஒன்னும் மோசமில்லை எனனை பற்றி நீங்கள் சொன்ன குற்ற சாட்டுக்கு ஆதாரம் தாருங்கள் பெயரை 'புரணி கரை பண்ணையார்' [அர்த்தம் சரியா?] என்று நான் பெயரை மாற்றிவிடுகிறேன்.இல்லையெனில் நீங்கள் யார் என்பதையாவது தெரிவிக்க தயாரா?